Home Blog Page 349

இதய ஆரோக்கியம் மேம்பட.. இரத்த அழுத்தம் கட்டுப்பட இந்த ஜூஸ் ஒரு கிளாஸ் குடிங்க!!

0

ஆரோக்கிய பானங்கள் மூலம் நோய் பாதிப்புகளை குணபடுத்திக் கொள்ள முடியும்.உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாக கொத்தமல்லி தழையில் ஜூஸ் செய்து பருகலாம்.இந்த கொத்தமல்லி ஜூஸ் பல ஆரோக்கியத்தை கொண்டிருப்பதால் மருத்துவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பருக பரிந்துரைக்கின்றனர்.

இளமை காலத்தில் இதய நோய்,பிபி,கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் இருக்க இந்த ஜூஸ் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி
2)புதினா தழை – சிறிதளவு
3)எலுமிச்சம் பழம் – பாதியளவு
4)இஞ்சி – ஒரு துண்டு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் அரை கைப்பிடி கொத்தமல்லி தழை மற்றும் சிறிதளவு புதினா தழையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு அலசிக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் இதனை மிக்சர் ஜாரில் போட்டு இதனுடன் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3.அதன் பின்னர் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை கிளாஸிற்கு வடிகட்டி பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட வேண்டும்.

4.விருப்பப்பட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.இந்த ஜூஸை காலையில் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் சரியாகும்.இதய ஆரோக்கியம் மேம்பட இரத்தத்தில் உள்ள கொழுப்புகள் கரைய இந்த ஜூஸ் பருகலாம்.

5.கொத்தமல்லி மற்றும் புதினா குளிர்ச்சி நிறைந்த பொருளாகும்.இதை கோடை காலத்தில் ஜூஸாக பருகினால் உடல் குளிர்ச்சியாகும்.

முட்டை ஓடு இருக்கா? அப்போ கால் பாத வெடிப்பை செலவின்றி மறைய வைக்கலாமே!!

0

உங்கள் கால் பாத அழகை கெடுக்கும் பித்த வெடிப்பை மறைய வைக்க செலவு இல்லாத ஒரு அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.முட்டை ஓடுடன் சில பொருட்களை பயன்படுத்தி க்ரீம் செய்து பாதங்களில் பூசினால் பலன் கிடைக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)முட்டை ஓடு – பத்து
2)தயிர் – ஒரு டேபுள் ஸ்பூன்
3)ஷாம்பு – ஒரு டேபுள் ஸ்பூன்
4)விளக்கெண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன்
5)தேங்காய் எண்ணெய் – அரை டேபுள் ஸ்பூன்
6)தேன் – ஒரு டேபுள் ஸ்பூன்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் பத்து முட்டை ஓடுகளை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறிது நேரம் உலர்த்திய பிறகு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும்.பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு சலிக்க வேண்டும்.இதில் நைஸாக உள்ள முட்டை பவுடரை ஒரு டப்பாவிலும்,கொரகொரப்பாக முட்டை தூள் ஒரு டப்பாவிலும் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

2.பின்னர் கொரகொரப்பாக உள்ள முட்டை தூளில் ஒரு டேபுள் ஸ்பூன் அளவு எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு டேபுள் ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு டேபுள் ஸ்பூன் ஷாம்புவை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

3.பின்னர் அதில் ஒரு டேபுள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து வைக்க வேண்டும்.இப்பொழுது கால் பாதங்களை சூடான நீரில் வைத்து கழுவி துடைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் தயாரித்து வைத்துள்ள கலவையை பாத வெடிப்பின் மீது தடவி நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

4.பின்னர் 30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் பாதங்களை கழுவி சுத்தமாக்க வேண்டும்.இதுபோன்று தொடர்ந்து 15 தினங்கள் இரவு நேரத்தில் செய்ய வேண்டும்.

5.அதன் பிறகு நைஸ் முட்டை ஓட்டு தூளை ஒரு கிண்ணத்தில் போட்டு அரை டேபுள் ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் அரை டேபுள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கலவையை கால் பாத வெடிப்பின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.அதன் பிறகு குளிர்ந்த நீர் கொண்டு பாதங்களை கழுவ வேண்டும்.இப்படி செய்தால் பாத வெடிப்பு சீக்கிரமாக மறையும்.

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

0

அனைத்து பருவ காலத்திலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் காய்ச்சல்,சளி,இருமல் மற்றும் உடல் சோர்வு பிரச்சனைகள் ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்யுங்கள்.

மஞ்சள் பால்

பசும் பால் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் கோடை கால நோய்கள் கட்டுப்படும்.

தர்பூசணி சாறு

வெயில் கால பழமான தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைய நிறைந்திருக்கிறது.இந்த தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு பெருகும்.

இளநீர்

குளிர்ச்சி நிறைந்த இளநீரில் தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த இளநீரை கோடை காலத்தில் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

உடல் சூடு தணிய அம்மை நோய்கள் வராமல் இளநீரில் பாதாம் பிசின்,சியா விதைகளை ஊறவைத்து குடிக்கலாம்.

கம்பு கூழ்

சிறு தானியங்கனில் கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாக உள்ளது.இந்த கம்பை ஊறவைத்து இடித்து கூழ்,கம்பு சோறு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.கம்பு கூழில் தயிர் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.கம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நெல்லிச் சாறு

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லி சாறு தினம் ஒரு கிளாஸ் பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.தினமும் நெல்லி சாறு பருகினால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் முழுமையாக நீங்கும்.

அஸ்வகந்தா பால்

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா கிழங்கு கிடைக்கும்.இதை வாங்கி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பப்பாளி பழம் சாப்பிடுவதால் உடலில் உண்டாகும் தீமைகள் பற்றி தெரியுமா?

0

எல்லா பருவ காலங்களிலும் பப்பாளி பழம் கிடைக்கும்.சுவை மற்றும் விலையில் திருப்தி இருப்பதால் குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாக இது உள்ளது.இந்த பப்பாளி பழத்தை ஏழைகளின் கனி,பழங்களின் தேவதை என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.

உடல் மற்றும் சருமம் ஆகிய இரு ஆரோக்கியங்களையும் காக்கும் பழமான பப்பாளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி பழத்தில் கரோட்டின் அதிகம் நிறைந்திருப்பதால் கண் பிரச்சனை இருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

வயிற்றில் உள்ள கழிவுகள் அகல பப்பாளி பழத்தை சாப்பிடலாம்.வெறும் வயிற்றில் பப்பாளி பழம் சாப்பிட்டால் பேதி மாத்திரை இல்லாமலேயே மலக் கழிவுகளை வெளியேற்றிவிடலாம்.பப்பாளி பழம் வாயுத் தொல்லையை போக்க செய்கிறது.

வயிறு தொடர்பான பாதிப்புகளில் இருந்து மீள பப்பாளி பழம் சாப்பிடலாம்.பப்பாளி சரும நோய்களை குணப்படுத்துகிறது.உடல் நிறத்தை மாற்ற பப்பாளி பழம் சாப்பிடலாம்.பழத்தில் உள்ள கால்சியம் சத்து எலும்பு வலிமையை அதிகரிக்க உதவுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பப்பாளி பழம் சாப்பிடலாம்.

இருப்பினும் பப்பாளியை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் பக்க விளைவுகள் ஏற்படும்.காலை நேரத்தில் பப்பாளி பழத்தை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.வயிற்றுப் பகுதியில் உப்பச உணர்வு,வயிறு வீங்குதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் இதயத் துடிப்பில் பிரச்சனை ஏற்படும்.பப்பாளி பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும்.இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் வேனல் கட்டி,தோல் புண்கள்,தோல் எரிச்சல் அதிகமாகிவிடும்.ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

0

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வில்வ இலையை மருந்தாக உட்கொள்ளலாம்.வில்வ இலையில் பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வ மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இலை,பழம்,பூ,வேர் அனைத்திலும் ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளன.

வில்வ இலை ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலை துவர்ப்பு சத்து நிறைந்தவையாகும்.இந்த இலையை ஒரு கிளாஸ் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.வில்வ இலை பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.வில்வ இலையை அரைத்து கஷாயம் போல் காய்ச்சி குடித்தால் நரம்பு வலிமை அதிகரிக்கும்.

உடல் கொழுப்புகளை கரைக்க வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து மிளகுத் கலந்து உட்கொள்ளலாம்.வில்வ இலை பானம் குடிப்பதால் உடல் குளிர்ச்சியாகும்.வில்வ இலையை பொடித்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.

வில்வ இலையை வதக்கி புண்கள் மீது வைத்து காட்டினால் அவை சீக்கிரம் ஆறும்.தலைவலி குணமாக வில்வ இலையை அரைத்து நெற்றி மீது பூசலாம்.வில்வ இலையில் டீ போட்டு குடித்தால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த சோகை பாதிப்பு குணமாக வில்வ இலையில் தேநீர் செய்து குடிக்கலாம்.வில்வ இலையை நீர்விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பதால் மேக நோய் குணமாகும்.வில்வ இலை தேநீர் செய்து குடித்து வந்தால் மதுப்பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.

கை சிவக்க வைக்கும் மருதாணியை கொதிக்க வைத்து குடித்தால்.. இத்தனை நோய்கள் குணமாகுமா!!

0

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து கை,கால் விரல்களை சிவக்க வைக்க மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மருதாணி இலைகளை பறித்து புளி அல்லது எலுமிச்சை கலந்து அரைத்து கை,கால்களுக்கு வைத்தால் செக்க சிவப்பாக மாறும்.

சிலர் மருதாணியில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து சிவக்க வைக்கின்றனர்.மருதாணி வெறும் அழகிற்கு மட்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.மருதாணி ஓர் அபூர்வ மூலிகையாகும்.மருதாணி செடி கிராம புறங்களில் அதிகமாக வளர்கிறது.

மருதாணி இலை மட்டுமின்றி அதன் பூவிலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.மருதாணி இலையின் மருத்துவ பலன்கள் குறித்து அறிவோம்.தீக்காய புண்கள் மற்றும் தழும்புகள் மறைய மருதாணி இலையை பயன்படுத்தலாம்.

மருதாணி இலையை அரைத்து காயங்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகும்.மருதாணி இலையை மைய்ய அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி நீங்கும்.இளநரையை சரி செய்வதில் மருதாணியின் பங்கு இன்றியமையாதது.மருதாணி இலையை பொடித்து அவுரி பவுடரில் கலந்து தலைக்கு பயன்படுத்தி குளித்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

தேங்காய் எண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நிற்கும்.உடலில் ஏற்படும் சூடு குறைய மருதாணி இலைகளை அரைத்து கை,கால் விரல்களில் பூசலாம்.உடலில் ஏற்படும் உஷ்ணம் குறைய மருதாணி பேஸ்டை கைகளில் வைக்கலாம்.

உடல் சூட்டால் வைற்றுப் போக்கு பிரச்சனை ஏற்படும்.இதில் இருந்து மீள மருதாணி இலையை அரைத்து சாறு எடுத்து வயிற்றுப் பகுதியில் வைக்கலாம்.சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக மருதாணி சாறை தேங்காய் எண்ணையில் கலந்து பயன்படுத்தலாம்.

மருதாணி எண்ணையை தலைக்கு தடவினால் சூடு குறையும்.தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் மருதாணி எண்ணையை தலைக்கு அப்ளை செய்யலாம்.மருதாணி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடித்து அருந்தினால் கல்லீரலில் உள்ள கழிவுகள் நீங்கும்.இரத்த அழுத்தம் இதயப் பிரச்சனை நீங்க மருதாணி இலை நீர் பருகலாம்.

உடலில் வீக்கம் மற்றும் வலி உள்ள இடத்தில் மருதாணி எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.மூட்டு பகுதியில் மருதாணி எண்ணையை தடவினால் வலி நீங்கும்.

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

0

உடல் வலிமையை அதிகரிக்க நினைப்பவர்கள் கோதுமையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.கோதுமையில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,புரதம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த கோதுமையை அரைத்து பவுடராக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.முளைகட்டிய கோதுமையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் எலும்புகள் இரும்பு போன்று வலிமை பெறும்.

இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற முழு கோதுமை பொடியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.உடல் தெம்பு பெற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முழு கோதுமை உணவு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை – 50 கிராம்
2)தூயத் தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் முழு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த கோதுமையை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யுங்கள்.

கோதுமையில் உள்ள தூசி,அழுக்கு நீங்கும் வரை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும்.பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வெயிலில் ஒரு காட்டன் துணி போட்டு கோதுமையை கொட்டி நாள் முழுவதும் காயவிட வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து கோதுமையை போட்டு குறைவான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.கோதுமை கருகிவிட கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த கோதுமையை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஜல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கோதுமை மாவை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து 20 கிராம் அளவிற்கு அரைத்த கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.இந்த கோதுமை பேஸ்ட்டை சாப்பிட்டு வந்தால் கால் வலிமை அதிகரிக்கும்.

ரெடிமேட் கோதுமை மாவு பயன்படுத்தாமல் முழு கோதுமையை வறுத்து அரைத்து பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும்.

35-40 வயதுக்குள் இருக்கும் ஆண்களுக்கு ஹெல்த் டிப்ஸ்!! நோயின்றி வாழ பயனுள்ள டிப்ஸ்!!

0

பெண்கள் தங்கள் 30 வயதில் உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வது போல் ஆண்கள் தங்கள் 35-40 வயதில் ஆரோக்கிய கோளாறை சந்திக்கின்றனர்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றனர்.

தொப்பை விழுதல்,வழுக்கை விழுதல்,உடல் பெருத்து போதல் பிரச்சனையை பெரும்பாலான ஆண்கள் எதிர்கொள்கின்றனர்.அதேபோல் நடக்க முடியாமல் போதல்,உடல் களைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கின்றனர்.35 வயதை தாண்டிய ஆண்கள் நிச்சயம் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.

இதற்கு நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கிய உணவுப் பழக்க வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.35 வயதை கடந்த ஆண்கள் தங்கள் உடல் எடை பராமரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.தினசரி உடற்பயிற்சி,நடைபயிற்சி செய்வதன் மூலம் உடல் கொழுப்பை கட்டுப்படுத்தலாம்.

யோகா,தியானம்,உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.எலும்பு வலிமையை அதிகரிக்க கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

அதிக கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.எண்ணையில் வறுத்த,பொரித்த உணவுகளை சாப்பிடக் கூடாது.ஆவியில் வேகவைத்த உணவுகளை சாப்பிடலாம்.35 வயதை கடந்த ஆண்கள் புரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நீராகாரங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.புரதம் மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.இரத்த சர்க்கரை அளவை இயற்கை முறையில் கட்டுப்படுத்த வேண்டும்.

பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை சாப்பிட வேண்டும்.அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்.இரத்தத்தில் கொழுப்பு படியாமல் பார்த்துக் கொள்ளா வேண்டும்.ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.மூலிகை பானங்களை அதிகம் பருக வேண்டும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதன் முழு பலன் கிடைக்கும் தெரியுமா?

0

மரவள்ளி கிழங்கை போன்றே சர்க்கரை வள்ளிக்கிழங்கும் அதிக மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் சி,வைட்டமின் பி,மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,நல்ல கொழுப்பு நிறைந்து காணப்படுகிறது.

இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரஞ்சு,பர்பிள்,மஞ்சள்,வெள்ளை போன்ற நிறத்தில் கிடைக்கிறது.நார்ச்சத்து அதிகம் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிலர் வறுத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற முழு சத்தும் நீங்கி ஆரோக்கியம் இல்லாத உணவாக மாறிவிடும்.

சிலர் சர்க்கரை வள்ளிக்கிழங்கை தண்ணீரில் வேகவைத்து சாப்பிடுகின்றனர்.இதனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற பாதி சத்துக்கள் போய்விடும்.கிழங்கின் முழு சத்தும் கிடைக்க நீங்கள் அதை ஆவியில் வேகவைத்து சாப்பிட வேண்டும்.

ஆவியில் வேக வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இருக்கின்ற வைட்டமின் ஏ கண் பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.குடல் இயக்கம் மேம்பட நீங்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.

மூளை செயல்பாட்டை அதிகரிக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.குடல் ஆரோக்கியம் மேம்பட சர்க்கரை வள்ளிக்கிழங்கை ஆவியில் வேகவைத்து சாப்பிடலாம்.உடலில் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் ஆற்றல் சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கு உண்டு.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக வைத்துக் கொள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.உடலில் காணப்படும் தேவையற்ற கழிவுகள் அகல சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.

சரும ஆரோக்கியம் மேம்பட சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாம்.உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்க சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொள்ளலாம்.இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடலாம்.செரிமானப் பிரச்சனை சரியாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம்.

யூரிக் ஆசிட் கப்பு சிப்புனு குறையணுமா? அப்போ இந்த உலர் விதைகளை சாப்பிடுங்கள்!!

0

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை காரணமாக பல்வேறு உடல் நலக் கோளாறுகளை அனுபவித்து வருகின்றோம்.முன்பெல்லாம் மாரடைப்பு,மூட்டு வலி,சர்க்கரை வியாதி போன்றவை வயதானவர்களை மட்டும் பாதித்து வந்தது.

ஆனால் தற்பொழுது சிறியவர்கள்,இளம் வயதினர் இந்த பாதிப்புகளை அதிகமாக சந்திக்கின்றனர்.அதேபோல் உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தல் பிரச்சனையை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர்.உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் மூட்டு வலி,சிறுநீரக பிரச்சனை,கணுக்கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

யூரிக் அமிலம் அதிகரித்தால் கீல்வாத பிரச்சனை ஏற்படும்.எனவே உடலில் யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க உலர் விதைகள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ளுங்கள்.

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்தும் உலர் விதைகள் மற்றும் உலர் பழங்கள்:

1)முந்திரி

இதில் மேக்னீசியம்,புரதம்,மோனோசாச்சுரேட்டட் போன்றவை நிறைந்திருக்கிறது.முந்திரி பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

2)பாதாம் பருப்பு

கால்சியம்,பொட்டாசியம்,புரதம்,வைட்டமின் ஏ,வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருக்கிறது.இந்த பாதாம் பருப்பை ஊறவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு குறையும்.பாதாம் பருப்பில் பால் செய்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

3)வால்நட்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்திருக்கும் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

4)பேரிச்சை

இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம் பழத்தை தினமும் இரண்டு ஈன்ற எண்ணிக்கையில் சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

5)உலர் திராட்சை

இதில் உள்ள ஊட்டச்சத்து சிறுநீரகத்தில் உள்ள யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

6)பிஸ்தா

தினமும் ஐந்து பிஸ்தாவை ஊறவைத்து சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.பிஸ்தாவில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.