Home Blog Page 350

இந்த உணவுகளை சாப்பிட்டால்.. மஞ்சள் காமாலை இருந்த இடம் தெரியாமல் காணமால் போகும்!!

0

கல்லீரல் ஆரோக்கியம் மோசமடைவதால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்படுகிறது.அதேபோல் இரத்தத்தில் பிலிரூபின் அதிகமாக இருந்தால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்.மஞ்சள் காமாலை ஏற்பட்டால் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.அதேபோல் மஞ்சள் காமாலையால் தோல் நிறம் மாறும்.மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு தீவிரமானால் உயிரிழப்பு ஏற்படும்.

மஞ்சள் காமாலை அறிகுறிகள்:-

1)உடல் பலவீனம்
2)பசியின்மை
3)உடல் சோர்வு
4)மஞ்சள் நிற சிறுநீர்
5)கண்கள் நிறம் மஞ்சளாக இருத்தல்
6)வெளிர் மலம்

மஞ்சள் காமாலை குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்:

இந்நோய் பாதிப்பு அறிகுறி இருப்பவர்கள் ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.ஆப்பிள்,ஆரஞ்சு,பப்பாளி போன்ற பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.கேரட்,பீட்ரூட் போன்ற காய்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.கோழி இறைச்சி,மீன் ஆகியவற்றில் புரதம் அதிகமாக நிறைந்திருக்கிறது.பழுப்பு அரிசி உணவுகள்,ஓட்ஸ் உணவுகளை உட்கொண்டால் மஞ்சள் காமாலை குணமாகும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்,சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.பச்சை இலை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

வறுத்த பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மது பழக்கத்தை கைவிட வேண்டும்.பதப்படுத்தப்பட்ட இறைச்சி,மீன் உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்கத்தை கைவிட வேண்டும்.ஆல்கஹால் உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

நாம் இறந்த பிறகு நமது ஆன்மாவிற்கு என்ன ஆகும்..?? அது எங்கே செல்லும் என்று தெரியுமா..??

0

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கக்கூடிய ஒரு கேள்வி என்றால், நாம் இறந்த பிறகு நமது ஆன்மா எங்கே செல்லும்? மறுபிறவி என்பது இருக்கிறதா? நாம் மறுபிறவி எடுப்போமா? என்று பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். இந்த சந்தேகங்களுக்கு பல விஞ்ஞானிகளால் கூட பதிலை கொடுக்க முடியவில்லை.

ஆனால் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின்பு வெளியான கருத்துக்கள் அனைத்தும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளியான புனித புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கு முரண்பாடாக இருந்தது. அப்படி இறப்புக்குப் பிறகு என்ன தான் நடக்கும்? நமது ஆன்மா எங்கே செல்லும்? என்ற சந்தேகங்கள் குறித்த விளக்கத்தினை தற்போது காண்போம்.

இந்த சந்தேகம் குறித்த கேள்விக்கான விளக்கத்தை கிறிஸ்துவ புத்தகமான ஹோலி பைபிளில் கூறப்பட்டதாவது, ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆன்மா ஓய்வு நிலையில் தான் இருக்கும். சிறிது நேரத்திற்கு பிறகு தான் அந்த மனிதன் நல்லது செய்திருந்தால் அந்த ஆன்மா சொர்க்கத்திற்கும், கெட்டது செய்திருந்தால் நரகத்திற்கும் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்து புராணங்களின்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் செய்த நல்லது கெட்டதை கணித்து சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை ஆராய்வார்கள். இவ்வாறு சிறிது காலம் சொர்க்கம் அல்லது நரகத்தில் இருந்த பிறகு, அந்த ஆன்மாவானது மீண்டும் ஒரு மனிதனின் உடலிலோ அல்லது மிருகங்களின் உடலிலோ செல்லும்.

ஆனால் விஞ்ஞானிகள், ஒரு மனிதனின் இறப்புக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். ஒரு மனிதனின் இதயத்துடிப்பு நின்ற பிறகு அவனது மூளையானது ஐந்து நிமிடம் மட்டும் தான் வேலை செய்யும் என்பதை கண்டறிந்த நிலையில், தற்போது ஆராய்ச்சியானது மனிதனின் மூளை சில மணி நேரத்திற்கு வேலை செய்யும் என்பதை கண்டறிந்து உள்ளது.

எனவே ஒருவர் இறந்த உடனேயே அவரது ஆன்மாவானது உடலை விட்டு வெளியேறாது. அவரது உள் உறுப்புகள் இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் அந்த ஆன்மாவானது அந்த மனித உடலில் தான் இருக்கும். ஒருவர் இறந்த பிறகும் அந்த உடலில் இருக்கக்கூடிய உள்ளுறுப்புகள் சில மணி நேரத்திற்கு இயங்கிக் கொண்டு தான் இருக்கும். ஒவ்வொரு உறுப்பாகத்தான் செயல் இழக்க தொடங்கும். எனவே அது வரையில் அந்த ஆன்மாவானது அந்த உடலில் இருக்கும் என்பதை கண்டறிந்துள்ளனர்.

ஒருவரது இதயத்துடிப்பு நின்ற பிறகு அவர் இறந்துவிட்டதாக நாம் கருதுவோம். ஆனால் அவர்கள் மயக்க நிலையில் இருப்பது போன்ற உணர்வை தான் பெற்றிருப்பார்கள். அதாவது அவர்கள் இறந்த பிறகு தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவர்களால் உணர முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஒருவர் இறந்த பிறகு அவரது நினைவுகள் மற்றும் சுற்றி நடக்கக் கூடியதை உணரக் கூடிய தன்மையும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒருவரது ஆன்மாவை இன்னொருவரால் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் அந்த ஆன்மாவானது ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மாறும் என்று கூறுகின்றனர். ஆனால் அதற்கு அறிவியல் ரீதியான உண்மைகள் இன்னும் கிடைக்கவில்லை.

இறந்த ஒருவர் மீண்டும் உயிர்பெற்ற போது அவர்களிடம் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இறந்தவர்களை யாரோ ஒருவர் மேலே கூட்டி சென்றது போன்ற உணர்வு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். அது இந்து சாஸ்திரத்தின் படி எமதூதனாக இருக்கலாம் அல்லது கிறிஸ்துவ சாஸ்திரத்தின் படி தேவ தூதர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் அறிவியல் ரீதியான முடிவுகள் கிடைக்கவில்லை.

வெல்லத்தை வெயில் காலத்தில் சாப்பிடலாமா? சாப்பிட்டால் இதெல்லாம் நடக்குமா?

0

வெயில் காலம் வந்துவிட்டால் சில உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.குறிப்பாக உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.அந்தவையில் வெல்லம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வெல்லம் கருப்பு சாறில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பொருளாகும்.இந்த வெல்லம் பொங்கல்,ஸ்வீட் போன்றவை செய்ய பயன்படுகிறது.வெல்லம் இனிப்பு பொருள் என்பதால் இதை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ஆனால் கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.

வெல்லம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடலில் படியும் கழிவுகளை அகற்ற உதவுகிறது.இரத்த சோகை பாதிப்பை குணப்படுத்த உதவுகிறது.மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் மருந்தாக திகழ்கிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும்.

வெல்லத்தில் இருக்கின்ற கலோரி உடல் எடையை அதிகரித்துவிடும்.அதேபோல் அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும்.உடல் சூடு அதிகமானால் மூக்கில் இரத்தம் வடியும்.கோடை காலத்தில் வெல்லம் சாப்பிட்டால் மன அழுத்தம் அதிகமாகும்.

கோடை காலத்தில் வெல்லத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகிவிடும்.அளவிற்கு அதிகமாக வெல்லம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயர்ந்துவிடும்.வெல்லத்தில் உள்ள சுக்ரோஸ் மூட்டு பகுதியில் வலி மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும்.

அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் வெல்லத்தை தவிர்க்க வேண்டும்.வெல்லத்தை அதிகமாக உட்கொண்டால் குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.பனி காலத்தில் வெல்லம் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆனால் கோடை காலத்தில் வெல்லத்தை அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.அதிக உதிரப்போக்கு இருக்கும் பெண்கள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.எனவே கோடை காலத்தில் அதிக வெல்லம் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வேண்டுமா..?? தினமும் இதை செய்து பாருங்கள்..!!

0

வீட்டில் செல்வ வளத்துடன் மகிழ்ச்சி, நிம்மதி எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவியின் அருள் நிறைந்திருக்க வேணடும். இதற்கு நமது அன்றாட வாழ்க்கையில் சில எளிய விஷயங்களை செய்தாலோ போதும். வீட்டில் இருள் நிறைந்தோ, குப்பை நிறைந்து அசுத்தமாகவோ இருக்கக் கூடாது. அப்படி இருக்கும் வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்.

நமது வீட்டில் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகள், அதாவது லட்சுமி கடாட்சத்தை குறைக்க கூடிய சில தவறுகளை நாம் தெரிந்து கொண்டு செயல்பட்டோம் என்றாலே நமது வீட்டில் பாதி பிரச்சனைகள் குறைந்து விடும். நமது முன்னோர்கள் நமக்கு கூறி வந்த அனைத்து விஷயங்களுக்கும் ஒரு காரணம் இருக்கும்.

அதாவது வீட்டில் உள்ளவர்கள் கோபம்பட்டு, சண்டை போட்டுக் கொண்டே இருந்தாலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் கவலை, கண்ணீருடன் இருந்தால் அந்த வீட்டை மகாலட்சுமி திரும்பிக் கூட பார்க்க மாட்டாள் என்று நமது முன்னோர்கள் அந்த காலத்தில் இருந்தே நமக்கு சொல்லிச் சென்றுள்ளனர். இதனை நாம் பின்பற்றினாலே மகாலட்சுமியின் அருளை நாம் பெற முடியும்.

செல்வத்திற்கு அதிபதியானவள் மகாலட்சுமி. இவர் பணம், காசுக்கு மட்டுமல்ல தனம், தானியம், சந்தானம் என சொல்லப்படும் பதினாறு வகையான செல்வங்களுக்கும் அதிபதி மகாலட்சுமி தேவி தான். மகாலட்சுமி வீட்டில் குடியிருக்க வேண்டும். அதுவும் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும். குறைவில்லாத செல்வம் பெருக வேண்டும் என அனைவரும் விரும்புகிறோம்.

மகாலட்சுமிக்கு விருப்பமான விஷயங்களை தினமும் நாம் வீட்டில் மறக்காமல் செய்து வந்தாலே, குறிப்பாக பெண்கள் கடைபிடித்து வந்தாலே லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைந்திருக்கும். அப்படி மகாலட்சுமிக்கு என்னவெல்லாம் விருப்பமானது, எவை எல்லாம் செய்யக் கூடாது, காலை முதல் இரவு தூங்க செல்வது வரை நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது காண்போம்.

காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விட்டு முதலில் வீட்டின் பின்புற வாசலை திறந்த பிறகு தான் முன்புற வாசலை திறக்க வேண்டும். பின்புற வாசல் இல்லை. ஒரே வாசல் தான் உள்ளது என்கிறவர்கள் முதலில் ஜன்னலை திறந்து வைத்து விட்டு, பிறகு வாசல் கதவை திறக்க வேண்டும்.

வாசற் கதவை காலையில் திறக்கும் போது லட்சுமி தேவி நமது வீட்டிற்குள் வர வேண்டும் என வேண்டிக் கொண்டு, கிரக லட்சுமி…கிரக லட்சுமி என மூன்று முறை சொல்லி விட்டு கதவை திறக்க வேண்டும்.

வாசல் தெளித்து, மங்களகரமாக கோலம் போட வேண்டும். வீட்டில் நிலை வாசலில் இரண்டு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

குளித்து விட்டு, வீட்டில் துளசி செடி இருந்தால் அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, தண்ணீர் ஊற்றி வழிபட வேண்டும். துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும்.

காலையில் தினமும் முதலில் பால் தான் காய்ச்ச வேண்டும். பாலை காய்ச்சி, சிறிது சர்க்கரை சேர்த்து, தெய்வத்திறகு படைத்த பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.

தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது கிரக தோஷங்கள் ஏற்படாமல் இருக்கும்.

கை, கால்களை நன்கு சுத்தம் செய்த பிறகே வீட்டிற்குள் வர வேண்டும். சனி பகவான் பாத நுனியிலேயே பிடிப்பார் என்பதால் எப்போதும் கால்கறை குறை இல்லாமல் கழுவ வேண்டும்.

பெண்கள் வாசற் படியில் அமர்ந்து தலைவாரக் கூடாது.
மாலை நேரத்தில் கடன் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.

ஊசி, இரும்பு பொருட்கள் கடன் கொடுக்கக் கூடாது.
வீட்டில் சமைக்கும் போது சாதமோ, பாலோ கருகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் இரவு தூங்க செல்வதற்கு முன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, நெற்றியில் திருநீறு அணிந்த பிறகே தூங்க செல்ல வேண்டும்.

வில்வ மரம் உங்கள் வீட்டில் இருக்கிறதா..?? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க..!!

0

நமது வீடுகளில் பலவிதமான மரம், செடி, கொடிகளை வைத்து வளர்த்து வருவோம். இருந்தாலும் ஒரு சில செடிகளை நமது வீட்டில் வளர்க்கலாமா? அல்லது கூடாதா? என்ற சந்தேகம் நம்முள் பலருக்கும் இருக்கும். அந்த சந்தேகத்துடனே சில மரங்களை வளர்த்தும் வருவோம். அந்த வகையில் வில்வமரம் என்பதை நமது வீட்டில் வைத்து வளர்க்கலாமா அல்லது கூடாதா என்பதை குறித்து தற்போது காண்போம்.

இந்த வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அனைத்து சிவன் கோவில்களிலும் இந்த வில்வ மரம் என்பது கண்டிப்பாக இருக்கும். சிவபெருமானை எப்பொழுதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வில்வ இலையை கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள்.

வில்வ மரத்திற்கு இயற்கையாகவே மிகவும் குளிர்ச்சியான தன்மை உண்டு. இந்த மரத்தில் உள்ள வேர், இலை, தண்டு ஆகிய அனைத்தும் குளிர்ச்சியை வெளிப்படுத்துவதால் இந்த செடியில் விஷத்தன்மை வாய்ந்த பூச்சிகள் தங்கிவிடும் என்ற நம்பிக்கையும் நமது முன்னோர்களிடம் இருந்தது.

இந்த ஒரு காரணத்தால் தான் வில்வ மரத்தை நமது வீட்டிற்கு அருகில் வைத்து வளர்க்கக்கூடாது என்று கூறி வந்தனர். இந்த ஒரு காரணம் மட்டுமல்லாமல் இந்த மரம் வைத்திருக்கக் கூடிய குடும்பத்தினரும், இந்த வீட்டிற்கு வரக்கூடிய மற்றவர்களும் சுத்த பத்தமாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

ஏனென்றால் இதில் தீட்டுப் படக்கூடாது. அதாவது தீட்டுடன் எவரும் இந்த மரத்தை தொடக்கூடாது. இதனால்தான் சிலர் இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்க மாட்டார்கள். ஆனால் எவர் ஒருவர் தனது உடலையும், மனதையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும் என நம்புகிறார்களோ, அவர்கள் இந்த மரத்தை வைத்து வளர்க்கலாம்.

வில்வ மரத்தில் இரண்டு வகைகள் உள்ளன. இதில் எந்த வகையை வேண்டுமானாலும் நமது வீட்டில் வைத்து வளர்க்கலாம். இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்கக் கூடாது என்பதற்காக பல விதமான காரணங்களை கூறினாலும் கூட, இந்த மரத்தை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்பதற்காகவும் ஆன்மீகம் ரீதியாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

பொதுவாகவே இந்த வில்வ மரத்திற்கு மருத்துவ குணங்கள் என்பது ஏராளமாக உள்ளது. குழந்தைகளுக்கு வயிற்றில் இருக்கும் குடல்ப்புண், சைனஸ் பிரச்சனை போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய நல்ல மருந்தாகவும் இது விளங்குகிறது.

இது மட்டுமல்லாமல் காற்று மாசுபாட்டை தடுத்து, நாம் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக மாற்றி கொடுக்கும் பண்பும் இந்த மரத்திற்கு உண்டு. இந்த வில்வ இலையை சாப்பிட்டால் அதிகப்படியான சக்தியை பெற முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த அளவிற்கு இந்த வில்வ மரமானது ஆன்மிகம் ரீதியாகவும், மருத்துவம் ரீதியாகவும் சிறப்பான தன்மையை கொண்டு திகழ்கிறது.

சிலருக்கு இந்த மரத்தை வீட்டிற்கு அருகில் வைத்து வளர்க்க மன கஷ்டமாக இருந்தால், சற்று தொலைவில் உள்ள தோட்டங்களில் வைத்து வளர்க்கலாம். இவ்வாறு சற்று தொலைவில் வைத்த வளர்ப்பதும் நல்லது. இல்லையென்றால் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் இந்த மரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தால் பலவிதமான புண்ணியங்களை நமக்கு தேடித் தரும்.

இந்த புண்ணியமானது நமது அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் என்பது உறுதி. மேலும் ஆன்மீகம் ரீதியாகவும் இந்த வில்வ மரத்தை வைத்து வளர்த்து வந்தால் அந்த குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.

பக்கவாதம் வந்தவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும்?

0

மூளைக்கு செல்லும் இரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதால் பக்கவாத பிரச்சனை உண்டாகிறது.இந்த பக்கவாதத்தால் மூளையில் இருக்கின்ற செல்கள் மெல்ல மெல்ல இறக்க தொடங்குகிறது.பக்கவாத அறிகுறிகளை முன்கூட்டியே கணிப்பது சிரமம்.யாருக்கு பக்கவாதம் வரும் என்றே சொல்ல முடியாது.

பக்கவாத அறிகுறிகள்:-

1)பேச்சில் தெளிவின்மை
2)கை மற்றும் கால்களில் உணர்வின்மை பிரச்சனை
3)கை,கால் பலவீனமாக இருத்தல்
4)கண் பார்வை பிரச்சனை
5)திடீர் தலைவலி
6)உடல் இயக்கத்தில் சிரமம்
7)குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு

பக்கவாதம் வர காரணங்கள்:-

1)சர்க்கரை அளவு அதிகரிப்பு
2)மதுப் பழக்கம்
3)புகைப்பழக்கம்
4)பரம்பரைத் தன்மை
5)இதயம் தொடர்பான நோய் பாதிப்பு

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.பக்கவாத பிரச்சனையை அலட்சியமாக கருத முடியாது.பக்கவாதத்திற்கு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதேபோல் பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் பக்கவாதம் வராமல் இருக்க சில ஆரோக்கிய உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.

பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்:-

1.புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்,அவகேடோ போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

2.முழு தானிய உணவுகளை சாப்பிட வேண்டும்.உலர் விதைகள் மற்றும் பருப்பு உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

3.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

4.பயறு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.பீன்ஸ்,கருப்பு சுண்டல்,மொச்சை போன்ற பயறு வகைகளை வேகவைத்து தாளித்து சாப்பிடலாம்.

5.பாதாம்,வால்நட்,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் விதைகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.

பக்கவாத பாதிப்பை அதிகப்படுத்தும் உணவுகள்:

சாப்பிடும் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பதப்படுத்திய உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.கோழி,மீன்,ஆட்டிறைச்சி,முட்டை,கீரைகள் மற்றும் அரிசி உணவுகளை பதப்படுத்தி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு மீண்டும் பக்கவாத பாதிப்பு ஏற்பட இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளே காரணமாக உள்ளது.

எச்சரிக்கை!! உடலில் புரதம் குறைந்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படுமாம்!!

0

நமது உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றுதான் புரதம்.நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள புரதம் உதவுகிறது.நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது உடலில் புரதச்சத்து குறைந்தால் நகங்கள் உடைய தொடங்கும்.நகங்களில் விரிசல் ஏற்படுதல்,சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுதல்,கூந்தல் ஆரோக்கியம் மோசமானதால் போன்றவை புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகளாகும்.அதேபோல் உடலில் புரதச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும்.உடலில் புரதச்சத்து குறைந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

புரதச்சத்து குறைபாட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்:

1)தசைப்பிடிப்பு
2)எலும்பு வலிமை இழத்தல்
3)அதிக பசி ஏற்படுதல்
4)உடல் பருமன் உண்டதால்
5)கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுதல்
6)மூட்டு பகுதியில் அதிக வலி உண்டதால்

புரதச்சத்து குறைபாட்டை குணப்படுத்தும் உணவுகள்:

**முட்டையில் அதிக புரதம் நிறைந்திருக்கிறது.வளரும் குழந்தைகளுக்கு முட்டை உணவுகளை கொடுக்க வேண்டும்.

**பாதாம் பருப்பில் அதிகளவு புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது.பால்,சோயா போன்ற உணவுப் பொருட்களில் புரதச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.

**தயிர் உணவுகளில் புரதம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.ஓட்ஸ்,பிராய்லர் கோழி போன்றவற்றில் புரதச்சத்து அதிகமாக இருக்கின்றது.

**பாலில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ்,பாலாடைக்கட்டியில் அதிக புரதம் இருக்கிறது.மீன்,பச்சை காய்கறிகள்,கீரைகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது.

**பருப்பு வகைகளில் புரதம் நிறைந்திருக்கிறது.பூசணி விதை,ஆளி விதையில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது.முளைக்கட்டப்பட்ட தானியங்களில் புரதம் அதிகமாக இருக்கிறது.

**வேர்கடலை,சிறுதானியங்கள்,பீன்ஸ்,புரோக்கோலி போன்றவற்றில் அதிகளவு புரதம் நிறைந்திருக்கிறது.தினமும் 50% புரத உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

0

எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. வாங்கின கடனை கொடுக்க முடியவில்லையே என்ற மன கஷ்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும்.

கடன் கொடுத்தவரும் வாங்கின கடனை கொடுக்கவில்லையே என்ற கஷ்டத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செவ்வாய் கிழமை அன்று முருகனை நினைத்து, முருகனுடைய வேலை வழிபட்டோம் என்றால் தீர்க்க முடியாத கடனையும் தீர்த்து விடலாம்.

இந்த முருகன் வழிபாட்டை செய்வதற்கு முருகனுடைய வேலாக நினைத்து, ஒரு சிறிய வேலை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய்க் கிழமை அன்று அதிகாலையில் அந்த வேலை நமது பூஜை அறையில் வைத்து, ஒரு மஞ்சள் நிற துணியில் நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ கடன் தீர வேண்டும் என்றால், இந்த நாட்களுக்குள் எனது கடனை அடைத்து விட வேண்டும் முருகா… என எழுதி அந்த வேலில் கட்டி விட வேண்டும்.

இவ்வாறு கட்டிய பிறகு அந்த வேலை, ஒரு பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அந்த அரிசியில் குத்தி வைத்து விட வேண்டும். பிறகு அதே செவ்வாய்க்கிழமை அன்று மாலையில் தீபம் ஏற்றி, அந்த வேலிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யும்பொழுது நாம் கட்டியிருந்த மஞ்சள் துணியை கழட்டி வைத்துவிட்டு, ஜவ்வாது மற்றும் மஞ்சளை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

அபிஷேகம் செய்யும் பொழுது நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ அந்த பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டு, முருகா எனக்கு இந்த பிரச்சனையை தீர்த்துக் கொடு எனக்கு நீயே துணை என்று மனதார முருகனை வேண்டிக் கொள்ள வேண்டும்.

முருகனை வழிபடும் பொழுது முருகனின் நாமங்கள் எதையேனும் கூறிக் கொள்ளலாம், அல்லது “ஓம் முருகா” என்ற எளிய நாமத்தை நாம் மனதார நினைத்துக் கொண்டாலே போதுமானது. அபிஷேகம் செய்யும் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய ஜவ்வாது மற்றும் மஞ்சளை பன்னீருடன் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

‘முருகனை நம்பினோர் கைவிடப்படார்’. எனவே நமது வேண்டுதல் நிறைவேறும் வரையில் இந்த பரிகாரத்தை வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையில் செய்து கொள்ளலாம். நமது வேண்டுதல் நிறைவேறிய பிறகும் இந்த வேலை வைத்து அபிஷேகம் செய்வது சிறப்பு. அபிஷேகம் செய்த பின்னர் நமது வேண்டுதலை எழுதி வைத்த மஞ்சள் துணியை மீண்டும் வேலில் கட்டி விடலாம்.

இந்த எளிய பரிகாரத்தை வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையில் செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். பணவரவு ஏற்படும், கடன் தொல்லை நீங்கும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், குடும்பம் முன்னேற்றம் அடையும்.

உடலில் இந்த பிரச்சனை இருப்பவர்கள்.. டீ மற்றும் காபியை தொட்டு கூட பார்த்திடாதீங்க!!

0

நம் அன்றாட வாழ்க்கையில் டீ,காபி,பால் போன்ற சூடான பானங்களை பருகுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.சிறியவர்கள்,பெரியவர்கள் என்று அனைவரும் டீ,காபி போன்ற பானங்களை அதிகமாக பருகுகின்றனர்.

இந்த பானங்களை பருகினால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்,தலைவலி பாதிப்பு குறையும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கையாக இருக்கிறது.ஆனால் டீ,காபியை அதிகமாக குடித்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

மேலும் உடலில் சில நோய் பாதிப்புகள் இருந்தால் நிச்சயம் டீ,காபியை சாப்பிடக் கூடாது.அப்படி உடலில் எந்தெந்த பாதிப்பு இருப்பவர்கள் டீ,காபி குடிக்க கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

1)உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் பிபி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

2)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபியை குடிக்க கூடாது.இதனால் இதய நோய் தீவிரமடைந்துவிடும்.

3)தூக்கமின்மை பிரச்சனையால் அவதியடைந்து வருபவர்கள் டீ,காபி குடிக்க கூடாது.இதனால் தூக்கம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும்.

4)கர்ப்பிணி பெண்கள் டீ,காபி குடிக்க கூடாது.காஃபின் நிறைந்த பானங்கள் கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கச் செய்துவிடும்.

5)செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்க்க வேண்டும்.இதுபோன்ற பானங்கள் செரிமான மண்டல ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.

6)உடலில் அதிக பித்தம் இருப்பவர்கள் டீ,காபி குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபியை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

7)இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருபவர்கள் டீ,காபி போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும்.குடல் சம்மந்தபட்ட பிரச்சனை இருப்பவர்கள் டீ,காபி பருகுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

8)வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் பிரச்சனை இருப்பவர்கள் காபி,டீ போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அல்சர் பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் இந்த பானங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

0

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும்.

இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பௌர்ணமி என்று இரண்டு திதிகள் வரும். இந்த திதிகளை நாம் முறையாக பயன்படுத்தி வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நிறைவான செல்வத்தை நம்மால் பெற முடியும். இந்த இரண்டு தினங்களிலும் கண்டிப்பான முறையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நமக்கு பணவரவு மற்றும் நினைத்த காரியம் வெற்றி அடைவது என்பது உறுதி.

பொதுவாக சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாட்களில் மகாலட்சுமி பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதனால் தான் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். இதைத்தான் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பின்பற்றி செல்வவளத்துடன் வாழ்கிறார்கள்.

பொதுவாக நாம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் தான் மகாலட்சுமி பூஜையை செய்வோம். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை திதி அன்று மகாலட்சுமி பூஜை செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

அதிலும் குறிப்பாக அமாவாசை நாளானது வெள்ளிக்கிழமையில் வந்தால் மிகவும் சிறப்பு. இத்தகைய நாளில் இரவு சுக்கிர ஹோரையில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் ஏற்றுவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் இரண்டு கைப்பிடி அளவு மகாலட்சுமிக்கு உகந்த மருதாணி இலையை பரப்பிக் கொள்ளுங்கள். இந்த மருதாணி இலைக்கு மேல் புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும்.

பிறகு இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தில் பசும்பால், கற்கண்டு, கற்கண்டு பொங்கல் போன்ற ஏதாவது வெள்ளை நிறத்திலான பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை என்னும் பட்சத்தில் சர்க்கரையை கூட நாம் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

தீபம் ஏற்றி வைத்த பிறகு உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் போற்றிகளையோ, மந்திரத்தையோ கூறி மகாலட்சுமி தாயாரிடம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை நாம் குளிர வைத்துவிடலாம்.

மறுநாள் காலையில் தீபம் ஏற்றும் பொழுது இந்த அகல் விளக்கிற்கு கீழே இருக்கக்கூடிய மருதாணி இலைகளை மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த மூட்டை 48 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 49 வது நாள் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில், இந்த தீபத்தை முழுமனதோடு ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவில் எந்த வித குறையும் இருக்காது.