Home Blog Page 353

உடலில் உள்ள 1000 நோய்களை குணமாக்கும் சின்ன வெங்காயம்!! தினமும் காலையில் இப்படி சாப்பிடுங்க!!

0

நமது ஆயுர்வேத மருத்துவத்தில் சின்ன வெங்காயம் அதிகமாக பயன்படுகிறது.நமது முன்னோர்கள் காலத்தில் இருந்து சின்ன வெங்காயம் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

100 கிராம் அளவு கொண்ட சின்ன வெங்காயத்தில் 3.2 கிராம் நார்ச்சத்து,2.5 கிராம் புரதம்,7.9 கிராம் சர்க்கரை சத்து,334 மில்லி கிராம் பொட்டாசியம்,8 மில்லி கிராம் வைட்டமின் சி,1.2 மில்லி கிராம் இரும்புச்சத்து,12 கிராம் சோடியம்,7.2 கிராம் கலோரி,60 மில்லி கிராம் பாஸ்பரஸ்,0.4 கிராம் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

சின்ன வெங்காயத்தின் மலைக்க வைக்கும் மருத்துவ பலன்கள்:

உடலிலுள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட உதவுகிறது.சின்ன வெங்காய சாறு பருகினால் உடலில் கழிவுகள் படியாமல் இருக்கும்.

இரத்தத்தில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்க சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் மாரடைப்பு அபாயத்தை தடுக்கலாம்.

சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் ஒவ்வாமை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைய சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.

வாய்ப்புண் வயிற்றுப்புண் போன்ற பாதிப்புகள் குணமாக சின்ன வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட வேண்டும்.உடல் எலும்புகள் வலிமை அதிகரிக்க சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிடலாம்.உடலில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகமாக சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம்.

சுவாசப் பாதையில் உள்ள கிருமிகள் அழிய சின்ன வெங்காயத்தை சாப்பிடலாம்.சின்ன வெங்காயம் சாப்பிட்டால் ஆஸ்துமா பாதிப்பில் இருந்து எளிதில் மீளலாம்.இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட காலையில் பச்சை சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.கண் ஆரோக்கியம் மேம்பட,பல் வலி குணமாக சின்ன வெங்காயம் சாப்பிடலாம்.

வாய் வயிறு அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாக.. இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்!!

0

அல்சர் புண்களை குணமாக்கி கொள்ள இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றுங்கள்.

அல்சர் புண்கள் ஆற வீட்டு வைத்தியங்கள்:

மணத்தக்காளி கீரை
பாசிப்பருப்பு
தேங்காய் பால்

மணத்தக்காளி கீரை என்றாலே அவை அல்சர் புண்களை ஆற்றும் மாமருந்து என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.வாய் மற்றும் வயிற்றுப் பகுதியில் உண்டாகும் புண்களை குணப்படுத்திக் கொள்ள இந்த கீரையை நம் முன்னோர்கள் மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.

தற்பொழுது அல்சருக்கு சிகிச்சை இருந்தும் அவற்றை குணப்படுத்துவது சவாலாக இருக்கும் நிலையில் நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த மருத்துவத்தின் மூலம் எளிதில் புண்களை ஆற்றிக் கொள்ள முடியும்.

இதற்கு நீங்கள் முதலில் ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை வாங்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு பொடியாக நறுக்கி பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.

பிறகு 25 கிராம் பாசிப்பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.இதனுடன் நறுக்கிய மணத்தக்காளி கீரையை போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.

பிறகு இதை மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு மூடி தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த தேங்காய் பாலை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த தேங்காய் பாலை மணத்தக்காளி பாசிப்பருப்பு கலவையில் ஊற்றி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இப்படி வாரத்தில் மூன்றுமுறை செய்து சாப்பிட்டு வந்தால் வாய் மற்றும் வயிற்றுப்புண்கள் ஆறும்.

மற்றொரு தீர்வு:

மாசிக்காய் பொடி
தேன்

நாட்டு மருந்து கடையில் மாசிக்காய் பொடி கேட்டால் கிடைக்கும்.இதை தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி அளவு மாசிக்காய் பொடி எடுத்து சிறிது தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்.அதேபோல் தேங்காய் பாலில் கற்கண்டு பொடி கலந்து குடித்து வந்தால் அல்சர் புண்கள் விரைவில் ஆறும்.

ABC ஜூஸ் மற்றும் மால்ட் உடலுக்கு நல்லதா? கெட்டதா? குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?

0

மூன்று காய்களை கொண்டு ABC ஜூஸ்,மால்ட் தயாரிக்கப்படுகிறது.அந்த மூன்று காய்கள் ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்தான்.இவை மூன்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.தற்பொழுது டீ,காபிக்கு பதில் இந்த ABC ஜூஸ் மற்றும் ABC மால்ட் தயாரித்து குடிக்கின்றனர்.கேரட்,பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி பருகுகின்றனர்.

ஆப்பிள்,பீட்ரூட்,கேரட்டை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்தால் ABC ஜூஸ் கிடைக்கும்.அதுவே இந்த மூன்று காய்களையும் மைய்ய அரைத்து பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து உலர்த்தி பொடித்தால் ABC மால்ட் பவுடர் கிடைக்கும்.

ABC ஜூஸ் மற்றும் மால்டில் மாங்கனீசு,பொட்டாசியம்,காப்பர்,ஜிங்க்,வைட்டமின்கள்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த மூன்று காய்களை கொண்டு ஜூஸ் அல்லது மால்ட் செய்து பருகுவதால்உடலுக்கு போதிய நோய் எதிர்ப்பு சக்திகிடைக்கும்.

சருமப் பொலிவு அதிகரிக்க,என்றும் இளமையாக இருக்க ABC மால்ட் செய்து குடிக்கலாம்.வெயில் காலத்தில் சரும பாதிப்புகள் அண்டாமல் இருக்க ABC ஜூஸ் செய்து குடிக்கலாம்.தொடர்ந்து ABC ஜூஸ்,மால்ட் குடித்து வந்தால் உடல் நிறத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.இரத்த ஓட்டம் அதிகரிக்க,இரத்தத்தில் உள்ள கழிவுகள் வெளியேற இந்த ஜூஸ் குடிக்கலாம்.

இரத்த சோகை குணமாக,இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க ABC ஜூஸ் செய்து குடிக்கலாம்.முடி உதிர்வை தடுக்க இந்த ஜூஸ் உதவுகிறது.இருப்பினும் இதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

குழந்தைகளுக்கு ABC மால்ட் அதிகமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.இதனால் அலர்ஜி ஏற்படலாம்.ABC மால்டில் இருக்கின்ற சர்க்கரை நீரிழிவு நோய் பாதிப்பை அதிகப்படுத்திவிடும்.இந்த ஜூஸை அளவிற்கு அதிகமாக பருகினால் கிட்னியில் கல் உருவாகிவிடும்.குடல் சம்மந்தபட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படும்.எனவே பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த ABC ஜூஸ்,மால்ட்டை குறைவான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

தயிருக்கு மாற்று கெஃபிர்!! இதன் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்தால் மலைத்து போயிடுவீங்க!!

0

பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் குளிர்ச்சி நிறைந்த புரோபயாட்டிக் பொருளாகும்.இந்த தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இந்த தயிரைவிட அதிக புரோபயாட்டிக் சத்துக்கள் நிறைந்த ஒரு பொருளாக கெஃபிர் உள்ளது.

இதுவும் பாலில் இருந்து தயாரிக்கப்படக் கூடிய ஒரு பொருள்தான்.இந்த கெஃபிர் பாலில் மட்டுமின்றி சோயா பால்,தேங்காய் பால் போன்றவற்றை புளிக்கச் செய்தும் தயாரிக்கப்படுகிறது.தயிரை விட அதிக நன்மைகள் கொண்டிருக்கும் இந்த கெஃபிர் அதிக புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.இது தவிர சிறிது கசப்பு சுவையும் கெஃபிரில் இருக்கிறது.

பாலில் உறை ஊற்றி தயாரிக்கப்படுவது தயிர்.அதுவே தானியங்களில் பாலை ஊற்றி புளிக்க செய்வதால் கெஃபிர் கிடைக்கும்.தயிர் உருவாக 8 முதல் 10 மணி நேரம் மட்டும் தேவைப்படும்.ஆனால் கெஃபிர் தயாராக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும்.

தயிரில் புரதம்,லாக்டிக் அமிலம்,வைட்டமின் பி 12 போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கிறது.ஆனால் கெஃபிர் குறைவான அளவு லாக்டிக் மற்றும் புரதம் மட்டுமே இருக்கிறது.

கெஃபிரை ஸ்மூத்தி,பானமாக பயன்படுத்தலாம்.தயிர் சாதம் போல் கெஃபிரில் சாதம் செய்து சாப்பிடலாம்.தயிரை ஒப்பிடுகையில் கெஃபிரில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கெஃபிர் நன்மைகள்:

1)இதில் உள்ள அதிக புரோபயாட்டிக் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த கெஃபிர் சாப்பிடலாம்.

2)மலச்சிக்கல்,குடல் அலர்ஜி,குடல் வீக்கம் போன்ற பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ள கெஃபிர் உணவுகளை சாப்பிடலாம்.

3)கெஃபிரில் உள்ள கால்சியம் சத்து எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.இதய நோய்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் குணமாக கெஃபிர் சாப்பிடலாம்.

4)கெஃபிரில் உள்ள புரதம் உடல் எடையை மேம்படுத்த உதவுகிறது.உடல் சோர்வு நீங்க கெஃபிர் பானம் பருகலாம்.ஸ

5)சரும ஆரோக்கியம் மேம்பட,சர்க்கரை நோய் கட்டுப்படுத்த கெஃபிர் சாப்பிடலாம்.கெஃபிர் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.உடலில் நல்ல பாக்டீரியாக்கள் எண்ணிக்கை அதிகரிக்க கெஃபிர் சாப்பிடலாம்.

எச்சரிக்கை.. இந்த ஐந்து உணவுகள் THYROID பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்!!

0

ஆண்,பெண் அனைவருக்கும் தைராய்டு சுரப்பி இருக்கின்றது.நமது கழுத்துப் பகுதியில் அதாவது முன் பக்கத்தில் இந்த தைராய்டு சுரப்பி உள்ளது.இவை நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை கண்ட்ரோல் செய்யும் ஹார்மோன்களை சுரக்கின்றது.

தைராய்டு சுரப்பியானது இதயம்,மூளை போன்ற உறுப்புகள் இயங்க தேவையான ஹார்மோன்களை சுரக்கிறது.நமது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்கள் குறைவான அல்லது அதிகமான அளவு சுரந்தால் ஹார்மோன் பிரச்சனை உண்டாகிறது.

தைராய்டில் அதிகளவு அளவு சுரந்தால் அவை ஹைப்பர் தைராய்டு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.அதுவே தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரந்தால் அது ஹைப்போ தைராய்டு பாதிப்பு என்று அழைக்கப்படுகிறது.

உடலில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன்கள் சுரந்தால் பதட்டம்,தூக்கமின்மை,எடை குறைதல் போன்ற பிரச்சனைகள்ஏற்படும் .

அதுவே தைராய்டு ஹார்மோன் அளவு குறைவாக இருந்தால் அவை முடி உதிர்தல்,எடை அதிகரிப்பு,தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

மருந்து மாத்திரை மூலம் தைராய்டு ஹார்மோன் பாதிப்பை குணப்படுத்த முடியும்.அதேபோல் கதிரியக்க சிகிச்சை செய்வதன் மூலம் தைராய்டு பாதிப்பை குணப்படுத்தலாம்.தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் நமது உணவுகள் மூலம் அதை குணப்படுத்திக் கொள்ளலாம்.

தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் சில வகை உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.சில உணவுகள் தைராய்டு பாதிப்பை அதிகாமாக்கிவிடும்.

1)அதிக அயோடின் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஹைப்பர் தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு அதிக அயோடின் நிறைந்த உணவு பாதிப்பை உண்டாக்கும்.

2)வறுத்த மற்றும் பொரித்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

3)சோயாவில் தயாரிக்கப்படும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.சோயா பால்,சோயா சங்க்ஸ்,சோயா பன்னீர் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4)சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5)காபின் நிறைந்த பானங்கள் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிஸ்கட்,பாஸ்தா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.மது பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

5 கிராம் திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து குடித்தால்.. எந்த நோய் குணமாகும் தெரியுமா?

0

நெல்லி,தான்றிக்காய் மற்றும் கடுக்காய் கொண்டு தயாரிக்கப்படும் திரிபலா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.

திரிபலா சூரணம் நன்மைகள்:

1)செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.வயிறு சம்மந்தபட்ட பிரச்சனைகளை சரி செய்ய திரிபலா சூரணம் பருகலாம்.

2)உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திரிபலா சூரணத்தை தேனில் குழைத்து சாப்பிடலாம்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை நோய் கட்டுப்பட திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

3)உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க திரிபலா சூரணம் செய்து பருகலாம்.வயிற்றுப்போக்கு பாதிப்பு குணமாக திரிபலா சூரண பானம் செய்து பருகலாம்.

4)சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் மற்றும் முடி உதிர்வு பாதிப்பு சரியாக திரிபலா சூரண பானம் பருகலாம்.

5)மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள திரிபலா சூரணம் செய்து சாப்பிடலாம்.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க திரிபலா சூரணம் சாப்பிடலாம்.

6)கண் பார்வை திறன் அதிகரிக்க,உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் நீங்க திரிபலா பொடியில் பானம் செய்து பருகலாம்.

7)உடலில் எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக திரிபலா சூரணத்தை சாப்பிடலாம்.

திரிபலா சூரண பானம் செய்முறை:

தேவையான பொருட்கள்:-

1)கடுக்காய் – 20 கிராம்
2)பெரிய நெல்லிக்காய் – 20 கிராம்
3)தான்றிக்காய் – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் கடுக்காய்,உலர்ந்த பெரிய நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகியவற்றை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை திரிபலா சூரணம் என்று சொல்வார்கள்.இதை சலித்து டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி திரிபலா பொடி சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.

48 நாட்கள் வெறும் வயிற்றில் இந்த எண்ணெய் குடித்தால்.. கேன்சர் கட்டிகள் அழிந்துவிடும்!!

0

உயிருக்கு ஆபத்தான நோய் பாதிப்புகளில் ஒன்று புற்றுநோய்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடல் அளவில் வலி மற்றும் வேதனையை சந்திக்க நேரிடும்.புற்றுநோய் கட்டிகளை ஆரம்ப நிலையில் குணப்படுத்திக் கொள்ள விரும்பினால் நீங்கள் சித்த மருத்துவத்தை பின்பற்றலாம்.வேப்ப எண்ணெய்,ஆலிவ் எண்ணெய் போன்றவை புற்றுநோய் கட்டி,கொழுப்பு கட்டிகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பெண்ணெய்
2)அதிமதுர கட்டை

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் வைத்து 250 மில்லி வேப்ப எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் 50 கிராம் அதிமதுர துண்டுகளை போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த வேப்ப எண்ணெய்யை ஆறவைத்து ஒரு பாட்டிலில் வடிகட்டி வைத்து தினமும் 5 மில்லி அளவு வெறும் வயிற்றில் குடித்தால் கேன்சர் கட்டிகள் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி – ஒரு கைப்பிடி
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

துளசியை ஒரு கையளவு எடுத்து நிழலில் நன்றாக உலர்த்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு மிளகு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ள வேண்டும்.துளசி பொடி மற்றும் மிளகு சீரகப் பொடியை ஒன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் உள்ள கட்டிகள் அனைத்தும் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1ஆலிவ் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையை குடித்து வந்தால் கொழுப்பு கட்டி,புற்றுநோய் கட்டிகள் குணமாகும்.அதேபோல் தண்ணீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடித்தால் புற்றுநோய் கட்டிகள் குணமாகும்.

குக்கர் சாதம் எத்தனை நிமிடங்கள் வேக வேண்டும்? அரிசியின் சத்துக்கள் முழுமையாக கிடைக்க இப்படி பண்ணுங்க!!

0

தற்பொழுது அனைவரது வீடுகளிலும் நவீன சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.முன்பு விறகு,மண்ணெண்ணெய் அடுப்புகளில் சமைக்கப்பட்டது.ஆனால் தற்பொழுது கரண்ட் அடுப்பு,கேஸ் அடுப்பு போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.

அதேபோல் சமையல் செய்ய தற்பொழுது வகை வகையான பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக சாதம் செய்ய குக்கர்,எலக்ட்ரிக் குக்கர் மட்டுமே பயன்படுபட்டு வருகிறது.குக்கரில் சமைப்பதால் நேரம் சேமிக்கப்படுவதோடு சமையலும் சுலமபாக செய்ய முடிகிறது.குக்கரில் ஊறவைத்த அரிசி மற்றும் அதற்கு ஏற்ற தண்ணீரை ஊற்றி விசில் விட்டால் சாதம் ரெடி.

இன்றைய அவசர உலகில் இதுபோன்ற சமையல் பாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.குக்கரில் சமைப்பதால் எரிவாயு செலவு மீதமாகிறது.நேரம்,பணம் சேமிக்க மற்றும் சமையல் சுலபமாக நடக்க சிறந்த சாய்ஸாக குக்கர் இருக்கிறது.

குக்கரில் சமைக்கும் முன் அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்திருக்க வேண்டும்.முதலில் அரிசியை 15 முதல் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.பிறகு ஒன்று அல்லது இரண்டு முறை அரிசியை கழுவினால் போதும்.அதற்கு மேல் அரிசியை கழுவினால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்துவிடும்.அரிசி ஊறவைத்த தண்ணீரை கொண்டு சாதம் சமைத்தால் அதில் ஊட்டச்சத்துக்கள் குறையாமல் இருக்கும்.

அரிசியில் கார்போ ஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது.பாலிஷ் செய்யப்படாத அரிசியில் சமைத்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாலிஷ் செய்யப்பட்ட அரிசி செரிமானப் பிரச்சனை,சர்க்கரை நோய்,இதய நோய் உடல் பருமன் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

குக்கரில் சமைப்பது எப்படி?

முதலில் குக்கரில் ஊறவைத்த அரிசியை போட்டு அதற்கு ஏற்ற தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பிறகு இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

குக்கரில் சமைக்கும் உணவுகளை 7 நிமிடங்கள் வரை மட்டுமே வேக விட வேண்டும்.அதற்கு மேல் வெந்தால் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நீங்கி ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.

புளித்த உணவுகள் சாப்பிடலாமா? இதனால் குடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா!!

0

நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அவசியமான ஒன்றாக திகழ்கிறது.உடல் செயல்பாடுகள் நன்றாக இருக்கவும்,செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படவும் நமது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்க வேண்டும்.

இந்த நன்மை தரும் பாக்டீரியாக்கள் புளித்த உணவுகள் மூலமே அதிகமாக கிடைக்கிறது.புளித்த உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.நாம் உண்ணும் உணவின் சத்துக்களை முழுமையாக உறிஞ்ச குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருக்க வேண்டும்.இதை புளித்த உணவுகள் மூலம் அதிகரிக்கலாம்.

புளித்த உணவுப் பொருட்களில் புரோபயாட்டிக் மற்றும் எம்சைம்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் புளித்த உணவுகள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

புளித்த உணவு என்றால் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது தயிர்தான்.தயிரில் புரோபயாட்டிக் என்ற நல்ல பாக்டீரியா அதிகமாக உள்ளது.தினமும் தயிர் உணவுகளை உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.தயிரில் ஸ்மூத்தி,மோர் போன்றவை செய்து சாப்பிடலாம்.தயிர் கொண்டு தயாரிக்கப்படும் சப்பாத்தி,ரொட்டி,பூரி போன்ற உணவுகள் செரிமானத்தை எளிதாக்கும்.

காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் கிம்ச்சியில் புரோபயாட்டிக் நிறைந்து காணப்படுகிறது.இதை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

கெஃபிர் தானியங்கள் மற்றும் பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருளாகும்.இவற்றில் தயிரை விட அதிகம் புரோபயாட்டிக் நிறைந்து காணப்படுகிறது.இந்த கெஃபிரை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.

நொதித்த சோயா பீன்ஸ் உணவுகளை சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படும்.பழங்கள் மற்றும் காய்கறிககள கொண்டு தயாரிக்கப்படும் புளித்த உணவுகளை சாப்பிட்டால் குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.

ஊறுகாய்,பார்லியில் செய்யப்படும் உணவுகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மீன் மற்றும் இறைச்சியில் தயாராகும் புரோபயாட்டிக் உணவுகளை உட்கொண்டால் குடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

நுரையீரலில் ஒரு துளி கழிவுகளையும் விட்டு வைக்காத 6 உணவுகள்!! பலனை காண இப்போவே சாப்பிடுங்கள்!!

0

நமது உடலின் வெளிப்புறத்தை மட்டுமின்றி உள் உள்ளுறுப்புகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.நமது உள்ளுறுப்புகளில் கழிவுகள் சேராமல் இருக்க ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சுவாசிக்க உதவும் நுரையீரலில் சளி,கழிவுகள் தேங்காமல் இருக்க என்ன மாதிரியான ஆரோக்கிய உணவுகளை பின்பற்றலாம் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

1)தானியங்கள்

கோதுமை,தினை,கருப்பு சுண்டல்,பொட்டுக்கடலை,பச்சை பயறு,கை குத்தல் அரிசி,கேழ்வரகு
போன்றவற்றில் வைட்டமின் பி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள கழிவுகள் நீங்கும்.

2)வைட்டமின் சி உணவுகள்

எலுமிச்சை,ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் சி சத்து அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பழங்களை தினமும் ஜூஸாக சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள கழிவுகள் வெளியேறும்.

3)பச்சை காய்கறிகள்

புதினா,கொத்தமல்லி,முட்டைகோஸ்,கறிவேப்பிலை,கீரை வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்து காணப்படுகிறது.இந்த உணவுகளை சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள அழுக்கு கழிவுகள் நீங்கும்.

4)ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகள்

மீன்,வால்நட்,பாதாம் பருப்பு மற்றும் உலர் விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்து காணப்படுகிறது.இவற்றை சாப்பிட்டால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.

5)பூண்டு

இதில் இருக்கின்ற ஆன்டி பயாடட்டிக் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.நுரையீரலில் இருக்கின்ற கழிவுகள் மற்றும் சளி வெளியேற பூண்டு பானம் செய்து பருகலாம்.

6)இஞ்சி

இயற்கையாக அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கும் இஞ்சியில் தேநீர் செய்து பருகி வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.நுரையீரலில் படிந்துள்ள கழிவுகள் முழுமையாக அகல இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.