Home Blog Page 354

உடலில் பிதுங்கி நிற்கும் ஊளை சதைகளை கரைக்க.. வெறும் 2 பொருள் மட்டும் போதும்!!

0

நமது உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் படிகிறது.இந்த கொழுப்பை கரைக்க கொள்ளு பருப்பை சாப்பிடலாம்.குறைவான விலைக்கு கிடைக்கும் கொள்ளு பருப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.கொள்ளு பருப்பு உடல் எடையை குறைப்பதோடு,வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.

கொள்ளு நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள்,வாயுக்கள் வெளியேறிவிடும்.பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.சளி,ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கொள்ளு சூப் செய்து குடிக்கலாம்.

கொள்ளு பருப்பில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:

**இரும்பு
**கால்சியம்
**புரதம்
**மாவுச்சத்து
**பொட்டாசியம்

கொழுப்பை கரைக்கும் கொள்ளு பானம்:

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – கால் கப்
2)கொள்ளு பருப்பு – ஒரு கப்
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு கொள்ளு பருப்பு எடுத்து பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்த வேண்டும்.

பிறகு இதை நிழலில் நன்கு காய வைக்க வேண்டும்.அதேபோல் கால் கப் கறிவேப்பிலையை நன்றாக காய வைக்க வேண்டும்.இவை இரண்டும் காய்ந்து வந்த பின்னர் வாணலியில் சேர்த்து தனி தனியாக வறுக்க வேண்டும்.

பிறகு இதை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த கொள்ளு பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு,தேவையற்ற சதைகள் கரைந்துவிடும்.

கொள்ளு பானம் போல் கொள்ளு பருப்பில் அடை,சட்னி,தோசை,இட்லி,சப்பாத்தி போன்ற உணவுகள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை,மாலை நேரத்தில் டீக்கு பதில் கொள்ளு பவுடரில் ட்ரிங்க் செய்து குடித்து வந்தால் உடலில் கொழுப்புகள் குவியாது.

ஆண்மை அதிகரிக்கும் முருங்கை பிசின்!! இதை இப்படி சாப்பிடுவதால் விந்து தரம் மேம்படும்!!

0

முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் இலை,பூ,காய்,பட்டை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் முருங்கை மரத்தில் இருந்து வெளியேறும் கழிவான முருங்கை பிசினும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.

முருங்கை பிசினில் நார்ச்சத்து,சுண்ணாம்புச்சத்து,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின் ஏ,சி,இரும்பு,புரதம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.முருங்கை பிசின் தற்பொழுது பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

முருங்கை பிசினில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.வாயுக் கோளாறு நீங்க முருங்கை பிசினை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.சருமப் பிரச்சனைக்கு முருங்கை பிசின் தீர்வாக உள்ளது.

மூட்டு எலும்பின் வலிமையை அதிகரிக்க முருங்கை பிசினை உட்கொள்ளலாம்.முருங்கை பிசின் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.முருங்கை பிசினை பாலில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பிசின் – 100 கிராம்
2)மாட்டு பால் – ஒரு கிளாஸ்
3)பனங்கற்கண்டு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 100 கிராம் முருங்கை பிசினை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கி வரவும்.பிறகு இதனை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த முருங்கை பிசின் பொடியை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் மாட்டு பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை பிசின் பொடியை அதில் போட்டு காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து காலை,இரவு என்று இரு நேரங்களிலும் குடிக்க வேண்டும்.முருங்கை பிசின் பால் ஆண்மையை பெருக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.விந்து பலத்தை அதிகரிக்க முருங்கை பிசின் பால் செய்து பருகலாம்.

மேலும் விந்து உற்பத்தியை அதிகரிக்க முருங்கை பிசினை தண்ணீரில் ஊறவைத்து ஜெல்லி பதத்திற்கு வந்ததும் சூடான பாலில் கலந்து குடிக்கலாம்.

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

0

நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு வீட்டினை கட்டுகிறோம். அவ்வாறு ஆசை ஆசையாக கட்டக்கூடிய வீடுகளில் நாம் செய்யக்கூடிய சிறு சிறு வாஸ்து பிரச்சனைகளினால் ஒரு குடும்பம் சிதற கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம்.

முந்தைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும் கூட, ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும், பெரிய அளவில் கடன் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏதேனும் ஒரு நோய் தாக்கத்தால் தான் இருக்கின்றனர்.

இந்த உடல் ஆரோக்கிய குறைபாடு என்பது நமது வீட்டின் கிழக்கு பகுதியில் நாம் செய்யக்கூடிய சில வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும். கிழக்கு மத்திமம் அல்லது வடக்கு மத்திமத்தில் படிகட்டுகளை போடக்கூடாது. இவ்வாறு படிக்கட்டுகளை போட்டால் பொருளாதார பிரச்சனைகள் மட்டும் அல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும்.

மேற்கு அல்லது தெற்கு மத்திமத்தில் தான் படிக்கட்டுகளை போட வேண்டும். அதேபோன்று தென்மேற்கு மூலையிலும் படிக்கட்டுகளை போடக்கூடாது. மேற்கு மத்திமத்தில் தான் தண்ணீர் டேங்க்கை வைக்க வேண்டும் இதுதான் சரியான வாஸ்து முறை.

குபேர மூலை என்று சொல்லக்கூடிய அந்த மூலையில் தண்ணீர் டேங்க் வைக்க கூடாது. மேற்கு மத்திமம் மற்றும் தெற்கு மத்திமத்தில் படிக்கட்டுகளை கட்டும் பொழுது அதற்கான ஹெட் ரூம்களை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்ற மூலைகளில் படிகளை கட்டும் பொழுது ஹெட் ரூம்களை அமைக்க கூடாது.

கனிம வளங்களை அதிகம் பயன்படுத்தக்கூடிய கிரானைட் கல்லை, படிகட்டுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் வாஸ்து கூறுகிறது. கிரானைட் கல் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வது நல்லது. வீடுகளில் சிறிய கேட் ஒன்றும் கார் செல்வது போல ஒரு கேட் வைப்பதும் சரியான முறைதான்.

ஆனால் கார் செல்வது போன்ற கேட், அதாவது பெரிய கேட்டுகளை இரண்டாக வைக்க கூடாது. சிறியது பெரியது என வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெரிய கேட் இரண்டு வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால் பொருளாதார ரீதியான மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும்.

வீட்டின் நிலை வாசலும், கொல்லைப்புற நிலை வாசலும் நேருக்கு நேர் தான் இருக்க வேண்டும். வீட்டின் நிலை வாசல் ஒரு மூலையிலும், கொள்ளை புறவாசல் மற்றொரு மூலையிலும் என இருக்கக் கூடாது. இவ்வாறு மாற்றி வைத்தால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு வயிறு மற்றும் இருதய பிரச்சனைகள் ஏற்படும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

0

1. எந்தெந்த நாட்களில் ஜாதகம் பார்க்க கூடாது? :

*ஜாதகம் பார்க்க செல்வதற்கு முன் நம்முடைய ஜாதகத்தை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன் வைத்து சகுனம் மற்றும் நல்ல நேரம் பார்த்த பிறகு தான் ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும்.

*எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது. இந்த காலங்களில் ஜாதகம் பார்க்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது.

*கரிநாள், சூரிய அஸ்தமன நேரம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, பரணி, ஆயில்யம், கேட்டை, பூரம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களிலும் ஜாதகம் பார்க்க செல்லக்கூடாது.

2. பொதுவான ஆன்மீக தகவல்கள்:

*செய்வினை உள்ள வீட்டில் பல்லிகள் தங்காது.
*விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய பிறகுதான் திரி போட வேண்டும்.
*பாவத்தை போக்குவதற்கு இறைவழிபாடும், தர்மமும் செய்ய வேண்டும்.
*மருதாணி விதையால் தூபம் போட்டால் நமது வீட்டில் உள்ள பில்லி சூனியம் மிரண்டு ஓடிவிடும்.
*மருதாணியை கையில் வைத்த ஒருவரிடம் ஆறு நாட்களுக்கு எமன் அருகில் நெருங்க மாட்டான்.
*மருதாணி பூக்களை தலையணைக்கு அடியில் வைத்து உறங்கினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
*பிரை தரிசனம் கண்டால் முற்பிறவி பாவத்தை போக்கும்.
*விரைவில் திருமணம் கைகூட, வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர பகவானுக்கு உகந்த வெண்ணிற ஆடையை அணியலாம்.

3. வெள்ளிக் கிழமையில் செய்யக் கூடாதவை:

*பெரியவர்கள் கூறுவது போல வீட்டின் உள்பகுதியில் நகங்களை வெட்டக்கூடாது.
*செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் முடி வெட்டக் கூடாது.
*குபேரனுக்கும், மகாலட்சுமிக்கும் உகந்த வெள்ளிக் கிழமைகளில் பூஜை அறையை அலங்கோலமாக வைத்திருக்கக் கூடாது.
*வெள்ளிக்கிழமையில் வீட்டை கழுவினாலும், ஏதேனும் ஒரு பொருளை வெளியேற்றினாலும் நமது வீட்டில் குடியிருக்கும் மகாலட்சுமி வெளியேறி விடுவார்.

4. சாஸ்திரப்படி செய்யக் கூடாதவை:

*நாம் உபயோகித்த பழைய துணிகளை யாருக்கும் கொடுக்கக் கூடாது.
*இரவு நேரத்தில் மரத்தின் அடியில் படுத்து உறங்க கூடாது.
*நம் வீட்டுக் குழாயில் தண்ணீர் சொட்டக் கூடாது.
*வாசக்கால், கதவு, ஜன்னல் ஆகியவற்றை கரையான் அரிக்கக் கூடாது.
*தலையணை மீது உட்கார கூடாது.
*தலைக்கு வைக்கும் தலையணையை காலுக்கு வைக்க கூடாது.
*துடைப்பத்தை மிதிக்கவோ தாண்டவோ கூடாது.
*ஈரத் துணியுடன் பூஜை செய்யக் கூடாது.
*பெண்கள் வாழை மரத்தை வெட்டக் கூடாது.

5. வீட்டில் செல்வ செழிப்பு பெற..! மகாலட்சுமிக்கு பிடிக்காதவை..!

*உப்பையும் மஞ்சளையும் அருகருகே வைக்காதீர்கள். அது குழப்பத்தை உண்டாக்கும்.
*சமையல் அறையில் பெண்கள் ஒருபோதும் கண்ணீர் சிந்த கூடாது.
*வீட்டில் சமையல் அறை என்பது கோவிலை போல சுத்தமாக இருக்க வேண்டும்.
*சமையலறை தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் இல்லாவிட்டாலும் அடுப்பையாவது அந்த திசையை நோக்கி வைக்க வேண்டும்.
*உப்பும், அரிசியும் வீட்டில் குறையாமல் இருந்தால் தரித்திரம் ஏற்படாது.
*வீட்டில் எப்போதும் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. இந்த பொருள் வேண்டும் என்று கேட்க வேண்டும்.

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

0

பொதுவாக காலை நேரங்களில் நமது உடலில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வெளிப்படும். நமது உடலில் உள்ள நெருப்பை குறிக்கக் கூடியது நம்முடைய கண்கள் தான். காலை கண் விழித்ததும் முதலில் நாம் எந்த ஒரு பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளினுடைய கிரக வடிவ குணங்களை தான் அந்த நாள் முழுவதும் நாம் அனுபவித்து ஆக வேண்டும் என்பது நியதி.

இதனை நமது முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களாக நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் காலையில் நாம் கண்விழித்ததும் முதலில் எந்த பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளின் கிரகத் தன்மைகளை தான் நாம் அந்த நாள் முழுவதும் கொண்டிருப்போம் என்பது உண்மை.

பொதுவாக நாம் தினமும் கண் விழித்ததும் பார்க்கக்கூடிய முதல் இடம் நமது வீட்டின் கழிவறை தான். அந்த கழிவறை என்பது சந்திர பகவான் முழுமையாக நீச்சம் அடையக்கூடிய ஒரு இடமாகும். எனவே இந்த இடத்தை நாம் காலை எழுந்ததும் முதலில் பார்க்கும் பொழுது, அந்த நாள் முழுவதும் மன அழுத்தம் தான் அதிகம் இருக்கும்.

எனவே தினமும் காலை எழுந்ததும் சூரிய சந்திரனின் வடிவாக திகழக்கூடிய நமது கண்கள் நல்ல பொருளை மட்டுமே பார்க்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் முழுமையாக கிரக தோஷங்கள் நீங்கி, நல்ல உணர்வுகளையும், புத்துணர்ச்சிகளையும் நாம் பெற முடியும்.

1. வலது உள்ளங்கை:
இதன் அடிப்படையில் காலை எழுந்ததும் முதலில் நமது வலது உள்ளங்கையை பார்க்கலாம். ஹஸ்தம் என்று சொல்லக்கூடிய நமது வலது உள்ளங்கையில் தான் சரஸ்வதி தேவி குடியிருப்பதாக கூறப்படுகிறது. நமது வலது உள்ளங்கையில் மருதாணியும் சேர்ந்து இருக்கும் பொழுது சரஸ்வதி தேவியும், லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

2. நிறை சொம்பு தண்ணீர்:
நாம் காலை எழுந்ததும் நிறை தண்ணீருடன் இருக்கக்கூடிய சொம்பை பார்க்கும் பொழுது நமது உடலில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பப்படுகிறது.

3. நன்கு மலர்ந்த பூக்கள்:
நாம் இரவில் தூங்குவதற்கு முன்பு மொட்டாக இருக்கக்கூடிய பூக்களை ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்து விட்டோம் என்றால், அது மறுநாள் காலையில் மலர்ந்த பூக்களாக மாறி இருக்கும். அதனை நாம் கண்விழித்ததும் பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

4. மஞ்சள்:
மஞ்சள் அல்லது மஞ்சள் தூளை காலை நாம் கண்விழித்ததும் பார்க்கும் பொழுது நிறைவான பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

5. முகம் பார்க்கும் கண்ணாடி:
கண்ணாடி என்பதற்கு துர் சக்திகளை நீக்கக்கூடிய ஆற்றல் என்பது உண்டு. எனவே காலை எழுந்ததும் கண்ணாடியில் நமது முகத்தையே பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், நிறைந்த பலன்களை தரக்கூடிய நாளாகவும் இருக்கும்.

6. தங்க நகை:
பெரும்பாலான பெண்கள் இரவு தூங்குவதற்கு முன்பு அவர்கள் அணிந்திருக்கக் கூடிய மோதிரம், வளையல்கள் ஆகியவற்றை கழட்டி வைத்துவிட்டு தான் தூங்குவார்கள். அந்த தங்க நகைகளை காலை கண் விழித்ததும் பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் மேன்மையான நாளாக விளங்கும்.

7. கணவன்- மனைவி முகம்:
காலை கண்விழித்ததும் கணவன் மனைவி முகத்தையோ, அல்லது மனைவி கணவன் முகத்தையோ பார்க்கும் பொழுது அந்த நாள் முழுவதும் வசீகரமான நாளாக திகழும். வீட்டில் உள்ள சிறு குழந்தைகளின் முகத்தை பார்ப்பதும் சிறப்பாக இருக்கும்.

இந்த பொருட்கள் அனைத்தையும் நாம் கண்விழித்ததும் பார்க்கின்ற பொழுது அந்த நாள் முழுவதும் சுபமான, நிறைவான நாளாக அமையும். அதிலும் குறிப்பாக சந்திராஷ்டமம் இருக்கக்கூடிய நாட்களில் இந்த மங்களப் பொருட்களை நாம் பார்க்கும் பொழுது, துன்பங்கள் நிறைந்த நாளும் சந்தோஷங்கள் நிறைந்த நாளாக மாறி இருக்கும்.

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

0

கடன் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டும் தான் நிறைய குடும்பங்களை இன்று ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நிறைய இடங்களில் ஜாதகம் பார்ப்பதும், பல்வேறு கோவில்களுக்கு ஏறி இறங்குவதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

சிறியதாக கடை வைத்து தரமான பொருட்களை கொடுத்தாலும் கூட, அதனை பிடிக்காத பெரிய கடைக்காரர்கள் ஏதேனும் ஒரு செய்வினையை செய்து விடுகின்றனர். இவ்வாறு சிறிய பிரச்சனைகள் முதல் பெரிய பிரச்சனைகள் வரை உருவாகி பல்வேறு கண் திருஷ்டிகளும், செய்வினைகளும் உருவாகி விடுகின்றன.

கடன் தொல்லையில் இருந்து நீங்க எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் நீங்கவே முடியாது. அதற்கும் காரணம் தீய சக்திகள் தான். இது போன்ற கடன் பிரச்சனைகள், கண் திருஷ்டிகள் ஆகியவற்றில் இருந்து விடுபட ஒரு சிறிய எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் இந்த பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம்.

குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது, உடல்நிலை சரியில்லாமல் போவது, பண பிரச்சினைகள் ஏற்படுவது இது போன்ற அனைத்திற்கும் காரணம் கண் திருஷ்டி தான். இந்த கண் திருஷ்டி என்பது நமது குடும்பத்திற்கு இருக்கிறது என்பதை நம்மால் அறிய முடியாது. இந்த கண் திருஷ்டியால் பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும் அனுபவிப்போம்.

இந்த கண் திருஷ்டி என்பது ஒரு கொடிய வினை. இந்த கொடிய வினையில் பல குடும்பங்கள் மாட்டிக் கொண்டு, ஏன் எதற்கு என தெரியாமலே இருக்கின்றனர். இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு எளிய பரிகாரத்தை செய்து அதற்கான தீர்வை காணலாம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒற்றை கண் உடைய தேங்காயை எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் என்பது ஒவ்வொரு மனிதருடைய அகம்பாவத்தை அழித்து, ஆணவத்தை அழித்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்யக்கூடிய ஒரு பொருள் தான் தேங்காய். ஆன்மீகத்தில் தேங்காய் என்பது மிகவும் புனிதமான ஒரு பொருளாகும்.

பொதுவாக தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். அதாவது அந்த மூன்று கண்களில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பரிகாரம் செய்வதற்கு ஒற்றை கண் உடைய தேங்காயை எடுத்துக்கொண்டு, அதில் பச்சையாக கடையில் விற்கக் கூடிய மஞ்சளை வாங்கி, நமது வீட்டில் உள்ள நிறை குடத்தில் இருந்து நீர் எடுத்து, அந்த மஞ்சளை அரைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் எடுத்துக் கொண்ட தேங்காயில் எந்த ஒரு நாரும் இல்லாமல் எடுத்துவிட்டு, நாம் அரைத்த மஞ்சளை பூசி, பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த தேங்காயை ஒரு தாம்பூலத்தில் வைத்து, நமது பூஜை அறையில் வெள்ளைப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை செய்த பின்னர் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் அந்த அர்ச்சனை செய்த தேங்காய் தாம்பூலத்தை, நமது வீட்டின் நிலை வாசலின் முன்பாக, அதாவது வீட்டின் உள்பக்கமாக இரவு முழுவதும் வைத்து விட வேண்டும்.

மறுநாள் காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அந்த தேங்காய்க்கு விளக்கு ஏற்றி, பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து நமது பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இப்பொழுது இந்த தேங்காயில் அனைத்து தேவதைகளின் சக்தியும் இறங்கி இருக்கும்.

இதனை நமது பூஜை அறையில் வைத்து, நாம் பூஜை செய்யும் பொழுதெல்லாம் அந்த தேங்காய்க்கும் தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். இந்த ஒரு எளிய பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள தீராத கடன் பிரச்சனை மற்றும் கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கிவிடும்.

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

0

1. ஜனவரி மாதம்:
ஜனவரி மாதம் என்பது விநாயகரின் அம்சம் பொருந்திய மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை என்பது அதிகமாக இருக்கும். தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்கள்.

எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதே சமயம் மற்றவர்களையும் சுதந்திரமாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

2. பிப்ரவரி மாதம்:
பிப்ரவரி மாதம் பிறந்தவர்கள் குபேரனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். செல்வம், செல்வாக்கு அதிகம் உள்ளவர்களாகவும், மிகவும் பண்பானவர்களாகவும் இருப்பார்கள். உணர்வு பூர்வமானவர்களாக இருப்பார்கள். அன்பை தேடி அலைபவர்கள். அன்பை காட்டுப்பவர்களிடம் அடிமையாகவே இருப்பார்கள்.

அதிர்ஷ்டசாலியாகவும், உயர்ந்த மேன்மையான எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நகைச் சுவையானவர், அறிவு மிகுந்தவர், சுற்றுப்பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவர்.

3. மார்ச் மாதம்:
மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் முருகனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். வேகம், கருணை, விவேகம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். குறும்புத்தனம் மற்றும் புத்திசாலித்தனம் அதிகமாக இருக்கும். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள்.

4. ஏப்ரல் மாதம்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நாரதரின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேச்சு திறமை அதிகமாக இருக்கும். அக்கறை மற்றும் வலிமையானவர்கள். பிடிவாத தன்மை கொண்டவர்கள். இவர்கள் எல்லோருக்கும் கட்டளை போடும் இடத்தில் இருப்பார்கள். புத்திக் கூர்மை மிக்கவர்கள், எதையும் புதிதாக யோசிப்பார்கள்.

5. மே மாதம்:
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். கருணை, மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை நீங்கள் இருக்கும் இடத்தில் நிறைந்து இருக்கும். காதல் மற்றும் எதார்த்தமான எண்ணம் உடையவர்கள். கலகலப்பாக இருக்கும் குணம் கொண்டவர்கள். எதில் கை வைத்தாலும் அதில் புகழ்பெற்றவர்களாக இருப்பார்கள்.

6. ஜூன் மாதம்:
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் லட்சுமி தேவியின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கக்கூடிய இடத்தில் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் காதல் உணர்வு மற்றும் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்கள். ரொம்ப தைரியமானவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு தான், எதிலும் உணர்ச்சி வசப்படுவார்கள்.

7. ஜூலை மாதம்:
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். வசீகரத்தன்மையும், ஆளுமை தன்மையும் அதிகமாக இருக்கும். இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ரகசியமானவர்கள், அமைதியான குணம் கொண்டவர்கள். உழைப்புக்கு சொந்தக்காரர்கள். நேர்மையாக இருக்க விரும்புவார்கள்.

மற்றவர்களின் உணர்வுகளை மிகவும் மதிப்பார்கள். மற்றவர்கள் செய்யும் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்வார்கள். பழிவாங்கும் குணம் அற்றவர்கள்.

8. ஆகஸ்ட் மாதம்:
இவர்கள் துர்க்கை அம்மனின் அம்சம் கொண்டவர்கள். இவர்களிடம் பயம் என்பதே இருக்காது, எதையும் துணிச்சலுடன் செய்வார்கள். கடின உழைப்பாளி, சுறுசுறுப்பாக இருப்பார்கள். வாழ்க்கையில் தைரியமான முடிவுகளை எடுப்பார்கள்.
தன்னை சுற்றி இருப்பவர்களை குறித்த அக்கறை கொண்டவர்கள். தான் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். எதையும் புதுவிதமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள்.

9. செப்டம்பர் மாதம்:
இவர்கள் அனுமனின் அம்சம் கொண்டவர்கள். உண்மைக்கும், நேர்மைக்கும், விசுவாசத்திற்கும் உரியவர்களாக இருப்பார்கள். ஆளுகைக்கு உட்பட்டவர்கள். புத்தி கூர்மை மிக்கவர்கள். விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதிலும் வெற்றிக்கொடி நாட்டவே விரும்புவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

10. அக்டோபர் மாதம்:
இவர்கள் விஷ்ணுவின் அம்சம் கொண்டவர்கள். அன்பு, பாசம், காதல் இவர்களிடம் அதிகம் இருக்கும். புதுமை துவமும், நட்பாக பழகும் எண்ணம் கொண்டவர்கள். எதையாவது ஒன்றை அடைய வேண்டும் என நினைத்து விட்டால் அடைந்தே தீருவார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவதை இவர்களது குறை.

பிறரை பழி தீர்ப்பது, வஞ்சிப்பது இவர்களது பிறந்த குணம். இவர்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் புகழ்பெற்ற தலைவராக இருப்பார்கள்.

11. நவம்பர் மாதம்:
இவர்கள் குபேரரின் அம்சம் கொண்டவர்கள். தனிமையையும், அமைதியையும் விரும்புவார்கள். இனிமையானவர்கள் மற்றும் கற்பனை திறன் கொண்டவர்கள். இவர்கள் உணர்வு பூர்வமானவர்கள். எதையும் நேர்மையாகவே யோசிப்பார்கள்.

எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். மற்றவர்களுக்கு நல்ல ஆசானாக திகழ்வார்கள். விட்டுக் கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே செய்வார்கள்.

12. டிசம்பர் மாதம்:
இவர்கள் சிவனின் அம்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். கோபம், அமைதி, உறுதி, வலிமை, எளிமை ஆகியவை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் சுதந்திரமானவர்கள். இவர்கள் எதையும் எதார்த்தமாக யோசிப்பார்கள்.

நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள்.சில நேரங்களில் பொறுப்புகள் குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பார்கள். இவர்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

0

வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுள் சில பொருட்கள் மங்களகரமான பொருட்களாக இருக்கலாம், சில பொருட்கள் தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களாக இருக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி இது போன்ற பொருட்களை மங்களகரமான பொருட்கள் என்று கூறுவோம். அரிசி, சர்க்கரை, பால், உப்பு, எண்ணைய் இது போன்ற பொருட்களை தெய்வீக அம்சம் கொண்ட பொருட்கள் என்று கூறுவோம்.

எனவே இது போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். இந்த பொருட்களை நாம் கையாளும் பொழுது கீழே சிந்தினால் அது ஆபத்தானது அல்லது அபசகுனமானது என்றும் நமது முன்னோர்கள் கூறுவர்.

எனவேதான் நமது முன்னோர்கள் இந்த பொருட்களை மிகவும் கவனமாக கையாளுவார்கள். இவ்வாறு கவனமாக கையாளும் பொழுதும் ஒரு சில பொருட்கள் கைத் தவறி கீழே சிந்துகிறது என்றால், அது ஏதோ ஒன்றைக் குறிக்கிறது என்று அர்த்தம்.

1. குங்குமம் கீழே தவறினால்:
குங்குமம் என்பது மிகவும் புனிதமான மற்றும் மங்களகரமான ஒரு பொருளாகும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பொழுது கடவுளின் ஆசிர்வாதமாக இந்த குங்குமத்தை நாம் வாங்கி வருவோம். இந்த குங்குமத்தை தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொழுது ஒரு விதமான நேர்மறை எண்ணங்கள் நமக்குள் தோன்றுவதை நம்மால் உணர முடியும்.

அத்தகைய சிறப்பம்சம் கொண்ட இந்த குங்குமம் கீழே தவறினால் அபசகுனமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த குங்குமம் கீழே தவறினால் நமக்கு வெற்றிகளும், நல்ல அணுகூலங்களும் கிடைக்கப் போவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. ஆனால் இந்த குங்குமத்தை நாமாக கீழே கொட்ட கூடாது. அவ்வாறு கொட்டினால் அது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.

2. அரிசி:
அரிசி என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே தான் நமது முன்னோர்கள் காலை எழுந்ததும் குளித்துவிட்டு உடல் சுத்தத்துடனும், மன சுத்தத்துடனும் இந்த அரிசியை தொட வேண்டும் என கூறுவர். இதற்காகத்தான் காலை எழுந்ததும் குளித்துவிட்டு சமையல் செய்ய தொடங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அரிசியை எடுக்கும் பொழுது முடிந்த அளவிற்கு கீழே சிந்தாமல் எடுக்க வேண்டும். ஒரு வேளை கீழே தவறினால் காரியத்தடை ஏற்படப் போவதை குறிக்கிறது. புதிதாக ஒரு செயலை தொடங்க இருக்கக் கூடிய சமயத்தில் அரிசியானது கீழே தவறினால், அந்த செயலில் பல தடைகளையும், பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை குறிக்கிறது.

3. எண்ணெய்:
சமையலறையில் நாம் பயன்படுத்தக்கூடிய எண்ணெயை மிகவும் சிக்கனமாகவும், கவனத்துடனும் கையாள வேண்டும். எண்ணெயை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய வீடுகளில் பணவரவு அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் எண்ணெயை அதிகமாக பயன்படுத்தும் பொழுது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

நவகிரகங்களில் சனிபகவானின் அம்சம் கொண்டதுதான் இந்த எண்ணெய். எனவே இந்த எண்ணையை நாம் அடிக்கடி கீழே சிந்தினால் சனிபகவானின் கோபத்திற்கு ஆளாகி பல தோஷங்கள் உருவாகலாம். மேலும் எண்ணெய் கீழே சிந்தினால் அந்த நாளில் ஏதேனும் பொருள் நஷ்டமோ அல்லது வியாபார நஷ்டமோ ஏற்படும் என்பதையும் குறிக்கிறது.

4. பால்:
நாம் தினமும் பால் வாங்கியவுடன் அந்தப் பாலை காய்ச்சி, சிறிது சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு நெய்வேத்தியமாக படைத்த பின்னர் நாம் குடிக்கும் பொழுது, தெய்வங்களின் அருள் நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். மேலும் வெண்மை நிறம் கொண்ட இந்த பாலானது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது.

அத்தகைய பாலை கீழே கொட்டினால் அந்த வீட்டில் உள்ள யாரேனும் ஒருவரின் மீது புரளிகள் ஏற்படலாம் அல்லது காரிய தடைகள், பிரச்சனைகள் இது போன்றவைகள் ஏற்படலாம் என்பதை குறிக்கிறது.

5. உப்பு:
உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சம் கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அத்தகைய உப்பை கீழே சிந்தாமல் கையாள்வது என்பது மிகவும் அவசியம். இத்தகைய உப்பு கீழே சிந்தும் பொழுது அந்த வீட்டில் பண விரயம் மற்றும் பணத் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஒருவேளை உப்பானது கீழே சிந்தினால் அதனை யாரும் மிதிப்பதற்கு முன்பாக, சுத்தமாக அள்ளி விட வேண்டும்.

இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

0

ஒரு மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை தான். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் இறக்கும் பொழுது அந்த குடும்பத்திற்கு அதிகப்படியான வேதனையை கொடுக்கும். எதிர்பாராமல் ஒரு உயிர் இறந்தது என்றால், அந்த உயிரைச் சார்ந்த அன்பு கொண்டவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள்.

நீ ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்? உனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு என்று அந்த ஆன்மாவை நாம் பார்த்து கூறும் பொழுது, அந்த ஆன்மா நம்மை விட்டு பிரியாமல் நம் உடனே தான் இருக்கும். அவ்வாறு அந்த ஆன்மா இந்த உலகத்தை விட்டு செல்லாமல் நம்முடன் தான் இருக்கிறது என்பதை, எவ்வாறு உணர்வது என்பது குறித்து தற்போது காண்போம்.

இறந்தவர்களின் ஆன்மாவானது இறந்த உடனே இந்த உலகத்தை விட்டு செல்லாது. இருந்த அந்த ஆன்மாவானது தனது உடலுக்கு எந்த விதமான அடக்கத்தை செய்கிறார்கள், எவ்வாறு செய்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு இருக்குமாம். இறந்த அந்த ஆன்மாவானது கணப்பொழுதில் எமலோகத்திற்கு சென்று மீண்டும் பூலோகத்திற்கு வந்து விடும்.

ஒரு உயிர் பிரிந்த பிறகு அந்த ஆன்மாவானது 12 நாட்களுக்கு இந்த பூலோகத்தில் தான் இருக்குமாம். எனவே தான் நமது முன்னோர்கள் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால் தொடர்ந்து 12 நாட்களுக்கு இறந்தவர்களின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, தண்ணீர் வைத்து, இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படையலாக வைத்து வழிபடுவார்கள்.

அந்த 12 நாட்களும் அந்த ஆன்மாவானது தன்னைப் பிரிந்து நமது குடும்பத்தினர் எவ்வாறு வருத்தம் கொள்கிறார்கள் என்பதையும், நமக்கு எவ்வாறு சடங்குகளை செய்கிறார்கள் என்பதையும் கவனிக்கும். அந்த 12 நாட்களும் நமது வீட்டை சுற்றி தான் அந்த ஆன்மா இருக்கும்.

இறந்தவர்கள் நல்லது செய்து இருந்தார்கள் என்றால், அந்த ஆன்மாவானது எமலோகத்திற்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று விடும். ஆனால் கெட்டது செய்தவர்களாக இருந்தால் எமலோகத்திற்கு செல்லும் வழியில் பல்வேறு பிரச்சனைகளையும், துன்பங்களையும், கண்ணீரையும், இடையூறுகளையும் பெற்ற பின்னரே எமலோகத்திற்கு செல்வார்கள்.

இந்த ஆன்மாவானது நமது வீட்டில் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு பல விதமான அறிகுறிகள் உள்ளன.

1. நாம் தனிமையில் இருக்கும் பொழுது நமது ஆழ்மனதில் நம்முடன் யாரோ இருக்கிறார்கள் என்பது போன்றும், எந்தவித பயமும் இல்லாமல் இருப்பது போன்றும் உணர்ந்தால் நமக்கு மிகவும் நெருங்கிய ஒரு ஆன்மா நமது அருகில் இருப்பதாக அர்த்தம்.

அதே சமயம் நாம் தனிமையில் இருக்கும் பொழுது நமது அருகில் யாரோ ஒருவர் இருப்பது போன்றும், ஒரு விதமான பயம் ஆழ்மனதில் உருவாகிறது என்றாலும், ஏதோ ஒரு கெட்ட ஆன்மா நமது அருகில் இருக்கிறது என்று அர்த்தம்.

2. இரவு நேரத்திலோ அல்லது பகல் நேரத்திலோ நமது வீட்டில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அல்லது மின்விளக்குகள் திடீரென அணைந்து எரிவது. இதுவும் நமது வீட்டில் ஆன்மா இருப்பதை உறுதி செய்கிறது.

3. இறந்த அந்த ஆன்மாவினுடைய உடைகள், பேனாக்கள், கை கடிகாரம் மற்றும் அந்த ஆன்மாவிற்கு பிடித்தமான பாடல்கள், திரைப்படங்கள் இதுபோன்று ஏதேனும் ஒரு வகையில் அந்த இறந்த ஆன்மாவிற்கு பிடித்தமான பொருள் உங்களிடம் வந்து கொண்டே இருக்கிறது என்றாலும், ஆன்மா உங்கள் வீட்டில் இருக்கிறது என்று அர்த்தம். அந்த ஆன்மா உங்களிடம் ஏதேனும் ஒன்றை பேச முயற்சிக்கிறது என்று அர்த்தம்.

4. உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு அறையில் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது, மற்ற அறைகளின் வெப்பநிலையை காட்டிலும் நீங்கள் இருக்கும் அறையின் வெப்பநிலை குளிர்ச்சியாக இருக்கிறது என்றாலும், உங்கள் வீட்டில் ஆன்மா இருக்கிறது என்று அர்த்தம்.

5. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கடிகாரம் திடீரென நின்று நின்று ஓடினாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அடிக்கடி நின்று கொண்டாலும் உங்கள் வீட்டில் ஆன்மா இருக்கிறது, அந்த ஆன்மா உங்களிடம் பேச விரும்புகிறது என்று அர்த்தம்.

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!…

0

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலாவால் முதலமைச்சர் பதவி கிடைத்தாலும் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் சசிகலா தரப்பினை அதிமுகவிலிருந்து நீக்கவும், ஆட்சியை நடத்தவும் பாஜகவின் உதவி பழனிச்சாமிக்கு தேவைப்பட்டது. பாஜகவுக்கும் தமிழகத்தில் கால் பதிக்க அதிமுகவின் கூட்டணி தேவைப்பட்டது. எனவே, இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டன.

அதிமுகவை விமர்சிக்க இது ஒன்றே போதும் என நினைத்த திமுக ‘பாஜகவுக்கு அடிபணியும் அடிமை அதிமுக’ என கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக என்ன சொன்னாலும் தலையாட்டுகிறார்கள்.. அடிபணிந்து நடக்கிறார்கள்.. என மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பலமுறை சொன்னார். ஆனால், நாங்கள் அடிமை அல்ல தொடர்ந்து பழனிச்சாமி சொல்லி வந்தார்.

எங்களை யாரும் மிரட்ட முடியாது!.. கூட்டணி இதுதான்!.. சேகர்பாபுவுக்கு பழனிச்சாமி பதிலடி!...

கடந்த சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது. ஆனால், இரண்டு தேர்தல்களிலுமே அதிமுக தோல்வி அடைந்தது. அதிலும் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இனிமேல் பாஜகவுடன் கூட்டணி நடித்தால் அதிமுகவின் எதிர்காலம் அவ்வளவுதான் என கணக்குப்போட்ட எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியிலிருந்து விலகினார்.

கடந்த 2 வருடங்களாக அதிமுக தனித்து செயல்பட்டு வருகிறது. மேலும், இனிமேல் தனது தலைமையில் மட்டுமே அதிமுக செயல்பட வேண்டும். பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களை கட்சியில் இணைக்கக் கூடாது என்பதில் பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், சமீபத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். எனவே, அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்திருக்கிறது. மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அரசு மிரட்டுவதாக திமுக அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பதில் சொன்ன பழனிச்சாமி ‘நாங்கள் இப்போது ஆட்சியிலேயே இல்லை. அப்படி இருக்க உருட்டல், மிரட்டல் எல்லாம் எங்களை எப்படி செய்ய முடியும்?.. திமுக மட்டுமே எங்கள் எதிரி. ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்’ என சொல்லியிருக்கிறார்.