Home Blog Page 357

Uric அமிலம் அதிகமாகிவிட்டதா? யூரிக் அமிலத்தை குறைக்க இந்த உணவுகள் இருக்க கவலை எதற்கு?

0

உடலில் பியூரின்கள் உடையும் பொழுது உருவாகும் இரசாயனம்தான் யூரிக் அமிலம்.இந்த பாதிப்பு ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது.உடலில் உருவாகும் யூரிக் அமிலம் நமது சிறுநீர் வழியாக வெளியேறுவது வழக்கம்.

அப்படி இருக்கையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிமானாலோ அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ யூரிக் அமிலம் வெளியேற முடியாமல் தேங்கிவிடும்.இதன் காரணமாக மூட்டு வலி,சிறுநீரக கல்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் உருவாகும்.

உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்:

1)மூட்டு மற்றும் கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்படுதல்

2)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் உண்டாதல்

3)சிறுநீர்ப்பை வீக்கம் அதிகரித்தல்

4)இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுதல்

5)உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுதல்

6)இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தல்

7)கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுதல்

யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இதனுடன் சிலவகை உணவுகளை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்:

1.பாகற்காய்

கசப்பு காயான பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இந்த காயை உணவாக எடுத்துக் கொண்டால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.

2.வெந்தயம்

தினமும் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுப்படும்.

3.வெள்ளரி

இந்த காயை ஜூஸாக சாப்பிடுவதால் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.அதேபோல் பேரிக்காய் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் குறையும்.பேரிக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

4.கேரட்

தினமும் ஒரு பச்சை கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

5.க்ரீன் டீ

காலை நேரத்தில் ஒரு கிளாஸ் க்ரீன் டீ செய்து பருகினால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.அதேபோல் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.

தலை முடி கையோடு வருதா? உடல் வலி சோர்வு இருக்கா? இதற்கான காரணமும் உரிய தீர்வும்!!

0

நம் உடல் எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் சத்து அவசியமான ஒன்றாகும்.நாம் உண்ணும் உணவின் மூலம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.நம் உடல் எடையில் 2% கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.

அப்படிப்பட்ட கால்சியம் சத்து நமது உடலில் குறையும் பொழுது பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.கால்சியம் சத்து குறைந்தால் உடல் சோர்வு அதிகமாகிவிடும்.எலும்புகள் வலிமை குறைந்துவிடும்.இதனால் முதுகு வலி,இடுப்பு வலி,மூட்டு வலி,கை கால் வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கால்சியம் சத்து குறைந்தால் உடல் பலவீனமானது போன்ற உணர்வு ஏற்படும்.தசைகள் தளர்ந்து கை கால் மரத்து போதல் அதிகமாகும்.

முடி உதிர்வு,நகங்களில் விரிசல் ஏற்படுதல்,நகங்கள் உடைதல்,நரம்பு பிரச்சனைகள் ஏற்படும்.பல் வலிமைக்கு கால்சியம் சத்து அவசியமான ஒன்று.அப்படி இருக்கையில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டால் பல் சிதைவு,பல் உடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் தூங்குவதில் சிரமம் ஏற்படும்.

உடலில் வைட்டமின் டி சத்து குறைந்தால் கால்சியம் குறைபாடு ஏற்படும்.இது தவிர தைராய்டு பாதிப்பு,மோசமான உணவுப் பழக்கம்,கிட்னி சம்மந்தபட்ட பிரச்சனைகளால் கால்சியம் குறைபாடு ஏற்படுகிறது.

உணவின் மூலம் மட்டுமே உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க முடியும்.பால் மற்றும் பாலில் தயாரிக்கப்படும் பொருட்களில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது.தினமும் ஏதேனும் ஒரு பால் பொருளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.

வேகவைக்கப்பட்ட முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான கால்சியத்தை பெற முடியும்.கீரைகளில் கால்சியம் சத்து அதிகளவு நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கீரை உணவை உட்கொண்டால் கால்சியம் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.

அத்தி பழத்தை உலர வைத்து தேனில் கலந்து சாப்பிட்டால் கால்சியம் சத்து கிடைக்கும்.அதேபோல் தேன் நெல்லி சாப்பிடுவதால் கால்சியம் சத்து கிடைக்கும்.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.

வெண்ணையில் ராகி லட்டு செய்து சாப்பிட்டால் கால்சியம் சத்து அதிகரிக்கும்.அதேபோல் எள் ஏகப்பட்ட கால்சியம் சத்தை கொண்டிருக்கிறது.இதை லட்டு செய்து சாப்பிடுவதால் கால்சியம் சத்தை அதிகரிக்கலாம்.கடல் மீன்களை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெற முடியும்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

0

1.பெரும்பாலான மக்கள் கோவிலில் தான் ஊர் கதை மற்றும் உலக கதைகளை பேசுகின்றனர். ஆனால் கோவிலில் இது மாதிரியான விஷயங்களை பேசக்கூடாது. அதாவது மற்றவர்களை குறை கூறி பேசுவது கூடாது. கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடவுளைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கடவுளின் எண்ணங்கள் மட்டுமே நமது மனதில் இருக்க வேண்டும்.

மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கு சென்றும் மற்றவர்களைப் பற்றி குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது இது போன்றவைகள் கூடாது. பொதுவாக கோவிலுக்கு சென்றால் அதிகம் பேசக்கூடாது. மன அமைதிக்காக கோவிலுக்கு செல்லக்கூடிய நாம், அமைதியாக தான் கடவுளை வழிபட்டு வீட்டிற்கு வர வேண்டும்.

கோவிலுக்கு சென்று இதுபோன்ற விஷயங்களை பேசுவதை நாம் தவிர்த்துக் கொள்வதுடன் மற்றவர்கள் பேசுவதையும் நாம் தவிர்த்து விட வேண்டும். கோவிலில் இந்த விஷயத்தை நாம் பேச வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம் என்று நாம் எடுத்துரைக்க வேண்டும்.

2. கோவிலுக்கு சென்றால் நிதானம் என்பது கண்டிப்பாக நமக்கு வேண்டும். மருத்துவமனை, துணிக் கடைகள் அல்லது மற்ற வேறு ஏதேனும் ஒரு இடங்களுக்குச் செல்லும் பொழுது நிதானமாக, பொறுமையாக காத்திருந்து எவ்வாறு ஒரு செயலை செய்கிறோமோ, அதனை போன்று தான் கோவிலிலும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும்.

கோவிலில் அதிக கூட்டம் இருந்தால் ஒரு மணி நேரம் அல்லது 2 மணி நேரம் நின்று கடவுளை வணங்க வேண்டுமா என்று கோபம் கொள்ளக் கூடாது. கடவுளை காண கோவிலுக்கு சென்ற நாம் பொறுமையாகவும், நிதானமாகவும் காத்திருந்து தான் கடவுளை வணங்கி வர வேண்டும்.

மற்ற வேலைகளை செய்ய செல்ல வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக கடவுளை வணங்கி விட்டு, சிறிது நேரம் கூட கோவிலில் அமராமல் செல்லக் கூடாது. கோவிலில் இருக்கும் கூட்ட நெரிசலின் காரணமாக மற்றவர்களிடம் கோபம் கொண்டு பேச கூடாது. அதாவது நாம் பேசும் வார்த்தைகளிலும் நிதானம் தேவை.

கோவிலில் நாம் நடக்கக்கூடிய நடை, பேசுகின்ற வார்த்தை மற்றும் நமது எண்ணங்கள் ஆகிய அனைத்திலும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும்.

3. கோவிலில் தரக்கூடிய அருட் பிரசாதங்களை எக்காரணம் கொண்டும் விரயம் ஆக்க கூடாது. கோவிலில் கொடுக்கக்கூடிய அருட் பிரசாதம் உணவு என்பது மட்டுமல்லாமல் கோவிலில் கொடுக்கக்கூடிய விபூதி மற்றும் பூக்களையும் வீணாக்க கூடாது.

கோவிலில் தரக்கூடிய விபூதியை நமது நெற்றியில் வைத்துக் கொண்டு மீதி இருக்கக்கூடிய விபூதியை, கோவிலில் ஏதேனும் ஒரு தூண்களில் கொட்டி விடுவோம் அவ்வாறு செய்யக்கூடாது. அதேபோன்று கோவிலில் கொடுக்கக்கூடிய பூக்களையும் வாங்கி, நமது வீட்டில் ஒரு ஓரத்தில் வைத்து விடுவோம் அவ்வாறு செய்யக்கூடாது.

உணவாக இருந்தாலும் அது நமக்கு வேண்டிய அளவிற்கு மட்டும் வாங்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோவிலில் கொடுக்கக்கூடிய பிரசாதம் எதுவாக இருந்தாலும், அதனை விரயம் ஆக்காமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோவிலில் கொடுக்கக்கூடிய மஞ்சள், குங்குமம், சந்தனம், தீர்த்தம் இது போன்ற மங்களப் பொருட்கள் எதையும் வீணாக்க கூடாது. மற்றவர்களுக்கும் வாங்கிக் கொண்டு செல்வோம் என்று, அதிகமாக வாங்கி வீணாக்குவது என்பது கூடாது. எதுவாக இருந்தாலும் அதனை அளவாக வாங்கிக் கொள்வது தான் நல்லது.

சியா மற்றும் சப்ஜா இரண்டும் ஒரே விதையா? குழப்பம் தீர இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

0

உங்களில் பெரும்பாலானோர் சியா மற்றும் சப்ஜா ஆகிய இரு விதைகளும் ஒன்று தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.இந்த இரண்டு விதைகளும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதனால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது.

சியா,சப்ஜா ஆகிய இரு விதைகளுக்கு இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள் இருக்கின்றது.இந்த சியா,சப்ஜா விதைகள் ஐஸ்க்ரீம்,ஜூஸ் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடப்படுகிறது.சப்ஜா விதை திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகை தாவரத்தில் இருந்து கிடைக்கும் ஒரு பொருளாகும்.அதேபோல் சியா விதை சால்வியா என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதையாகும்.

இந்த இரண்டு விதைகளும் பலுடாக்களில் சேர்க்கப்படுகின்ற காரணத்தினால் இவற்றை பலூடா விதை என்றும் அழைக்கின்றனர்.சியா விதை மற்றும் சப்ஜா விதை ஒரே அளவில் இருக்கிறதால் பலரும் குழப்பமடைகின்றனர்.ஆனால் சியா மற்றும் சப்ஜா விதை நிறம் மற்றும் தோற்றத்தலில் அதிக வித்தியாசத்தை கொண்டிருக்கிறது.

இந்த இரு விதைகளும் புதினா குடும்பத்தை சேர்ந்தவை.சியா விதை ஓவல் வடிவத்திலும் சப்ஜா விதை நீள் வடிவத்திலும் இருக்கும்.சியா விதைகளை ஊறவைத்தால் அவை நீரை உறிஞ்சி அளவில் பெரியதாக நேரம் எடுத்துக் கொள்ளும்.

ஆனால் சப்ஜா விதை சிறிது நேரத்தில் நீரை உறிஞ்சி பெரியதாகிவிடும்.சப்ஜா விதையில் சிறிது துளசி நறுமணம் வீசும்.சியா விதைகளை அப்படியே சாப்பிட முடியும்.ஆனால் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரண்டு விதைகளும் நமது உடல் எடையை குறைக்க உதவுகிறது.அதிக பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.சியா விதையில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்கிறது.

சியா விதையில் இருக்கின்ற நார்ச்சத்து செரிமானத்தை தூண்டுகிறது.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்க சியா விதைகளை சாப்பிடலாம்.

வயிறு எரிச்சல்,அசிடிட்டி பிரச்சனை குணமாக சப்ஜா விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.சருமப் பிரச்சனைகளை சரி செய்ய சியா விதைகளை உட்கொள்ளலாம்.கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சப்ஜாவை ஊறவைத்து சாப்பிடலாம்.

உடலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகளை அகற்ற சப்ஜா விதைகளை சாப்பிடலாம்.இவை இரண்டும் நமது உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குவதால் இரண்டையும் தயங்காமல் எடுத்துக் கொள்ளலாம்.

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

0

இன்றைய நாளில் இருக்கக்கூடிய தங்கத்தின் விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட மிகவும் கடினம். அவ்வாறு இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சிறிதளவாவது தங்கம் என்பதை கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது இந்த ஒரு பொருளையும் வாங்கி, இந்த புதிய தங்கத்துடன் இந்த பொருளையும் சேர்த்து வைத்து பாருங்கள் நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே காண்பீர்கள்.

நாம் புதியதாக தங்கம் வாங்குகிறோம் என்றால் காலை அல்லது பகல் நேரங்களில் தான் வாங்க வேண்டும். விளக்கு வைத்த பிறகு அதாவது மாலை 6 மணிக்கு பின்பாக தங்கத்தை வாங்க கூடாது. இதற்கு முன்பாக மாலை 6 மணிக்கு பிறகு வாங்கிய நகைகள் இருந்தால், அந்த நகைகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் அல்லது அடமானம் வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

அதேபோன்று தங்கம் வாங்கும் பொழுது நல்ல நேரம் மற்றும் குளிகை நேரம் ஆகியவற்றை பார்த்து வாங்குவது மிகவும் சிறப்பு. அதிலும் குறிப்பாக குளிகை நேரம் மிக மிக சிறப்பானது. ஏனென்றால் குளிகை நேரத்தில் நாம் வாங்கக்கூடிய மற்றும் செய்யக்கூடிய செயல் மீண்டும் மீண்டும் நமது வாழ்க்கையில் நடைபெறும்.

முருகருக்கு உகந்த செவ்வாய்க் கிழமையில் தங்க நகை வாங்குவது என்பது மிகவும் சிறப்பான ஒன்று. இந்த கிழமையில் வாங்கும் பொழுது தங்க நகை மென்மேலும் சேரும். அதேபோன்று குரு பகவானுக்கு உரிய வியாழன் கிழமை அன்றும் தங்க நகைகளை வாங்கலாம்.

சனிக் கிழமையை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் புதிய நகைகளை வாங்கிக் கொள்ளலாம். செவ்வாய்க் கிழமை தங்க நகையை வாங்கினால், வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும் பொழுது அதனுடன் துவரம் பருப்பையும் சேர்த்து வாங்க வேண்டும்.

வியாழன் கிழமை அன்று வாங்கினால் சுண்டலையும் சேர்த்து வீட்டிற்கு வாங்கி வருவது நல்லது. திங்கள் கிழமையில் வாங்கினால் அரிசி வாங்குவது நல்லது. புதன்கிழமை தங்க நகையை வாங்கினால் பச்சைப்பயிறு வாங்குவது நல்லது.

இவை அல்லாமல் தங்க நகை வாங்கும் பொழுது பொதுவாக சில பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதாவது துளசி, கண்ணாடி, பச்சை கற்பூரம், இலவங்கம் பூ,குங்குமம் இதுபோன்ற பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். தங்க நகைகள் வாங்குவதற்கு அமாவாசை மற்றும் சந்திராஷ்டமம் நாட்களை தவிர்ப்பது நல்லது.

புதிய தங்கம் வாங்கினாலும் கூட, அதனை வீட்டிற்கு வந்ததும் பன்னீர் அல்லது தண்ணீரைக் கொண்டு கழுவி, நன்றாக துடைத்து அது உணர்ந்த பின்னர் அதனுடன் நாம் வாங்கி வந்த கண்ணாடி, பச்சை கற்பூரம், லவங்கம் பூ இதனையும் உடன் சேர்த்து வைக்க வேண்டும்.

அந்தக் கண்ணாடியில் நாம் வைக்கக்கூடிய தங்கமானது தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் பொழுது தங்க நகைகள் நம்மிடம் சேரும் மேலும் அடமானத்திற்கு செல்லாமலும் இருக்கும்.

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

0

உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தோம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் நமது வீட்டில் சேரும் என்பது ஒரு நம்பிக்கை.

அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடியின் பக்கத்தில் எண்ணெயை வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தேகங்கள் குறித்து தற்போது காண்போம்.

கடலில் வாசம் செய்யக்கூடிய இந்த மகாலட்சுமிக்கு உப்பு என்பது தாய் வீட்டு சீதனம் போன்றது. குடும்பத்தில் சுபிட்சம் பெருக கல் உப்பு என்பதை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சமையலுக்கு உப்பை பயன்படுத்தும் பொழுது, கல் உப்பை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் என்று அறிவியல் கூறுகிறது.

நமது முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த உப்பை நமது தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் எப்பொழுதும் அடுப்பிற்கு அருகில் தான் வைத்திருப்பார்கள்.

அடுப்பு என்பது எப்பொழுதும் கிழக்கு நோக்கி வைத்து மேற்கு பார்த்தவாறு இருப்பது தான் சரியானது. அதாவது நீங்கள் சமைக்கும் பொழுது கிழக்கு திசையை பார்த்தவாறு சமைக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய ஒளி கதிர்கள் உங்கள் அடுப்பின் மீது படுவது மிகவும் விசேஷமானது. இத்தகைய அனுஷம் உள்ள வீட்டில் செல்வம் ஆனது அதிகம் பெருகும்.

அடுப்பிற்கு வலது பக்கத்தில் உள்ள மூலையில் மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த கல் உப்பை வைப்பது மிகவும் சிறப்பானது. இந்த உப்பு ஜாடையை எப்பொழுதும் தரையில் வைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கல் உப்பை பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைப்பதை தவிர்ப்பது நல்லது.

பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மட்டுமே கல் உப்பை வைக்க வேண்டும். இந்த உப்பு ஜாடியை வெறும் தரையில் கீழே வைக்காமல், ஒரு தட்டு அல்லது ஒரு சிறிய பலகையின் மீது வைக்க வேண்டும். உப்பு ஜாடியில் முதலில் ஒரு ரூபாய் நாணயத்தை தான் வைக்க வேண்டும்.

அதன் பிறகு உப்பு வாங்கும் கிழமை வெள்ளிக் கிழமையாக இருப்பதும் சிறப்பு. ஒரு ரூபாய் நாணயத்தை முதலில் வைத்து அதன் பிறகு தான் உப்பை கொட்ட வேண்டும். உப்பினை எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வெள்ளிக் கிழமைகளில் உப்பு ஜாடியை கழுவ கூடாது.

புதன், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உப்பு ஜாடியை நன்றாக கழுவி, வெயிலில் காயவைத்து பின்பு உப்பை கொட்டி வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்பம் முன்னேற்றத்திற்கும் நல்லது.

இவ்வாறு உப்பு ஜாடியை கழுவிய பின்பு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, திரும்ப உப்பை கொட்டி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை பெற்று தரும். இதனால் வீட்டில் செல்வமானது குறையாமல் இருக்கும். அதேபோன்று உப்பு ஜாடிக்கு அருகிலேயே எண்ணெயை வைப்பது தான் சிறந்த முறை.

சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவதாக இருந்தாலும், அதனை உப்பு ஜாடியின் பக்கத்தில் தான் வைக்க வேண்டும். உப்பு ஜாடியை தனியாகவும் எண்ணெய் ஜாடியை தனியாகவும் வைக்கக் கூடாது. இவ்வாறு பிரித்து வைத்தால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே உப்பு ஜாடியையும், எண்ணெய் ஜாடியையும் அருகருகே தான் வைக்க வேண்டும்.

வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் யூஸ் பண்றவங்களுக்கு எச்சரிக்கை மணி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

நமது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாகும்.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கும்.வீட்டில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவது சுலபம்.ஆனால் வெளியில் செல்லும் பொழுது எப்பொழுதும் வாட்டர் பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியம்.நம் வீட்டில் இருந்து தண்ணீர் நிரப்பி எடுத்துச் சென்று பருகினால் உடல் நல பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.

வெளியில் உள்ள தண்ணீரில் பாக்டீரியா,கிருமி தொற்றுகள் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.அப்படி இருக்கையில் நாம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டிலை சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.

சிலர் வாட்டர் பாட்டிலை க்ளீன் செய்யாமல் தண்ணீர் நிரப்பி பயன்படுத்துகின்றனர்.சுத்தம் செய்யாத வாட்டர் பாட்டிலில் லட்சக்கணக்கான கிருமித் தொற்றுகள் படிந்திருக்கிறது என்று நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.வாட்டர் பாட்டிலை சுத்தம் செய்யாமல் தண்ணீர் ஊற்றி பருகினால் கொடிய பாக்டீரியாக்கள் உடலில் நேரடியாக நுழைந்துவிடும்.இதனால் வயிற்று வலி,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகும்.

சிலர் வாட்டர் பாட்டில் வாங்கியதில் இருந்து க்ளீன் செய்யாமல் பயன்படுத்துகின்றனர்.இது மிகவும் மோசமான பழக்கமாகும்.சிலர் வாட்டர் பாட்டிலில் நிரப்பிய நீரை பல நாட்கள் வரை பயன்படுத்துகின்றனர்.இப்படி பயன்படுத்தும் தண்ணீரில் உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்கள்,கிருமிகள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கும்.

அதேபோல் வாட்டர் பாட்டிலில் வாய் வைத்து குடிப்பதால் வாயில் உள்ள கிருமிகள் தண்ணீரில் கலந்து மற்றொருவர் பயன்படுத்தும் பொழுது அவை கிருமி தொற்றுக்கு வழிவகுக்கிறது.சிலர் கைகளை சுத்தம் செய்யாமல் வாட்டர் பாட்டிலை பிடிக்கின்றனர்.இதனால் கைகளில் உள்ள பாக்டீரியாக்கள் பாட்டில் மீது பரவுகிறது.இந்த கிருமிகள் தண்ணீரில் கலந்து கொடிய நோய் பாதிப்புகளை உருவாக்குகிறது.

வாட்டர் பாட்டிலை தினமும் சுத்தம் செய்த பிறகு தண்ணீர் ஊற்றி பயன்படுத்த வேண்டும்.சோப் பயன்படுத்தி வாட்டர் பாட்டிலை தேய்த்து கழுவிய பிறகு வெது வெதுப்பான தண்ணீரில் பாட்டிலை போட்டு சிறிது நேரம் ஊறவிட வேண்டும்.பிறகு மீண்டும் கழுவிய பிறகு தண்ணீர் ஊற்றி பயன்படுத்தலாம்.இப்படி சுத்தம் செய்வதால் பாட்டிலில் உள்ள கிருமித் தொற்று முழுமையாக அழிந்துவிடும்.

தினமும் ஒருமுறை பாட்டிலை வெது வெதுப்பான தண்ணீரில் போட்டு அலசிய பிறகு பயன்படுத்தினால் ஆபத்துக்கள் குறையும்.கைகளை கழுவிய பிறகு வாட்டர் பாட்டிலை பயன்படுத்த வேண்டும்.அதேபோல் எச்சில் படும்படி தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

ஹெல்த் மீது அக்கறை இருக்க பெண்கள் கண்டிப்பா இதை செய்யுங்கள்!! நோய் நொடியின்றி வாழ பெஸ்ட் டிப்ஸ்!!

0

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த தவறுவதால் குறைந்த வயதிலேயே பல நோய்களை சந்திக்கின்றனர்.திருமணம் முடிந்த பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி சிந்திப்பதில்லை.பெரும்பாலான பெண்கள் வீட்டிலேயே இருப்பதால் வீட்டு வேலைகள் முடிந்த பின்னர் டிவி பார்ப்பது,மொபைல் பயன்படுத்துவது,தூங்குவது என்று இதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.இதனால் பின்னாளில் மன அழுத்தம்,மன உளைச்சல்,கவலை,எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகி உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது.

பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்தினால் மட்டுமே நீண்ட காலம் வியாதிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியும்.வீட்டு வேலைகளை முடித்த பிறகு தங்களுக்காக நேரத்தை ஒதுக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி,ஜாகிங் செல்லுதல்,உடற்பயிற்சி செய்தல்,தியானம்,யோகா செய்தல் போன்ற பழக்கத்தை கடைபிடித்தால் உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.உங்களுக்கு நடனமாடுவது பிடிக்கும் என்றால் பிடித்த பாடல் போட்டு ஆடுங்கள்.இதனால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் வியர்வை வழியாக வெளியேறிவிடும்.உடலை நன்றாக அசைத்தல்,கால் பாதங்களுக்கு அழுத்தம் கொடுத்து டான்ஸ் ஆடுதல் போன்றவற்றின் மூலம் உடலில் பிளட் சர்குலேஷன் நன்றாக இருக்கும்.இதனால் சருமப் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பு சேர்த்து பாதங்களை வைத்து தேய்த்து கழுவினால் இரத்த ஓட்டம் சீரக இருக்கும்.உடலில் இரத்த ஓட்டம் சீரக இருந்தால் நோய் பாதிப்புகள் அபாயம் குறையும்.அதேபோல் உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.உடல் கழிவுகள் மலம்,சிறுநீர் மற்றும் வியர்வையாக சரியாக வெளியேறினால் ஆரோக்கியமாக வாழலாம்.

உடல் கழிவுகளை வெளியேற்றும் பானம்:

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர்
2)சீரகம்
3)எலுமிச்சை சாறு
4)புதினா இலை

செய்முறை விளக்கம்:-

முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

அடுத்து இந்த சீரக நீரை சிறிது ஆறவைத்து ஒரு எலுமிச்சம் பழச்சாறை அதில் பிழிந்து நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை போட்டு குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறிவிடும்.

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

0

ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவர் ஒரு காரியத்தை செய்ய முற்படும்பொழுது பல தடைகளையும், பல பிரச்சினைகளையும் தான் எதிர் கொள்வாரே தவிர அந்த காரியம் முடிவடையாது. என்னதான் பலமுறை, பல நாட்கள், பல மாதங்களாக முயற்சி செய்தாலும் கூட ஒரு சில செயல்களை அவர்களால் செய்து முடிக்கவே முடியாது.

என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில செயல்களை செய்து முடிக்கவே முடியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பவர்கள் இந்த ஒரு எளிய வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்து பார்த்தால் கண்டிப்பாக அதற்கான பலன் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.

பிள்ளையாருக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் வழிபாட்டை செய்வதன் மூலம் நமது தடைகள் அனைத்தும் நீங்கும். இந்த வழிபாட்டை தொடங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் வருகின்ற சங்கடஹர சதுர்த்தி அல்லது ஒவ்வொரு வாரமும் வருகின்ற திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இந்த வழிபாட்டினை தொடங்கிக் கொள்ளலாம்.

இந்த வழிபாட்டை தொடங்கிய பிறகு வெளியூர் எங்கேனும் செல்லக்கூடாது. அதேபோன்று மிகவும் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். அசைவம் உண்ணக் கூடாது. இந்த வழிபாட்டினை செய்வதற்கு மஞ்சளில் பிள்ளையார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அந்த மஞ்சள் பிள்ளையார் பிடிக்கும் பொழுது, சிறிதளவு ஜவ்வாது மற்றும் பன்னீர் இது போன்ற வாசனைப் பொருட்களையும் கலந்து பிள்ளையார் பிடித்து கொள்ளலாம்.இந்தப் பிள்ளையாரை வெற்றிலையின் மீது வைத்து, அருகம்புல் மற்றும் பூக்களை பிள்ளையாருக்கு சூட்டிக் கொள்ள வேண்டும்.

நாம் வழிபடக்கூடிய ஐந்து நாட்களுக்கும் இந்த ஒரு பிள்ளையாரையே தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம். தினமும் பிள்ளையார் பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இந்த பிள்ளையாருக்கு ஒரு வாழை இலை அல்லது தட்டில் வைத்து இரண்டு நெய் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த நெய் தீபம் ஏற்றக்கூடிய திரியில் வெட்டிவேரினையும் சேர்த்து வைத்து, திரித்து இந்த வெட்டிவேரினால் தீபம் போட வேண்டும்.

வெற்றியை வாரி வழங்கக்கூடிய சக்தி என்பது இந்த வெட்டிவேருக்கு உண்டு. மேலும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தமானதும் இந்த வெட்டிவேர் தான். எனவே இந்த வெட்டிவேரை கொண்டு நெய் தீபம் ஏற்றும் பொழுது காரிய தடைகள் நீங்கி, நாம் வேண்டிய அனைத்தும் வெற்றியில் முடியும்.

இந்த முறையில் மஞ்சள் பிள்ளையாருக்கு முன்பாக தீபம் ஏற்றிவிட்டு, நமக்கு என்ன காரியம் நடக்க வேண்டுமோ அதனை மனதார நினைத்துக் கொண்டு “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற ஒரு வரி மந்திரத்தை கூறி வழிபட வேண்டும்.

டயட் உடற்பயிற்சி இன்றி 30 நாளில் 4 கிலோ எடை குறைய.. இந்த ஒரு மாத்திரை சாப்பிடுங்க!!

0

தற்போதைய காலகட்டத்தில் ஆண்,பெண் அனைவரும் உடல் பருமன் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.சாப்பிடும் உணவுகள் மற்றும் சோமல் வாழ்க்கையால் உடலில் கெட்ட கொழுப்புகள் படிந்து பருமனை உண்டாக்குகிறது.

உடலில் வயிறு,மார்பு,தொடை,கன்னம்,கை போன்ற பகுதியில் கெட்ட கொழுப்பு அதிகமாக படிந்து ஆரோக்கியத்தையும் அழகையும் கெடுக்கிறது.நமது உடலில் குவிந்து கிடக்கும் அதிகப்படியான கொழுப்புகளை டயட்,உடற்பயிற்சி இன்றி எளிதில் குறைக்க மருத்துவர் பரிந்துரைத்த டிப்ஸை பாலோ பண்ணலாம்.

பெரும்பாலான சினிமா நடிகர்கள் இதை பின்பற்றிதான் எடையை குறைகின்றனராம்.சிலர் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடித்தாலும் உடல் எடை மட்டும் குறையவில்லை என்று புலம்புகின்றனர்.சிலர் கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டாலும் உடல் எடையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்று கூறுகின்றனர்.

இதற்கு காரணம் நமது உடலில் L கார்னிடைல் என்ற கெமிக்கல் குறைவாக இருப்பதுதான்.இந்த L கார்னிடைல் உடலில் படியும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் வேலையை செய்கிறது.இவை குறைந்தால் நமது உடலில் படியும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகிவிடும்.

இதனால் நாம் எப்படி டயட்,உடற்பயிற்சி செய்தாலும் எடை குறைப்பில் பெரியளவில் மாற்றம் காண முடியாது.இப்படி கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் “FAST &UP” என்ற மாத்திரையை சாப்பிடலாம்.இந்த மாத்திரையை காலை நேரத்தில் ஒன்று சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும்.

இப்படி செய்தால் கெட்ட கொழுப்புகள் குறைந்து தசைகள் வலிமையாக மாறும்.இந்த மாத்திரை ஆரஞ்சு,எலுமிச்சை என்று இரண்டு பிளேவரில் கிடைக்கிறது.இதை வாங்கி ஒரு மாதம் சாப்பிட்டால் 4 கிலோ வரை எடை குறையும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.வாரத்தில் ஒரு கிலோ என்று நான்கு வாரத்தில் நான்கு கிலோ வரை எடை குறையும்.இந்த “FAST &UP” அமேசான்,பிளிப் கார்ட் போன்ற இணைய வணிக நிறுவனங்களில் ஆர்டர் செய்து வாங்க முடியும்.