Home Blog Page 364

தினம் ஒரு ஸ்பூன் கருப்பு எள் சாப்பிட்டால்.. இத்தனை நோய்கள் அலறி ஓடும்!!

0

நம் தாத்தா பாட்டி காலத்தில் கருப்பு எள் கொண்டு பல்வேறு உணவுகள்,இனிப்புகள் செய்து உட்கொண்டனர்.ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கு எள் என்றால் எப்படி இருக்குமென்று கூட தெரியவில்லை.

பெண்களுக்கு கருப்பு எள் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக திகழ்கிறது.எள்ளில் கருப்பு,வெள்ளை என இரு வகைகள் இருக்கின்றது.இதில் கருப்பு எள் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக திகழ்கிறது.கருப்பு எள்ளில் கால்சியம்,பாஸ்பரஸ்,ஜிங்க்,இரும்பு,வைட்டமின்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.

கருப்பு எள்ளில் சிமிலி உருண்டை,லட்டு,எள்ளு மிட்டாய் போன்ற இனிப்பு பண்டங்கள் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

கருப்பு எள் ஆரோக்கிய பலன்கள்:

1)கால்சியம் சத்து நிறைந்த கருப்பு எள்ளை சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் வளமையடையும்.

2)இரத்தத்தில் படிந்துள்ள தேவையற்ற கழிவுகளை அகற்ற எள் உணவுகளை உட்கொள்ளலாம்.

3)பெண்களின் சீரற்ற மாதவிடாய் பாதிப்பை சரி செய்ய கருப்பு எள் பானம் உதவியாக இருக்கிறது.மூட்டு வலி,இடுப்பு வலி,கை கால் வலி குணமாக கருப்பு எள்ளு உருண்டை சாப்பிடலாம்.

4)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கருப்பு எள் பானத்தை காலை நேரத்தில் பருகலாம்.

5)வெள்ளை முடியை கருமையாக மாற்ற கருப்பு எள் பானம் பருகலாம்.இரத்தக் குழாய் ஆரோக்கியம் மேம்பட கருப்பு எள் பானம் பருகலாம்.

6)மூளை ஆரோக்கியம் மேம்பட கருப்பு எள் உணவு சாப்பிடலாம்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கருப்பு எள் சாப்பிடலாம்.

7)கருப்பு எள்ளில் இருக்கின்ற நல்ல கொழுப்பு சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.

8)இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள்ளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.செரிமானப் பிரச்சனை இருபவர்கள் கருப்பு எள்ளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

அளவிற்கு மீறி பப்பாளி பழம் சாப்பிட்டால்.. உடலில் இத்தனை பிரச்சனைகள் உருவாகுமா?

0

கண்ணை கவரும் மஞ்சள்நிற பழமான பப்பாளி சுவை மற்றும் மருத்துவ குணம் நிறைந்த பழமாகும்.இந்த பப்பாளி பழம் வயிறுப் பிரச்சனைகளை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது.

குடல் கழிவுகளை துடைத்து வெளியேற்ற பப்பாளி துண்டுகளை காலை நேரம் சாப்பிடுங்கள்.பப்பாளி பழம் செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.ஆண்மை பிரச்சனையை சரி செய்ய பப்பாளி பழம் சாப்பிடலாம்.

வாயுத் தொல்லை,வயிறு உப்பசம் போன்ற பாதிப்பு இருப்பவர்கள் பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.இத்தனை நன்மைகள் நிறைந்து காணப்படும் பப்பாளி பழத்தை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.

பப்பாளி பழத்தை அளவு கடந்து சாப்பிடுவதால் வரும் பாதிப்புகள்:

1)காலை நேரத்தில் பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உண்டாகிவிடும்.வயிறு வீக்கம்,வயிறு பிடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

2)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிக பப்பாளி பழம் சாப்பிட்டால் இதயத் துடிப்பு அதிகமாகிவிடும்.

3)பப்பாளி பழத்தை தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதில் உள்ள நச்சுக் கழிவுகள் குடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.

4)கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5)குறைந்த சர்க்கரை இருப்பவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கருப்பை சம்மந்தபட்ட பிரச்சனை உள்ள பெண்கள் பப்பாளி பழத்தை தவிர்க்க வேண்டும்.

6)அதிகளவு பப்பாளி பழம் சாப்பிட்டால் தோல் அரிப்பு,தோல் எரிச்சல்,குமட்டல்,பருக்கள் வருதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.எனவே பப்பாளி பழம் நல்லது என்று நினைத்து அதிகமாக எடுத்துக் கொள்வதை இனி தவிருங்கள்.

சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாக வேண்டுமா? அப்போ இந்த 6 டிப்ஸ் பாலோ பண்ணுங்க!!

0

நமது செரிமான மண்டல செயல்பாடு சீராக இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.செரிமான மண்டலம் ஆரோக்கியம் மோசமடைந்தால் அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

சிலருக்கு குறைவான அளவு உணவு சாப்பிட்டாலும் செரிமானப் பிரச்சனை ஏற்படுகிறது.இதற்கு உணவுமுறை பழக்கமே காரணமாக உள்ளது.சீக்கிரம் செரிமானமாகாத உணவுகளை தான் தற்பொழுது அனைவரும் ருசிக்கின்றனர்.மைதா,பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானப் பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

செரிமானம் சரியாக நடக்கவில்லை என்றால் குமட்டல்,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.தொடர்ந்து செரிமானப் பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும்.

அஜீர்ணக் கோளாறு பிரச்சனையை சரி செய்ய நாம் பின்பற்ற வேண்டிய 6 முக்கிய டிப்ஸ்:

1)நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.எளிதில் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

2)சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.உணவை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.காலை உணவை பிரித்து சாப்பிட வேண்டும்.

3)எந்த உணவாக இருந்தாலும் மென்று சாப்பிட வேண்டும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் செரிமானப் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

4)தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து வந்தால் செரிமானப் பிரச்சனை வராமல் இருக்கும்.காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5)உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.சாப்பிட்ட உடன் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

6)குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்ற டிடாக்ஸ் பானத்தை பருக வேண்டும்.செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும்.வாழைப்பழம்,பப்பாளி பழம்,ஆப்பிள் போன்றவை செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது.

எலுமிச்சை பானம்,சீரக பானம்,பெருங்காயம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் செரிமானம் எளிதாக நடக்கும்.

கோடை வந்தாச்சு.. உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும் இந்த நான்கு பழங்களை அவாய்ட் பண்ணிடுங்க!!

0

கொளுத்தி எடுக்கும் கோடை காலம் தொடங்கிவிட்டது.கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து வெயில் சுட்டெரித்து வருகிறது.காலை நேரத்திலேயே அதிகமான வெயில் தாக்கம் மற்றும் வெப்ப காற்று வீசுகிறது.

இந்த கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் அனைவரும் அவதியடைந்து வருகின்றோம்.கடும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து எந்த உணவு சாப்பிட்டாலும் வயிறுக் கோளாறை ஏற்படுத்திவிடுகிறது.

மற்ற பருவ காலங்களைவிட கோடை காலத்தில் உணவுமுறை பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.கோடை கால சூட்டை தணித்துக் கொள்ள நீராகாரங்களை அதிகாமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.இளநீர்,நுங்கு,வெள்ளரி சாறு,மோர் போன்ற குளிர்ச்சி நிறைந்த பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.அதேபோல் முலாம் பழம்,தர்பூசணி பழம்,வெள்ளரி பழம் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலவகை பழங்கள் கோடை உஷ்ணத்தை அதிகமாக்கிவிடும்.அவை என்ன பழங்கள் என்று நிச்சயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.இந்த பழங்கள் கோடை காலத்தில் தான் விளைச்சலுக்கு வரும்.

உடல் உஷ்ணத்தை அதிகமாக்கும் பழங்கள்:

1)அத்தி
2)மாம்பழம்
3)லிச்சி
4)பப்பாளி

இந்த நான்கு பழங்களும் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.இருப்பினும் இந்த பழங்களை கோடை காலத்தில் சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகிவிடும்.

ஏற்கனவே உடல் சூடு பிரச்சனை இருப்பவர்கள் இந்த நான்கு பழங்களை தவிர்க்க வேண்டும்.இந்த பழங்களை அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு,தோல் பிரச்சனை ஏற்படும்.அதேபோல் உலர் அத்தி பழத்தை தவிர்க்க வேண்டும்.

மாம்பழம் சுவை மிகுந்த பழம் என்றாலும் இவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாகி தோலில் கட்டிகள்,புண்கள் வந்துவிடும்.இந்த வெயில் காலத்தில் இதுபோன்ற சூட்டை கிளம்பும் பழங்கள் உட்கொள்வதை தவிர்த்துவிட்டு குளிர்ச்சி தரக் கூடிய பழங்களை மட்டும் சாப்பிடுங்கள்.

இதனை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்..!! எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் உங்களை நெருங்காது..!!

0

இன்று இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகளுள் ஒன்று தீய சக்திகளின் தாக்குதல்கள் தான். ஏனென்றால் இந்த தீய சக்திகளின் தாக்குதல்களால் தான் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், குடும்பத்தில் பிரச்சனைகள், நோய்வாய்ப்படுதல் இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் குடும்ப நிம்மதியும் இழக்கப்படுகிறது.

இந்த தீய சக்திகள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம் வந்து விடுவதால் தான் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறோம். நம்மை எதிரிகளாக நினைக்கக் கூடியவர்கள் நாம் வாழ்க்கையில் முன்னேறக்கூடாது என்பதற்காக பில்லி, சூனியம், ஏவல் இது போன்றவைகளையும் ஏற்படுத்தி விடுகின்றனர்.

நாம் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சிறிது முன்னேற்றத்தை கண்டோம் என்றால், அதனைக் கண்டு பல பேர் பொறாமை கொள்வார்கள். இதனால் அளவுக்கு அதிகமான கண்திருஷ்டிகள் நமது குடும்பத்தின் மீதோ அல்லது தொழிலின் மீதோ ஏற்படும்.

இதனால் தொழில் முன்னேற்றத்தில் தடைகள், வாழ்க்கையில் பிரச்சனைகள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், நோய்வாய்ப்படுதல் இது போன்றவைகள் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டே இருக்கும். இதிலிருந்து நாம் தப்பிக்க ஒரு பொருளை நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம், எப்பேர்ப்பட்ட தீய சக்திகளும் நம்மை நெருங்க விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பிறந்த குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்க கூடிய முக்கியமான பொருட்களுள் ஒன்றும் வசம்பு. இந்த வசம்பு பொடியினை நமது வீடு முழுவதும் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் தெளிக்கலாம். எப்பேர்பட்ட தீய சக்திகளையும் விரட்டக்கூடிய பண்பு இந்த வசம்பிற்கு உண்டு.

அதேபோன்று வசம்பு, சாதிக்காய், அகில், சந்தனம் ஆகியவற்றை பன்னீருடன் சேர்த்து நமது நெற்றியில் திருநீராக வைத்துக் கொள்ளலாம். இந்த நான்கு பொருட்களையும் வாங்கி ஒரு கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும் அல்லது கடைகளில் பொடிகளாக கிடைக்கும் அதனையும் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த நான்கு பொடிகளையும் பன்னீருடன் கலந்து நெற்றி, பின் கழுத்து பகுதி, கழுத்து குழி, நெஞ்சு குழி, இரண்டு தோள்பட்டைகள், உச்சந்தலை,தொப்புள் குழி ஆகிய அனைத்து இடங்களிலும் வைத்துக் கொள்ளலாம்.

ஏதேனும் ஒரு கிரகம் நம்மை தாக்குகிறது என்றால் முதலில் தொப்புள் பகுதியை தான் தாக்கும். எனவே அந்த இடத்திலும் இந்த திருநீரை வைத்துக் கொள்வதால் கிரகங்களின் தாக்குதல்களில் இருந்தும் விடுபடலாம்.

இந்த பொடியினை பன்னீருடன் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு, நாம் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் நமது நெற்றியில் வைத்துக் கொண்டால் எந்த ஒரு தீய சக்திகளும் நம்மை நெருங்காது. இதனை நமது உடம்பில் வைத்துக் கொண்ட ஆறு மணி நேரத்திற்கு எந்த ஒரு தீய சக்திகளும் நம்மை நெருங்காது.

டெய்லி நைட் சப்பாத்தி சாப்பிடுறீங்களா? அப்போ இதன் பக்க விளைவுகள் கண்டிப்பாக தெரிஞ்சே ஆகணும்!!

0

வெள்ளை அரிசி உணவை காட்டிலும் சப்பாத்தி ஒரு சிறந்த ஆரோக்கியம் நிறைந்த உணவாக திகழ்கிறது.கோதுமை மாவில் தயாரிக்கப்படும் இந்த சப்பாத்தி உடல் எடை குறைப்பிற்கு உதவியாக இருக்குமென்று பலரும் நினைக்கின்றனர்.

டயட் இருப்பவர்கள் பின்பற்றும் உணவுப் பட்டியலில் சப்பாத்தி உணவுகள் இடம் பெற்றிருக்கிறது.வட இந்திய மக்களின் பிரதான உணவாக சப்பாத்தி இருக்கிறது.தென் இந்தியாவில் அரிசி உணவு பிரதான உணவு போல் வட இந்தியாவில் கோதுமை உணவுகள் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது.

கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த சப்பாத்தியை உட்கொண்டால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.சர்க்கரை நோயாளிகள் சப்பாத்தியை ஆரோக்கிய உணவாக கருதுகின்றனர்.சப்பாத்தியில் வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் போன்றவை அதிகமாக நிறைந்திருக்கிறது.

இந்த சப்பாத்தியை எந்த வயதினரும் சாப்பிடலாம்.சப்பாத்தி உணவுகள் நன்மைகள் பல கொண்டிருந்தாலும் அவற்றை அதிகமாக சாப்பிட்டால் உடல் மோசமான பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகமாக சப்பாத்தி சாப்பிட்டால் பல்வேறு பக்விளைவுகள் உண்டாகிவிடும்.

சப்பாத்தி உணவுகள் உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.இருப்பினும் இந்த சப்பாத்தி உணவுகளை இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இதனால் வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இரவு நேரத்தில் சப்பாத்தி உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.சப்பாத்தியில் இருக்கின்ற கார்போஹைட்ரேட் இரத்த சர்க்கரை அளவை உயர்த்திவிடும்.இரவு நேரத்தில் அதிகாமாக சப்பாத்தி சாப்பிட்டால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.சப்பாத்தி சாப்பிட்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.

காலை நேரத்தில் சப்பாத்தி அளவாக சாப்பிடலாம்.ஆனால் இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிட்டால் இதுபோன்ற பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.எனவே இரவு நேரத்தில் சப்பாத்தி சாப்பிடுவதை இனி தவிர்ப்பது தான் நல்லது.இரவிற்கு பதில் மாலை நேரத்தில் சப்பாத்தி உணவுகளை சாப்பிடலாம்.

சொத்தைப் பல் குழியில் இந்த இலையை வைத்து அழுத்தினால்.. புழுக்கள் துடித்து வெளியேறிவிடும்!!

0

பல் பராமரிப்பின்மை,இனிப்பு உணவுகள் போன்றவற்றால் ஆரோக்கியமான பற்களும் சொத்தையாகிவிடுகிறது.இந்த சொத்தைப்பல் பிரச்சனையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.

பற்களை முறையாக பராமரிப்பவர்களுக்கும் தற்பொழுது பற்சிதைவு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.சொத்தைப்பல் பிரச்சனை இருப்பவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள நாட்டு வைத்தியத்தை பின்பற்றி குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

பல் சொத்தைக்கான காரணங்கள்:

**இனிப்பு பண்டங்கள்
**உணவு உட்கொண்ட பின்னர் வாய் கொப்பளிக்க தவறுதல்
**பற்களை துலக்காமை

பல் சொத்தையை சரி செய்யும் நாட்டு வைத்தியம்:

தீர்வு 01:

நுணா இலை – ஒன்று

முதலில் நுணா என்கின்ற மஞ்சணத்தி இலை ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.இதை உரலில் போட்டு நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.

இதை பல் சொத்தை மீது பூசினால் புழுக்கள் மற்றும் கிருமி தொற்றுக்கள் முழுவதும் வெளியேறிவிடும்.

தீர்வு 02:

கொய்யா இலை
புளி
கல் உப்பு

ஒரு கொய்யா இலையில் ஒரு துண்டு புளி மற்றும் சிறிதளவு கல் உப்பு போட்டு மடித்து சொத்தைப் பல் மீது வைத்து அழுத்தம் கொடுத்தால் புழுக்கள் வெளியேறிவிடும்.தாங்க முடியாத சொத்தைப்பல் வலி இருப்பவர்கள் இந்த ரெமிடியை ட்ரை பண்ணலாம்.

தீர்வு 03:

கிராம்பு
இலவங்கப்பட்டை
தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி கிராம்பு மற்றும் ஒரு துண்டு இலவங்கப்பட்டையை பவுடர் பதத்திற்கு அரைத்து தேங்காய் எண்ணையில் குழைத்து சொத்தைப்பல் மீது தடவினால் வலி நீங்கும்.சொத்தைப்பல் புழுக்கள் வெளியேறும்.

தீர்வு 04:

வேப்ப இலை
வேப்பங்குச்சி
வேப்பங்கொழுந்து

இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக காயவைத்துக் கொள்ளவும்.பிறகு
பவுடர் பதத்திற்கு அரைத்து பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.இதுபோன்ற நாட்டு வைத்தியங்களை பின்பற்றி பல் சொத்தை பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பவர்களா நீங்கள்..?? அப்போ இதையும் உணவுடன் சேர்த்து வைத்துப் பாருங்கள்..!!

0

எந்த ஒரு உயிரினத்திற்கும் நாம் உணவு வைத்தாலும், அந்த உயிரினம் நம்மை மனதார வாழ்த்துவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக காகத்திற்கு நாம் உணவு வைக்கும் பொழுது நமது முன்னோர்களின் ஆசி, எமதர்மன் மற்றும் சனி பகவானின் ஆசியையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

இந்த உலக மக்கள் மற்ற உயிரினங்களுக்கு உணவு வைக்கிறார்களோ இல்லையோ, ஆனால் காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைத்து வருகின்றனர்.
ஆனால் காகம் என்பது நாம் உணவு வைக்கக்கூடிய நேரத்தில் நமது வீட்டிற்கு வரும் என்பதில் சந்தேகம் தான்.

எனவே காகத்திற்கு உணவு வைப்பது போலவே அருகில் உள்ள பசுமாடு, தெரு நாய்கள் போன்றவற்றிற்கும் உணவு வைக்க வேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவு வைக்க வேண்டும் என்பதை சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது.

காகம் ஆனது நமது வீட்டிற்கு அருகே வந்து கரைவது என்பது வழக்கம் தான். ஆனால் நாம் தூங்கி எழுவதற்கு முன்பாகவே நமது வீட்டிற்கு வந்து காகம் கரைகிறது என்றால், நம் மனதில் நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம், நிறைவேற போவதை அது உணர்த்துகிறது.

காகத்திற்கு உணவு வைக்கக்கூடிய பழக்கம் இல்லாதவர்களது வீட்டில் காகம் ஆனது கரைந்து கொண்டே இருந்தால், உணவு வைக்க வேண்டும் என்பதை அந்த காகம் உணர்த்துவதாக அர்த்தம். அதேபோன்று அமாவாசை நாட்களில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கம் என்பது உண்டு.

அந்த அமாவாசை திதியின் பொழுது படையல் வைத்து வழிபடுவோம். அந்த படையல்களில் உள்ள சாதத்தை காகத்திற்கும் படைப்போம். ஏனென்றால் நமது முன்னோர்கள் காகத்தின் வடிவில் தான் வந்து உணவு உண்பார்கள் என்பதற்காக காகத்திற்கு உணவு வைப்போம்.

இவ்வாறு அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு வைக்கக்கூடிய உணவில் ஒரு சில பொருட்களையும் சேர்த்து வைப்பதன் மூலம் நமது முன்னோர்கள், எமதர்மன் மற்றும் சனி பகவானின் அருளை பரிபூரணமாக பெற முடியும் எனவும், அதே சமயம் குடும்ப முன்னேற்றத்தில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் மற்றும் குடும்ப முன்னேற்றம் அடையும் எனவும் கூறப்படுகிறது.

காகத்திற்கு உணவு வைப்பதற்கு முன்பு அந்த இடத்தை நமது கைகளால் சுத்தம் செய்வது என்பதும் முக்கியம். காகத்திற்கு நாம் எப்பொழுதும் வைக்கக் கூடிய உணவுடன் சிறிதளவு எள், உலர் திராட்சை, நல்லெண்ணெய், தயிர் இவற்றுள் ஏதேனும் ஒரு பொருளையும் கண்டிப்பாக கலந்து வைக்க வேண்டும்.

இவ்வாறு காகத்திற்கு உணவு வைப்பதுடன் உணவிற்கு அருகிலேயே ஒரு டம்ளர் அல்லது தேங்காய் சிரட்டையில் தண்ணீர் ஊற்றி ஒரு துளசி இலையை போட்டு காகத்திற்கு வைக்க வேண்டும். இவ்வாறு உணவுடன் தண்ணீரையும் சேர்த்து வைப்பது பல கோடி நன்மைகளை நமக்குத் தேடித் தரும்.

குறிப்பாக அமாவாசை மற்றும் சனிக்கிழமை நாட்களில் காகத்திற்கு வைக்கக்கூடிய சாதத்தில் எள் மற்றும் உலர் திராட்சை என்பது கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் எந்த பிரச்சினையில் தடைகள் ஏற்பட்டாலும், அந்த தடைகள் நீங்கி குடும்பம் முன்னேற்றம் என்பது அடையும்.

அனைத்து நாட்களிலும் நமது வீட்டிற்கு வரக்கூடிய காகம் குறிப்பாக அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் வந்து உணவு உண்பதில்லை என்று கருதினால், அது ஏதேனும் நமது முன்னோர்களின் மன கஷ்டங்களாக கூட இருக்கலாம்.

இது போன்று காகம் உணவு உண்பதில்லை என்பதை உணர்ந்தால், அருகில் உள்ள பசு மாட்டிற்கு அகத்திக்கீரை, வாழைப்பழம், அரிசியுடன் சேர்த்த வெல்லம் இது போன்றவைகளை தானமாக கொடுப்பதன் மூலம், நமது முன்னோர்கள் அவர்களது மன கஷ்டங்களை நீக்கி நமக்கு அருள் புரிவார் என்றும் கூறப்படுகிறது.

Ulcer உள்ளவர்கள் 5 மில்லி இந்த எண்ணெய் உட்கொண்டால் வயிற்றுப் புண்கள் சீக்கிரம் குணமாகும்!!

0

நாம் உண்ணும் உணவுகள் உணவுக் குழாய்க்கு சென்று செரித்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படுகிறது.இந்த உணவுக் குழாய் பாதையில் வரும் புண்களை அல்சர் பாதிப்பு என்கின்றோம்.அல்சர் புண்கள் ஏற்பட்டால் தொந்தரவுகள் பலவற்றை அனுபவிக்கக் கூடும்.

அல்சர் பிரச்சனையால் வரும் பாதிப்புகள்:

1)வயிற்று வலி
2)வயிறு எரிச்சல்
3)நெஞ்செரிச்சல்
4)குமட்டல்
5)எடை இழப்பு
6)நெஞ்சு பகுதியில் வலி
7)அவசரமாக மலம் கழித்தல்
8)வயிறு வீக்கம்

வயிற்றில் உருவாகும் இந்த அல்சர் புண்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளத் தவறினால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.இந்த அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் தங்கள் உணவுப்பழக்க வழக்கங்களில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

அல்சர் உள்ளவர்கள் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் புளித்து போன உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.பதப்படுத்தி வைக்கப்படும் உணவுகளை தொட்டுக்கூடாத பார்த்திடாதீங்க.ஹோட்டல் உணவுகளை வாங்கி சாப்பிடாதீங்க.

உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை நிறுத்திவிட்டு மாலை முதல் இரவு வரையிலான மூன்றுவேளை உணவுகளை உரிய நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள்.வெறும் வயிற்றில் பூண்டு பானம்,எலுமிச்சை பானம்,வெங்காய பானம் பருகுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சையில் இருக்கின்ற சிட்ரிக் அல்சர் புண் எரிச்சலை அதிகமாக்கும்.பூண்டு,வெங்காயம் போன்ற காரத்தன்மை கொண்ட பொருட்கள் அல்சர் பாதிப்பை தீவிரமாக்கிவிடும்.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் உணவு சமைக்க பயன்படுத்தும் எண்ணெயிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.பாமாயில்,கடலை எண்ணெய்,ரீபைன்ட் ஆயிலுக்கு பதில் நல்லெண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

குளிர்ச்சி நிறைந்த நல்லெண்ணயை உணவில் சேர்த்துக் கொண்டால் வயிறு ஆரோக்கியம் மேம்படும்.அல்சர் புண்கள் குணமாக நல்லெண்ணெய் உணவுகளை சாப்பிடலாம்.நல்லெண்ணெய் நல்லது என்றாலும் அவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும்.

அதாவது சர்க்கரை இருப்பவர்களுக்கு அல்சர் பாதிப்பு இருந்தால் இருப்பது மில்லி அளவு நல்லெண்ணெய்யை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் ஐந்து மில்லி அளவு நல்லெண்ணெய் நாளொன்றில் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

0

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக பிறந்தால் அனைத்து விதத்திலும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. அதாவது முதல் குழந்தை பெண் குழந்தையாக ஒரு குடும்பத்தில் பிறந்தால் அந்த குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது.

முதல் குழந்தை பெண் குழந்தையாகவும் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாகவும் பிறந்தால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ற நன்மைகள் நடைபெறும். அதாவது படிப்பு, வேலை, திருமணம், வாழ்க்கை ஆகிய அனைத்தும் அவரவர் வயதுக்கு ஏற்ப சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளது வாழ்க்கையிலும் எந்த ஒரு பிரச்சனையும் அவ்வளவு பெரிதாக ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்து இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தால், அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்தால் அதிர்ஷ்டம் என்பது குறைவாகத்தான் இருக்கும்.

அந்த ஆண் குழந்தையின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது பலமாக இருக்காது.அந்த ஆண் குழந்தை படிக்கும் பொழுதே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். வளர்ந்த பிறகு பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என பலவிதமான நெருக்கடிகள் உருவாகும்.

செல்வ வளம் என்பது தாராளமாக இருந்தால் இந்த கடமைகளை பார்த்து பயப்பட தேவையில்லை. ஆனால் இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது பலமாக இருந்தால் மட்டுமே செல்வ வளம் அதாவது தொழிலும் நன்றாக அமையும் இல்லை என்றால் செல்வ வளம் குறைவாகத்தான் இருக்கும்.

இதனால் அவர்களது கடமைகளை செய்வதிலும் கூட பல இன்னல்கள் உருவாகும். இவர்களது வாழ்க்கையில் எந்த ஒரு பலன்களும் மிகவும் தாமதமாகவும், மெதுவாகவும் தான் கிடைக்கும். 100 ல் 20 சதவிகித ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால் அவர்களது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்கலாம்.

ஆனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இல்லாத அதாவது 100 ல் 80 சதவீதம் ஆண் குழந்தைகளுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும். எனவே முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்திருந்தால் அந்த ஆண் குழந்தையின் ஜாதகத்தை பார்த்து, அவர்களது வாழ்க்கையில் எது பிரச்சினையாக அமையும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

அதாவது முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தில் கல்வி, தொழில், திருமணம், வாழ்க்கை, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது இது போன்றவைகளில் எது பிரச்சினையாக வரும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான பரிகாரத்தை செய்து கொள்வதன் மூலம் அந்த ஆண் குழந்தைக்கு அவ்வளவாக பிரச்சனைகள் ஏற்படாது.

யோகங்கள் அமைகின்ற காலத்தை அறிந்து அந்தந்த யோகத்திற்கு ஏற்ப பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை முதல் குழந்தையாக பிறந்தால், அந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் குடும்பம் முன்னேற்றம் அடையும்.