Home Blog Page 363

அரசு பணியாளர்களுக்கு செல்போன் வாங்க ரூ.10,000!! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

0

தமிழக அரசு மாநிலத்தில் இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு பல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதுடன் அரசு பணியாளர்களுக்கும் மத்திய அரசுடன் இணைந்து பல்வேறு நலத்திட்டங்களையும் சிறப்பு சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறை ஒன்றுக்கு அதன் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவருக்கும் செல்போன் வாங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, தமிழக மின்சார வாரியத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மின் கணக்கெடுப்பை 2 மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கணக்கெடுப்பின் பொழுது அவர்கள், அவர்களுக்கான பகுதிகளுக்கு சென்று அங்கு ஒவ்வொரு வீட்டிலும் மின்சார கணக்கெடுப்பை பதிவு செய்து பயணர்களின் செல்போனிற்கு ஜிமெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டிய நிலையில் பணிபுரிகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது வேலை பார்க்கக் கூடிய மின்சாரத்துறை ஊழியர்கள் கணக்கெடுப்பு மேற்கொள்வதற்கு அவரவருடைய சொந்த செல்போன்களில் மின் கணக்கிட்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயணங்கள் உடைய தரவுகளை உள்ளீடு செய்து அதன் பின்பு மின்கட்டணத்தை நுகர்வோருக்கு அனுப்புகின்றனர். இதுபோன்ற தங்களுடைய தனிப்பட்ட செல்போன்களில் மேற்கொள்வதால் தங்களுடைய தரவுகள் திருடப்படுவதாகவும் எனவே இத்துறையில் பணிபுரியக்கூடிய அனைவருக்கும் தனித்தனியே செல்போன்கள் வாங்கிக் கொடுக்கும் படியும் தமிழ்நாடு மின்சார துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு மின்சார துறை ஊழியர்களுக்கு செல்போன் வாங்குவதற்கு 10000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. ஊழியர்கள் செல்போனை வாங்கிவிட்டு அதனுடைய பில்லை அலுவலகத்தில் காட்டினால் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தை தயாரிக்க நினைத்து பல்பு வாங்கிய நடிகை சோனா!! கடைசில இது தான் கதி போல!!

0

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை வைத்து ஸ்மோக் என்ற வெப்சைட் இசை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வெப் சீரிஸ் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து கதறிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்த நடிகை சோனா தெரிவித்த விளக்கம் பின்வருமாறு :-

வடபழனியில் இருக்கக்கூடிய பெப்சி அலுவலகத்தின் முன்பு தெரிகிறன அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டிய நடிகை சோனா வேறு வழியின்றி தான் நான் இங்கு அமர்ந்திருப்பதாகவும் ஒரு வருடத்திற்கு முன்பு தன்னுடைய படத்தை பாதியில் விட்டு ஏமாற்றி பலர் சென்று விட்டனர் என்றும் எனினும் அதனை தானே முடிக்கலாம் என முயன்ற பொழுது அதை தன்னால் முடிக்க முடியவில்லை என தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்த பெப்சி அலுவலகத்திற்கு வந்த புகார் அளித்த பொழுது தன்னை அங்கும் இங்குமாக அலைய வைத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக தன்னை ஏமாற்றிய மேனேஜர் மீது பெப்சி தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இரவு நேரங்களில் தன் வீட்டிற்கு பல டெக்னீசியன்கள் வந்து கதவை தட்டுகிறார்கள் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பது போல தெரிவித்து இது போன்ற காரணங்களால் தான் நான் இப்பொழுது பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்திருக்கிறேன் என சுட்டிக்காட்டி உள்ளார்.

தன்னை ஏமாற்றிய மேனேஜர் தான் அனைத்து டெக்னீசியன்களுக்கும் என்னுடைய வீட்டு அட்ரஸை கொடுத்து விட்டார் என்றும் அவர்கள் என்னுடைய வீடு தேடி வந்து பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டி செல்வதாகவும் இரவு நேரங்களில் இது போல நிகழ்வதால் தனக்கு பாதுகாப்பானதாக இல்லாத சூழல் உருவாகி இருக்கக்கூடிய காரணத்தால் இன்று என்ன முடிவை எடுத்து பெப்சி அலுவலகத்தின் முன்பு அமர்ந்து உள்ளேன் என்றும் தெரிவித்ததோடு தன்னை ஏமாற்றிய மேனேஜர் ஷங்கரை நான் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உடனடியாக இங்கு வந்து என்னுடைய படத்தின் ஹார்ட் டிஸ்க் மற்றும் என் பணம் முழுவதையும் மீண்டும் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

கராத்தே ஹுசைனி மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்!..

0

கராத்தே பயிற்சியாளர், வில் வித்தை பயிற்சியாளர், நடிகர், பல சாதனைகளுக்கு சொந்தக்காரரார் ஹுசைனி. புன்னைகை மன்னன் படம் மூலம் இவர் சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவரின் பல ஆயிரக்கணக்கானோர் கராத்தே பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பலருக்கும் வில் வித்தை பயிற்சி அளித்திருக்கிறார்.

ஹுசைனி ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நான் அதிக நாட்களுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என சில நாட்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை கிளப்பினார். ஹுசைனி தனது உடலை தானமும் செய்திருந்தார். அதேநேரம், எனது இதயத்தை எனது கராத்தே பயிற்சி மாணவர்களிடம் கொடுத்துவிடுங்கள் என கோரிக்கையும் வைத்திருந்தார்.

திரைத்துறையை சேர்ந்த பலரும் இவரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். சில இசைக்கலைஞர்கள் அவருக்கு பாட்டு பாடியும் காட்டினார்கள். இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு ஹுசைனை மரணமடைந்தார். அவரின் உடல் பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதன்பின் அவரின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யப்படவுள்ளது.

கராத்தே துறையில் ஹுசைனி பல சாதனைகளை செய்திருக்கிறார். 80,90களில் தமிழகத்தில் கராத்தே பற்றி விழிப்புணர்வும், ஆர்வமும் பலருக்கும் ஏற்பட காரணமாக இருந்தவர் இவர். சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவரின் மறைவுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்..

வேகமா இதை முடித்துவிடுங்கள்!! இரத்தாக போகும் ரேஷன் அட்டைகள்!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுடைய ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினரின் கைரேகைகளையும் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுதிலும் அதற்கான நாட்கள் குறைவாக இருப்பதால் கைரேகை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக சென்று அருகில் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் கைரேகையை பதிவு செய்து கொள்ளுமாறும், ஏற்கனவே கைரேகை பதிவு செய்த முடித்து விட்டோம் என எண்ண கூடியவர்கள் உங்களுடைய ரேஷன் அட்டைகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கைரேகைகளும் பதிவு செய்து உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் குடும்ப அட்டைதாரர்கள் கைரேகைகளை முழுவதுமாக முடிக்கும் பட்சத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் கைரேகை முடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதால் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டைகளில் இருக்கக்கூடியவர்கள் வெளியூர்களில் அல்லது வேறு ஏதேனும் இடங்களில் இருக்க நேரிட்டால் அவர்கள் அந்தந்த இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை அணுகி தங்களுடைய கைரேகைகளை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

TRB அறிவித்த 7500 காலி பணியிடங்கள்!! தேர்வுகள் எப்பொழுது என்று தெரியுமா!!

0

பல்கலைக்கழகங்களில் பணிபுரியவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியவும் விரும்பக் கூடிய இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முத்தான அறிவிப்பை TRB தேர்வு துறையானது வெளியிட்டிருக்கிறது.

TRB அறிவிப்பின்படி காலியாக இருக்கக்கூடிய துறை மற்றும் பணியிடங்கள் :-

✓ அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் – 232 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் – 4000 காலி பணியிடங்கள்

✓ முதுகலை ஆசிரியர்கள் – 1915 காலி பணியிடங்கள்

✓ பி.டி. உதவியாளர்கள் / பி.ஆர்.டி.இ – 1205 காலி பணியிடங்கள்

✓ வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) – 51 காலி பணியிடங்கள்

✓ சட்ட பேராசிரியர்கள் / உதவி பேராசிரியர் – 132 காலி பணியிடங்கள்

துறைகளும் துறை சார்ந்த தேர்வு தேதிகளும் :-

✓ SET – மார்ச்

✓ அண்ணா பல்கலைக்கழக தேர்வு – ஏப்ரல்

✓ சட்டப் பேரசிரியர்களுக்கான தேர்வு – மே

✓ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு – ஜூலை

✓ முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் தேர்வு – செப்டம்பர்

✓ முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பி.டி. உதவியாளர் தேர்வு – நவம்பர் & டிசம்பர்

✓ வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) தேர்வு – மார்ச் , 2026

ஆசிரியர் பணியில் சேர நினைக்கக்கூடிய இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த தேர்வு தேதிகள் ஆனது தற்காலிகமானது என்றும் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் தேர்வு செய்திகளை இறுதியாக இருக்கும் என்றும் TRB தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊடகப் பணியில் இருந்து சவுக்கு சங்கர் விலகுவதாக அறிவிப்பு!! தாயின் உயிருக்கு நேர்ந்த விபரீதமே காரணம்!!

0

தன்னுடைய அரசியல் விமர்சகர் மற்றும் சவுக்கும் மீடியா என்ற ஊடகத்திற்கும் முழுவதுமாக விடுப்பு வழங்க இருப்பதாகவும் இதனால் தன்னுடைய தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததாகவும் சுட்டிக்காட்டி இனி ஊடக துறையில் தான் பணிபுரிய போவதில்லை என சவுக்கு சங்கர் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

Youtube வீடியோவில் சவுக்கு ஷங்கர் தெரிவித்திருப்பதாவது :-

( மார்ச் 24 ) நேற்று வெளியிட்டிருந்த வீடியோவை, காலை 9.30 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு துப்புரவு பணியாளர்கள் என கூறிக்கொண்டு 30 பேர் ஒரு வேனில் வந்ததாகவும் அவர்கள் தன்னுடைய வாகனத்தை அடித்து நொறுக்கிய பொழுது தான் தன்னுடைய தாய்க்கு அழைத்து பத்திரமாக இருக்கும் படியும் அதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் வழங்கியதையும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அதற்குள் தங்கள் வீட்டின் பின் கதவை உடைத்து அவர்கள் வீட்டில் உள்ள சமையலறை படுக்கையறை என அனைத்தையும் அடித்து உடைந்து மலம் சாக்கடை போன்றவற்றை அங்கு கொண்டு சென்றதாகவும் அதனை தொடர்ந்து தன்னுடைய தாயின் செல் ஃபோனில் இருந்து வீடியோ கால் மூலமாக அழைத்து தாயை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகவும் அது சார்ந்த சில சிசிடிவி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதன் பின்பு காவல்துறை அந்த இடத்திற்கு சென்று அதாவது காவல்துறையிலிருந்து ஒரு ஆய்வாளர் ஒரு காவலர் என இருவர் மட்டுமே அந்த இடத்திற்கு சென்று தன் தாயின் உடைய செல்போனை மீட்டு அவரிடமே கொடுக்கப்பட்டு விட்டது என்றும் அவர் பத்திரமாக இருக்கிறார் என்றும் தனக்கு தெரியப்படுத்தியதாகவும் ஆனால் அங்கு வந்த அந்த 30 பேர் களையாமல் தன் வீட்டின் முன்னே தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த ஊடகத்தினை தான் திறந்த பொழுது அரசின் உடைய குற்றங்களை சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த சவுக்கு மீடியா என்ற youtube சேனலை தொடங்கியதாகவும் ஆனால் தற்பொழுது அதனால் தன்னுடைய தாயின் உயிருக்கு ஆபத்து நேர்ந்ததால் இனி முழுவதுமாக ஊடகத்தை விட்டு தான் விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இவர் சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்காக சிறைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் துப்புரவாளர்கள் குறித்து தவறான கருத்துக்களை பேசியதால் இது போன்றதொரு நிகழ்வு ஏற்பட்டதாகவும் ஆனால் இதை யாரால் ஏற்பட்டது என்பது உங்களுக்கு தெரியும் என்று அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்க.. கேரட்டை இப்படி சாப்பிடுங்கள்!!

0

உங்களுக்கு கோடை கால தோல் அலர்ஜி பிரச்சனை இருந்தால் கேரட்,பால் உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கீழே சொல்லப்பட்டுள்ளபடி பானம் செய்து பருகுங்கள்.கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண் சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்கிறது.அசிடிட்டி,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகளுக்கும் இது மருந்தாக திகழ்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)கேரட் – ஒன்று
2)ஏலக்காய் தூள் – கால் தேக்கரண்டி
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)பாதாம் பிசின் – ஒரு தேக்கரண்டி
5)கற்கண்டு பொடி – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதல் படி:

ஒரு தேக்கரண்டி பாதாம் பிசினை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.

இரண்டாவது படி:

கேரட் ஒன்றை எடுத்து தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.பின்னர் இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பீலர் கொண்டு கேரட்டை சீவிக் கொள்ளலாம்.

மூன்றாவது படி:

பிறகு காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு கிளாஸ் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஏலக்காய் தூள் மற்றும் கற்கண்டு தூள் சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது படி:

இப்பொழுது கேரட் துருவலை மிக்சர் ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்தாக ஊறவைத்த பாதாம் பிசின்,ஏலக்காய் தூள் மற்றும் கற்கண்டு தூள் சேர்த்து கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்க வேண்டும்.

ஐந்தாவது படி:

அடுத்து காய்ச்சி ஆறவைத்த பாலை அதில் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும்.இந்த கேரட் பானத்தை கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.பசும் பாலுக்கு பதில் பாதாம் பால் அல்லது தேங்காய் பால் பயன்படுத்தலாம்.

இந்த கேரட் பானத்தை தினமும் பருகி வந்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.தோல் அரிப்பு,தோல் தடிப்பு,தோல் எரிச்சல்,கண் பார்வை பிரச்சனை,நெஞ்செரிச்சல் ஆகிய அனைத்தையும் இந்த கேரட் பானம் குடிப்பதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும்.

ஜன்னி முதல் ஹார்ட் அட்டாக் வரை.. நோய்களுக்கு மருந்தாகிறது இந்த பூ!! ஒரு கப் டீ போட்டு குடித்து பலனடையுங்கள்!!

0

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வெண் தாமரை இதழில் தேநீர்,கஷாயம் செய்து பருகலாம்.

வெண் தாமரை இதழ் பயன்கள்:

**உடல் சூட்டை தணிக்க வெண் தாமரை இதழ் பயன்படுகிறது.கண் எரிச்சல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் குணமாக வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.

**உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த வெண் தாமரை இதழ் தேநீர் செய்து பருகலாம்.மன அழுத்தம் கட்டுப்பட வெண் தாமரை இதழ் பானம் செய்து பருகலாம்.

**வெண் தாமரை கஷாயம் செய்து பருகினால் இதய ஆரோக்கியம் மேம்படும்.ஜன்னி பாதிப்பை வெண் தமாரை கஷாயம் மூலம் சரி செய்யலாம்.

வெண் தாமரை தேநீர்:

தேவையான பொருட்கள்:

1)வெண் தாமரை இதழ்
2)ஏலக்காய்
3)வெள்ளை கற்கண்டு
4)எலுமிச்சை சாறு
5)இஞ்சி
6)சீரகம்

செய்முறை விளக்கம்:

**முதலில் ஒரு வெண் தாமரை பூவின் இதழை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதழ்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

**அடுத்ததாக ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி மற்றும் சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள்.தண்ணீர் சூடானதும் வெண் தாமரை இதழ்களை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

**பிறகு இடித்த ஏலக்காயை அதில் போடுங்கள்.பிறகு தோல் நீக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.

**அதன் பின்னர் தேவையான அளவு வெள்ளை கற்கண்டு போட்டு குறைந்த தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

**பிறகு இந்த வெண் தாமரை பானத்தை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறை அதில் பிழிந்து காலை நேரத்தில் பருகுங்கள்.இந்த வெண் தாமரை தேநீரை தினமும் பருகி வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.

உயர் இரத்த அழுத்தம்,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் குணமாக இந்த பானத்தை தினமும் பருகி வரலாம்.அல்சர் பாதிப்பை குணப்படுத்த இந்த தேநீர் பருகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உடல் சூடு குறைய.. காலையில் ஒரு ஸ்பூன் சீரகம் போதும்!! சம்மரில் இனி கவலை இல்லை!!

0

வெயில் காலத்தில் உடல் சூட்டால் பல நோய் பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.உடல் சூட்டை தணிக்க சீரகத்தை உட்கொள்ளலாம்.சீரகம் குளிர்ச்சி நிறைந்த பொருள் என்பதால் வெயில் காலத்தில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது.

தீர்வு 01:

1)சீரகம்
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் 10 கிராம் அளவிற்கு சீரகம் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும்
ஊறவிடுங்கள்.காலை நேரத்தில் இந்த சீரக பானத்தை பருகினால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாகும்.

தீர்வு 02:

1)சீரகம்
2)தேன்
3)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

இந்த சீரக பானத்தை வடிகட்டி தேன் கலந்து பருகினால் உடல் சூடு முழுமையாக குறையும்.

தீர்வு 03:

1)சீரகம்
2)கற்கண்டு
3)எலுமிச்சை சாறு
4)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி சீரகத்தை பாத்திரத்தில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

இந்த சீரக பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,கற்கண்டு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலந்து பருக வேண்டும்.இந்த பானத்தை பருகி வந்தால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.

தீர்வு 04:

1)சீரகத் தூள்
2)தயிர்

ஒரு கிண்ணத்தில் பசுந்தயிர் தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கால் தேக்கரண்டி சீரகத் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த தயிரை காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 05:

1)நெய்
2)சீரகம்
3)வெள்ளை சாதம்

வாணலியில் நெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.பிறகு வெள்ளை சாதத்தை அதில் போட்டு கிளறி உப்பு கலந்து சீரக சாதமாக சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

தீர்வு 06:

1)சீரகம்
2)தண்ணீர்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் சிறிது சீரகம் சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த சீரக பானத்தை பருகி வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.

இரத்தக் குழாயில் அடைத்துள்ள கெட்ட கொழுப்பு கரைய.. வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்க் குடிங்க!!

0

நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிகிறது.இரத்தக் குழாயில் அதிக கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாகும்.

இரத்தக் குழாய் அடைப்பு அறிகுறிகள்:

1)மயக்கம்
2)பதட்டம்
3)தலைச்சுற்றல்
4)படபடப்பு
5)மந்த உணர்வு

இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் மூலிகை பானம் தயாரிப்பது எப்படி?

தீர்வு 01:

எலுமிச்சை
பூண்டு பற்கள்
தேன்
தண்ணீர்

முதலில் நான்கு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.

அடுத்து 10 பல் பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு அரைத்த எலுமிச்சை பூண்டு விழுதை அதில் போட்டு குறைவான தீயில் 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

பிறகு இந்த பானத்தை நன்கு ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த நீரில் தேன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

எலுமிச்சை,பூண்டு பானம் இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைத்துவிடும்.உயர் இரத்த அழுத்த பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள இந்த பானம் பருகலாம்.

தீர்வு 02:

தேன்
வெள்ளைப்பூண்டு

ஒரு கண்ணாடி பாட்டிலில் தோல் உரித்த பூண்டு பற்கள் 20 போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு பூண்டு பற்கள் மூழ்கும் வரை தேன் ஊற்றி இரண்டு தினங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.

இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பற்களை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு குணமாகும்.

தினமும் ஒரு கிளாஸ் வெள்ளைப்பூண்டு தேநீர் பருகி வந்தால் இரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்.