Home Blog Page 365

கேட்டதை நடத்திக் கொடுக்கும் அபிஜித் நட்சத்திரம்..!! மிகவும் சக்தி வாய்ந்த 24 நிமிடங்கள்..!!

0

உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற விரும்பினால் ஒரு சிறப்பான நேரம் ஒன்றை பயன்படுத்தினால் நிச்சயம் பெற முடியும். அந்த நேரம் தான் அபிஜித் நட்சத்திரம் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நேரம். இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்களையும், ஒரு நல்ல வாழ்க்கையையும் பெற முடியும் என்பது உறுதி.

இது ஒரு ரகசியமான சக்தி வாய்ந்த நேரம் ஆகவும் கருதப்படுகிறது. ஜித் என்றால் ‘வெற்றி’ என்று பொருள். அபிஜித் என்றால் ‘வெற்றியை கொடுக்கும் நேரம்’ என்று பொருள். இந்த அபிஜித் என்பது பலருக்கும் தெரியாத மறை நேர நட்சத்திரமாகும். 27 நட்சத்திரங்களில் இந்த நட்சத்திரம் அடங்காது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலத்தில் இந்த நட்சத்திரம் வெற்றியை குறிக்கும் ஒரு சக்தி என்று பாரம்பரிய நூல்கள் கூறுகின்றன. உத்திராட நட்சத்திரத்திற்கும் திருவோண நட்சத்திரத்திற்கும் இடையே இடம் பெற்றிருக்கக் கூடிய சூட்சம நட்சத்திரம் தான் இந்த அபிஜித் நட்சத்திரம்.

28 வது நட்சத்திரமாக இருக்கும் இந்த சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால் அவர்கள் இதை தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக, கிருஷ்ண பகவான் இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் மறைத்து வைத்ததாக நமது சாஸ்திரத்தில் உள்ள புராண கதைகள் கூறுகிறது.

உத்திராட நட்சத்திரத்திற்கும், திருவோண நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட 24 நிமிடங்கள் தான் இந்த அபிஜித் நட்சத்திரம் என்று கூறுகின்றோம். இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நட்சத்திர நேரத்தில் எந்த ஒரு தோஷமும் கிடையாது.

அதாவது ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த ஒரு தடங்கலும் கிடையாது. இந்த அபிஜித் நட்சத்திரம் ஆனது 25. 3. 2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:14 மணி முதல் 4:38 மணி வரை உள்ளது.

இந்த நேரத்தில் நமது வேண்டுதல்களை இறைவனிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளலாம்.
நமது வீட்டின் பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து விஷ்ணு பகவானை மனதார நினைத்துக் கொண்டு, நமது வேண்டுதல்களை வேண்டிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டோம் என்றால் நமது வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும்.

அபிஜித் நட்சத்திர முகூர்த்தம் என்பது தினமும் 11: 45 மணி முதல் 12: 15 மணி வரை இருக்கும். ஆனால் அபிஜித் நட்சத்திரம் என்பது மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். அந்த அபிஜித் நட்சத்திரத்தின் பொழுது நமது வேண்டுதல்களை விஷ்ணு பகவானிடம் கூறுவதன் மூலம் நமது அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். இந்த பிரார்த்தனையின் பொழுது கூற வேண்டிய மந்திரம் ஒன்று உள்ளது.

அபஜித் ஸ்துதி:
“அபஜித ஆகமாந்துதீர
அபாஜிதாம்பர நக்ஷத்திரானாம்
நாததீய ஜோதினாம்
நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம் பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”

இந்த துதியை பாடிக்கொண்டும் நமது வேண்டுதல்களை கூறலாம்.

சாக்லேட் விரும்பிகளே அளவு மீறினால் இதுவும் ஆபத்தே!! எச்சரிக்கும் மருத்துவர்கள்!!

0

இனிப்பு உணவுகள் என்றால் யார் தான் விரும்ப மாட்டார்கள்.இதில் சாக்லேட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பேவரைட்டாக இருக்கின்றது.இதன் சுவையும் மணமும் பெரியவர்களை கூட குழந்தைகளாக்கிவிடுகிறது.

இந்த சாக்லேட் பவுடர் கொக்கோ என்ற பழத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.கொக்கோ விதைகளை நன்றாக காயவைத்து வறுத்து பொடிப்பதால் சாக்லேட் பவுடர் கிடைக்கிறது.இந்த பவுடரில் சர்க்கரை போன்ற பொருட்கள் கலந்து பல்வேறு பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது.சாக்லேட் சாப்பிடுவதால் சில நன்மைகள் கிடைக்கிறது.

டார்க் சாக்லேட் பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.அதோபோல் பாலியல் ஆர்வத்தை தூண்டும் பொருளாக டார்க் சாக்லேட் இருக்கின்றது.இருப்பினும் சாக்லேட் அதிகமாக சாப்பிட்டால் நமக்கு ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பயங்கரமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்:

1)இதில் இருக்கின்ற அதிக கலோரி உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனையை அதிகரித்துவிடும்.

2)சாக்லேட்டில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு செரிமானப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.வாயுக் கோளாறு,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படலாம்.

3)அதிக இனிப்பு கொண்ட சாக்லேட்டை சாப்பிடுவதால் தலைவலி பிரச்சனை ஏற்படும்.இந்த பிரச்சனையை ஒரு சிலர் அனுபவிக்கலாம்.

4)அதிக இனிப்பு நிறைந்த சாக்லேட் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.அதிகமாக சாக்லேட் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.

5)சாக்லேட்டில் இருக்கின்ற கொழுப்பு முகப்பருக்கள் உருவாக காரணமாகிவிடும்.அதிகளவு சாக்லேட் சாப்பிட்டால் உடலில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும்.இதனால் எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் உருவாகும்.

6)அதிகமான சாக்லேட் சாப்பிட்டால் பல் சிதைவு,ஈறுகள் பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சாக்லேட்டில் இருக்கின்ற காஃபின் உடல் சோர்வை அதிகமாக்கும்.

7)சிலருக்கு சாக்லேட் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.சாக்லேட் அதிகமாக சாப்பிட்டால் தோல் சம்மந்தமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? கேன்சரை உருவாக்கும் ஆபத்தான உணவுகள்!!

0

மனிதர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் புற்றுநோய் டாப் 3 வரிசையில் உள்ளது.இந்த நோய் பாதிப்பு வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படும்.மனிதர்கள் உடலில் கட்டுப்பாடின்றி இந்த புற்றுநோய்கள் வளர்கிறது.

உடல் உறுப்புகளில் உருவாகும் இந்த புற்றுநோய் செல்கள் திசுக்களை சேதப்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றது.புற்றுநோய் பாதிப்பு தொற்றுநோய் இல்லையென்றால் உடலில் அவை கட்டிகளாக உருவாகும் பொழுது மற்ற பாகங்களுக்கு பரவி கடுமையான பாதிப்பை உண்டாக்கும்.

புற்றுநோய் வகைகள்:

1)வயிற்றுப்புற்றுநோய்
2)வாய் புற்றுநோய்
3)நுரையீரல் புற்றுநோய்
4)குடல் புற்றுநோய்
6)கருப்பை புற்றுநோய்
7)மூளை புற்றுநோய்
8)நிணநீர் குழாய் புற்றுநோய்
9)தொண்டை புற்றுநோய்
10)கணையப் புற்றுநோய்

புற்றுநோய் பாதிப்பின் அறிகுறிகள்:

1)அஜீரணக் கோளாறு
2)உணவு விழுங்குவதில் சிரமம்
3)காய்ச்சல்
4)கடுமையான வயிற்று வலி
5)திடீர் உடல் எடை இழப்பு
6)குமட்டல்
7)வாந்தி
8)உடல் சோர்வு
9)பசியின்மை
10)மலத்தில் இரத்தம் வெளியேறுதல்

புற்றுநோய் வர முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம்தான்.தற்பொழுது பின்பற்றி வரும் உணவுப் பழக்க வழக்கத்தால் கேன்சர் நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.சிலவகை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும் உணவுகள்:

1.மாட்டிறைச்சி

சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

2.கருவாடு

உப்பில் பதப்படுத்தி தயாரிக்கப்படும் கருவாட்டை அடிக்கடி சாப்பிட்டால் மூக்கில் புற்றுநோய் பாதிப்பு உருவாகிவிடும்.

3.புகையில் தயாரிக்கும் உணவுகள்

அசைவ உணவுகளை நெருப்பில் வாட்டி சாப்பிடும் பழக்கம் இருப்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.

4.ஊறுகாய்

ஊறுகாயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் புற்றுநோய் கட்டிகள் உருவாகும்.

5.குளிர்பானங்கள்

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை அதிகமாக பருகினால் கணையப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும்.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை,மைக்ரோவேவ் உணவுகள் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும்.

லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் அற்புதமான வேர்..!! வாழ்க்கையில் வெற்றியைக் காண இந்த ஒரு வேர் போதும்..!!

0

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய வெட்டிவேரை பயன்படுத்தி உங்களது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? வெட்டிவேர் என்றாலே வெற்றியை வாரி கொடுக்கக் கூடிய ஒரு வேர். பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இவைகளைப் போன்றே இயற்கையிலேயே மனம் படைத்த இந்த வேரும் லட்சுமி கடாட்சத்தை உருவாக்கக்கூடிய மற்றும் பணவரவை ஏற்படுத்தக் கூடிய ஒரு அற்புதமான வேராகும்.

இயற்கையில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த வேர், இலைகள், பூக்கள் இது போன்ற அனைத்திற்கும் தனித்துவம் என்பது உள்ளது. இந்த வெட்டிவேரை நமது வீடுகளில் மூன்று முறைகளில் பயன்படுத்தலாம். இந்த வெட்டிவேரை பயன்படுத்துவதன் மூலம் பணவரவை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வாய்ப்பை நமக்கு அமைத்துக் கொடுக்கும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு எலுமிச்சம் பழம் மற்றும் சிறிதளவு வெட்டிவேரை போட்டு நமது வீட்டின் ஹால் மற்றும் தொழில் செய்யக்கூடிய இடங்களில் வைத்துக் கொள்ளலாம். உள்ளே நாம் வைத்திருக்கக்கூடிய எலுமிச்சம் பழம் மற்றும் வெட்டிவேர் வெளியில் பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்படி இருக்க வேண்டும்.

இந்த வெட்டிவேர் மற்றும் எலுமிச்சம் பழம் தண்ணீரில் இருப்பதனால், இதனுடைய வாசனை காற்றின் மூலம் அனைத்து இடங்களுக்கும் பரவும். இதனால் கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். இதனுடைய வாசனையானது நமக்கு மன அமைதியை கொடுத்து, நேர்மறை எண்ணங்களை நமக்குள் பரவச் செய்யும்.

தொழில் செய்யக்கூடிய இடத்தில் இதனை வைக்கும் பொழுது தொழிலில் நல்ல லாபம், பணவரவு, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தி ஆகியவை கிடைக்கும். மேலும் தொழிலில் உள்ள தடைகளையும், கண் திருஷ்டிகளையும் இது நீக்கி கொடுக்கும்.

இந்த தண்ணீரில் உள்ள எலுமிச்சம் பழத்தை வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம். வெட்டிவேரினை அதன் வாசனை உள்ளவரை, அதாவது ஒரு மாதம் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பயன்படுத்திய பிறகு கால் படாத இடத்தில் தான் இந்த வெட்டிவேரையும், எலுமிச்சம் பழத்தையும் போட வேண்டும்.

இரண்டாவதாக இந்த வெட்டிவேரை ஏதேனும் ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நமது வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக பூஜை அறை, குழந்தைகள் படிக்கக்கூடிய இடம் இதுபோன்ற இடங்களில் வைப்பதன் மூலம் நேர்மறை சக்திகள் உண்டாகும்.

இதனுடைய வாசனை மன அமைதி மற்றும் மன நிம்மதியை கொடுக்கும்.ஏதேனும் ஒரு செயலை செய்வதற்கு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்கின்ற பொழுது, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு இந்த வெட்டிவேரினை கொண்டு திரி செய்து தீபம் ஏற்றும் பொழுது அனைத்து தடைகளையும் நீக்கி காரிய வெற்றியை கொடுக்கும்.

மூன்றாவதாக இந்த வெட்டி வேரின் உள்ளே எலுமிச்சம் பழத்தை வைத்து ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். இதனை நமது வீட்டின் நிலை வாசலில் கட்டி வைப்பதன் மூலம் லட்சுமி கடாட்சம் உருவாகும் மற்றும் எதிர்மறை சக்திகள் நமது வீட்டின் உள்ளே நுழையாமல் தடுக்கப்படும்.

இதனை ஒரு மஞ்சள் நிற துணியைக் கொண்டு கட்டி, நிலை வாசலில் வைத்துக் கொள்ளலாம். இதன் மீது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்து விடுவதன் மூலம் நல்ல வாசனை என்பது நீடித்து இருக்கும். மேலும் இதனை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம்.

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் பயனுள்ள ஆன்மீக குறிப்புகள்..!!

0

1.நாம் சாப்பிடும் பொழுது பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால், அதனை குளிர்விக்க கூடாது. சாப்பிட்டு முடித்த பின்னர் தான் பூஜை அறையில் உள்ள விளக்கினை குளிர்விக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடுவதற்கு முன்பாகவே விளக்கை குளிர்வித்து விட வேண்டும்.

2. இரு கைகளால் தலையை சொரிதல் கூடாது.

3. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் பொழுதும் அந்த இடத்தில் இருக்கக் கூடாது.

4. சுவாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை சூட்டக் கூடாது.

5. நாம் நினைத்த காரியங்கள் நடக்காமல் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தால், ஒரு புது மஞ்சள் நிற துணியில் படிகாரம் சிறிதளவு, எலுமிச்சை, விரலி மஞ்சள், பச்சரிசி சிறிதளவு, ஒரு ரூபாய் நாணயம், வெட்டிவேர் ஆகியவற்றை வைத்து வாசலில் கட்டி விடவும். இதனால் தடைகள் நீங்கி உங்கள் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

6. குலதெய்வ கோவிலுக்கு பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமை நாட்களில் செல்வது மிகவும் சிறப்பு.

7. குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன்பு வீட்டில் பொங்கல் வைத்து வழிபட்ட பின்பு செல்ல வேண்டும். நம்மால் முடிந்த அளவிற்கு வெல்லம் வாங்கி கோவிலுக்கு தானமாக கொடுப்பது மிகவும் நல்லது. அதுவும் நமது வீட்டில் ஒரு இரவு அந்த வெல்லத்தை வாங்கி வைத்து, அடுத்த நாள் தான் அதனை கொடுக்க வேண்டும்.

8. வீட்டில் தினமும் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் நெய் இவைகளை ஒன்றாக கலக்காமல் தனித்தனியாக மூன்று விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் குறைந்து நிம்மதி உண்டாகும்.

9. பூஜை அறையில் மிருகங்களின் தோலினால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

10. எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளை பூஜையறையில் பயன்படுத்தக் கூடாது.

11. நமது வீட்டில் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது நின்று கொண்டு செய்யாமல், அமர்ந்து நமது பிரார்த்தனையை கூறும்பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

12. பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் பொழுது ஆறு வெற்றிலை, மூன்று பாக்கு மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரம் ஆகியவற்றை வைத்து வைக்க வேண்டும். இதனால் பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகரித்து பணவரவு ஏற்படும்.

13. மாவிலை தோரணம் கட்டுவது வீட்டில் உள்ள காற்றை சுத்தப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. வாஸ்து குறைபாட்டையும் சரி செய்கிறது.

14. மாவிலை தோரணம் கட்டும் பொழுது இலைகளின் எண்ணிக்கை ஒற்றை படையில் வருமாறு கோர்த்து கட்ட வேண்டும். இது எதிர்மறை எண்ணங்களை நீக்கி, புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

15. காலில் கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்பு சனிபகவானை வேண்டிக் கொண்டு, அதில் ஒன்பது முடிச்சுகளை போட்டு, ஆண்கள் வலது காலிலும், பெண்கள் இடது காலிலும் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் கண் திருஷ்டி விலகும்.

தினமும் முட்டை உணவுகள் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

0

முட்டை புரதம் நிறைந்த பொருள் என்பதை தாண்டி சுவை மிகுந்த உணவு என்பதால் அவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.முட்டையில் புரதம் மட்டுமின்றி தாதுக்கள்,வைட்டமின்கள்,பொட்டாசியம்,வைட்டமின் டி,ஜிங்க் போன்றவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.முட்டையை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் அதிகமாக பசி ஏற்படுவது கட்டுப்படும்.இதனால் எடை இழப்பு ஏற்படும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.நன்மைகள் பல கொண்ட முட்டையை அதிகமாக உட்கொண்டால் ஆபத்தாகிவிடும்.

தினமும் முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை அதிகமாக சாப்பிட்டால் எடை அதிகரித்துவிடும்.கெட்ட கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் முட்டையை உட்கொண்டால் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.

2)இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் முட்டை சாப்பிட்டால் பாதிப்பு அதிகமாகிவிடும்.

3)நீரிழிவு நோயாளிகள் அதிகமாக முட்டை சாப்பிடக் கூடாது.தினமும் முட்டை உணவுகளை சாப்பிட்டால் அஜீர்ணக் கோளாறு ஏற்படும்.

4)வேகவைத்த மஞ்சள் கருவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.எனவே தினமும் முட்டை சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

5)அதேபோல் முட்டையில் ஆம்லெட்,கலக்கி,ஆப் ஆயில் போன்ற முட்டை உணவுகளை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் வேகவைத்த முட்டையை சாப்பிடுங்கள்.

கோடை கால பாதிப்பில் இருந்து உடலை காக்க.. செய்ய வேண்டிய மற்றும் செய்யவேக் கூடாத விஷயங்கள்!!

0

மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதக்கி வருகிறது.காலை நேரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியில் சென்று வர முடியாமல் அனைவருக்கும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெயிலின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த கோடை காலத்தில் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.என்னவெல்லாம் செய்யவேக் கூடாது என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.தர்பூசணி,வெண்பூசணி,வெள்ளரி பழம்,நுங்கு,இளநீர்,மோர் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.செயற்கை குளிர்பானங்களை குடிக்க கூடாது.டீ,காபி போன்ற சூடான பானங்களை தவிர்க்க வேண்டும்.காரமான உணவுகளை உட்கொள்ள கூடாது.மிளகு,மிளகாய் போன்ற உணவுப் பொருட்களை குறைவான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மதிய நேரத்தில் சூடான உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.உடலை குளிர்ச்சிப்படுத்த ஐஸ்வாட்டர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.ஐஸ்வாட்டர் குடித்தால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.உடல் சூட்டை தணிக்க தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.தலைக்கு நல்லெண்ணய் வைத்து குளிக்கலாம்.

இரவில் கண்களை சுற்றி விளக்கெண்ணெய் தடவினால் கண் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.

கோடை காலத்தில் தோல் அரிப்பு,தோல் சிவந்து போதல்,வியர்க்குரு கொப்பளங்கள்,கண் சூடு,கண் கட்டி,வேனல் கட்டி,அம்மை,உடல் சோர்வு,மயக்கம் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.கோடை காலத்தில் கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகள்,வயதானவர்கள் நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

கோடை வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டவரை முதலில் நிழலான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும்.தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும்.உடல் சூட்டை தணிக்க ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.இளநீர்,மோர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பானங்களை பருக வைக்க வேண்டும்.பிறகு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உரிய சிகிச்சை பெற உதவ வேண்டும்.

கடவுளுக்கு நெய் தீபம் என்றாலே சிறப்பு தான்..!! அதிலும் பிரம்ம முகூர்த்தத்தில் ஏற்றினால்..!!

0

தினமும் நமது வீடுகளில் விளக்கு என்பதை கட்டாயம் ஏற்ற வேண்டும். விளக்கின் ஒளி நமது வீட்டில் இருந்தால்தான் நமது குடும்பத்தில் பிரகாசம் என்பது உருவாகும் எனவும் கூறப்படுகிறது. பெண்கள் அதிகாலையில் எழுந்து தினமும் பூஜை அறையில் விளக்கினை ஏற்றுவது பல சிறப்புகளை தேடி தரும். அதிலும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில், தினமும் நமது வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றுவது சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

நமது வீட்டில் மட்டுமல்லாமல் எந்த கோவிலுக்கு சென்றாலும், நெய் தீபம் போட்டு ஏற்றினால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நாம் ஏற்றக்கூடிய நெய் தீபங்களின் எண்ணிக்கையை பொறுத்து அதற்கான பலன்களும் வேறுபடும்.

நெய் தீபம் 5 ஏற்றி வைத்து வழிபட்டால், கல்வி ஞானம் கிடைக்கும், 9 நெய்விளக்குகளை ஏற்றினால் நவக்கிரக தோஷங்கள் விலகும், 12 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் தடைகள் நீங்கி, முன்னெடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும்,18 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், கால சர்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும், 27 நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால் திருமண தடை விலகும், புத்திர பாக்கியம் உண்டாகும்.

36 நெய் விளக்குகளை ஏற்றி வழிபட்டு வந்தால் சகல தோஷமும் நீங்கும். 48 நெய்விளக்கு ஏற்றினால் தொழில் விருத்தியாகும். 108 நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் அம்மனின் அருளை பரிபூரணமாக பெறலாம் என்பார்கள்.

21 செவ்வாய்க்கிழமை நெய்தீபம் ஏற்றிவர பில்லி சூன்யம் விலகுமாம்.தொழிலில் முன்னேற்றமின்மை, வியாபார தடங்கல்கள் இருந்தால், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி தினமும் 12 முறை சுற்றி 48 நாட்கள் வழிபட்டு வந்தாலே பலன் கிடைக்கும்.

சூரிய உதய நேரத்திலும், சூரியன் மறையும் நேரத்திலும் நெய் விளக்கு ஏற்றும்போது, சுற்றுச்சூழல் சீராகி, காற்று சுத்தப்படுத்தப்படுகிறது.இதனால், குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது. அதனால்தான், பிரம்ம முகூர்த்த நேரத்திலும், மாலை நேரங்களிலும், வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட சொல்கிறார்கள். துளசிக்கு முன்னாலும் நெய் தீபம் ஏற்றலாம்.

குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டால், அருகிலுள்ள கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றிவைத்து, பிரகாரத்தை மூன்று முறை வலம் வர வேண்டும். இதனால் இன்னல்கள் உடனே தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்தவகையில், கோயில்களில், அதிகாலை, நண்பகல், அந்தி பொழுதில், நெய் தீபம் ஏற்றுவது அதீத பலனை தரும்.

அதேபோல, அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது. அதனால்தான் கோவில்களிலும் சரி, வீடுகளிலும் சரி தீபம் ஏற்றும் பொழுது நெய் தீபம் ஏற்றினால் நாம் வேண்டிய அனைத்தும் நிறைவேறும். மிகவும் சக்தி வாய்ந்த தீபம் எனவும் கூறப்படுகிறது.

பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டின் கதவை திறந்து வைத்துப் பாருங்கள்..!! அஷ்டலட்சுமிகளின் வருகையும் இருக்கும்..!!

0

நாம் எந்த ஒரு செயலை செய்வதற்கும், எந்த ஒரு வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்கும் உகந்த நேரம் என்றால் அது பிரம்ம முகூர்த்த நேரம் தான். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் எந்த செயலை செய்தாலும் அல்லது எந்த வேண்டுதல்களை கூறி கடவுளிடம் பிரார்த்தனை செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த பிரம்ம முகூர்த்த நேரம் என்பது அதிகாலை 4:30 மணி முதல் சூரிய உதயம் வரையிலும் இருக்கும். அதாவது 6 மணி வரையிலும் இருக்கும். வீட்டில் உள்ள பெண்கள் தினமும் அதிகாலையில் எழுந்து, இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும் என்பதும் ஒரு நம்பிக்கை.

அதேபோன்று இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் அஷ்டலட்சுமிகளின் வருகையும் நமது வீட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில், நமது வீட்டின் கதவை திறந்து வைக்க வேண்டும். காலை 6:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் நமது வீட்டின் கதவு சிறிது நேரம் ஆவது திறந்து இருக்க வேண்டும்.

ஏனென்றால் அதிகாலையில் சூரியன் உதயம் ஆகும் நேரமும், சூரியன் மறையும் நேரமும் மிகவும் முக்கியமான நேரமாகும். இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நமது வீட்டின் கதவை திறக்கும் பொழுது ஒரு மந்திரத்தை 8 முறை உச்சரித்து, அதன் பிறகு நமது வீட்டின் கதவை திறந்தால் அஷ்டலட்சுமிகளின் வருகையும் நமது வீட்டிற்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் நிறைவாக இருக்க வேண்டும் என்றால், அந்த லட்சுமி கடாட்சம் வெறும் பணத்தால் மட்டும் கிடைத்து விடாது. பணத்தோடு சேர்த்து மற்ற ஐஸ்வர்யங்களும் ஒரு குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும். அதை தான் அஷ்டலட்சுமி கடாட்சம் என்று சொல்லுவார்கள்.

அஷ்ட ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக் கூடிய லட்சுமி, அஷ்டலட்சுமி. இந்த எட்டு வகையான செல்வமும் ஒரு வீட்டிற்கு நிறைவாக கிடைத்துவிட்டால் போதும். அந்த வீட்டு சந்தோஷம் முழுமை அடையும். உங்களுடைய வீட்டில் தினமும் அஷ்டலட்சுமிகளின் வருகை இருக்க வேண்டும் என்றால், தினம் தினம், காலையில் வாசல் கதவை திறக்கும் போது இந்த ஒரு வார்த்தையை மட்டும் எட்டு முறை சொன்னால் போதும்.

அதாவது நிலை வாசல் கதவை திறக்கும்போது அஷ்ட லட்சுமிகளும் வீட்டிற்குள் வருகை தர வேண்டும் என்று சொல்லிவிட்டு “ஸ்ரீம்” என்ற வார்த்தையை எட்டு முறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மகாலட்சுமிக்கும் ஒவ்வொரு ஸ்ரீம் என்ற வார்த்தையை சொல்லும்போது அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு கிடைக்கும். அஷ்டலட்சுமிகளின் வருகை உங்களுடைய வீட்டில் இருக்கும்.

தினம் தினம் இந்த வார்த்தையை சொல்லி வாசல் கதவை திறக்கும் போது அஷ்டலட்சுமிகளும் சந்தோஷமாக உங்கள் வீட்டிற்குள் நுழைவார்கள். காலப்போக்கில் அஷ்ட லட்சுமிகளும் உங்கள் வீட்டு வாசலிலேயே நிலையாக தங்கி, உங்களுக்கு தேவையான ஐஸ்வர்யங்களை கொட்டிக் கொடுக்க துவங்கி விடுவார்கள்.

துடைப்பத்தை இந்த நாட்களில் வாங்கி பாருங்கள்..!! செல்வம் பெருகும்..!!

0

துடைப்பம் என்பது சாதாரண ஒரு பொருள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் துடைப்பம் என்பது ஒரு வீட்டில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். ஏனென்றால் துடைப்பம் என்பது மகாலட்சுமியின் அம்சமாக வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. மேலும் அந்த துடைப்பம் தான் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. எனவே துடைப்பம் என்பதை சரியான முறையில் கையாள்வது என்பது மிகவும் அவசியம்.

இந்த துடைப்பம் என்பதை நமது வீட்டிற்கு வரும் வேறு யாருடைய கண்ணிற்கும் தெரியாதவாறு வைக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. அதாவது நமது செல்வத்தை எவ்வாறு மறைவாக வைக்கிறோமோ, அதனைப் போன்று தான் துடைப்பத்தையும் யாரது கண்ணிலும் படாதவாறு பகல் நேரங்களில் வைக்க வேண்டும்.

இரவு நேரங்களில் எந்த ஒரு தீய சக்திகளும் நமது வீட்டிற்குள் வராமல் இருப்பதற்காக நமது வீட்டின் நிலை வாசலின் அருகே துடைப்பத்தை வைத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் இரவு நேரங்களில் தான் நமது வீட்டிற்கு தீய சக்திகள், பில்லி, சூனியம், கண் திருஷ்டிகள் ஆகிய அனைத்தும் உள்ளே வரும். எனவே இரவு நேரங்களில் நமது வீட்டின் நிலை வாசலில் இந்த துடைப்பத்தை போட்டு விட வேண்டும்.

மேலும் மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த துடைப்பத்தை யாரது காலிலும் மிதிக்காதவாறு ஓரமாக வைக்க வேண்டும்.
துடைப்பத்தையும், முறத்தையும் எங்கு எப்படி வைப்பது என்பதற்கு சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க அது மகாலக்ஷ்மியை திருப்திபடுத்தும்.

உங்கள் கனவில் துடைப்பம் வந்தால் அது நல்லதாக கருதப்படுகிறது. துடைப்பம் வீட்டின் செல்வச் செழிப்பின் அடையாளமாகும். இதை எப்போதும் மறைத்து வைக்க வேண்டும்.
துடைப்பத்தை தலைகீழாக வைக்காதீர்கள். இப்படி வைப்பதால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும்.

சரியாக வைத்தால்தான் நேர்மறை சக்தி அதிகரிக்கும். துடைப்பத்தை எப்போதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்யும் போது அதில் முடி சிக்கிக் கொண்டிருக்கும். முடிகளை எடுத்துக் குப்பைக் கூடையில் போட்டுவிட்டு அதை சுத்தமாக வையுங்கள். வீட்டில் இருந்து வெளியே ஒருவர் சென்றபிறகு பெருக்குவதைத் தடுக்க வேண்டும். ஒருமணி நேரம் கழித்துதான் பெருக்க வேண்டும்.

வீட்டைக் காலி செய்யும் போது சிலர் பழைய துடைப்பத்தை விட்டுச் செல்வார்கள். அப்படி வைத்தால் உங்கள் வீட்டு மகாலக்ஷ்மியை நீங்கள் குடியிருந்த வீட்டிலேயே விட்டுச் செல்வதாக அர்த்தம். அதைத் தனித்தனியாக பிரித்துப் போடுவது நல்லது‌.

செவ்வாய், சனிக்கிழமைகளில் துடைப்பம் வாங்கலாம் வீட்டில் செல்வம் பெருகும், பொருளாதார நிலை மேம்படும். தேய்பிறை நாட்களில் துடைப்பம் வாங்குவது நல்லது. துடைப்பத்தை தானமாகக் கொடுக்காதீர்கள்.