Home Blog Page 367

அட இப்படியுமாடா பண்ணுவீங்க!! மொக்க கதையை ஓட்ட.. புதிய ட்ரெண்ட்!!

0

இப்பொழுது எல்லாம் தங்களுடைய படம் வெற்றி கொள்ள வேண்டும் என இயக்குனர்கள் நினைப்பதை விட போட்ட பணத்தை எடுத்து விட்டால் போதும் என நினைப்பதே மிகப்பெரிய விஷயமாக உள்ளது. முதலாம் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பாக நிருபர்களுக்கு போட்டுக்காட்டிய பின்பு அவர்கள் கொடுக்கக்கூடிய உத்தரவாதத்தின் பெயரில் படங்கள் ஓடின. ஆனால் இப்பொழுது காலகட்டமே வேறு என்பதற்கு ஏற்றவாறு புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாக்கியுள்ளது.

ஒரு படம் திரையிடப்படுகிறது என்றால் அதன் மூலம் அந்த படத்தை சார்ந்த திரைத்துறையினர் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் நடிகைகள் என அனைவரும் பயன்பெறுவது தாண்டி இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளியிடப்படும் பொழுது அதனோடு கூடவே இலட்சக்கணக்கான இன்ஃப்லுவென்ஸர்களும் சம்பாதிக்க தொடங்கிவிட்டனர். இதன் மூலம் தரமற்ற திரைப்படம் கூட தரமான திரைப்படம் போல் மக்கள் மத்தியில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

அதிலும் கொடுமையான விஷயம் என்னவென்றால், தங்களுடைய படம் எப்படி இருக்கிறது என்ற விமர்சனங்களை கூட திரைப்பட துறையினர் பணம் கொடுத்து வெளிப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த திரைப்படத்திற்கு உரியவர்கள் மட்டுமல்லாது மற்ற திரைப்படங்களின் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் அவர்களின் நண்பர்கள் என பலரையும் அழைத்து மேடையில் வரிசையாக சார் போட்டு அமர வைத்து படத்தின் இசை குறித்த படத்தின் கதை குறித்தோ பேசாமல் தங்களுடைய பழைய நினைவுகள் என்ற பெயரில் தேவையற்றதையும் பேசி நேரத்தை வீணடிக்கின்றனர்.

அவர்களைத் தொடர்ந்து இன்ஸ்டா இன்புளுவென்சர்கள், இவர்கள் நன்றாக இல்லாத படத்தை கூட ஹைப் ஏற்றி இயக்குனர்கள் போட்ட முதலீட்டை மீட்டு எடுப்பதற்கு உதவி புரிபவர்களாக அவர்களுடைய பணிகளை செய்து வருகின்றன.

இது குறித்த மூத்த சினிமா பத்திரிக்கையாளர் தெரிவித்திருப்பதாவது :-

இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மாதத்திற்கு 20 படங்கள் வெளிவருகிறது என்றால் அவற்றில் ஒன்றோ இரண்டோ தான் வெற்றி திரைப்படமாக அமைகிறது என குறிப்பிட்ட அவர், இப்பொழுதெல்லாம் நிருபர்களை அழைத்து படங்களை போட்டு காட்டுவதில்லை என்றும் ஏனென்றால் அவர்கள் உண்மையை வெளிப்படையாக தெரிவிப்பதால் தங்களுடைய படம் ஓடாத சூழல் ஏற்படுவதால் பணம் கொடுத்து தங்களுடைய படம் குறித்த கருத்துக்களை வெளியிட இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்துவதாக தெரிவித்ததோடு, தமிழ் சினிமாவின் எதிர்கால நிலையை யோசிக்கும் பொழுது வருத்தமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டணி யாருடன்?.. சசிகலா, ஓபிஎஸ் அதிமுகவில் இணைவார்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில்!..

0

தமிழகத்தில் தேர்தல் நடக்க ஒன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடனெல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்கிற கணக்கை போட துவங்கிவிட்டார்கள். குறிப்பாக அதிமுக யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.

திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த முறை திமுகவை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக ஏற்கனவே பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது.

ஆனால், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துவிட்டார். இது இந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடருமா என்பது தெரியவில்லை. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்தால் திமுகவை தோற்கடிக்கலாம். ஆனால், சீமான் எப்போதும் தனித்தே போட்டியிடுவார். விஜய் என்ன திட்டமிடுகிறார் என்பது தெரியவில்லை.
விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

ஒருபக்கம், அதிமுக இப்போது பலவீனமாக இருக்கிறது. ஓபிஎஸ் ஒருபக்கம், சசிகலா, டிடிவி தினகரன் ஒருபக்கம் என அதிமுகவே பிரிந்து கிடக்கிறது. திமுகவை தோற்கடிக்க 2026 சட்டமன்ற தேர்தலில் இவர்கள் ஒன்றிணைவார்களா என்பது தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும்’ என தெரிவித்தார். மேலும், சசிகலா மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை எனவும் உறுதியாக தெரிவித்திருக்கிறார்.

நாலு பேரால முடிந்த நடிகர் கரணின் வாழ்க்கை!! மேனேஜருக்கும் இவருக்கும்.. கிசுகிசுத்தது உண்மையா!!

0

நடிகர் கரண் சினிமா வாழ்க்கையை விட்டு சென்றதற்கும் , நடிகர் கரணின் மேனேஜருக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது என பேசப்பட்டது உண்மையா என்பது குறித்தது போன்ற விஷயங்களுக்கு பதில் அளித்திருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப்.

Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சபிதா ஜோசப் தெரிவித்திருப்பதாவது :-

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகர் கரன் என்றும் அதன் பின் தமிழில் துணை கதாபாத்திரங்கள் அதாவது விஜய் அஜித் போன்றவர்களுடன் நட்பாக பழகக் கூடிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். அதன் பின்பு ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என ஒரு சில படங்களில் வெற்றி கொடுத்தாலும் அவருக்கு வில்லனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.

ஒருபுறம் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்ட கரன் மற்றொரு புறம் நடிகர் கரணின் மேனேஜர் ஒரு பெண் என்பது இவர் சினிமா துறையை விட்டு செல்வதற்கு முக்கிய காரணம் என தெரிவித்திருக்கிறார். அதாவது நடிகர் கரண் எங்கு சென்றாலும் அவருடைய மேனேஜர் லட்சுமி அவர்களும் கூட செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே மேனேஜர் என்றால் எந்த நேரமும் கூடவே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் இதனை சுற்றி இருந்து பார்த்தவர்கள் தவறாக நினைத்து அதனால் நடிகர் கரணியினுடைய சினிமா வாழ்க்கை முடிந்து போனதற்கு காரணமாக அமைந்துவிட்டது எனக் கூறியிருக்கிறார்.

ஒருமுறை கரணின் மேனேஜர் லட்சுமி அவர்கள் தனக்கு அழைத்ததாகவும் அப்பொழுது தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துதாகவும் கூறியிருக்கிறார். அவரை அழைத்து பேசிய பொழுது திடீரென கரன் அவர்கள் தன்னிடம் பேசவில்லை என்றும் யாரோ தவறாக கூறி விட்டார்கள் போல என்றும் தெரிவித்து இருக்கிறார் அதன் பின் தான் அவர்களுக்கு ஆறுதல் அளித்து தைரியம் கூறி திருப்பி அனுப்பியதாக மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு காரணங்களுமே நடிகர் கரண் தன்னுடைய சினிமா வாழ்க்கையை விட்டு முழுவதுமாக வெளியேற காரணமாக உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல்!.. தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை கூட்டம்!..

0

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது. எனவே, அரசியல்கட்சிகள் இப்போதே தேர்தலை சந்திக்கும் வேலையில் இறங்கிவிட்டன. குறிப்பாக யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கிற ஆலோசனைகள் துவங்கிவிட்டது. ஆனால், இப்போதைக்கு அது எல்லாமே திரைமறைவில் மட்டுமே நடந்து வருகிறது.

சட்டமன்ற தேர்தல் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. எனவே, மு.க.ஸ்டாலின் முதல்வராக பதிவியேற்று ஆட்சியை நடத்தி வருகிறார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று 4 வருடங்கள் ஓடிவிட்டது.

ஒருபக்கம், அதிமுக இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதிமுக இப்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. விஜய் ஒரு பக்கம் கட்சியை துவங்கி 2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்திருக்கிறார். அவர் யாருடனெல்லாம் கூட்டணி அமைப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிப்பார் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய் கூட்டணி அமைப்பாரா இல்லை தனியாக போட்டியிடுவாரா என்பது போகப்போகவே தெரியவரும். இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருப்பதால் பல முக்கிய விஷயங்கள் இதில் விவாதிக்கப்படவிருக்கிறது. தமிழகத்தில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. 18 வயதை அடைந்தவரை வாக்களார் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

பரிசுகளை அள்ளிக் குவிக்கும் அஜித் கார் ரேசிங் அணி!! மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித் அவர்கள் சினிமா துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுத்து தனக்கு மிகவும் பிடித்த துறையான ரேசிங் துறையில் தற்போது பல சாதனைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேசிங்கில் அஜித் கார் ரேசிங் அணியானது 3 வது இடத்தை பிடித்த இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. மீண்டும் அதே போன்ற ஒரு பெருமையை அஜித் கார் ரேசிங் அணி வழங்கி இருக்கிறது.

நேற்று மார்ச் 23 அன்று இத்தாலி நாட்டில் நடந்த 2H OF MUGELLO CAR என்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித் கார் ரேசிங் அணியானது மீண்டும் 3 வது இடத்தை பிடித்து இந்தியாவின் பெருமையை மற்றுமொரு முறை நிலைநாட்டியிருக்கிறது. அஜித்தின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றி குறித்து ரசிகர்கள் திரையுலகினர் என அனைவரும் நடிகர் அஜித் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

இரண்டாவது முறையாக கார் ரேசிங்கள் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக நடிகர் அஜித் அவர்கள் மேடைகள் என்று இந்திய தேசியக் கொடியை அசைக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் அவர்கள் சினிமாவில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ அதைவிட அதிக அளவு தனக்கு மிகவும் விருப்பமான ரேசிங் துறையில் ஈடுபாடுடன் இருப்பதற்கான பலனாக இன்று இந்தியாவை பெருமைப்படுத்தும் விதமாகவும் குறிப்பாக தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் விதமாகவும் இரண்டாவது முறையாக வெற்றி அடைந்திருக்கிறார்.

குறிப்பு :-

இயக்குனர் ஆதிக் ரவி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அட்லி திரைப்படம் ஆனது திரையிடப்படுவதற்கான அனைத்து பணிகளையும் திரைப்பட குழு மேற்கொண்டு வருவதாகவும் கார் ரேஸ் வெற்றியோடு சேர்த்து குட்பேட் அக்லி திரைப்படத்தையும் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராக வேண்டும் என்றும் குட் பாட அக்லி திரைப்படத்தின் தயாரிப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்தாலி கார் ரேஸில் வெற்றி!.. அஜித் மீது சரக்கை ஊற்றி கொண்டாடிய டீம்!.. வைரல் வீடியோ!…

0

நடிகர் அஜித் ஒரு நடிகர் மட்டுமே இல்லை. பைக்கில் நீண்ட தூரம் பயணிப்பது, கார் ரேஸில் கலந்துகொள்வது, துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டரை இயக்குவது என நடிப்பை தாண்டி அவருக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கிறது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் அஜித் அதை செய்ய தவறுவதே இல்லை.

அவரின் மனைவி ஷாலினி அனுமதிக்கவில்லை என்பதால் திருமணத்திற்கு பின் அஜித் கார் ரேஸில் கலந்துகொள்வதை நிறுத்திவிட்டார். இந்த நிலையில்தான் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்துகொண்டார். அதில் சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் அஜித்தின் டீம் 3வது இடத்தை பிடித்தது.

இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் அப்போது இணையத்தில் வைரலானது. எனவே, அஜித்துக்கு பலரும் வாழ்த்து சொன்னார்கள். துபாய் ரேஸை முடித்துவிட்டு அடுத்து ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறவுள்ள கார் ரேஸில் கலந்துகொள்ள அஜித் சென்றார். இப்போது இத்தாலி நாட்டில் நடைபெற்ற 12 ஹவர்ஸ் ஆப் முகெல்லா கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது.

எனவே, அஜித் தங்கள் அணியுடன் அந்த வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீட்யோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. சாம்பயின் பாட்டிலை குலுக்கு குலுக்கி அடிக்கும் அஜித், அவர் மீது சாம்பயின் பாட்டிலை ஊற்றும் அவரின் அணியினர் என செம ஜாலியாக அந்த வெற்றியை கொண்டாடியிருக்கிறார்கள். இந்த வீடியோக்களை அஜித் ரசிகர்கள் தங்களின் சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதோடு, அஜித்துக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.

 

மனைவி சம்பாதிக்கும் நிலையில் ஜீவனாம்சம் பெற முடியுமா!! நீதிமன்றங்கள் சொல்வது என்ன!!

0

மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் கணவன் மனைவி விவாகரத்து குறித்தும் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்குவது குறித்தும் முடிவெடுக்கும் பட்சத்தில் மனைவி கணவனிடம் இருந்து ஜீவனாம்சம் எதிர்பார்த்து இருக்கிறார். ஆனால் மனைவியும் சம்பாதிக்கிறார் என்பதால் ஜீவனாம்சம் வழங்க கூடாது என கணவன் வழக்கு தொடுத்திருக்கிறார்.

தற்பொழுது இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்திற்கு சென்ற நிலையில், அங்கு கணவன் மனைவி இருவரின் உடைய சிறப்பு விவரங்களையும் விசாரித்த பின் உச்ச நீதிமன்றம் ஆனது மாதாந்திர சம்பள விவரங்களை கணவர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கில் கணவன் மனைவி மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றும் சம்பாதிக்கக்கூடிய மனைவிக்கு தான் ஏன் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட வழக்கு போட்டு இருக்கிறார். இதனை மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் கிழமை நீதிமன்றம் இரண்டும் விசாரித்து கணவர் கூறுவது சரி எனக்கு ஒரே மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டாம் என தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கணவன் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார் என்றும் தன்னைவிட அதிக சம்பளம் பெறுவதால் கணவன் தனக்கு ஜீவனாம்சம் கொடுத்தே தீர வேண்டும் என்றும் மனைவி தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறார். இந்த மேல்முறையீட்டிற்கான விசாரணையின் பொழுது தான் கணவனினுடைய மாதாந்திர சம்பள வருமான சீட்டு சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகளால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவ்வாறு சம்பள சீட்டு சமர்ப்பிக்கப்பட்ட பின்பு தான் இதற்கான முடிவு வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய வரிப்பணம் வட மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டதா!! வெளிப்படையாக தெரிவித்த நிர்மலா சீதாராமன்!!

0

தமிழகத்திடமிருந்து வரிப்பணத்தை பெற்றுக் கொண்ட ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான கல்வி நிதி விவசாய நிதி என எதையுமே வழங்காமல் உள்ளது. இது குறித்த ஒன்றிய நிதிநிலை அறிக்கை வெளியிடும் சமயத்தில் கேட்ட பொழுது மறைமுகமாக நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கான விதியை வட மாநிலங்களுக்கு வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஒன்றிய நிதிநிலை அறிக்கை விளக்க கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது :-

தமிழகத்தில் உள்ளவர்கள் நாங்கள் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் ஆனால் நீங்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்பது போல கேட்பது தவறான காரியம் என்றும் அதற்கு உதாரணமாக சென்னை கோவை போன்ற இடங்களில் இருந்து மட்டுமே வரி வருகிறது என்றும் அரியலூர் கோவில்பட்டி போன்ற இடங்களில் இருந்து வரி கொடுக்கவில்லை என்பதற்காக அவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யாமல் இருந்து விட முடியுமா ? என கேள்வி எழுப்ப இருக்கிறார்.

இவருடைய இந்த விளக்கமானது ஒன்றிய நிதிநிலை விளக்க கூட்டத்தில் இடம்பெற்ற தமிழர்களுக்கு அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்திருக்கிறது. ஏனெனில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மறைமுகமாக தமிழகத்தில் இருந்து வசூலிக்கப்பட்ட வரிகளை வைத்து வட மாநிலத்தவருக்கு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு விட்டதாகவும் இனி தமிழகத்திற்கு கல்வி நிதி விவசாய நிதி என எந்த ஒரு நிதியும் வழங்கப்பட மாட்டாது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

உடனே முதல்வரா?.. எல்லோரும் என்.டி.ஆர் இல்ல!.. விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய பவன் கல்யாண்!..

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த கூட்டத்தில் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. இந்த மேடையில் திமுகவை கடுமையாக விமர்சித்தார் விஜய். எல்லோரும் சேர்ந்து திமுக அரசை அகற்றுவோம் என மகளிர் தின வாழ்த்து சொல்லும்போது கூட பேசியிருந்தார்.

அதேநேரம், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அவர் பனையூர் அரசியல்வாதி, அங்கிருந்து மட்டுமே அரசியல் செய்து வருகிறார். காட்சி துவங்கி ஒரு வருடம் ஆகியும் இன்னமும் அவர் செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தவில்லை. செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் சொன்னால் அவருக்கு ஒன்னும் தெரியாது என்பது தெரிந்துவிடும் என்றும் திமுகவினர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

ஆனால், இது எதற்கும் விஜய் விளக்கம் அளிப்பது இல்லை. இப்போதைக்கு விஜயின் அரசியல் என்பது அறிக்கை வெளியிடுவது மட்டுமே என்கிற நிலையில் இருக்கிறது. விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவிருக்கிறது.

உடனே முதல்வரா?.. எல்லோரும் என்.டி.ஆர் இல்ல!.. விஜய்க்கு அட்வைஸ் பண்ணிய பவன் கல்யாண்!..

அதாவது, தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்யும் முடிவில் இருக்கிறார். மேலும் பூத் கமிட்டி மாநாடு, மண்டல மாநாடு என தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அவர் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். இது போக, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொதுக்கூட்டங்களை நடத்தவும் அவர் திட்டமிட்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான், நடிகர் மற்றும் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் விஜயின் அரசியல் வருகை பற்றி பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்திருக்கிறார். ஒரு நடிகராக இருந்துவிட்டு உடனே முதல்வராகி விட முடியாது. இதில் எந்த குறுக்கு வழியும் இல்லை. என்.டி.ராமாராவுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்காது. எல்லோரும் எதிரியாக மாறுவார்கள். தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும். எனவே, முதலில் நிலைத்து நிற்க வேண்டும். விஜய்க்கு அனுபம் உள்ளது. நான் சொல்ல தேவையில்லை’ என பேசியிருக்கிறார்.

தங்கத்தின் விலை குறைய வாய்ப்பு!! ஆனா எப்போன்னு தெரியுமா.. வல்லுனர்கள் தரும் விளக்கம்!!

0

தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது உயர்ந்து கொண்டே இருப்பதற்கு சில முக்கிய காரணங்களாக வல்லுனர்களால் தெரிவிக்கப்படுபவை அமெரிக்க அதிபர் ட்ரம்பினுடைய வர்த்தகப் போர், மற்றொருபுறம் உக்ரைன் ரஷ்யா போர் இவை முடிவுக்கு வரும் பட்சத்தில் கட்டாயமாக தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு குறைய வாய்ப்பிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை குறித்து பொருளாதார நிபுணர் ஜி. சந்திரசேகர் தெரிவித்திருப்பதாவது :-

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அல்லது தங்கத்தை வாங்க வேண்டும் என்றாலோ சர்வதேச விஷயங்களை கவனிக்க வேண்டும் என தெரிவித்த அவர் தற்பொழுது தங்கத்தின் விலை ஆனது $300-400 ஆக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் ரஷ்யா உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் துவங்கி அவர்களுடைய போர் முடிவடையும் நிலையில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் தற்பொழுது நிகழக்கூடிய புவிசார் சூழல்கள் சரியானால் தங்கத்தின் விலையும் உச்சத்தில் நீடிக்காது கட்டாயமாக குறையும் என தெரிவித்திருக்கிறார்.

தங்கத்தின் விலை குறித்து வல்லுநர் குனால் ஷா தெரிவித்திருப்பதாவது :-

ரஷ்யா உக்ரைன் இடையே போரானது கடந்த 3 வருடங்களாக நிகழ்ந்து வருகிறது என்றும் தற்பொழுது ரஷ்யாவால் இந்த போரை தொடர்ந்து நடத்த முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்தவர், கட்டாயமாக பேச்சுவார்த்தைக்கு இவர்கள் இறங்குவதற்கான சூழல் உள்ளது என்றும் அப்படி பேச்சுவார்த்தையில் இறங்கி போர் முடிவடைந்து விட்டால் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் தான் முதன் முதலில் தங்கத்தின் விலை ஆனது அதிக அளவு உயரத் தொடங்கியது என்றும் கொரோனா முடிந்த பின்பு ரஷ்யா உக்கரையின் போர் துவங்கியதால் மீண்டும் ஏற்றத்தை மட்டுமே தங்கம் விலை ஆனது சந்தித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது போன்ற நிலையற்ற சம்பவங்களால் மக்கள் பயந்து தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை ஆனது உயர்வதாகவும் போர் பதற்றம் முடிவடைந்து விட்டால் தங்கத்தின் விலை குறைய அதிகளவு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.