Home Blog Page 375

சைனஸ் பாதிப்பு குணமாக தொப்புளில் இந்த எண்ணெய் தடவுங்கள்!! முழு தீர்வு கிடைக்கும்!!

0

மூக்கின் பக்கவாட்டில் உள்ள சைனஸ் குழாயில் தொற்று அல்லது வீக்கம் உண்டாவதை தான் சைனஸ் பிரச்சனை என்கிறோம்.இந்த சைனஸ் பிரச்னையால் அவதியடைந்து வருபவர்களுக்கு சிறந்த தீர்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சைனஸ் காரணங்கள்:

**பாக்டீரியா
**வைரஸ் தொற்று
**ஒவ்வாமை

சைனஸ் அறிகுறிகள்:

**ஜலதோஷம்
**அதிகப்படியான சளி
**தும்மல்
**மூக்கு ஒழுகுகுதல்
**தலைவலி
**உடல் சோர்வு

விளக்கெண்ணெய் மசாஜ்

உடல் சூடு அதிகமாக இருந்தால் சைனஸ் பாதிப்பு ஏற்படும்.எனவே உடல் சூட்டை தணிக்க விளக்கெண்ணெய் மசாஜ் செய்யுங்கள்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் தொப்புள் மீது விளக்கெண்ணெய் ஊற்றி மசாஜ் செய்யுங்கள்.இப்படி செய்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.இதனால் சைனஸ் பிரச்சனை முழுமையாக சரியாகும்.

சைனஸ் பிரச்சனையை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்:

ஆவிபிடித்தல்

பாத்திரத்தில் ஆவி பறக்க தண்ணீர் ஊற்றி ஒரு சூடம்,துளசி இலைகளை போட்டு
ஆவிபிடித்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.

அதேபோல் சூடான தண்ணீரில் சூடம்,எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்து ஆவி பிடித்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.

சூடான திரவங்கள்

நாட்டுக்கோழி சூப்,வெஜிடெபுள் சூப்,மூலிகை சூப்பை சூடாக பருகி வந்தால் சைனஸ் பாதிப்பு முழுமையாக குணமாகும்.

சூடான தண்ணீரில் காட்டன் துணியை போட்டு எடுத்து முகத்தில் வைத்து அழுத்தம் கொடுத்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.தினமும் காலையில் எழுந்ததும் சூடான தண்ணீர் பருகினால் சைனஸ் பாதிப்பு குணமாகும்.

உப்பு நீர்

தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் சைனஸ் பாதிப்பு குணமாகும்.நாசி பகுதியில் உப்பு நீரை ஊற்றி சுத்தம் செய்தால் சைனஸ் குணமாகும்.

தண்ணீரில் புதினா இலை,ஓமவல்லி இலையை போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் சைனஸ் பிரச்சனை சரியாகும்.

சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுதா? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் நடப்பது அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் முதல் பெரியவர்கள் சாப்பிடும் உணவுகள் வரை அனைத்திலும் கலப்படம் செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் அவ்வப்போது நடத்தப்படும் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.வியாபாரிகள் உணவுப் பொருட்களில் போலி உருவாக்குவது,பழங்களில் இரசாயனம் கலப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் விளையாடுகின்றனர்.

இதில் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தி வரும் உப்பு,சர்க்கரையில் நானோ பிளாஸ்டிக் கலப்பது ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட சர்க்கரை,உப்பை பயன்படுத்தினால் நமது இரத்தத்தில் அவை கலந்துவிடும்.

இந்த நானோ பிளாஸ்டிக் துகள்கள் இந்தியாவில் விற்கப்படும் அனைத்து உப்பு மற்றும் சர்க்கரை பிராண்டுகளிலும் கலக்கப்படுகிறது என்ற தகவல் மக்களை கதிகலங்க வைக்கிறது.நம் நாட்டின் முன்னணி உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளிவந்திருக்கிறது.

சர்க்கரை மற்றும் உப்பில் கலக்கப்படும் இந்த நானோ பிளாஸ்டிக் துகள்களானது ஐந்து மில்லி மீட்டருக்கும் குறைவான அளவில் இருக்கும்.இந்த மைக்ரோ நானோ துகள்கள் கலக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தினால் நாளடைவில் உடல் உறுப்புகள் சேதமாகிவிடும்.

உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரித்தல்,உடல் வீக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.இந்த நானோ துகள்கள் இரத்தத்தில் கலக்கும் பொழுது அவை விஷமாக மாறிவிடும்.மைக்ரோ துகள்கள் உடலில் சேர்ந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உப்பை பயன்படுத்தி வந்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனை ஏற்படும்.இந்த நானோ பிளாஸ்டிக் துகளால் உடலில் புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமா..?? சமையலறையில் இந்த மூன்று பொருட்களை வைத்து பாருங்கள்..!!

0

முந்தைய காலங்களில் சமையல் அறை என்பது மிகவும் முக்கியமான ஒரு அறையாக திகழ்ந்து வந்தது. எனவே நமது முன்னோர்கள் குளித்துவிட்டு தான் சமையல் அறைக்கு செல்வார்கள். அந்த சமையலறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்த பின்னரே சமையல் செய்ய தொடங்குவார்கள்.

இந்த சமையலறை என்பது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம்.
இந்த சமையல் அறையில் அன்னபூரணியின் படத்தை சுற்றில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் சமையலறையில் முதலில் பாலை காய்ச்சி, சர்க்கரை சேர்த்து கடவுளுக்கு படைத்த பின்னரே உணவு செய்ய தொடங்குவார்கள்.

இவ்வாறு கடவுளுக்கு தினமும் படைத்துவிட்டு நமது சமையலை தொடங்குவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. அதேபோன்று சாதம் வடித்த பின்னர் இரண்டு சொட்டு நெய் விட்டு, துளசி வைத்து கடவுளுக்கு படைத்த பின்னர் நாம் உண்பதும் சிறப்பு.

சமையலறையில் கிழக்கு பார்த்தவாறு நின்று சமையலை செய்வதும், தெற்கு பார்த்தவாறு நின்று பாத்திரங்களை கழுவுவதும் நல்லது. சமையலறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் மகாலட்சுமியின் வரவு நமது வீட்டில் நிலைத்து இருக்கும்.

சமையலறையை அசுத்தமாக வைத்துக் கொள்வது உடல் ரீதியாகவும், ஆன்மீகம் ரீதியாகவும் சரியாக இருக்காது. சமையலறையில் நாம் செய்யக்கூடிய சமையல் என்பது நம் மனதுடன் இணைந்த ஒன்றாகும். நம் மனது நன்றாக இருந்தால் மட்டுமே நாம் செய்யக்கூடிய சமையலும் நன்றாக இருக்கும்.

சமையலறை என்பது புதன் மற்றும் சுக்கிரனின் மகிமை நிறைந்த ஒரு அறையாகும். எனவே சமையல் அறையை சுத்தமாக வைத்துக் கொண்டோம் என்றால் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும்.

அரிசியை அளக்கக்கூடிய படி என்பது சமையலறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தப் படியை தப்பி தவறியும் கவிழ்த்து வைக்க கூடாது.
உப்பு என்பது நமது வீட்டில் எப்பொழுதும் நிறைவாக இருக்க வேண்டும்.

நமது முன்னோர்கள் வீட்டில் உள்ள உப்பு மற்றும் தானியங்களை குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். அவ்வாறு உப்பு மற்றும் தானியங்களை நமது வீட்டில் குறையாமல் பார்த்துக் கொண்டால் அன்னக் குறைவு என்பது ஏற்படாது.

அதே போன்று மஞ்சள் தூள் என்பதும் குறையாமல் இருக்க வேண்டும். மஞ்சள் தூள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. எனவே இந்த மூன்று பொருட்களும் நமது வீட்டின் சமையல் அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

பூஜை அறை வழிபாட்டில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபட்டு வருகிறீர்களா..?? அதற்கான பலன் என்னவென்று தெரியுமா..??

0

நமது வீட்டின் பூஜை அறையில் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். பூஜை செய்யப்படும் நாட்களில் மட்டும் அல்லாமல் அனைத்து நாட்களிலும் அந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதை பலன் என்ன என்பது குறித்து தற்போது காண்போம்.

ஒரு சிலர் பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து வழிபாடு செய்வார்கள். ஆனால் அந்த தண்ணீரை எப்பொழுது மாற்ற வேண்டும்? எவ்வாறு முறையாக அதில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்? என்பது குறித்து தெரியாமல் இருப்பர். கடவுளுக்கு என வைக்கக்கூடிய இந்த பஞ்ச பாத்திரத்த தண்ணீரை சரியான முறையில் வைத்து பராமரிக்க வேண்டும்.

வீட்டில் பூஜை செய்யும் பொழுது எல்லோரும் நிவேதனம் மற்றும் தண்ணீரை தீர்த்தமாக வைப்பது வழக்கம். நிவேதனமாக ஏதேனும் ஒரு பிரசாதத்தை கண்டிப்பாக நாம் கடவுளுக்கு வைக்க வேண்டும். எதுவும் இல்லை என்றாலும் கூட கற்கண்டு, சர்க்கரை, பேரிச்சம் பழம் இது போன்றவைகளை நிவேதனமாக வைக்கலாம்.

நாம் தினமும் பூஜை செய்கிறோமோ இல்லையோ ஆனால் கடவுளுக்கு தினமும் விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நிவேதனம் மற்றும் தண்ணீரை கண்டிப்பாக வைக்க வேண்டும். நாம் எவ்வாறு தினமும் உணவு மற்றும் தண்ணீரை பருகுகிறோமோ, அதே போன்ற கடவுளுக்கும் தினமும் ஏதேனும் ஒரு நிவேதனத்தை வைக்க வேண்டும்.

எந்த ஒரு பொருளும் வைக்காமல் கடவுளை வழிபடக்கூடாது. அதேபோன்று பஞ்சபாத்திர தண்ணீரும் கண்டிப்பாக தினமும் வைக்க வேண்டும். பஞ்ச பாத்திரம் இல்லை என்றாலும் கூட, ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும்.
இந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் துளசி, சிறிதளவு பச்சைக் கற்பூரம், மஞ்சள் தூள் இதனை போட்டும் வைக்கலாம். இந்த பொருள்கள் கிடைக்காதவர்கள் வெறும் தண்ணீரில் மஞ்சள் தூள் மட்டும் போட்டு வைக்கலாம்.

இந்த பஞ்ச பாத்திர தண்ணீரை மாற்றும் பொழுது அந்தப் பழைய தண்ணீரை செடிகளுக்கோ அல்லது கால் படாத இடத்திலோ தான் ஊற்ற வேண்டும். தினமும் கடவுளுக்கு என ஏதேனும் ஒரு நெய்வேதனம் மற்றும் தண்ணீரை வைத்தேன் நமது குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை நினைத்து வழிபடும் பொழுது, எத்தகைய பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்த்து போராடக்கூடிய சக்தி நமக்கு கிடைக்கும்.

நமது வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை தாங்க கூடிய சக்தியையும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழியையும் அந்த கடவுள் நமக்கு கொடுப்பார். நான் கடவுளிடம் கேட்கக் கூடிய வேண்டுதல்கள் அனைத்தும் இந்த பஞ்ச பாத்திர தண்ணீரில் தான் வந்து இறங்கும்.

எனவே நமது வேண்டுதல்கள் அனைத்தும் நமக்கு நிறைவேறும். இதனால் தான் பஞ்ச பாத்திர தண்ணீரை, நமது வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவது என்பது மிகவும் முக்கியமான ஒரு முறையாக கூறப்படுகிறது.

இந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரை நமது குடும்பத்தில் உள்ள அனைவரும் பகிர்ந்து குடிக்கும் பொழுது, குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு இல்லை என்றால் செடி, கொடிகளுக்கு இந்த தண்ணீரை ஊற்றி விடலாம்.

கடவுளுக்கு தண்ணீர் வைக்காமல் ஒருநாளும் விடக்கூடாது. எனவே தினமும் இந்த பஞ்ச பாத்திரத்தில் உள்ள தண்ணீரை மாற்றிவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி வைத்து வழிபாடு செய்வதன் மூலம், பல்வேறு நன்மைகள் நமது குடும்பத்திற்கு வந்து சேரும். மேலும் வீட்டில் உள்ள வறுமை நீங்கும்.

ULCER பாதிப்பை உருவாக்கும் உணவுப்பழக்கங்கள்!! இனி இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

0

இன்றைய காலகட்டத்தில் அல்சர் பாதிப்பு அனைவருக்கும் வரக் கூடிய பிரச்சனையாக இருக்கின்றது.இந்த அல்சர் வயிற்றுப்புண்,குடல் புண்,இரைப்புண் புண் என்று பலவகையாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனை இருந்தால் உணவு உட்கொள்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

அல்சர் பாதிப்பு இருபவர்களுக்கு வயிறு வலி கடுமையாக இருக்கும்.மலம் கழிக்கும் பொழுது மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.வயிற்றில் புண் இருந்தால் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வு ஏற்படும்.பிடித்த உணவுகளை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.அல்சர் உடல் எடையை குறைத்துவிடும்.சிலருக்கு குமட்டல்,வாந்தி பிரச்சனை ஏற்படும்.

உணவில் அதிக காரம் சேர்த்து சாப்பிடுதல்,புளித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளுதல்,தாமதமான உணவுப் பழக்க வழக்கம்,துரித உணவுகளால் அல்சர் பாதிப்பு ஏற்படுகிறது.அல்சர் பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு மலம் கருப்பு நிறத்தில் வெளியேறும்.வயிறு எரிச்சல்,நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படுதல் போன்றவை அல்சருக்கான முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் உணவின் மூலமே அதற்கு தீர்வு காண வேண்டும்.தயிர் அல்சருக்கு நல்லது என்றாலும் புளிப்பான தயிரை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகமாகிவிடும்.

குளிர்ச்சி நிறைந்த உணவுகள் அல்சர் பாதிப்பை குறைக்கும் என்பதால் சிலர் பிரிட்ஜில் வைக்கப்பட்ட பானங்கள்,தண்ணீர் போன்றவற்றை பருகுகின்றனர்.ஆனால் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு தீவிரமாகிவிடும்.

**பதப்படுத்தப்பட்ட உணவுகள்,எண்ணெய் உணவுகள் அல்சர் பாதிப்பை அதிகரிக்கும்.சின்ன வெங்காயம்,வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகமாக உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகரிக்கும்.

**பால் பொருட்களை உட்கொண்டால் அல்சர் பாதிப்பு அதிகரித்துவிடும்.சமைத்த உணவுகளை ப்ரீஹீட் செய்து உண்பதை தவிர்க்க வேண்டும்.

**இறைச்சி,சூடான பானங்கள் அல்சர் பாதிப்பை அதிகமாக்கிவிடும்.காபின் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவு செரிக்க.. ஏப்பம் வர சோடா பானங்களை குடிப்பவர்கள் கட்டாயம் இதை படிக்கவும்!!

0

சுப நிகச்சிகளில் அசைவ உணவிற்கு பிறகு ஸ்ப்ரைட்,7up போன்ற சோடா பானங்கள் வழங்கப்படுகிறது.அசைவ உணவு செரிமானமாக தாமதமாகும்.உண்ட உணவு செரிமானமாகி ஏப்பம் வர இதுபோன்ற சோடாக்கள் அருந்தப்படுகிறது.

சோடா பானத்தை பருகிய உடனே ஏப்பம் வருவதால் உணவை செரிக்க வைக்கும் மருந்தாக இதை பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் உண்மையில் இந்த பானங்களை உணவு உட்கொள்வதற்கு முன்பு குடித்தாலும் ஏப்பம் வரும்.இந்த சோடா பானங்களை சிலர் எனர்ஜி ட்ரிங்க் போன்று பருகுகின்றனர்.இந்த சோடா பானங்களில் கார்பனேட்டேடு மற்றும் இனிப்பு சுவை அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.

இந்த கார்பனேட்டேடு பானங்கள் உடலுக்கு பல பக்க விளைவுகளை கொடுக்கும் என்பது குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.சோடா பானங்களில் சேர்க்கப்படும் கூடுதல் சர்க்கரை உடலில் சுக்ரோஸ் அளவை அதிகரிக்க செய்கிறது.

சோடா பானங்களை அருந்தினால் உடலில் கலோரிகள் அதிகமாகிவிடும்.இதனால் உடல் பருமன்,சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் அதிகமாகிவிடும்.அளவிற்கு அதிகமான சோடா பானங்களை பருகினால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

சோடா பானங்கள் பல் ஆரோக்கியத்தை முழுமையாக சிதைத்துவிடும்.அளவிற்கு அதிகமாக சோடா பானங்களை பருகினால் பல் சிதைவு ஏற்படும்.வெறும் வயிற்றில் சோடா பானங்களை பருகினால் குடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.வயிற்றில் அமில அளவு அதிகரித்து புண்கள் உருவாகிவிடும்.

வெறும் வயிற்றில் சோடா பானங்களை பருகினால் வயிறு எரிச்சல்,நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.சர்க்கரை நிறைந்த சோடா பானங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.

சோடா பானங்களை அதிகமாக பருகினால் மனச்சோர்வு அதிகமாகிவிடும்.சோடா பானங்களை பருகி வந்தால் இதய நோய் பாதிப்பு ஏற்படும்.எனவே சோடா பானங்களை பருகுவதை தவிர்க்க வேண்டும்.சோடா பானங்களை பருகி வந்தால் உடல் பருமன் அதிகரித்துவிடும்.எனவே இனி உணவு சோடா பானங்களை பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இந்த வருட முதல் சூரிய கிரகணம் 2025 மார்ச் மாதம் ஏற்பட உள்ளது..!! கிரகண நேரம் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்..!!

0

வரக்கூடிய மார்ச் 29ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்த சூரிய கிரகணம் நிகழக்கூடிய நேரம் என்ன? இந்த சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் பார்க்க முடியும்? இந்த சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படக்கூடிய ராசிகள் என்ன? அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன? இந்த சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன? என்பது குறித்து தற்போது காண்போம்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் பொழுது தான் இந்த சூரிய கிரகணம் உருவாகிறது. இது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் பொழுது ஏற்படக்கூடிய ஒரு வானியல் நிகழ்வு ஆகும். இந்த நேரத்தில் பூமியின் சில பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்படும்.

எனினும் சூரியன் உடன் ஒப்பிடும் பொழுது நிலவு சிறியது என்பதால் நிலவால் சூரியனை மறைக்க முடியாது. எனவே சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும்பொழுது நிலவை சூரியன் மறைத்திருப்பதால் பார்ப்பதற்கு நெருப்பு வளையம் போல சூரியன் தோன்றும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆனது மார்ச் 29 ஆம் தேதி நிகழவிருக்கிறது.

இந்த கிரகணம் பிற்பகல் 2:20 மணிக்கு தொடங்கி மாலை 6:13 மணிக்கு முடிவடையும். இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும். இந்த கிரகணமானது மாலை  4 :17 மணிக்கு உச்சத்தை அடையும் எனவும் நாசா தெரிவித்துள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அட்லாண்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து இந்த சூரிய கிரகணம் தெரியும். ஆனால் இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது.

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. இது விழித்திரை, தீக்காயங்கள் மற்றும் மீள முடியாத கண் சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த வருடம் இரண்டு சூரிய கிரகணம் நிகழும் எனவும், முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதியும், இரண்டாவது சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம் மீனம் மற்றும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நிகழ இருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் மூன்று ராசிகளுக்கு பல்வேறு பிரச்சனைகளும், சிக்கல்களும் ஏற்படலாம் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

மேஷம், கடகம், தனுசு ஆகிய ராசிக்காரர்கள் அனைத்து விதத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கிரகணத்தின் பொழுது நமக்கு பிடித்த கடவுளை நினைத்து ஜபம் மற்றும் தியானங்களை செய்யலாம். கிரகணம் முடிந்த பிறகு குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி, அருகில் உள்ள கோவிலுக்கும் சென்று வரலாம்.

கிரகணம் நடைபெறும் பொழுது கிரகணத்தின் அலைகள் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் வெளியே வரக்கூடாது. கிரகணத்தின் பொழுது சமைக்கவும் கூடாது சாப்பிடவும் கூடாது.

கிரகணம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவும், கிரகணம் முடிந்த ஒரு மணி நேரத்திற்கு பின்பாகவும் தான் உணவை உண்ண வேண்டும். கிரகண நேரத்தின் பொழுது கர்ப்பிணி பெண்கள் கத்தி போன்ற கூர்மையான பொருட்களை தொடவோ அல்லது கையில் வைத்திருக்கவோ கூடாது.

உள்ளங்கை அரித்தால் பணம் தேடி வரும் என்று கூறுவது உண்மையா..?? அதன் பின் இருக்கும் காரணம் என்ன என்று தெரியுமா..??

0

நமது சமூகம் என்பது பல மூடநம்பிக்கைகளால் நிறைந்த ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றி பலவிதமான மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நம்பிக்கைகள் நமது மக்களிடையே பல நூற்றாண்டு காலமாக பரவி வருகிறது. எனினும் இப்பொழுது தான் ஓரளவிற்கு நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளின் ஆதிக்கம் சற்று குறைந்து உள்ளது.

முழுமையாக இந்த மூடநம்பிக்கை குறைந்து விட்டதா என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். நமது மக்களிடையே பரவி இருக்கும் பெரும்பாலான மூடநம்பிக்கை என்றால் அது பணம் சம்பந்தமான ஒன்றாக தான் இருக்கும்.

காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும்? எதை பார்க்க வேண்டும்? எந்த கடவுளை வணங்க வேண்டும்? கண்கள் துடித்தால் என்ன பலன்? என்பது குறித்த பலவிதமான மூடநம்பிக்கைகள் பரவி வருகிறது. அவற்றுள் ஒன்றான நமது உள்ளங்கை அரித்தால் பணம் ஆனது நமது கைத்தேடி வரும் என்று கூறுவது உண்மையா? அதற்கு பின் இருக்கும் காரணம் என்ன? என்பது குறித்து தான் தற்போது காணப் போகிறோம்.

இன்று நமது சமூகத்தில் நிலவக்கூடிய மூடநம்பிக்கைகளில் முக்கியமான ஒன்று, நாம் வெளியில் செல்லும் பொழுது பூனை குறுக்கே வந்தால் அது கெட்ட சகுனம். இது மட்டும் அல்லாமல் காலையில் பால்காரரை காண்பது நல்லது, யாராவது நம்மை நினைத்தால் விக்கல் வரும், விதவையை பார்த்தால் கெட்ட சகுனம் இது போன்ற பலவிதமான மூடநம்பிக்கைகள் நம்மை சுற்றி இன்றும் உள்ளது.

அதேபோன்று இந்த மூடநம்பிக்கைகளுள் முக்கியமான ஒன்றாக நமது இடது உள்ளங்கை அரித்தால் பண நஷ்டம் ஏற்படும் என்றும் கூறி வருகின்றனர். அதற்கான விளக்கத்தை தற்போது காணலாம்.
பொதுவாக உள்ளங்கை அரித்தால் உடனே நாம் பலவிதமான யோசனைகளுக்கு சென்று விடுவோம். அதாவது இது நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை குறித்து.

வலது உள்ளங்கை, இடது உள்ளங்கை என கைகள் அரிப்பதற்கு பல விளக்கங்களை நமது மக்கள் கூறுவர். இடது உள்ளங்கை அரித்தால் லட்சுமிதேவி நமது கையை விட்டு செல்ல போகிறார் என்று கூறுவர்.
இடது உள்ளங்கை அரித்தால் திடீர் செலவு, பணம் திருடு போவது இது போன்ற காரணங்களையும் கூறுவர்.

ஆனால் வலது உள்ளங்கை அரித்தால் அதனை நல்ல சகுனம் என்று மக்கள் கூறுவர். இதனால் வலது உள்ளங்கை அரிக்கும் பொழுது சந்தோசமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
அதாவது வலது உள்ளங்கை அரித்தால் லட்சுமிதேவி நமது கைத்தேடி வரப்போகிறார். ஏதேனும் ஒரு வகையில் பணமானது நமக்கு கிடைக்கப் போகிறது என்று கூறுவர். இந்த உள்ளங்கை அரிப்பதில் ஆண்களுக்கு ஒரு சகுனம், பெண்களுக்கு ஒரு சகுனம் எனவும் மக்கள் கூறுவர்.

நமது உள்ளங்கை அரிப்பதற்கும் மக்கள் கூறும் நல்லது கெட்டது என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நமது உடம்பில் ஆற்றல்கள் பரவுவதால் மட்டுமே அரிப்பு என்பது ஏற்படும். நமது உடம்பில் இடது பக்கத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது நமக்கு ஒரு விதமான பயத்தையே ஏற்படுத்தும்.
நமது உள்ளங்கை அரித்தால் அதனை சொரிந்து கொண்டே இருப்பதை விட, உப்பு கலந்த நீரில் கைகளை கழுவினால் சிறிது நேரத்தில் அரிப்பு சரியாகிவிடும்.

அதேபோன்று நமது உள்ளங்கை அரிக்கும் பொழுது ஏதேனும் ஒரு மரக்கட்டைகளில் நமது கைகளை தேய்க்கலாம்.அவ்வாறு தேய்க்கும் பொழுது நமது உடம்பில் உள்ள தேவையற்ற ஆற்றல்கள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறிவிடும். நமது பழங்கால சடங்குகளுள் இதுவும் ஒன்று.

சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் நோய்கள் மற்றும் அறிகுறிகள்!! இனி உஷாரா இருங்க!!

0

உலகளவில் மக்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனையாக சிறுநீரக நோய் பாதிப்பு இருக்கிறது.உடல் கழிவுகளை பில்டர் செய்து வெளியேற்றும் உறுப்பான சிறுநீரகம் பழுதடைந்தால் பல்வேறு நோய்
பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

தற்பொழுது பல மில்லியன் மக்கள் இந்த சிறுநீரக பாதிப்பை அனுபவித்து வருகின்றனர்.உயிரை பறிக்கும் டாப்
10 நோய்களில் சிறுநீரக நோய்களும் இருக்கிறது.நமது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் சிறுநீரக நோய் பாதிப்பால் அவதியடைகின்றனர் என்ற ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது.

சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிய தவறுவதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.சிறுநீரக நோய் தீவிரமானப் பின்னரே அதன் அறிகுறிகள் தெரிய வருகிறது.நமது உடலின் மிகவும் முக்கிய உறுப்பாக சிறுநீரகம் திகழ்கிறது.இந்த சிறுநீரகத்தில் கற்கள்,அழுக்குகள்,யூரிக் அமிலம் போன்றவை அதிகரித்தால் பல்வேறு பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும்.

நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை,உணவுமுறை பழக்கம்,மருந்துகள் போன்றவற்றால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கடுமையான பாதிப்பை சந்திக்கிறது.அதேபோல் சிறுநீரை அடக்கி வைத்தல்,தண்ணீர் பருகாமை போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

சிறுநீரக நோய் அறிகுறிகள்:

1)சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம்
2)குமட்டல் பிரச்சனை
3)கணுக்கால் வீக்கம்
4)தூங்குவதில் சிரமம் சந்தித்தல்
5)அளவிற்கு அதிகமாக சிறுநீர் கழித்தல்
6)மிகவும் குறைவான அளவு சிறுநீர் கழித்தல்
7)பசியின்மை பிரச்சனை
8)வாந்தி உணர்வு

சிறுநீரக கல் பிரச்சனை

சிறுநீரகத்தில் கற்கள் படிந்தால் சிறுநீர் கழிக்கும் பொழுது கடுமையான வலி ஏற்படும்.சிறுநீரில் இரத்தம் சேர்ந்து வெளியேறும்.சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிறுநீர் பாதை தொற்று

உங்கள் சிறுநீரக பாதையில் தொற்று இருந்தால் வலியுடன் சிறுநீர் வெளியேறும்.வயிற்று வலி,பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல் மற்றும் வலி உணர்வு,அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேற்றம்

நீங்கள் தண்ணீர் பருகாமல் இருந்தால் வெளியேற்றும் சிறுநீரில் துர்நாற்றம் வீசும்.சிறுநீரை அடக்கி வைத்தால் துர்நாற்றம் வீசும்.

சிறுநீரக கட்டி

சிறுநீர்ப்பையில் கட்டி இருந்தால் வயிற்று வலி,முதுகு வலி,சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சிறுநீரக செயலிழப்பு

நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை சிறுநீரக செயலிழப்பிற்கு வழிவகுக்கும்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் வயிறு உப்பசம்,உடல் சோர்வு,தூக்கமின்மை,வாந்தி உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண வேண்டும்.

BP குறைய மாத்திரை வேண்டாம்.. காலையில் 10 நிமிடங்கள் இதை செய்தால் இரத்த அழுத்தம் தானாக கட்டுப்படும்!!

0

இரத்த அழுத்த பாதிப்பால் உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.நமது உடலில் இரத்த அழுத்தம் நடுநிலையாக இருக்க வேண்டியது முக்கியம்.இதற்கு மாறாக இரத்த அழுத்தத்தின் அளவு அளவு அதிகரித்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

நமது இரத்த நாள சுவரில் ஏற்படும் அழுத்தத்தைதான் உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கின்றோம்.இதை ஹைப்பர் டென்ஷன் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.இரத்த அழுத்தத்தில் சிஸ்டாலிக் மற்றும் டையஸ்டாலிக் என்ற இருவகை இரத்த அழுத்தம் இருக்கிறது.

இதில் சிஸ்டாலிக் 140 mmHg மற்றும் டையஸ்டாலிக் 90 mmHg ஆக இருந்தால் அவை சரியான இரத்த அழுத்தம் என்று அர்த்தம்.இந்த அளவைவிட அதிகரித்தால் அவை உயர் இரத்த அழுத்தம் என்று அழைக்கப்படும்.இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணம் உடல் பருமன்தான்.

இந்த உயர் இரத்த அழுத்த பாதிப்பு உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களாலும் ஏற்படுகிறது.அதேபோல் மன அழுத்தப் பிரச்சனை,தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.

உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்ளுதல்,உப்பு நிறைந்த தின்பண்டங்களை உட்கொள்ளுதல் போன்ற காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மாத்திரை மட்டும்தான் தீர்வு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் மாத்திரை இல்லாமல் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.அதாவது தினமும் உடற்பயிற்சி,யோகா,தியானம் செய்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.புகைப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.மது பழக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்.

மன அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும்.நன்றாக உறங்கினால் மன அழுத்தம் ஏற்படுவது கட்டுப்படும்.உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சில யோகா பயிற்சிகளை செய்து வரலாம்.

காலை நேரத்தில் தரையில் இரண்டு கால்களையும் மடக்கி அமர வேண்டும்.பிறகு இரண்டு கைகளையும் மடியில் ஒன்றன் மீது ஒன்றன் மேல் வைத்து கண்களை மூடி நன்றாக மூச்சு இழுத்துவிட வேண்டும்.இப்படி தினமும் காலையில் 10 நிமிடங்கள் செய்தால் உயர் இரத்த அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.