Home Blog Page 376

உங்கள் குலதெய்வ கோவிலுக்கு இந்த மூன்று பொருட்களை கட்டாயம் வாங்கிக் கொடுங்கள்..!! உங்கள் குல வம்சமே சுபிட்சம் பெறும்..!!

0

ஒவ்வொரு குடும்பத்திற்கும் முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் அந்த குடும்பத்தினுடைய குலதெய்வம் மட்டும்தான். இந்த குல தெய்வத்தின் ஆசி அந்த குடும்பத்திற்கு கிடைத்தால் மட்டுமே அந்த குடும்பம் முன்னேற்றம் அடைய முடியும். மேலும் மற்ற தெய்வங்களின் அருளையும் பெற முடியும். குலதெய்வத்தின் அருள் ஒரு குடும்பத்திற்கு இல்லை என்றால், தீராத கஷ்டங்கள் வந்து சேரும். அது மட்டுமன்றி மற்ற தெய்வங்களின் அனுக்கிரகமும் கிடைக்காது.

குலதெய்வத்தை மறவாமல் அவ்வபோது சென்று வணங்கி வர வேண்டும். நமது குலதெய்வத்திற்காக என ஒரு செயலை செய்தோம் என்றால், அந்த குலதெய்வம் நமக்கு மூன்று மடங்கு பலன்களை அள்ளிக் கொடுக்கும். குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது ஒரு மூன்று பொருட்களை மறவாமல் வாங்கிச் சென்றோம் என்றால், அதற்கான பலன் நமது அடுத்த தலைமுறையினருக்கும் சேர்ந்து கிடைக்கும்.

1. அரிசி:

ஒரு சிலருக்கு கோவில் மிகவும் பெரிய குலதெய்வ கோவிலாக இருக்கும். அந்த கோவில்களில் செய்யக்கூடிய பூஜை, புனஸ்காபங்களுக்கு தேவையான பொருட்களையும், பணத்தையும் கொடுப்பதற்கு ஆட்கள் இருப்பார்கள்.

ஆனால் சிறிய கோவிலாக இருக்கக்கூடிய குல தெய்வங்களுக்கு, அதாவது மக்கள் கூட்டம் குறைவாக செல்லக்கூடிய குலதெய்வ கோவில்களுக்கு சரியாக பூஜை மற்றும் சாமிக்கு தேவையான நெய்வேத்தியம் ஆகியவற்றை செய்யாமல் இருப்பர்.

அவ்வாறு இருக்கக்கூடிய குலதெய்வ கோவிலுக்கு ஒரு மாதத்திற்கு அல்லது நம்மால் முடிந்த அளவிற்கு தேவையான பூஜை பொருட்களை வாங்கி கொள்வதற்காக பணமோ அல்லது அரிசியையோ வாங்கி கொடுத்தால் நமது குடும்பம் சுபிட்சம் பெறும்.
குலதெய்வ கோவில்களில் மாதத்திற்கு ஒரு முறை ஏனும் அதாவது அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்களில் பூஜை என்பது கண்டிப்பாக நடக்க வேண்டும்.

அந்த பூஜைக்கு தேவையான ஏற்பாடுகள் செய்வதற்கு ஆட்கள் குறைவாக இருக்கக்கூடிய சமயத்தில், நாம் பணமோ அல்லது அரிசியோ கொடுத்து உதவினால், நமது குடும்பத்தில் செல்வ வளம் மற்றும் அன்ன குறைவு ஏற்படாமல் இருக்கும். நமது குலதெய்வத்தை எப்பொழுதும் பட்டினியாக விடக்கூடாது.

2. கோவில் கருவறை இருளைப் போக்க தேவையான தீபம்:

நமது குலதெய்வ கோவிலுக்கு என்று ஒரு கருவறை இருக்கும். அந்த கருவறை எப்பொழுதும் ஒளியுடன் தான் இருக்க வேண்டும்.
அந்தக் கருவறைக்கு தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் விளக்கு ஏற்றி ஒளியை உருவாக்க வேண்டும்.
கோவில் கருவறையை ஒளிமயமாக வைத்துக் கொண்டால்தான் நமது வாழ்க்கையும் ஒளிமயமாக இருக்கும்.

எனவே கோவிலுக்கு விளக்கேற்ற தேவைப்படும் எண்ணெய், விளக்குகள் மற்றும் திரிகளை வாங்கிக் கொடுப்பதும் பல சிறப்புகளை நமக்குத் தேடித் தரும்.

3. குலதெய்வ கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள்:

குலதெய்வ கோவிலுக்கு நாம் செல்லும் பொழுது நமது தெய்வத்திற்கு பூஜை செய்ய தேவையான மஞ்சள், குங்குமம், சந்தனம், தீபம் இது போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வதும் பலவிதமான பலன்களை நமக்குத் தரும்.

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் வழிபாடு செய்வதற்கு என தனியாக பூஜை பொருட்களை வாங்கிக் கொண்டு செல்வோம். ஆனால் நாம் அடிக்கடி கோவிலுக்கு செல்ல மாட்டோம். அவ்வாறு இருக்கையில் ஒரு மாதத்திற்கோ அல்லது இரண்டு மாதத்திற்கோ நம்மால் முடிந்த அளவிற்கு தேவையான பூஜை பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுத்து விட்டு வரலாம்.

இவ்வாறு நமது குலதெய்வத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நம்மால் முடிந்த அளவிற்கு வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதன் மூலம், நமது குடும்பம் மற்றும் நமது வம்சாவழி அனைத்தும் சுபிட்சமாகவும், செல்வ வளத்துடனும், மகிழ்ச்சியுடனும், அன்ன குறைவு ஏற்படாமலும் இருப்பார்கள்.

நமது குல தெய்வத்திற்கு என நாம் செய்யும் பொழுது, நமது குலதெய்வம் நமக்காக நமது இல்லத்திற்கு வந்து, நமக்கு தேவையானவற்றை கொடுக்கும்.

வீடு துடைக்கும் பொழுது தப்பி தவறியும் இந்த தவறை செய்து விடாதீர்கள்..!! துரதிஷ்டம் துரத்தி வருமாம்..!!

0

பொதுவாக வீடு துடைக்கும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க வைக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது. ஆனால் வீடு சுத்தம் செய்வது என்பது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாகும். நாம் வீட்டை தினமும் சுத்தம் செய்வதால் அழுக்குகள் அகற்றப்படுவதுடன், நோய்கள் நம்மை தாக்காமலும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அதேபோன்று ஜோதிட சாஸ்திரத்தில் வீடு என்பது லட்சுமி தேவி தங்கும் இடம் என்பதால், சுத்தமாக இருந்தால் தான் கடவுளின் ஆசீர்வாதம் மற்றும் பணவரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது நாம் செய்யும் சில தவறுகள் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணத்தை இழக்க நேரிடும் மற்றும் துரதிஷ்டம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகிறது.

செய்யக்கூடாத தவறுகள் என்ன?:

1. நமது வீட்டில் இருந்து யாரேனும் ஒருவர் வெளியில் சென்றால் அவர் சென்ற உடனேயே வீட்டை துடைக்க கூடாது. சிறிது நேரம் கழித்து தான் துடைக்க வேண்டும். ஏனென்றால் வெளியில் ஒருவர் சென்றவுடன் வீட்டினை துடைக்கும் பொழுது, அந்தக் குறித்த நபருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுவதுடன் வேலை மற்றும் தொழிலில் நஷ்டம் ஏற்படும்.

2. வீட்டை சுத்தம் செய்த பின்னர் அந்த அழுக்கு தண்ணீரை வீட்டின் முன்பாக ஊற்றக்கூடாது. ஏனென்றால் அது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் லட்சுமி தேவியின் கோபம் உங்கள் மீது வந்துவிடும்.

3. வீட்டை துடைப்பதற்கு உடைந்த வாளியை பயன்படுத்தக் கூடாது. அதேபோன்று சிவப்பு நிற வாளியையும் பயன்படுத்தக் கூடாது.

கட்டாயம் செய்ய வேண்டியவை:

1. வீடு துடைக்கும் பொழுது அந்தத் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை போட வேண்டும். ஏனெனில் வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்குவதுடன், தரையும் பளபளப்பாக இருக்கும்.

2. ஆனால் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தண்ணீரில் கல் உப்பை சேர்க்கக்கூடாது. ஏனெனில் இது எதிர்மறை விளைவை ஏற்படுத்துமாம்.

3. வீட்டை துடைக்கும் பொழுது வடக்கு திசையில் இருந்து ஆரம்பித்து, வீட்டை முழுவதுமாக துடைக்க வேண்டுமாம்.

4. மதிய நேரத்தில் வீட்டின் தரையை துடைக்க கூடாது. வீட்டினை துடைக்க வேண்டும் என்றால் காலை நேரத்திலேயே துடைத்து விட வேண்டும்.

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

0

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்:

1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும்.

2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும்.

3. சந்தன பிள்ளையார்- புத்திர பேரு கிடைக்கும்.

4. வெண்ணை பிள்ளையார்-கடன் தொல்லை நீங்கும்.

5. வாழைப்பழ பிள்ளையார்- வம்ச விருத்தி உண்டாகும்.

செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாதவை:

1. கருப்பு நிற ஆடைகளை செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாது. இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்தும்.

2. செவ்வாய்க்கிழமையில் இரும்பு பொருட்களை வாங்கினால் அசுபமாகவும், நிதி நெருக்கடிகளையும் ஏற்படுத்தும்.

3. கண்ணாடி பொருட்களை வாங்கினால் பண இழப்பும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் ஏற்படும்.

4. செவ்வாய்க் கிழமையில் இறைச்சியை வீட்டில் சமைப்பதையோ, உண்பதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஒருவருக்கு குலதெய்வத்தின் சாபம் இருந்தால் என்ன நடக்கும்?:

1. சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்களால் அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது. இவர்களது கையில் பணம் தாங்காது. குடும்பத்தில் சந்தோஷம், நிம்மதி என்பதும் அவ்வளவாக இருக்காது.

2. அதேபோன்று குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதனால் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. அவர்களது பிரச்சனையை தீர்க்க எந்த பரிகாரம் செய்தாலும் அது பலிக்காது. குலதெய்வ வழிபாட்டை மறவாமல் இவர்கள் செய்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளும் இவர்களுக்கு கிடைக்கும்.

ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஏன் சக்தி வாய்ந்தது?:

1. ஒரு பாலடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் செய்தால், மீண்டும் அங்கு அந்த தெய்வம் வந்து உயிர்ப்பெறும்.

2. 48 நாட்கள் தொடர்ந்து நமது ஊரில் உள்ள பழமையான சிவன் ஆலயத்திற்கு சென்று இருந்தால் நமது வாழ்க்கையில் ஒரு பிரமிப்பூட்டம் அதிசயம் ஏற்படும்.

3. தொடர்ந்து 48 நாட்கள் தினமும் குலதெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால், நமது குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்கு கிடைக்கும்.

அனைத்து விதமான நோய்களும் வறுமையும் நீங்க:

1. எம்பெருமான் சிவன் கோவிலில் உள்ள வன்னி மரம் அல்லது வில்வம் மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளை கூற, நல்ல பலன் கிடைக்கும் தீர்ப்புகள் சாதகமாகும்.

2. இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் காட்சி தரும் சிவனை வழிபடுபவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டக்கூடிய தீப ஆராதனையை நாம் பார்க்கும் பொழுது, எல்லா விதமான நோய்களும், வறுமையும் நீங்கும்.

பௌர்ணமியில் குங்கும அர்ச்சனை:

1. மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, உங்களுடைய கைகளால் குங்குமம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

2. அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட அந்த குங்குமத்தை வாங்கி வந்து நமது வீட்டில் வைத்து தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

அரசன் போன்ற வாழ்வை அமைத்துத் தரும் அரச மர வழிபாடு..!! எந்த கிழமைகளில் சுற்றினால் என்ன பலன் கிடைக்கும்..??

0

பொதுவாக அரச மர வழிபாடு என்பது மிகவும் உயர்ந்த ஒரு வழிபாடு ஆகும். குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த அரச மரத்தினை நாம் வழிபட்டு வந்தால் பல நன்மைகள் நமது வாழ்க்கையில் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும், இந்த அரச மரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் நிச்சயம் பல மாற்றங்களை காண முடியும்.

குழந்தைகளுக்கு நல்ல புத்தி கூர்மை, பெண்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், ஆண்களுக்கு நல்ல மன ஆரோக்கியம் இவை அனைத்தும் இந்த அரச மர வழிபாட்டின் மூலம் நமக்கு கிடைக்கும். இவ்வாறு ஆன்மீகம் ரீதியாக மட்டுமல்லாமல், மருத்துவம் ரீதியாகவும் நிறைய ஆக்சிஜனை வெளியிடக்கூடிய மரமாகவும் இந்த அரச மரம் திகழ்கிறது.

இந்த அரச மரத்திற்கு ராஜ விருட்சம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்த மரத்தில் முப்பெரும் தேவர்களும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதாவது இந்த அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், மேல் பகுதியில் பரமேஸ்வரனும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்த அரச மரத்தில் முப்பெரும் தேவர்களும் இருப்பதால், முப்பெரும் தேவிகளும் இந்த அரச மரத்தில் குடிகொண்டு இருக்கிறார்கள். எனவே அனைத்து வித தெய்வங்களின் ரூபமாகவும் இந்த அரசமரம் திகழ்கிறது. இந்த அரச மரத்தின் அடியில் தான் விநாயகர் அமர்ந்திருக்கிறார் என்பதால், இந்த அரச மரத்திற்கு கூடுதல் சிறப்பும் உண்டு.

பல வேள்விகளை செய்வதற்கும் இந்த அரச மர குச்சிகள் தான் பயன்படுகிறது. எனவே அனைத்து விதமான நலன்களையும் தரக்கூடிய ஆற்றல் மற்றும் பல அற்புதங்கள் நிறைந்த அதிசய மரம் என்றால் இந்த அரச மரம் தான்.

இந்த மரத்தை சுற்றி வந்து நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த மரத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நமது உடல் இயக்கத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை கோளாறுகளையும் இது சரி செய்யும்.

ஆண்களுக்கு தேவையான நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் இந்த மரம் கொடுக்கிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த அரச மரத்தை எந்தெந்த கிழமைகளில் வழிபட்டால், என்னென்ன பலன் கிடைக்கும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள்- சகல சௌபாக்கியம்
செவ்வாய்-காரிய சித்தி/ பதவி உயர்வு
புதன் -வியாபாரம்/ லாபம் பெருகும்
வியாழன்-கல்வி/ ஞானம்/ அறிவு.
வெள்ளி-கடன் நீங்கும்
சனி -நோய்கள் நீங்கும்
ஞாயிறு-குடும்ப பிரச்சினை தீரும்

அதேபோன்று திங்கள்கிழமை இந்த அரச மரத்தை வழிபடும் பொழுது சிவபெருமானின் அருளும், செவ்வாய்க்கிழமை வழிபடும் பொழுது துர்கா தேவியின் அருளும், புதன்கிழமை வழிபடும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும், வியாழன் கிழமை வழிபடும் பொழுது தட்சணா மூர்த்தியின் அருளும், வெள்ளிக் கிழமை வழிபடும் பொழுது மகாலட்சுமியின் அருளும், சனிக்கிழமை வழிபடும் பொழுது நவகிரகத்தின் அருளும் மகாலட்சுமியின் அருளும், ஞாயிற்றுக்கிழமை வழிபடும் பொழுது சூரிய பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

இதேபோன்று அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் இந்த அரச மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்யலாம். அமாவாசை நாட்களில் இந்த அரச மரத்தை வழிபடும் பொழுது நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன்களும் தீரும், திருமண தடைகள் போன்ற எந்த வித தடைகளாக இருந்தாலும் நீங்கும்.

இந்த அரச மரத்தை குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் சுற்றி வழிபாடு செய்யலாம். 11 முறை, 15 முறை, 54 முறை 108 முறை இது போன்று நம்மால் எத்தனை முறைகள் சுற்ற முடியுமோ, அத்தனை முறை சுற்றி வழிபட்டுக் கொள்ளலாம்.

இந்த அரச மரத்தை காலை நேரங்களில் சுற்றி வழிபடுவது என்பது சிறப்பானதாக அமையும். ஆனால் மதியம் 12 மணிக்கு பிறகு அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்யக்கூடாது. வேண்டும் என்றால் அரச மரத்திற்கு முன்பாக நின்று வணங்கிக் கொள்ளலாம், ஆனால் சுற்றி வழிபாடு செய்யக்கூடாது. எனவே காலை நேரத்தில் மட்டுமே அரச மரத்தை சுற்றி வழிபாடு செய்வது சிறப்பானதாக அமையும்.

இந்த அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றி நாம் தினமும் வழிபட்டு வந்தோம் என்றால், நமது வாழ்க்கையில் பல வெற்றிகளையும், ராஜ யோக மரியாதை என்பதையும் நாம் கண்டிப்பாக பெற முடியும்.

மாணவர்களே நாளை விடுமுறை கிடையாது..!! அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

0

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதற்காக மாணவர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர். அந்த வகையில், நாளை (மார்ச் 22) சனிக்கிழமை என்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் நாளை (மார்ச் 22) வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை பாட அட்டவணை அடிப்படையில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இது பொருந்தும். இதனால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Mounjaro | ‘இனி உடல் எடையை குறைக்க கஷ்டப்பட வேண்டாம்’..!! இந்தியாவில் புதிய மருந்து அறிமுகம்..!! விலையும் இவ்வளவுதானா..?

0

Mounjaro | தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோயால் இந்தியர்கள் அதிகமாக பாதித்து வருகின்றன. இப்போதெல்லாம் சிறிய வயதினருக்கே சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் தான், இவ்விரு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில், உலகப்புகழ் பெற்ற மருந்து இந்திய சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது.

இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மவுஞ்சாரோ என்ற மருந்து தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்தை Eli Lilly என்ற நிறுவனம் தான் களமிறக்கியுள்ளது. இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. மேலும், முறையான மருத்துவ ஆலோசனைக்கு பிறகே எடைக்குறைப்புக்கான மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டுமென Eli Lilly நிறுவனம்  எச்சரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மவுஞ்சாரோ மருந்தை உடல் பருமன் உள்ளவர்களும், 2ஆம் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் ஊசி வடிவில் உடலுக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து உணவுக்கான ஆர்வத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும். மேலும், உடலில் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்த மருந்தின் விலையை அந்நிறுவனம் வெளியிடவில்லை என்றாலும், மவுஞ்சாரோவின் 5 மி.கி குப்பியின் விலை 4,375 ரூபாய் என்றூம் 2.5 மி.கி குப்பியின் விலை 3,500 ரூபாய் என்றும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.ஆனால், இதன் விலை குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. இந்த மருந்து இந்தியாவில் ஏற்கனவே கள்ளச்சந்தைகளில் அதிக விலைக்கு விற்அனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், தற்போது Eli Lilly நிறுவனம் நேரடியாகவே களமிறங்கியுள்ளது.

’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

0

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் வேலையை திமுக தொடர்ந்து செய்து வருகிறது. ஊழலை மறைக்கவே மொழி பிரச்சனையை எழுப்புகின்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்க உங்களுக்குத் தைரியம் இல்லை. இதை உங்களால் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும். அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்.

ஆயிரக்கணக்கான கிமீ தொலைவில் உள்ள மொழிகளை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால், இந்தியாவின் மொழி உங்களுக்கு பிடிக்காது. வேறு எந்த இந்திய மொழியுடனும் இந்திக்குப் போட்டி இல்லை. இந்தி மொழி அனைத்து  மொழிகளுக்கும் நண்பன். அந்நிய மொழியை கற்க முக்கியத்துவத்துவம் அளிக்கும் தமிழக அரசு, இந்திய மொழியை கற்ற முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது” என்றார்.

 

பல்லடம் கொலையில் எகிறிய அரசியல் பிரஷர்: முக்கிய முடிவு எடுத்துள்ள காவல்துறை!

0

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி 74 வயது அலமாத்தாள், மகன் 44 வயது செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கடந்த நவம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கொலையில், மூவரது தலைகள் அடித்து நொறுக்கப்பட்டு, அலமாத்தாளின் நகை மற்றும் செந்தில்குமாரின் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பல்லடம் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், கொலை நடந்த இடம் ஒதுக்குப் புறமாக இருந்ததால் சிசிடிவி காணாமல் போனது, மேலும் எந்தவித தடயமும் கிடைக்காததால் போலீஸாரின் விசாரணை சிக்கலாகும் நிலை உருவானது. இதையடுத்து, 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் எந்த முக்கிய தடயமும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில், கொலை செய்தது என ஒப்புக்கொள்ளும்படி போலீஸார் பலரை மிரட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தெய்வசிகாமணியின் தோட்டத்தில் வேலை செய்த பால்ராஜ் உடல் முழுவதும் அடியுடன் ஆட்சியரிடம் புகார் அளித்ததால் இது அதிக கவனம் பெற்றது. மேலும், சில பட்டியல் சமூகத்தினரை போலீஸார் துன்புறுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனால், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் போராட்டத்தில் இறங்க, எதிர்க்கட்சிகள் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய கோரிக்கையை முன்வைத்தன.

கொலைக்காரர்கள் யார் என்ற சரியான தடயம் இல்லாததால், ஈரோடு மாவட்டத்தில் 2020 முதல் 2023 வரை நடந்த இதே மாதிரியான கொலை வழக்குகளுடன் இந்த வழக்கை ஒப்பிட்டு விசாரணை செய்யப்பட்டது. ஆனால், அதிலும் முன்னேற்றம் இல்லை. இந்த வழக்கு மீது அரசியல் அழுத்தம் அதிகரிக்க, காவல்துறை இதை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியது.

விசாரணை முடங்கிய நிலையில், தெய்வசிகாமணியின் மருமகள் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க திட்டமிட்டதாக தகவல் கிடைத்தது. இதனை அறிந்த காவல்துறை, உடனடியாக ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டு, “8 சிறப்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்” என்று அறிவித்தது.

ஆனால், சமூக ஆர்வலர்கள், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, காவல்துறை சரியான கோணத்தில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், சிபிசிஐடி விசாரணை தொடங்கிய பிறகே இந்த வழக்கின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசை இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா!! மூக்கை உடைத்துக் கொண்ட தமன்னா!!

0

திரையுலகில் முதன் முதலில் ஹிந்தி மொழியில் காலடி வைத்து வைத்தவர் நடிகை தமன்னா. அதன் பின்பு தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற பலமொழி படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக தற்பொழுது வரை தன்னுடைய மார்க்கெட்டை மெயின்டைன் செய்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை தமன்னா தமிழில் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சமீபகாலமாகவே இவர் கிளப் பாடல்களுக்கு ஃபேமஸ் ஆக மாறி வருகிறார். இப்படி இருக்கக்கூடிய சூழலில் நடிகை தமன்னா அவர்கள் பிரபல நடிகையான ஸ்ரீதேவி அவர்களின் பயோபிக்கள் நடிப்பது தனக்கு மிகப்பெரிய கனவு என தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நடிகை ஸ்ரீதேவியின் கணவரிடம் கேட்ட பொழுது ஸ்ரீதேவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்திருக்கிறார். எனினும் அவர்களுக்கு விருப்பம் வரும் பட்சத்தில் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக உள்ளது என நடிகை தமன்னாவை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

சினிமா வாழ்க்கையில் தமன்னா அவர்களுக்கு பெரிய வெற்றியும் இல்லாமல் பெரிய தோல்வியும் இல்லாமல் நடுநிலையாக சென்று கொண்டு இருக்க கூடிய சூழலில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் காதலித்து வந்த விஜய் வர்மா என்கின்றவர் தமன்னா அவர்களை விட்டு சென்று விட்டதாகவும் இப்பொழுது இருவரும் காதலில் இருந்து பிரிந்து தனித்தனியே அவரவருடைய தனிப்பட்ட வாழ்க்கைகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாணவர்கள் மீது பாயும் கிரிமினல் வழக்கு..இனி ஆசிரியர்கள் தான் கையில் கம்பு எடுக்க வேண்டும்!! ஹை கோர்ட் நீதிபதி பரிந்துரை!!

0

முன்பெல்லாம் மாணவர்களிடையே ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்காகவே ஆசிரியர்கள் தங்களின் கைகளில் கம்புகளை வைத்திருந்தனர். ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டமானது மாணவர்களை அடிக்க கூடாது என்றும் மீறி அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிக்காமல் சொல்லி சொல்லி விடுவதால் மாணவர்களுக்கு அதுவே மிகப்பெரிய சாதகமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பொழுது இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர் கடுமையாகத் திட்டி விட்டாலே அவருடைய கை கால்களை உடைப்பது ஒரு சிலரோ அவர்களை கொலை செய்வதற்கு கூட தயங்காமல் முன் நிற்கின்றனர்.

ஆசிரியர்கள் கம் எடுக்க வேண்டும் என்று ஹை கோர்ட் நீதிபதிகள் பரிந்துரை செய்திருப்பதாவது :-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஆறாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனை ஆசிரியர் அடித்துவிட்டார் என்று போலீஸில் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர். இந்த புகார் ஆனது கேரளா ஹைகோர்ட்டுக்கு வழக்காக சென்ற பொழுது இந்த வழக்கினை நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் விசாரித்திருக்கிறார். அப்பொழுது, ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்கியதோடு ஆசிரியர்கள் கைகளில் கம்பெடுக்கவில்லை என்றால் மாணவர்கள் கிரிமினலாக மாற வேண்டி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

மேலும் இப்பொழுது இருக்கக்கூடிய ஆசிரியர்களின் நிலையானது மாணவர்கள் ஒழுக்கத்தோடு இல்லை என்றாலோ சரியாக படிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் அஞ்ச வேண்டியிருக்கிறது. காரணம் தங்கள் மீது கிரிமினல் கேஸ் போடப்பட்டு விடும் என்பதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தால் அங்கு மாணவர்களின் உடைய ஒழுக்கமானது சீர்குலைந்து போய்விடும் என்பதை நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

கேரளா ஹை கோர்ட் தரப்பில் கேரளா பள்ளிக்கல்வித்துறைக்கு இது குறித்த அறிவுரைகளை நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.