சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 4

திமுக வுக்கு போன மெசேஜ்.. இதெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது!! அறவே எதிர்க்கும் விசிக!!

0

VSK: தமிழக அரசானது சென்னை மாநகராட்சி மண்டலமான 5 மற்றும் 6 ஆகியவற்றை காண்ட்ராக்ட் படி தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அந்த மண்டலத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு நிரந்தர பணி நியமனம் ஆணை உள்ளிட்டவையும் தரும் படி கேட்டுக்கொண்டது.

இது ரீதியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையில் தொடர் 13 நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் எட்டு முறைக்கும் மேல் பேசி பார்த்தும் ஒத்துவரவில்லை. இதனால் தமிழக அரசின் ஊந்துதலால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. வழக்கின் உத்தரவின் பேரில், போராட்டக்காரர்களை அகற்றும் படி கூறியிருந்தனர்.

இதனால் நேற்று ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அங்கு போராடி வந்தவர்களை குண்டு கட்டாக தூக்கி அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இது ரீதியாக தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ரிப்பன் மாளிகையில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை கைது செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது.

அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று என எங்களது எழுச்சி தலைவரே கூறியுள்ளார். அவர்களோடு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக போலீசாரிடம் கேள்வி கேட்ட அனைவருக்கும் தங்களது கடுமையான தாக்குதலின் மூலம் பதிலளித்துள்ளனர். ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிமன்றம் இவர்களை அகற்றும்படி கூறிய உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது தான். அதுமட்டுமின்றி உடனடியாக இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாக கேட்டுக் கொண்டார்.

நியூயார்க்கில் 43-வது சுதந்திர தின விழாவின் அணி வகுப்பு!! பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு!!

0

*43வது இந்திய தின அணிவகுப்பு நியூயார்க்: பாலிவுட் நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா & ராஷ்மிகா மந்தனா இணை-கிராண்ட் மார்ஷல்களாக அறிவிக்கப்பட்டனர்*

*நியூயார்க், ஆகஸ்ட் 11, 2025 -* பாலிவுட் நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா 43வது ஆண்டு இந்திய தின அணிவகுப்பில் இணை-கிராண்ட் மார்ஷல்களாக பங்கேற்பார்கள். ”ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேடிசன் அவென்யூவில் ‘சர்வே பவந்து சுகினா’ என்ற தலைப்பில் அணிவகுப்பு கொண்டாட்டங்கள் நடைபெறும் – இது உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் ஒரு குணப்படுத்தும் அழைப்பைக் குறிக்கிறது,” என்று FIA தலைவர் சௌரின் பாரிக் கூறினார்.

இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA-NY-NJ-CT-NE) சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 43வது ஆண்டு இந்திய தின அணிவகுப்புக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. நிகழ்வில் பேசிய நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் பினயா எஸ். பிரதான், FIA இன் தாக்கத்தைப் பாராட்டி, “அரை நூற்றாண்டு காலமாக, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு அமெரிக்காவில் இந்தியாவின் பிம்பத்திற்கு ஒரு பலத்தை பெருக்கி வருகிறது” என்று கூறினார். 1981 ஆம் ஆண்டு ஒரு மிதவை அணிவகுப்பாக நடைபெற்ற இந்த அணிவகுப்பு, ஊடகங்கள் இப்போது உலகின் மிகப்பெரிய இந்திய தின கொண்டாட்டமாகக் கொண்டாடும் ஒரு முதன்மையான இலாப நோக்கற்ற அமைப்பாக உருவாகியுள்ளது.”

1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA), நியூயார்க் நகரில் நடைபெறும் இந்திய தின அணிவகுப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் மூலம் இந்திய கலாச்சாரம், குடிமை ஈடுபாடு மற்றும் வலுவான இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள ஒரு முதன்மையான இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த மதிப்புமிக்க மற்றும் தேசபக்தி நிகழ்வைக் கொண்டாட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க மக்களை வலியுறுத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஒரு சிறப்புச் செய்தியை வழங்கினர். முழு சுதந்திர ஆண்டு விழாவிற்கும் தலைப்பு ஸ்பான்சராக செயல்படும் கிரிக்மேக்ஸ் கனெக்ட், அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்காவில் கால்பந்து போலவே கிரிக்கெட்டையும் பிரதான நீரோட்டமாக மாற்றுவதற்கான ஒரு லட்சியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அணிவகுப்புக்கு முந்தைய வார இறுதி நிகழ்வு தொடங்கும், மேலும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மூவர்ண ஒளிரும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை, இந்தியக் கொடி ஏற்றும் விழா நடைபெறும் டைம்ஸ் சதுக்கத்தைத் தொடர்ந்து முதல் கிரிக்கெட் போட்டி. ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12 மணிக்கு மேடிசன் அவென்யூவில் இந்திய தின அணிவகுப்பு தொடங்கும். இஸ்கான் NYC-யின் சாதனை ரத யாத்திரை, இந்திய தின அணிவகுப்பின் போது மன்ஹாட்டன் மீது உயரும். அணிவகுப்புக்குப் பிந்தைய சுதந்திர கிராண்ட் காலா சிப்ரியானி வால் ஸ்ட்ரீட்டில் நடைபெறும்.

  • FIA தலைவர் அங்கூர் வைத்யா, நிகழ்வின் சமூகம் சார்ந்த தன்மையை வலியுறுத்தினார், “அனைத்து அணிவகுப்பு தளவாடங்களும் தன்னார்வலர்களால் இயக்கப்படுகின்றன, மேலும் அணிவகுப்புக்குப் பிறகு வெளிப்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க புதிய ஒத்துழைப்புகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார். சௌரின் பாரிக் மேலும் கூறுகையில், “இந்த அணிவகுப்பு பணம் செலுத்தி விளையாடுவது அல்ல; இது பங்கேற்பதற்கு பெருமை, உள்ளடக்கத்தை நோக்கிய ஒரு புரட்சிகரமான நடவடிக்கை” என்றார்.

‘கூலி’திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இத்திரைப்படம் வசூல் சாதனை படைக்குமா….?

0

சென்னை:நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ‘கூலி’மக்களியிடையே திரைக்கு வருவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்று அதீத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு 171 ஆவது திரைப்படமான இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,சுருதிஹாசன்,ஆமிர்கான்,சௌபின் ஷாயிர்,உபேந்த்ரா,நாகார்ஜூனா என இவ்வாறு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் சிறப்பு காட்சியாக நாளை 9 மணி முதல் தொடங்கி இரவு 2 மணி வரை சுமார் ஐந்து காட்சிகள் திரையிட தமிக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்காக முன்கூட்டியே இணையத்தில் டிக்கெட்கள் பதிவு செய்துவருகின்றன.பெரும்பாலான திரையரங்களில் டிக்கெட்கள் காலியாகிவிட்டன.இதுமட்டுமன்றி இத்திரைப்படத்தின் டிக்கெட்கள் 70 கோடி வரை திரைக்கு வருவதற்கு முன்னரே விற்பனையாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை சமூகவலைத்தளத்தில் பார்த்த பிறகு இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் (LCU)வில்  இருக்குமா,இல்லையென்றால் தனிப்படமா என்ற கேள்வி மக்களியிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

‘கூலி’LCUவில் இருக்குமா,இல்லையா இதுவே இத்திரைப்படத்திற்கு மேலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இதுமட்டுமன்றி இத்திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இத்திரைப்படம் 1000-1200 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகின்றன.LCUவில் இருக்குமா மற்றும் வசூல் சாதனை படைக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

 

ஒரே ஒரு சூரியன்.. அதை மாற்ற முடியாது!! அதிமுக கூட்டணிக்கு வெடிகுண்டு போடும் பிரேமேலாத!!

0

ADMK DMDK: அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணியில் சில மனக்கசப்புகள் இருக்கும் வேளையில் சட்டமன்றத் தேர்தலில் நீடிக்குமா என்ற கேள்வி உள்ளது. மிகவும் எதிர்பார்த்து எம்பி பதவி தனது மகனுக்கு கிடைக்காத விரத்தியால் மாற்றுக் கட்சியை நாடலாம் என்ற எண்ணத்தில் பிரேமலதா உள்ளார். இதனை அறிந்து சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அடுத்த ஆண்டு கட்டாயம் எம் பி சீட் தருவதாக அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது.

ஆனால் அது ஏற்கும் மனப்பான்மையில் தேமுதிக கிடையாது. இதனிடையே ஸ்டாலினை சந்திப்பதும், திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து பேசும் வகையிலும் சில மேடைகள் பிரேமலதாவிற்கு அமைந்தது. இதனையெல்லாம் வைத்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே தவிர வேறு எதுவும் கிடையாது என்று தெரிவித்தார். அதேபோல மற்றொரு பக்கம் விஜய பிரபாகரனும் நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா என்று நக்களாக கூறினார்.

அதேபோல எங்களது கூட்டணி கட்சி யார் என்பது குறித்து மாநாட்டில் தான் கூறுவோம் என்றும் தெரிவித்தார். இது எல்லாம் வைத்து பார்க்கையில் கட்டாயம் இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்பது தெரிந்தது. ஆனால் சமீபத்தில் தேமுதிக பொருளாளர் எல்கே சுதீஷ் பதிவிட்ட போட்டோவால் மீண்டும் அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து சர்ச்சை பேச்சு எழுந்துள்ளது. அந்த போட்டோவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் பிரேமலதா இருப்பது போல் பதிவிட்டுள்ளனர். இதை வைத்து அனைவரும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எப்படி ஒரு சூரியன் ஒரு நிலவு ஒரு பூமி இருக்கிறதோ அதே போல் தான் ஒரே ஒரு ஜெயலலிதா. அவர்தான் என் ரோல் மாடல் என்று கூறினார். அதேபோல விஜயகாந்த் புகைப்படத்தையும் மற்றவர்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?? அதற்கு மட்டும் ஏன் தடை செய்தீர்கள் என மேலும் கேள்வியை எழுப்பியுள்ளனர். விஜயகாந்தை குருவாக ஏற்றுக்கொள்ளாமல் அவர்களின் புகைப்படத்தை வேறு விதத்திற்கு பயன்படுத்தி வருவதை தடுக்கும் விதமாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என கூறியுள்ளனர்.

தமிழக வெற்றி கழகம் இக்கட்சியுடன்தான் கூட்டணியா …!இதனை பற்றி விஜய் அவர்கள் இரண்டாம் மாநாட்டில் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு ….

0

மதுரை:இரண்டாம் மாநாட்டின் தேதி மற்றும் இடத்தை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக மதுரை காவல் கண்காணிப்பாளர்களால் தேதியை மாற்றுமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு அறிவித்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு தவெகவின் தலைவர் விஜய் அவர்கள் ஆகஸ்ட் 21யில் இரண்டாம் மாநாடு நடைபெறும் என உறுதியாக அறிவித்திருந்தார்.இம்மாநாடு சுமார் 500 ஏக்கர் அளவில் மக்கள் அமர்வதற்கும்,வாகனங்களை நிறுத்துவற்கும் மேலும் விஜய் அவர்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கும் பிரம்மாண்டமாக ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இதுமட்டுமன்றி இம்மாநாட்டில் விஜய் அவர்கள் மட்டுமே பேசுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் இம்மாநாட்டிற்கு பல்வேறான நிபந்தனைகள் மதுரை காவல் கண்காணிப்பாளர்களால் விதிக்கப்பட்டுள்ளன.”மாநாட்டிற்கு வரும் போதும் செல்லும் போதும் ஊர்வலமாக செல்ல கூடாது ,சாதி மத இது போன்று மோதலை ஏற்படுத்தும் வகையில் பேச கூடாது,சரியான நேரத்திற்கு வர வேண்டும்,யாரு தலைமையில் வருகின்றனர் என்பதை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். இது போன்று 26 நிபந்தனைகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த இரண்டாம் மாநாட்டில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதுமட்டுமன்றி கூட்டணி பற்றி அறிவிப்பை வெளியிடுவார் என தவெகவினரால் பேசி வருகின்றன.இந்நிலையில் முதல் மாநாட்டில் அறிவித்தப்படி திமுக எதிரி என்பதால்  தவெக இக்கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை,இதுமட்டுமன்றி அதிமுக கூட்டணிக்காக தவெகவினரை ஒரு சில முறை கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்திருந்தனர் இக்கட்சி பாஜகயுடன் இணைந்து இருப்பதால் இக்கட்சியுடனும் தவெகவினர் கூட்டணி அமைப்பதற்கு குறைவான வாய்ப்புகளே உள்ளது.தவெக-விசிக கூட்டணி அமையும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டன ஆனால் திருமாவளவன் இதை பற்றி பேசவே இல்லை எனவே இக்கட்சியுடன் கூட்டணி என்பது வாய்ப்புகள் குறைவுதான்.

2026 ஆம் ஆண்டில் 234 தொகுதிகளிலும் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது தனித்தே போட்டியிடும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் இதுமட்டுமன்றி பல்வேறு புதிய வேட்பாளர்களை அறிவிப்பார் எனவும் பேசப்பட்டு வருகின்றன.

திமுக வில் முக்கிய இடத்தை பெற்ற அதிமுக புள்ளி!! உடனடியாக எடப்பாடி காட்டிய அதிரடி!!

0

ADMK DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 8 மாதங்களில் தொடர உள்ள நிலையில் நிர்வாகிகள் கட்சித் தாவும் நிலையானது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடப்பாடி காலம் வரை பார்த்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பியும் மூத்த நிர்வாகியுமான மைத்ரேயன் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

முதன் முதலில் இவர் அரசியலுக்குள் நுழைந்த போது பாஜகவில் காலடி எடுத்து வைத்தார். அங்கு இவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது தான் அதிமுகவில் சேர்ந்தார். நாளடைவில் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக பிரிந்தது, அச்சமயம் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் துணை நின்றார். இப்படியே சிறிது காலம் சென்ற நிலையில் மீண்டும் தொடங்கிய இடமான பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ஆனால் அதுவும் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது. அதனையடுத்து எடப்பாடிக்கு பதவி அதிகாரம் ஆகவே மீண்டும் அதிமுகவில் இணைந்து இவருக்கு எம்பி பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது இவர் அதிமுகவை விட்டு, தன்னை திமுகவில்  இணைத்துக் கொண்டார். இது ரீதியாக எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவியி என கட்சியிலிருந்து நீக்கம் செய்துள்ளார். மேற்கொண்டு திமுகவில் இணைந்ததற்கான காரணமாக அவர் கூறுவதாவதாவது, 2026 ஆம் ஆண்டு நடக்கப்போகும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் அதுதான் விதி அது ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது.

இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கொடியேற்றும் ஸ்டாலின், அடுத்த ஆண்டும் அவரே தான் ஏற்றுவார். கல்வி என தொடங்கி தொழில் வரை அனைத்திலும் முன்னணியில் தமிழகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. அந்த வகையில் என்னையும் திமுகவின் சிப்பாய்களில் ஒருவராக இணைக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.

நான் உயிரோடு இருக்கும் வரை கூட்டணி என்பது கிடையாது தனித்து மட்டுமே என் மக்களுக்காக தேர்தலில் போட்டியிடுவேன் -சீமான்

0

சென்னை:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது’அதிமுக கூட்டணியுடன் இருக்கின்றன மேலும் சுற்று பயணம் மேற்கொண்டும் கூட்டணி இணைக்கவும் முயற்சிக்கின்றன, திமுகவும்  கூட்டணியில் இருக்கின்றார்கள் நீங்கள் தவெகயுடன் கூட்டணி இணையபோவதாக  பலரும் கூறுகின்றன தவெகயுடன் இணைவீர்களா இல்லை மற்ற கட்சியுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டன.

இந்த கேள்விக்கு பதில் கூறும்வகையில் அவர் கூறியதாவது,நடிகர் விஜய் அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார் இதனால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுகள் குறைய வாய்ப்புகள் உள்ளன என பலரும் தவறான தகவல் பரப்பி வருகின்றன இதற்கு பயந்து நான் கூட்டணிக்கு ஓட மாட்டேன் நான் என் மக்களுக்கானவன் எனது தோல்வியும் வெற்றியும் மக்களுக்கானது என கூறியுள்ளார்.

இதுமட்டுமன்றி நான் கட்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே தனித்து தான் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்கிறேன் இது போன்று பல கட்சிகளை பார்த்துவிட்டேன் நான் செத்து சாம்பல் ஆனாலும் தனித்து தான் என் மக்களுக்காக போட்டியிடுவேன் என கூறியுள்ளார்.

மேலும் சீமான் அவர்கள் கோபி,சுதாகர் மீது வழக்கு போடுவதெல்ல்லாம் சமூக  திண்டாமையை காட்டுகிறது சமூகத்தின் சாதி கொடுமையை காட்டுகிறது பெருமை என்பது எதில் இருக்க வேண்டுமோ அதில் இருக்க வேண்டும் சாதி, மதத்தில் ஒருபோதும் இருக்க கூடாது என கூறியுள்ளார்.

 

ரயில் பயணிகளுக்கு புதிய இலவச OTT சேவை!

இந்திய ரெயில்வே புதிய ‘RailOne’ சூப்பர் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இலவசமாக OTT மூலமாக படம், தொடர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.

2025 ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான ‘RailOne’ எனும் புதிய சூப்பர் ஆப், தற்போது பயணிகளுக்கு இலவச OTT (Over-The-Top) பொழுதுபோக்கு சேவையை வழங்குகிறது. இதன் மூலம் ரெயில் பயணத்தின் போது திரைப்படங்கள், வலைத் தொடர்கள், ஆவணப்படங்கள், ஆடியோ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவற்றை இலவசமாக அனுபவிக்கலாம்.

RailOne – ஒரே ஆப்பில் அனைத்து சேவைகள்

பயனருக்கு எளிதான வடிவமைப்புடன் வந்திருக்கும் இந்த RailOne ஆப், பயணிகளுக்கான பல்வேறு சேவைகளை ஒருங்கிணைக்கிறது:

முன்பதிவு செய்யாத (Unreserved) UTS டிக்கெட்

நேரடி ரெயில் நிலவரம் (Live Train Tracking)

புகார் தீர்வு முறை

E-Catering (உணவு ஆர்டர்)

போர்டர் முன்பதிவு

இறுதி கட்ட டாக்ஸி சேவை (Last-Mile Taxi)

டிக்கெட் முன்பதிவு – முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் செய்யாத டிக்கெட்டுகள் இரண்டையும் மொபைலில் பதிவு செய்யும் வசதி

RailOne-ல் OTT பொழுதுபோக்கு

RailOne ஆப்பில், WAVES OTT எனும் டிஜிட்டல் தளம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த OTT தளம், பிரசார் பாரதி (Prasar Bharati) மூலம் 2024 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தகவல்கள் கிடைக்கிறது:

நேரடி டிவி

வேண்டுகோள் படி வீடியோக்கள்

ஆடியோ நிகழ்ச்சிகள்

ஆன்லைன் விளையாட்டுகள்

இ-காமர்ஸ் சேவைகள்

மொழி மற்றும் கலாச்சார வளம்

WAVES OTT, படைப்புகளை உருவாக்குநர்கள், பிராந்திய ஒளிபரப்பாளர்கள், கலாச்சார அமைப்புகளுடன் இணைந்து, இந்தியாவின் பல மொழிகள் மற்றும் உள்ளூர் வழக்கு மொழிகளில் தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்குகிறது.

RailOne-ல் இலவச OTT பார்க்குவது எப்படி?

RailOne ஆப்பில் உள்நுழைந்து, பயணத்தின் போது OTT பொழுதுபோக்குப் பகுதியில் சென்று, விரும்பிய திரைப்படம், தொடர், அல்லது நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து பார்வையிடலாம். தற்போது விழாக்கால சலுகை மூலம் இவை இலவசமாக வழங்கப்படுகிறது.

RailOne ஆப் – கூடுதல் தகவல்கள்

CRIS (Centre for Railway Information Systems) உருவாக்கியது

முன்பிருந்த RailConnect & UTS பயனர் கணக்குகளை ஆதரிக்கிறது

பல ஆப்புகளை தனித்தனியாக நிறுவ வேண்டிய அவசியமில்லை – இடத்தை மிச்சப்படுத்தும்

IRCTC அங்கீகரித்தது

IRCTC ஆப்பைப் போலவே, வணிக ரீதியாக இணைந்த பிற ஆப்புகளும் இதனுடன் இணைந்து செயல்படுகின்றன.

அப்பா-வை வைத்து விளம்பரம் தேடும் அன்புமணி.. அம்பலமான அரசியல் நாடகம்!!

0

PMK: பாமக-வில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அப்பா மகன் என இருவரும் இதற்கு போட்டிபோட்டுக் கொண்டு தேதியை அறிவித்தனர். இது ரீதியாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது, ஆனால் ராமதாஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கொண்டு அன்புமணி அறிவித்த நாளிலேயே பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது.

இதில் அன்புமணி நியமித்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர். ராமதாஸ் கலந்துக் கொள்வார் என்ற எண்ணத்தில் அவருக்கு அன்புமணி பக்கத்தில் தனி இருக்கையை வைத்துள்ளனர். தற்போது அந்த இடம் காலியாக இருப்பது குறித்து செய்திகள் எங்கும் சோசியல் மீடியாவில் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. மேற்கொண்டு இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் நிர்வாகிகள் அணிந்திருக்கும் பேட்சியில் தொடங்கி கட்டவுட் வரை அனைத்திலும் ராமதாஸ் படம் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அன்புமணி, நான் செய்ய வேண்டிய அனைத்து முறைகளையும் மரியாதையும் செய்கிறேன். ஆனால் அதை அவர் தான் மறுத்து வருகிறார் என்பது காட்டும் விதமாக உள்ளது. ஆனால் இதற்கு முன் பல கூட்டங்கள் கூடிய போதும் அவ்வளவு ஏன் சில போஸ்டர்களில் கூட ராமதாஸ் படம் இடம் பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது மட்டும் ஏன் விளம்பர நோக்கத்திற்காக அன்புமணி இப்படி செயல்பட வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாமகவின் உட்கட்சி மோதல் என்பது இறுதி அத்தியாயம் வரை தீரா முடிவாக இருக்கும் என்பது இதை வைத்து பார்க்கையில் புரிந்துக் கொள்ள முடிகிறது. மேலும் இவர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்படவும் அதிக வாய்ப்புள்ளது.

திமுக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திருமா!! ஸ்டாலினுக்கு வைத்த பெரிய டிமாண்ட்!!

0

VSK DMK: தமிழகத்தில் தொடர் லாக்கப் மரணம் ஆணவக் கொலை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆணவ கொலைகானது சமீபத்தில் அதிகரித்த வண்ணமாக தான் இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கவின் என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கவிதை கொலை செய்த சுர்ஜித் கைது போலீசாரின் மகன் என்பதால் வழக்கு திசை மாறி போகும் என பலரும் எண்ணினர்.

இது ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய பிறகு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இது ரீதியாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கவன ஈர்ப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். இது ரீதியாக தமிழக அரசிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆவண கொலை தடுப்புச் சட்டம் சட்டத்தை உடனடியாக இயற்றும்படி வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது சென்னையில், சைதாப்பேட்டையில் தற்போது கூச்சல் விட்டு போராட்டம் நடத்துகின்றனர். மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட கவின் குமாரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். கூட்டணி கட்சியின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.