ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 16, 2025
Home Blog Page 4

ரீ என்ட்ரி கொடுக்கும் நால்வர் அணி.. அச்சத்தில் இபிஎஸ்.. அமித்ஷா போட்ட பிளான்!!

0

BJP ADMK AMMK: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அந்த எதிர்பார்ப்புக்கு சிறிதும் கலங்கம் வராமல், தமிழக கட்சிகள் அனைத்தும் தினம் தினம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பாமகவில் ஏற்பட்ட தந்தை, மகன் பிரச்சனை, திமுகவில் நிலவும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள், மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை தேர்தளுக்கான ஆவலை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முறையான மரியாதை வழங்க படவில்லை என கூறி அமமுக அதிலிருந்து வெளியேறியது.

ஓபிஎஸ்யும் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்க்காக பல்வேறு பாஜக தலைவர்கள் முயற்சித்தும் இவர்கள் அதற்கு இணங்கவில்லை. முதல்வர் வேட்பாளரை மாற்றினால் தான் NDA கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். இவ்வாறான சூழலில், இவர்கள் மீண்டும் பாஜகவில் சேர்வதற்கான சமிக்கைகள் தென்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து தான் செங்கோட்டையன் வெளியேறியுள்ளார்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் NDA கூட்டணிக்குள் வருவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சூசகமாக பதிலளித்துள்ளார். இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பாஜக உடன் இணக்கமாக தான் உள்ளார் என்பதை நிரூபித்ததோடு, NDA விலிருந்து விலகியவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கபட்டுள்ளது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் இபிஎஸ்க்கு எதிரானவர்கள் என்பதால் மீண்டும் NDA கூட்டணியில் இவர்கள் சேர்ந்தால் அது இபிஎஸ் தலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

தவெகவுக்கு நோ என்ட்ரி.. அதிமுக வெஸ்செஸ் திமுக தான்!! முன்னாள் அமைச்சர் பர பர பேட்டி!!

0

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று விஜய் கூறி வருகிறார். திமுகவும் இதுவரை அதிமுகவை மட்டுமே எதிரி பட்டியலில் வைத்திருந்த நிலையில் தற்போது புதிதாக தவெகவையும் இணைத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இதனை அதிமுகவை சேர்ந்த யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறியிருந்தார்.

இதனை பல்வேறு அரசியல் நிபுணர்களும் கூறி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதனை வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையின் கீழ் தவெக கூட்டணி அமைக்காது, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டதிலிருந்தே அதிமுகவை சேர்ந்தவர்கள் விஜய்யை நேரடியாக விமர்சித்து வரும் வேளையில், ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் தான் பலமான கட்சிகள்.

நாங்கள் பார்த்து கொள்கிறோம். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும். அதிமுகவா திமுகவா என்பது மக்களின் முடிவு என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனம் பெற்றுள்ளது. மேலும், திமுகவிற்கு மாற்று அதிமுக மட்டும் தான் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று கூறி வந்த விஜய்க்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

நயினாரின் பதவிக்கு வரும் முக்கிய தலைவர்.. பாஜக எடுத்த அதிரடி முடிவு!!

0

BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களை தீவிரமாக வகுத்து வரும் சமயத்தில் அதிமுக-பாஜக ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தார். அதன்படி அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை பாஜக நிகழ்வுகளில் தலை காட்டாமலிருந்தார்.

இவரின் பதவி பறிப்பின் போது, இவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நயினாரின் பதவிக்கு மீண்டும் அண்ணமலையை அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தை பாஜக மேலிடத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஏனென்றால் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்தது. மேலும் தமிழக இளைஞர்களின் ஆதரவும் அண்ணாமலைக்கு அதிகளவில் இருந்தது. பின்னர் நயினார் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றதலிருந்தே பாஜகவின் வாக்கு பழைய நிலைக்கு திரும்பி விட்டது.

இதனை கருத்தில் கொண்டு பாஜக தலைமை, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அண்ணாமலையை மீண்டும் தலைவராக்கினால் வாக்கு வங்கியை மீண்டும் வலுவாக்க முடியும் என்று யூகித்திருக்கிறது. இது இன்னும் அற்விக்கப்படாத நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நயினார் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் என்னுடைய பதவி காலம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்னுடைய பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று கூடிய விரைவில் இவரது பதவிக்கு மீண்டும் அண்ணாமலை வருவதற்கான சாத்தியக்கூறுகளாக பார்க்கப்படுகிறது.

அன்புமணி வைத்த ட்விஸ்ட்.. இதுக்கு ஓகே சொன்னா கூட்டணி ரெடி!! ஷாக்கில் இபிஎஸ்!!

0

ADMK PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக மாற்று கட்சியினரை தம் கட்சியில் இணைக்கும் பணியினையும், 5 வருடங்களில் மக்களுக்கு செய்த நன்மைகளையும் பட்டியலிட்டு அதனை மக்கள் மனதில் பதிய வைப்பதற்க்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. ஆனால் அதிமுக, பாமக போன்ற கட்சிகளில் ஆட்சி அதிகாரமும், தலைமை பயமும் தலைவிரித்தாடுகிறது என்றே சொல்லலாம். அதிமுகவில் கூட கட்சி பொறுப்பு யாரிடத்தில் உள்ளது என்ற தெளிவு உள்ளது. ஆனால் பாமகவில் அதிலும் ஒரு சிக்கல் நீடிக்கிறது.

தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சிதறுண்ட பாமக இரண்டு திசையில் செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில், பாமக யாருடன் கூட்டணி அமைக்கும், உண்மையான பாமக யாரிடம் உள்ளது என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திமுகவிற்கு ஆதரவு செலுத்தி வருவதால் அவர் அந்த கூட்டணிக்கு செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என்று ராமதாசின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மகன் அன்புமணி அதிமுக பக்கம் நிற்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

இது இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், அன்புமணி இபிஎஸ்யிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளாராம். அது என்னவென்றால், பாமக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட வேண்டுமென்றால் பாமகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தர வேண்டுமென்று கூறியுள்ளதாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுக கூட்டணியிலிருக்கும் பாஜக கொங்கு மண்டலத்தை கேட்டு வலியுறுத்தி வருகிறது என்று கூறப்படும் சமயத்தில் அன்புமணியின் இந்த நிபந்தனை இபிஎஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் எடுத்த முடிவு.. திமுகவிற்கு மறைமுக சாதகம்!! குஷியில் ஸ்டாலின்!!

0

TVK DMK: தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கி வரும் தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்  சமீபத்தில் அறிவித்துள்ள தனித்து போட்டியிடும்  முடிவு, மாநில அரசியல் கணக்குகளை மாற்றக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தவெக தனித்து களமிறங்குவது திமுகவின் வாக்குகளை காட்டிலும் அதிமுகவிற்கு வாக்கு அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அதிமுக வாக்காளர்களிடையே ஏற்பட்ட மனச்சோர்வு, புதிய மாற்றத்திற்கான ஆர்வம் ஆகியவை  விஜய்க்கு ஆதரவாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.

இதனால், பல தொகுதிகளில் ஏற்படும் வாக்கு பிளவால் திமுக மீண்டும் பல்வேறு இடங்களில் வெற்றி பெறும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தவெக முதன் முறையாக போட்டியிடும் நிலையில், மக்கள் மனநிலை மற்றும் விஜய்யின் ரசிகர்  தாக்கம் காரணமாக சில இடங்களில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் சாத்தியமும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது. முன்னதாக, விஜய் சமூகப் பிரச்சினைகளில் தனது கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியதுடன், கல்வி மற்றும் இளைஞர் முன்னேற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இதனால், அவருக்கு அரசியலில் தனித்த இடம் உறுதியாகும் என்பதற்கான சாத்தியம் நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது. இந்நிலையில், திமுகவும் அதிமுகவும் தங்கள் வாக்கு வங்கி குறையாத வகையில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் புதிய திட்டங்களை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் அரங்கு அடுத்தடுத்த மாதங்களில் யாரும் எதிர்பார்த்திராத அளவு சூடுபிடிக்கும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

கூட்டணி குறித்து இபிஎஸ் எடுத்த முடிவு.. இத தவிர வேற வழி இல்ல!! முழிக்கும் ஸ்டாலின்!!

0

ADMK DMK: தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிகட்டிலில் அமர வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேர்தல் சமயம் பார்த்து ஸ்டாலினிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற நிபந்தனைகளை முன்வைத்து வருகிறது. விஜய்யின் அரசியல் வருகையிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் திமுகவிற்கு இது பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் பிளவுகள் அதிகரித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் விஜய் கூட்டணியை சேர்த்து கொள்ளலாம் என்று யூகித்திருந்தார். இவரின் செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்துவது போன்றே அமைந்திருந்தது. ஆனால் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தற்போது அதிமுக இருக்கும் நிலையை பார்த்தால் அதற்கு விஜய் உடனான பலம் வாய்ந்த கூட்டணி அவசியம். இல்லையென்றால் அதிமுகவிலிருப்பவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும். தற்போது அதிமுகவில் இது இரண்டும் இல்லையென்பது உறுதியாகிவிட்டது.

இதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த இபிஎஸ் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்துள்ளார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதிமுகவிலிருந்து முக்கிய தலைகள் பிரிந்து திமுகவில் ஐக்கியமானது போல திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகளை அதிமுக பக்கம் இழுக்கும் பணியை இபிஎஸ் கையில் எடுத்துள்ளாராம். மேலும் திமுக கூட்டணி கட்சியான விசிகவிற்கு 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால், அவர்களுக்கு இரட்டை இலக்கத் தொகுதிகள் வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெகவில் இணையும் மதிமுகவின் முக்கிய புள்ளி.. குஷியில் விஜய்.. பதட்டத்தில் வைகோ!!

0

TVK MDMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளில் உள்ள அமைச்சர்களும், நிர்வாகிகளும், வேறு கட்சியில் இணைந்து வருவது தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதற்காக மாவட்டம் தோறும், மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தங்களது கட்சியில் இணைக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து, அன்வர் ராஜா, மைத்ரேயன், மருது அழகு ராஜா, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்து அதற்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளனர்.

இந்நிலையில் அண்மையில் மதிமுகவிலிருந்து விலகிய அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர்  நாஞ்சில் சம்பத் சமீப காலமாகவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இதன் காரணமாக தான், சென்னையில் நடைபெற்ற திமுகவின் 75 வது அறிவு திருவிழாவிற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், இனிமேல் திமுகவுக்கு அதிமுக போட்டியாக இருக்காது, தவெக தான் போட்டியாக இருக்கும்.

இந்த உண்மையை தான் நான் சொன்னேன் என்று கூறினார். நாஞ்சில் சம்பத் தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவு அளிப்பதை பார்த்தால் கூடிய விரைவில் இவர் தவெகவில் இணையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதிதாக கட்சி துவங்கி இருக்கும் விஜய்க்கு இவர் கட்சியில் இணைந்தால் அது தவெகவுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இவரின் இந்த இணைவு மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாங்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை.. உடைத்து பேசிய பாஜக தலைவர்!!

0

BJP TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகள் அனைத்தும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு, ஒன்றரை வயதை எட்டிய நிலையில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்கான வரவேற்பை பயன்படுத்த நினைத்த அதிமுகவும் பாஜகவும் அவரை கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடலாம் என்று திட்டம் தீட்டியது.

ஆனால் விஜய் இவர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்த இரண்டு கட்சிகளுக்கும் ஏமாற்றத்தை பரிசளிக்கும் வகையில், தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவும், பாஜகவும் விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, 10% வாக்கு கூட இல்லாத கட்சி தவெக என்று கூறியிருந்தார்.

இவரை தொடர்ந்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவை கடுமையாக தாக்கியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை கூட்டி விடலாம், ஆனால் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். கவுன்சிலர் கூட இல்லாத தவெகவில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

மேலும் கரூர் சம்பவத்தில் விஜய் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கும் பாஜக ஆதரவு அளித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்க்கு எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காத சமயத்தில், அவருக்கு ஆதரவாகவும், தவெகவின் குரலாகவும் ஒலித்தது அதிமுகவும், பாஜகவும் மட்டும் தான். தற்போது அதுவும் விஜய்க்கு எதிராக மாறிவிட்டது. உலகிலேயே பெரிய கட்சியான பாஜகவும், மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவும் ஒருசேர தவெகவை எதிர்த்தால் விஜய் அதனை எப்படி சமாளிப்பார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

அதிமுக தவெக கணக்குலையே இல்ல.. பாஜக மட்டும் தான்!! அப்பாவு போட்ட வெடி!!

0

DMK ADMK TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக, நாதக, தேமுதிக, பாமக மற்றும் புதிதாக உருவெடுத்த தவெக போன்ற கட்சிகள் தீவிர ஈடுபாட்டில் உள்ளன. வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் இடையே போட்டி நிலவும் என்று எதிர்பார்த்த சமயத்தில், திமுக தான் தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய் பரபரப்பை கிளப்பினார். இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்தாலும், அதிமுகவிற்கு சாதகமாகவே இருந்தது. ஆனாலும் அதிமுகவிற்கு இந்த செய்தி அதன் மதிப்பை குறைப்பது போல அமைந்தது.

இதனை இபிஎஸ் ஏற்றுகொள்ளவில்லை. எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும் அதிமுகவிற்கும்-திமுகவிற்கு தான் போட்டி என்று இபிஎஸ் கூறியிருந்தார். இத்தனை வருடங்களாக திமுகவும், அதிமுகவை தனது எதிரி என்று கூறி வந்த நிலையில் தற்போது அந்த நிலைப்பாட்டில் இருந்து பின் வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் சமீப காலமாகவே திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடங்கி திமுக தலைமை வரை புதிய எதிரிகள், பழைய எதிரிகள் என்று தவெகவையும் எதிரி பட்டியலில் சேர்த்து விட்டார்கள்.

ஆனால் தற்போது அந்த நிலை மாறி திமுகவின் எதிரிகள் வரிசையில் பாஜக முதலிடம் பிடித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, 2026 தேர்தலில் மக்களின் ஆதரவால் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார் என்றும், இந்த தேர்தலில் திமுகவிற்கும், பாஜகவிற்கும் தான் கடுமையான போட்டி நிலவ கூடும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து, அதிமுகவையும், தவெகவையும், திமுக எதிரியாகவே கருதவில்லை என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெகவை அட்டாக் செய்ய ஆரம்பித்த அதிமுக.. நாலா பக்கமும் மாட்டி தவிக்கும் விஜய்!!

0

ADMK TVK: தமிழக அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதிலும் முக்கியமாக தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது திராவிட கட்சிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது மற்ற கட்சிகளை விட திமுகவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஏனென்றால், விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறினார்.

இது அதிமுகவிற்கு அனைத்து வகையிலும் சாதகமாக அமைந்தது. அதிமுகவிற்கும் திமுக எதிரி என்பதால் விஜய்யுடன் சேர்ந்து அதனை வீழ்த்தி விடலாமென இபிஎஸ் கணக்கிட்டார். ஆனால் இபிஎஸ்யின் ஆசை ஏமாற்றத்தில் முடிந்தது. அதிமுக கூட்டணிக்கு விஜய் நேரடியாக நோ சொல்லியதால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை விமர்சித்திருக்கிறார்.

எந்த ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் போதும் அந்த கட்சி தலைவர்கள், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறுவது இயற்கை. 10 சதவீதத்திற்கு கீழ் வாக்கு வைத்திருப்பவர்களை கூட முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்துவார்கள் என்றும், தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம் என்றும் கூறினார். ஏற்கனவே திமுக விஜய்யை எதிர்த்து வரும் நிலையில், கூட்டணிக்கு விஜய் மறுப்பு தெரிவித்ததால் அதிமுக அமைச்சர்களும் தவெகவை நேரடியாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் சிபிஐ மூலம் பாஜகவும் விஜய்யை எதிர்க்க தயாராகிவிட்டது. புதிதாக களம் காண இருக்கும் விஜய் எப்படி இவ்வளவு எதிர்ப்புகளை சமாளிப்பார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.