ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2025
Home Blog Page 4

ஆண்கள் மாறும் வரை இங்கு எதுவும் மாறாது.. ஆவேசமாக பேசிய கனிமொழி எம்.பி.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்!!

0

DMK: இந்திய முழுவதும் அதிகரித்துள்ள ஒரு நிகழ்வு பாலியல் வன்கொடுமை. அதிலும் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென்று பலரும் கோரிக்கை வைத்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மற்ற நாடுகளை போல கடுமையான தண்டனையை இந்தியாவிலும் கொண்டு வர  வேண்டுமென்ற குரல் எல்லா மூளையிலும் ஒலித்து  வருகிறது. சாதிய  வன்கொடுமைக்கு எதிராக தனி சட்டம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறினார்.

இவரை தொடர்ந்து இன்று சென்னை வட கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி சார்பில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு  விருந்தினராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு பேசினார். அப்போது மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிகரிக்கும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்று கேள்வியெழுப்பிய மாணவிக்கு, நம் விட்டு பெண்களை கண்டித்து, பாதுகாப்பு சொல்லி கொடுக்கும் பெற்றோர் அவர்களின் வீட்டில் வளரும் ஆண்  பிள்ளைகளுக்கும் பெண்களை ஏளனமாக பார்க்க கூடாது, பெண்ணின் அனுமதி இல்லாமல் அவளை தொடுவது தவறு என்று சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆண்களுக்கு சொல்லி கொடுக்கும் வரை சமூகம் மாறாது என்பதையும் வலியுறுத்தி  பேசினார். இவரின் இந்த கருத்தை கேட்ட நெட்டிசன்கள் சமூக வலை தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். சாதிய வன்கொடுமைக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் நடத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் தேர்தல் நடக்கும் நேரத்தில் மட்டும் குழு அமைத்து வேஷம் போடும் திமுக அரசு, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டத்தை இயற்றினால் மட்டுமே அதனை தடுக்க முடியுமென்பதை ஏன் உணரவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் ஆண்களை ஒழுங்குப்படுத்த வேண்டுமென்று கூறும் திமுக எம்.பி முதலில் திமுக அரசை சீரமைக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். அப்போது தான் இந்த வகையான கொடுமைகள் நிகழாமல் இருக்குமென்பது அவர்களின் கருத்து. 

அதிமுக-பாஜக கூட்டணிக்குள் இணையும் பிரம்மாண்ட கட்சி.. குஷியில் இபிஎஸ்!!

0

BJP IJK: 2026 சட்டமன்ற  தேர்தலுக்காக கூட்டணி வியூகங்கள் தீவிரமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், மக்களை சந்திக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை  மீட்போம் என்ற தேர்தல் பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது.  திமுக  கூட்டணி கட்சிகள்  பலமாக உள்ள நிலையில், அதிமுகவும்  தன்னுடைய கூட்டணியை பெருக்க முயற்சித்து வருகிறது.

தவெகவை தம் பக்கம் இழுக்க பார்க்கும் அதிமுக, அதே வேளையில் பாமக, தேமுதிக, போன்ற கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து சிறிய கட்சியாக அறியப்படும், புதிய தமிழகம் மற்றும் தமமுக கட்சி அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும் சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், SRM கல்வி குழுமத்தின் நிறுவனர் முனைவர் டி.ஆர். பாரிவேந்தர் 2010 இந்திய ஜனநாயக கட்சி ஒன்றை தமிழ்நாட்டில் துவங்கினார்.

சமூக நலன், மாணவர் நலன் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் போன்ற கொள்கைகளை நோக்கமாக கொண்டுள்ள இந்த கட்சி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி  பெற்றது. பின்னர் 2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு எந்த இடத்தையும் வெல்லவில்லை.

இதன் பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் தனித்து போட்டியிட்ட IJK தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர போவதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார். சென்னையில் காதசி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் இதை கூறிய அவர், IJK இந்த தேர்தலில் குறைந்தது 5 தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவித்தார். 

இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைய முடியாது.. முயன்றால் கை துண்டாக வெட்டப்படும்.. வைகோவின் அதிரடி பேச்சு!!

0

BJP MDMK: இந்தியாவிலேயே மிக பெரிய கட்சியாக அறியப்படும் பாஜக தமிழகத்தில் மட்டும் காலூன்ற முடியாமல் தவித்து வருகிறது. ஜெயலலிதா காலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருந்தது. பின்னர் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த கூட்டணி முறிந்து விட்டது. பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் பதவியேற்ற பிறகு பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைத்தார்.

இந்த கூட்டணியும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக- பாஜக சுமுகமான முறையில் கூட்டணியை அமைத்துள்ளது. மத்திய அரசில் தன்னுடைய பலத்தை வலிமையாக நிரூபித்திருக்கும் பாஜக தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் இருப்பதை  பெரிய அவமானமாக கருதுகிறது. பாஜக இந்துத்துவத்தை மையமாக வைத்து செயல்படுவதால் அவர்களால் தமிழகத்தினுள் வர முடியவில்லை. அதனால் தமிழகத்தில் மிக பெரிய கட்சியாக அறியப்படும் திராவிட கட்சியான அதிமுகயுடன் கூட்டணி வைத்து வென்று விடலாம் என்று நினைக்கிறது.

ஆனால் இதனை பலரும் எதிர்த்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் வைகோ பாஜக குறித்து  கடுமையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் நுழைந்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள். மேலும் பெரியார் சிலையை எங்கு எப்போது உடைக்கிறீர்கள் என்று சொல்லி விட்டு வாருங்கள், உங்கள் கை துண்டாக வெட்டப்படும் என்று தன்னுடைய கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார். 

அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய பாமகவின் கோரிக்கை.. முழிக்கும் இபிஎஸ்!!

0

ADMK  PMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக-பாஜக கூட்டணி, திமுக- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை தங்களுடைய கூட்டணியை பலமாக வைத்திருக்கிறது. மீதமிருக்கும்  மூன்றாம் நிலை கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் திராவிட கட்சிகள் மும்முரம் காட்டி  வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை அதிமுக தொடங்கியுள்ள நிலையில், பாமகஉடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பாமக தற்போது இரண்டாக பிரிந்துள்ளதால், இருதரப்பினரிடையேயும் அதிமுக பேசி வருகிறது. பாமக தனது தேர்தல் வரலாற்றிலேயே அதிக தொகுதிகளை வென்ற கூட்டணி என்றால் அது  அதிமுக கூட்டணி தான். இந்நிலையில் கூட்டணி குறித்து ராமதாஸிடம் அதிமுக தலைவர் இபிஎஸ் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்.

இவரை தொடர்ந்து பாஜக தேர்தல் பொறுப்பாளர்  பைஜந்த் பாண்டா அன்புமணியிடம் பேசியுள்ளார். ராமதாஸ் இபிஎஸ்யிடம் 25 தொகுதிகளுக்கு மேல் கேட்டதாகவும், அன்புமணி பைஜந்த் பாண்டாவிடம் 30 தொகுதிகளுக்கு மேல் உறுதியாக கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே பாஜக அதிமுகவிடம் கொங்கு மண்டலத்தை கேட்டு வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பாமகவும் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருப்பது இபிஎஸ்க்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இது  தொடர்ந்தால் அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டணியை தவிர்த்தால் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற போகும் தேமுதிக.. பொன்னுசாமியின் இழப்பால் கிடைக்க போகும் வெற்றி!!

0

DMDK DMK: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ. வான பொன்னுசாமி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் முதலில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்தவர். அதற்கு பிறகு 2006 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். 2016 ஆம்  ஆண்டு சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2021 சட்டமன்ற  தேர்தலில் மனம் தளராத பொன்னுசாமி மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் பொன்னுசாமியின் இறப்பு திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. இந்த முறையும் சேந்தமங்கலம் தொகுதியில் இவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்று விடலாம் என்பர் திமுக திட்டம் தீட்டி இருந்தது.ஆனால் இப்போது அவர் இறந்ததால் அவருக்கு பதிலாக சேந்தமங்கலம் தொகுதியில் யாரை நிறுத்தலாம், அவருக்கு பின் மக்களிடம் செல்வாக்கு கொண்டவர் யார் என்று திமுக ஆராய்ந்து வருகிறது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சேந்தமங்கலம் தொகுதியில் தேமுதிக தான் வெற்றி பெற்று வந்தது. 2021 தேர்தலில் திமுக வென்றதால் தேமுதிக அதிலிருந்து சற்று விலகியிருந்தது. இப்போது பொன்னுசாமியின் இறப்பால் தேமுதிக மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியை கைப்பற்ற என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இந்த தொகுதியில் 2011 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தேமுதிகவை சேர்ந்த ர.சாந்தியை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் வாய்ப்பு குறைவு. அதனால் சேந்தமங்கலம் தொகுதியில் மீண்டும் கால் பாதிக்கும் சாத்திய கூறுகள் என்னவென்று பிரேமலதா ஆலோசித்து வருகிறார். 

ரசிகர்களின் அன்பு தொல்லையை தவிர்க்க விஜய் எடுத்த முடிவு.. ஜெயலலிதா ட்ரிக்கை பாலோ செய்ய போறாராம்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1 வருடத்திற்கு மேலான நிலையில், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கரூர்  மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு திமுகவின் கோட்டையாக கருதப்படும், கரூரில் நடைபெற்றதால், தவெக நிர்வாகிகள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை அனைவரும், இது திமுக அரசின் சதி என்று கூறி வந்தனர்.

ஆனால் திமுக தொண்டர்கள் இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் அறியாமை என்று விமர்சித்து வந்தனர். மேலும் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் அளித்த பேட்டியில், விஜய் ரோடு ஷோ நடத்தி வந்தது தான் காரணம் என்று கூறினார்கள். நடிகர் விஜய் என்னதான் அரசியலில் கால் பதித்திருந்தாலும், அவர் ஒரு பிரபல நடிகர். அதனால் அவரை அரசியல் தலைவர்  என்று மக்கள் உணர இன்னும் நேரமெடுக்கும். கரூருக்கு வந்த கூட்டமும் அப்படித்தான்.

அவரை அரசியல் தலைவராக மக்கள் பார்க்கவில்லை.ஒரு நடிகராகவே பார்த்தனர். அதனால் தான்  அவ்வளவு கூட்ட நெரிசல், தள்ளு முள்ளு, உயிரிழப்புகள் போன்றவை அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த பிறகு வெளியே தலை காட்டாமல் இருந்த விஜய், இத்தனை இழப்புகளுக்கு காரணம் என்னவென்று கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அந்த ஆலோசனையில், மக்கள் இன்னும் உங்களை அரசியல் தலைவனாக ஏற்கவில்லை என்றும், அவர்கள் மனதில் இந்த கருத்து பதியும் வரையில், நீங்கள் ரோடு ஷோ நடத்துவதை தவிர்த்தல் நல்லது என்றும் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. இதனால் விஜய், இனிமேல் நடக்கும் பரப்புரைகளில் ஹெலிகாகாப்டரில் வந்து இறங்கி, கூட்டம் முடிந்ததும், அதே விமானத்தில் திரும்ப சென்று விடுவதாக முடிவெடுத்துள்ளாராம். விஜய்யின் இந்த முடிவு ஜெயலலிதா பாணியை பின்பற்றுவது போல அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. 

பொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார்.. திமுக அமைச்சர் சரமாரி தாக்குதல்!!

0

ADMK DMK: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான  போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு  வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கபட்டவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அங்குள்ள நிலைமையை பற்றி கவலை தெரிவித்ததோடு, தமிழக அரசையும் குறை கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம் அதிமுக ஆட்சியில் 700 மூட்டைகள் தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பை விட 5 மடங்கு கூடுதலாக நெல் விளைந்துள்ளது. சென்ற ஆட்சியில் போதிய கிடங்குகள் கட்டாதது பிரச்சனைக்கு காரணமானதால் இந்த சமயம் நெல் பாதுகாப்பு கிடங்கு கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க சர்க்கரை ஆலை  கிடங்குகள், சிவில் சப்ளைஸ் கிடங்குகளை பயன்படுத்தியுள்ளோம் என்றும்  கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், நெல் மூட்டைகள் நனையாமல் பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் நெல் கொள்முதலும், பாதுகாப்பு பணிகளும் அதிகளவு விரிவுப்படுத்தபட்டுள்ளன. ஆனால் எதிர்க்கட்சி தலைவர், பொய்யை உண்மையை போல மிகவும் தத்ருபமக கூறுகிறார் என்று அவர் தெரிவித்திருந்தார். பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த விரிவாக விவாதிப்பதற்காக அமைச்சர்  தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் வேளாண் துறை செயலர், தோட்டக்கலை துறை இயக்குனர் போன்ற முக்கிய அமைச்சர்கள்  கலந்து கொண்டனர். 

மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு.. களத்தில் இறங்கிய சீமான்!!

0

NTK: நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்திலிருந்தே தனித்து நின்று தான் களம் காண்கிறது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியிருந்தார். முன்பெல்லாம் சட்டமன்ற  தேர்தலில் வெறும் 8% வாக்குகளை மட்டுமே பதிவு செய்த வந்த நாதக, 2026 சட்டமன்ற  தேர்தலில் 38% வாக்குகளை வாக்குகளை பதிவு செய்யும் என்று சீமான் உறுதி பட கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் மக்களின் வாக்கை குவிக்க வேண்டுமென்று  அயராது  உழைத்து வரும் சீமான் தற்போது, வருகிற 7ஆம் தேதி திருச்சியில் மாற்றத்தை  விரும்பும் மக்கள் மாநாட்டை நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

இது வரை பல்வேறு  மாநாடுகளை  நடித்திய சீமான் தற்போது இந்த மாநாட்டை அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நாதக அனைத்து இடங்களிலும், செய்தியாளர்களிடமும் திமுகவை சரமாரியாக வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் இவர் நடத்த போகும்  இந்த மாநாட்டில் எந்த மாதிரியான சூளுரைகள் மற்றும் திமுகவிற்கு எதிரான பேச்சுக்கள் இடம் பெறும் என்பது தெரியவில்லை.  இதற்கு முன் தவெக தலைவர் விஜய்யும் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதிமுக ஆட்சியில் முறைகேடு.. சிக்கிய அதிமுக அமைச்சர்.. விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!!

0

ADMK: திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி இதற்கு முன் அதிமுக அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது பல பேரிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் லஞ்சமாக பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு அவர் திமுக அரசுக்கு மாறிய பிறகே  விசாரணைக்கு வந்தது.

தற்போது புதிய திருப்பமாக அதிமுக ஆட்சியில் வேறு ஒரு ஊழலும் நடந்துள்ளது. அதுவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் அதிமுக அமைச்சருமான எஸ். பி வேலுமணிக்கு தொடர்புடைய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில், தஞ்சை,  சிவகங்கை கோட்டங்களில், சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்பு திட்டங்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த விசாரணையில் ஆர்.ஆர். இன்பாரா நிறுவனம் ரூ. 655 கோடி மதிப்பில் 208 கிலோ மீட்டர் சாலை பணிகளுக்கான டெண்டரை பெற்றதில் முறை கேடு செய்தது தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையை தொடங்கிய நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கே.பி.ஸி இன்ஜினியர்ஸ்  மற்றும் ஜே.எஸ்.வி நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நிறுவனங்களும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியுடன் தொடர்புடைய  நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக ஆட்சியில், பல்வேறு ஒப்பந்த முறைகேடுகள் நடந்துள்ள நிலையில் அதற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்க முன்னாள்  அமைச்சர்கள் மீதான வழக்குகளில் தாமதமாக செயல்படுவது ஏன் என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. 

அரசியல் எதிரியை மாற்றிய விஜய்.. பாரம்பரிய வாக்காளர்களை கவரும் முயற்சியில் தவெக.. ரிலாக்ஸ் ஆன திமுக!!

0

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வருபவர் தான் தளபதி விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சிக்கு இளையர்களின் ஆதரவும், மாற்று ஆட்சியை விரும்புவோரின் ஆதரவும் பெருகி வருகிறது. தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில், 41 பேர் உயிரிழந்தும் கூட அவருக்கான ஆதரவு குறையவில்லை.

ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக விஜய் மிகவும் முடங்கி விட்டதாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி கொண்ட அதிமுக விஜய்க்கு ஆதரவாக பேசியது மட்டுமல்லாது, சட்ட சபையிலும் விஜய்யின் குரலாக ஒழித்தது. அதிமுகவிடமிருந்து கூட்டணிக்கான அழைப்பு விடுத்தும் அதனை ஏற்காத விஜய் முதல்வர் வேட்பாளர், அதிக தொகுதிகள் என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆனால் இந்த நிபந்தனையை ஏற்று கொள்ளாத இபிஎஸ் தொடர்ந்து விஜய்யுடன் பேசி, அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கரூர் சம்பவத்தால் பின் தங்கியுள்ள விஜய், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் நிலைமை மிகவும் மோசமாக விடும் என்பதை எண்ணி அதிமுகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார். ஆனால் அவரின் தனி தன்மையையும் தக்க வைத்து கொள்ள போராடுகிறார். திமுகவும் ஆட்சிக்கு வர கூடாது, அதே சமயம், இரண்டாம் கட்ட தலைவர் பதவியிலும் அமர கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளார்.

முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று இபிஎஸ் கூறியதால், தற்போது அதிமுகவின் பாரம்பரிய வாக்காளர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளாராம். பாரம்பரிய வாக்காளர்களும் விஜய் பக்கம் திரும்பினால் விஜய்க்கு முதல்வர் சீட் தரப்படும் என்று தவெகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் அறிவுரை கூறியதால் விஜய் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் திமுக தலைமை கொஞ்சம் ரிலாக்ஸாக உள்ளது என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள்  கூறுகின்றன.