வெள்ளிக்கிழமை, மே 3, 2024
Home Blog Page 3

சேலம் | பட்டியலினத்தவரை அனுமதிக்க முடியாது! இருதரப்பு மோதல், தீ வைப்பு, பதற்றம், போலீஸ் குவிப்பு!

சேலம் அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது, இருதரப்பினர் மோதல் காரணமாக திருவிழா நிறுத்தப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த இருதரப்பினர் இடையான மோதலின் போது பேக்கரி கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த

இரு தரப்பினரையும் அழைத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் போது பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதட்டத்தை தணிக்கவும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் அமைதியை நிலை நாட்டவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பேக்கரி கடை கொளுத்தப்பட்டது சம்பந்தமாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

இதற்கிடையே வந்தவாசி அருகே திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த திருவிழாவின் ஒரு நிகழ்வாக காந்தாரி வேடம் அணிந்தவர் துடைப்பம், முறத்தால் பக்தர்களை துரத்தி துரத்தி அடித்த சுவாரஸ்ய நிகழ்வும் அரங்கேறியது.

#BigBreaking | அதிரடி தடை! சற்றுமுன் தமிழக அரசு கொண்டுவந்த சட்டம்!

0

இணையவழி சூதாட்டங்கள் (ஆன்லைன் ரம்மி) குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், மீறினால் சிறை, அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

இதுகுறித்த தமிழக அரசின் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் விடுத்துள்ள அந்த அறிவிப்பில், தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் 2022-இன்படி, இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளையாடுவதைத் தடை செய்துள்ளது.

அவ்வாறு தடை செய்யப்பட்ட இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம்புரிபவர்களுக்கு 3 மாதம் வரை சிறைத்தண்டனையோ அல்லது ரூ.5,000/- வரை அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படும். இணையவழி சூதாட்டம் (Online Gambling) அல்லது இணையவழி வாய்ப்பு விளையாட்டுகள் (Game of Chance) பரிவத்தனைகளில் ஈடுபடும் நிதி நிறுவனங்களை/கட்டண நுழைவாயில்களை இச்சட்டம் தடைசெய்கிறது.

Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!
Holiday for Government Institutions!! Sudden announcement by Tamil Nadu government!!

அல்லது இணையவழி சூதாட்டங்கள் வாய்ப்பு அடிப்படையிலான இணையவழி விளையாட்டுகள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பணம் அல்லது பிற வழிகளில் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது தூண்டும் வகையில் எந்த ஒரு நபரும் மின்னணு தொடர்பு சாதனங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் விளம்பரமோ அறிவிப்போ செய்ய கூடாது என்று இச்சட்டம் குறிப்பாகக் கூறுகிறது. அத்தகைய விளம்பரத்தில் ஈடுபடும் நபர்களுக்கு/நிறுவனத்திற்கு, 1 ஆண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது 5 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும் என்றும் இச்சட்டம் குறிப்பிடுகிறது. அதே குற்றத்தை மீண்டும் செய்தால், சட்டம் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கிறது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 மற்றும் பிற சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட செயல்பாடுகள்/சேவைகள் மீதான விளம்பரங்களுக்குத் தடை இருப்பதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) அறிவுறுத்தியுள்ளது. அத்தகையான தடைசெய்யப்பட்ட விளம்பரங்களை ஒளிபரப்பும் நபர்கள்/ பிரபலங்கள், விளம்பர நிறுவனங்கள் / விளம்பர தயாரிப்பாளர்கள் / சமூக ஊடகத் தளங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் ஆணையம் அறிவித்துள்ளது.

எனவே, இம்மாநிலத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் இணையவழி வாய்ப்பு விளையாட்டு, பந்தயம் போன்றவற்றை விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், பேனர்கள், ஆட்டோரிக்க்ஷா விளம்பரங்கள் போன்ற வெளிப்புற ஊடகங்கள் மூலமாகவும், அவர்களின் இணையதளம்/ இணையதளசெயலி பயன்பாடுகளை விளம்பரப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.

இணையவழி சூதாட்டம் / பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் “www.tnonlinegamingauthority.com” என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும். மேலும் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தின் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறை! வேதனையுடன் உத்தரவிட்ட நீதிபதி!

தீ விபத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் மாணவி ஒருவருக்கு, டயப்பர் அணிந்து நீட் தேர்வு எழுத சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

வருகின்ற ஐந்தாம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள 19 வயது மாணவி ஒருவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், தான் தீ விபத்தில் சிக்கியதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், எனவே நீட் தேர்வின் போது டயப்பர் அணிந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், நீட் தேர்வு எழுதும் போது அதற்கு அனுமதி வழங்க வாய்ப்பில்லை. எனவே அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அவர்கள், நீட் தேர்வு எழுத வரும் மாணவிகளிடம் வரம்பு மீறிய சோதனைகள் நடத்தப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், ஆடை கட்டுப்பாட்டில் மாணவிகள் சானிட்டரி நாப்கின் அணிய அனுமதி வழங்கி இருக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் உடல் நிலையை கருத்துக் கொண்டு அவரின் கோரிக்கையை தேசிய தேர்வு முகமை ஏற்றுக் கொண்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இன்று நீட் தேர்வு இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. ஆனால் சர்வர் கோளாறு காரணமாக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மாணவர்களுக்கு புகைப்படம், கையெழுத்து இல்லாமல் ஹால் டிக்கெட் பதிவேற்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் விண்ணப்பத்தை தவறாக பதிவு செய்து விட்டார்களோ? என்று கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து தேசிய தேர்வு முகமை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் சர்வர் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம். விரைவில் இதனை சரி செய்து, முறையான வகையில் ஹால் டிக்கெட் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாம்பு கடி! கங்கையில் தீர்த்தம்! மூடநம்பிகையால் பறிபோனதா இளைஞரின் உயிர்?! அதிர்ச்சி வீடியோ!

பாம்பு கடித்த இளைஞருக்கு மருத்துவம் பார்க்காமல், கங்கை நதியில் மிதக்கவிட்டு உயிரிழக்க செய்துள்ளதாக ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம், புலன்சாகர் மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்தவர் மோகித். 20 வயது இளைஞரான இவர், அதே பகுதியிலுள்ள கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த 26 ஆம் தேதி, மக்களவைத்தேர்தலில் தனது வாக்கினை செலுத்துவதற்காக மோகித் தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார்.

தேர்தலில் தனது வாக்கினை செலுத்திவிட்டு மோகித் வயல்வெளி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, அவரை விஷநாகம் தீண்டியுள்ளது. (மற்றும் ஒரு தரப்பில் அவரின் வீட்டிலேயே பாம்பு கடித்ததாக சொல்கின்றனர்)

<blockquote
class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="ta"
dir="ltr">மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின்
உயிர்<br><br>உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு
உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் 
கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
<br><br>தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி
கிராமத்தில் உள்ள தனது… <a
href="https://t.co/mikKH8Dezp">pic.twitter.com/mikKH8Dezp</a></p>&mdash;
Niranjan kumar (@niranjan2428) <a
href="https://twitter.com/niranjan2428/status/1785924734430892284?ref_src=twsrc%5Etfw">May
2, 2024</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js"
charset="utf-8"></script>

உடனடியாக உறவினர்கள் சிலர் மோகித்தை அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வேறு மருத்துவமனைக்கு அழித்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். (மற்றும் ஒரு தரப்பினர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவிக்கின்றனர்).

ஆனால், மொகிதீன் உறவினர்கள் அவரை கங்கை நீரில் நனைத்தால் அவர் உடலிலிருந்து விஷ முறிவு ஏற்படும் என்று கூறி, இரண்டு நாட்களாக கங்கை நீரில் மிதக்கவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த காணொளியும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு மூடநம்பிகையால் இளைஞரின் உயிர் பறிபோனதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இளைஞரின் மரணத்தை பொறுத்தவரை இரு வேறு செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து போலீசார் தரப்பில் உரிய விளக்கம் அளித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் சென்னை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துபே, ஜடேஜா, தோனி, ருத்ராஜ் என அனைத்து அதிரடி ஆட்டக்காரர்களும் திக்கு திணறி ஆடியது அப்பட்டமாக தெரிந்தது.

பொதுவாக ஒரு அணியின் ஹோம் டவுன் கிரவுண்ட் அந்த அணிக்கு வெற்றியையே தேடித் தரும். ஆனால் இந்த சீசனில் அது பல திருப்பங்களை தந்துள்ளது. குறிப்பாக சென்னை அணிக்கு நேற்றைய ஆட்டம் மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திருக்கலாம்.

நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அனைத்து வீரர்களும் தடுமாறி தடுமாறினர் என்றாலும், கடந்த எட்டு இன்னிங்ஸ்களாக தட்டினால் ஃபோர், அடித்தால் சிக்ஸ் என்று ஹீரோ போல வளம் வந்த மகேந்திர சிங் தோனி தடவி தடவி ரன் அவுட் ஆகியுள்ளது பேசு பொருளாகியுள்ளது.

கடைசி இரு ஓவரில் பந்து வீச்சாளர்களின் எமனாக கருதப்பட்ட எம்எஸ் தோனியை எப்படி ரன் எடுக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற பாடத்தை, மற்ற அணி பந்து வீச்சாளர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளனர் அர்ஷிதீப் சிங்கும், ராகுல் சாகரும்.

தோனி எதிர்பார்த்த இடத்தில் பந்துகளை வீசாமல், சிறப்பான முறையில் ஒழுங்கான 19 வது ஓவரை ராகுல் சாகர் வீச, கடைசி ஓவரை வீசிய அர்ஷிதீப் சிங்கும் தனது பங்கிற்கு சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். பாவம் தோனி தான் எதிகொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இது தோனி ஹேட்டர்ஸ்களுக்கு தீணி போட்டதுபோல் அமைந்துவிட்டது.

இல்லை இல்லை அது அவருக்கு தேவை தான் என்று சென்னை அணி ரசிகர்கள் கூட கருத்து தெரிவிக்கும் அளவிற்கு தோனி கடைசி ஓவரில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார்.

CSK | பேட்டை தோனி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்! ஓவரா போறிங்க! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
ms dhoni darial

ஆம், தோனி கடைசி ஓவரில் டேரியல் மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தானே பேட்டிங் செய்வேன் என்று திமிரோடு நின்ற தருணம் தான், கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சென்னை அணி ரசிகர்களை கூட முகம் சுளிக்க வைத்துள்ளது.

உண்மையை சொல்லப் போனால் டேரியல் மிட்சலுக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் தோனி களத்தில் திமிராக நின்றதற்கு, அர்ஷிதீப் சிங் சரியான பாடத்தை புகட்டிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி தோனி நின்று சந்தித்த அடுத்த 3 பந்துகளில் 6+1 ரன் மட்டுமே தான் எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் ரன்-அவுட் வேறு. இது அவருக்கு தேவைதான் என்று பல கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதிலும் ஒரு கிரிக்கெட் ரசிகரின் சமூகவலைத்தள பதிவில், “நொடி பொழுதில் ஸ்டம்பிங் செய்து அசத்தும் தோணி, தன் அருகில் மிட்சல் வரும் வரையா கவனிக்காமல் இருந்தார்.. ?

தன் அருகில் வந்த வரை ஏன் திரும்பி அனுப்பனும் ?

மிட்சல் டாட் பால் ஆக்கிடுவான்னு தான் ஓடல என்றாலும் தோனியும் டாட் பால் தானே ஆடினார்..?

இவர் ஸ்ட்ரைக்கை தக்க வைக்க மிட்செலை இரண்டு ரன் ஓடி இரண்டு ரன் எடுக்க விடாமல் செய்தார்?

தோனி மிட்சலை திருப்பி அனுப்பியது தன்னை ஒரு பெரிய ஃபினிஷராக மார்கெட் வேல்யூவை தக்கவைத்துக்கொள்ள செய்த கீழ்மையான செயல்.

மிட்சல் பேட்டை தோணி முகத்தில் கடாசி விட்டு சென்றிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இவரின் கருத்தை பல ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழக போலீசாரின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.

குறிப்பாக சென்னையில் மெத்தாம்பிட்டமைன் என்ற போதை பொருளை பதுக்கி வைத்திருந்த ராகுல் மற்றும் காதர் மைதீன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மெத்தாம்பிட்டமைன் போதை பொருள்! அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் வீட்டில் ரைடு!
methapaittamin rahul

போதை பொருள் வைத்திருந்த இந்த வழக்கில் கைதான ராகுல் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினரான ராகுல் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்க சங்கிலி பறித்த குற்றவாளிகளை 15 மணிநேரத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி போலீஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையிடம் நான்கரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு தனிப்படை அமைத்து வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருவர் போலீசாரிடம் இருந்து தப்பி, அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் புகுந்தனர்.

தங்க சங்கிலி பறித்த குற்றவாளிகளை 15 மணிநேரத்தில் கைது செய்த கள்ளக்குறிச்சி போலீஸ்!
kallakurichi chain snaching

கரும்பு தோட்டத்தை சுற்றி வளைத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பள்ளி ஆசிரியரிடம் தங்க சங்கிலி பறித்தது தெரியவந்தது.

இதனை அடுத்து அபிமன்யம் (வயது 23), அருள்ஜோதி (வயது 22) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வசமாக சிக்கிய பைக் திருடர்கள்!

சென்னை : மதுரவாயல், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, கள்ளச் சாவி மூலம் திருடிய 3 பேரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

வசமாக சிக்கிய பைக் திருடர்கள்!
madura voyal bike case

கைது செய்யப்பட்ட ஐயப்பன் தாங்கள் பகுதியை சேர்ந்த தங்கராஜ், ஸ்ரீநாத் மற்றும் தீபன் ஆகியோரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிஎஸ்கே அணிக்கு மரண அடி! 4 முக்கிய வீரர்கள் வெளியே? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான சர்வதேச டி20 ஆட்டத்தில் பங்களாதேஷ வீரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய பந்துவீச்சாளருமான முஸ்தபிசுர் பங்கேற்க செல்வதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடையாக அமையும் என்று, கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சென்னை அணையின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான தீபக் சாகர் நேற்றைய பஞ்சாப் எதிரான ஆட்டத்தில் காயமடைந்து பாதியிலேயே வெளியேறிய உள்ளார்.

அடுத்து நடக்க உள்ள ஆட்டத்தில் அவர் பந்து வீசுவாரா? அவரின் காயம் சரியாகுமா என்று தெரியாத நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலும் ஒரு நட்சத்திர பந்துவீச்சாளரான துஷார் தேஷ் பாண்டேவும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் குறித்து அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணி வீரர்கள் ஜாஸ் பட்லர், மொயின் அலி (சிஎஸ்கே வீரர்), ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளதால், இந்த தொடரில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறி இங்கிலாந்து புறப்படுவார்கள் என்று, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஊட்டி, கொடைக்கானல் போறிங்களா? இன்று மாலை தமிழக அரசு வெளியிடப்போகும் அதிரடி அறிவிப்பு!

ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கள் கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றில், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் ஆஜராகி அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும், இதில் ஊட்டிக்கு மட்டும் தினமும் 20,000 வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Kodaikanal E-Pass
Kodaikanal E-Pass

இதனையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், இவ்வளவு வாகனங்கள் சென்றால் உள்ளூர் மக்கள் நடமாட முடியாது, சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, ஐஐடி – ஐஐஎம் ஆய்வு அறிக்கை அளிக்கும் வரை இடைக்கால நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

மே 7-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை கொரோனா கால கட்டத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இன்று மாலை இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாகவும். இதற்கான தனி இணையதளத்தை அரசின் தொழில்நுட்பத்துறை உருவாக்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மேலும், ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்களுக்கு அனுமதி, உள்ளூர் வாகனங்களுக்கான நடைமுறைகள் என்ன? ஆகியவை இன்று மாலை வெளியாகும் அந்த அறிவிப்பில் இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி!

மேதகு திரைப்படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் சற்று முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை ப் போராட்ட வீரர் மேதகு பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து மேதகு என்ற திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தின் முதல் பாகத்திற்கும், இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்திருந்தவர் பிரவீன் குமார். இவரின் இசை பல ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 6:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்துள்ளார். அவரின் இந்த திடீர் மரணம் தமிழ் திரை உலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. மேலும் பிரவீன் குமார் மரணத்திற்கு பல திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் பிரவீன் குமாருக்கு மஞ்சள் காமாலை தொற்று இருந்ததாகவும், அதனை அவர் சரிவர கவனிக்காததால் மஞ்சள் காமாலை நோய் தீவிரமடைந்துள்ளது.

கடைசி கட்டத்தில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 6 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக, அவரின் நண்பரும் பிரபல சோசியல் மீடியா பிரபலம் மன்னை சாதிக் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FMannaiSathik786%2Fvideos%2F3761215997448037%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>

மன்னை சாதிக் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், தற்போது ஒரு படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் எனது நண்பன், மஞ்சள் காமாலை இருந்ததை கவனிக்கவில்லை. இது தெரியாமல் அவன் பல நாட்கள் இருந்துள்ளான்.

அவனை தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து கொண்டிருந்தனர். ஆனால் அவர் உயிர் இன்று போய்விட்டதே.

அவன் கள்ளம், கபடம் இல்லாதவன். எந்த ஒரு தவறும் செய்யாதவன். எனவே பொதுமக்களாகிய நீங்களும் உங்கள் உடலை நன்றாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். நம் உடலுக்குள் என்ன நோய் இருக்கிறது என்று நமக்கு தெரியாமல் போய்விடுகிறது. நம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே எனது நண்பனின் மறைவு உணர்த்துவதாக மண்ணை சாதிக் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்

8 ஓவர், 19 டாட்பால், 4 விக்கெட்! சென்னையை சிதைத்த இருவர்!

0

 

நேற்றைய 49 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஒரு தோல்வியை பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ருதுராஜ் நிதானமாக ஆடி அரைசதம் (62 ரன்கள்) கண்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரனான ரஹானே 24 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மற்ற ஆட்டக்காரர்கள் சொற்பரண்களுக்கு அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, இறுதியில் களமிறங்கிய தோனி தனது பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 11 பந்துகளில் 14 ரன்களை சேர்த்து ரன் அவுட் ஆகினார்.

கடந்த எட்டு ஆட்டங்களாக அதிரடியாக ஆடிய தோனி, இந்த முறை ரன் சேர்க்க முடியாமல் கடைசியில் தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.

<blockquote
class="twitter-tweet" data-media-max-width="560"><p lang="en"
dir="ltr">This Yellove for Thala is beyond boundaries! 🥳💛<a
href="https://twitter.com/hashtag/CSKvPBKS?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#CSKvPBKS</a>
<a
href="https://twitter.com/hashtag/WhistlePodu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#WhistlePodu</a>
🦁💛<br><br> <a
href="https://t.co/fRnt2Xk2Wx">pic.twitter.com/fRnt2Xk2Wx</a></p>&mdash;
Chennai Super Kings (@ChennaiIPL) <a
href="https://twitter.com/ChennaiIPL/status/1785704146709909728?ref_src=twsrc%5Etfw">May
1, 2024</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js"
charset="utf-8"></script>

 

20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெடுகளை இழந்து 162 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 17.5 ஓவர்களில், மூன்று விக்கட்டுகளை மட்டும் இழந்து, அபார வெற்றியை பதிவு செய்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இன் கிங்ஸ் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக எட்டு ஓவர்களில், 19 டாட்பால், ஒரு பவுண்டரி கூட எடுக்காததே என்று கிரிக்கெட் விமர்சகர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் லெக் பிரேக் கூகிளி பவுலர் ராகுல் சாகர் மற்றும் இடது கை ஸ்பின்னர் ஹர்ப்ரித் பிரார் வீசிய எட்டு ஓவர்களில் 19 டாட் பால், ஒரு பவுண்டரி கூட கொடுக்கவில்லை. எட்டு ஓவர்களில் இருவரும் சேர்த்து 33 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளனர்.

மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை வெற்றி கனவை தகர்த்தெறிந்துள்ளனர்.

மேலும் இதில் ஒரு சுவாரசியம் உள்ளது. கடந்த 5 லீக் ஆட்டங்களில் பஞ்சாப் அணியிடம் சென்னை அணி தொடர் தோல்வியை சாந்தி வருகிறது.