Home Blog Page 5632

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்! மீண்டும் அதிகரிக்கும் அதிர்ச்சி தகவல்

0

தமிழகத்தில் இன்று மேலும் 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 624 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 700 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் இந்த சூழலில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு தற்போது 10 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று வரை சென்னையில் 9989 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 15512 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் 5 பேர் இன்று உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்த உயரிழப்பானது 103 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து இன்று மேலும் 363 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து தற்போதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையானது 7491 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இதுவரை 3,97,340 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 759 பேரில் 624 பேர்  சென்னையைச் சேர்ந்தவர்கள் என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் திரும்பிய 24 நபர்கள்,  ராஜஸ்தானிலிருந்து தமிழகம் திரும்பியவர்களில் 6 நபர்கள்,  மேற்கு வங்கத்திலிருந்து தமிழகம் திரும்பிய 3 நபர்கள்உள்பட வெளிநாடுகளிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 12 நபர்கள் உள்ளிட்டோருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்த 12 நபர்களில் லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து வந்தவர்கள் 5 பேர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.பாரதி கைது எதிரொலி! அச்சத்தில் தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு

0

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் இன்று காலை திடீரென கைது செய்தனர். இந்நிலையில் திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் அச்சத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

திமுக அமைப்பு செயலாளர் எஸ்.ஆர்.பாரதி மீது தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் எஸ்.ஆர்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.பாரதி கைதை தொடர்ந்து தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதிமாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியும், தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சமீபத்தில் தலைமை செயலாளரை திமுக எம்பிக்கள் சார்பாக சந்தித்த தயாநிதி மாறன் தாழ்த்தபட்ட மக்களை இழிவு செய்யும் வகையில் பேசினார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவரும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த மனுவின் மீது நடைபெற்ற விசாரணையின் போது, திமுக எம்.பி.க்களான டிஆர் பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வரும் மே 29 ஆம் தேதி வரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையையும் வரும் மே 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

சலூன் கடைகளை திறக்க அனுமதி அளித்து ‘முடி’மகன்களின் பிரச்சினையை தீர்த்த முதல்வர்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பின் முதல் நடவடிக்கையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். இதன் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது இரு  தரப்பினர்தான். ஒன்று குடிமகன்கள். இரண்டாவது முடி மகன்கள். சலூன் கடைகள் மூடப்பட்டதால் தலை நிறைய காடு போல் முடி வளர்த்து மிகவும் அவதிக்குள்ளாகியிருந்தனர். ஆனால் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் மட்டும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம் என்று அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது.

ஆனால் இந்நிலையில் சென்னையை தவிர மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஊரக பகுதியில் முடி திருத்தும் நிலையங்கள் மே 19 முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது முடி திருத்தம் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்களை நாளை (மே 24) முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி கிடையாது. அந்த பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.

முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதையும், முக கவசங்கள் அணிவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையத்தை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். ஏ.சி., வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்த அதிமுக! ஸ்டாலின் கண்டனம்

0

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்துள்ளதாக அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாற்றியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. ஆர்.எஸ். பாரதி அவர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கைது செய்திருப்பதற்கு, தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை – ‘அன்பகம்’ உள்ளரங்கத்தில் பேசியதாக ஒரு சர்ச்சையை எழுப்பி – அது தொடர்பாக திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் உரிய விளக்கம் அளித்து – மனப்பூர்வமான வருத்தமும் தெரிவித்துள்ள நிலையில், இந்த “அராஜக நடவடிக்கை” எடுக்கப்பட்டுள்ளது. இதே புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட இரு வழக்குகள் உயர்நீதிமன்ற விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் – நீதித்துறையைக்கூட மதிக்காமல் அலட்சியம் செய்து, கைது “வெறியாட்டத்தை” எடப்பாடி திரு. பழனிசாமி நடத்தியிருப்பது வெட்கக் கேடானது.

Police Arrested R S Bharathi
Police Arrested R S Bharathi

முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது திரு. ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு பல்வேறு ஊழல் புகார்களை அளித்திருக்கிறார். எடப்பாடி திரு. பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையில் நிகழ்ந்துள்ள “கொரோனா கால டெண்டர் ஊழல்” மீது விரிவான புகாரை – ஆதாரங்களுடன் கொடுத்திருக்கிறார்.

“கொரோனா கால ஊழல்”, “கொரோனா தோல்வி” ஆகியவற்றை மூடிமறைக்க – குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் “திசை திருப்ப” வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி திரு. பழனிசாமி.

பட்டியலின – பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகவும் – அவர்களின் சமத்துவ – சமூகநீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சீர்மிகு பணிகளை, இதுபோன்ற “சிறுபிள்ளைத்தனமான”, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் – எடப்பாடி திரு.பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் “ரிங் மாஸ்டர்களோ” களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

“தனது நிர்வாகத் தோல்வியை திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது” : எடப்பாடி அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“அதிகாரம்” மற்றும் “அராஜகத்தின்” துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற “நள்ளிரவு கைது” நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள். இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. “எடப்பாடி” போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது.

“கொரோனா கால ஊழல்களையும்”, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனாவை தடுக்க முடியாமல் முற்றிலும் தோல்வியடைந்து, “அதோகதியாக” நிற்பதையும் மக்கள் மன்றத்திலிருந்து எடப்பாடி திரு. பழனிசாமியால் ஒருபோதும் மறைத்திடவும் முடியாது – அதற்கான தார்மீகப் பொறுப்புகளிலிருந்து எக்காலத்திலும் தப்பித்து விடவும் முடியாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன்!

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்த அதிமுக! ஸ்டாலின் கண்டனம்

மேலும், கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட – திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களின் தூண்டுதலில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொய் வழக்குகள் புனைவது – சட்டவிரோத – ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் போன்ற அராஜக நடவடிக்கைகளைக் கழகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொரோனா என்ற கொடிய வைரசின் தாக்கத்தால் நாடே சிக்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், எடப்பாடி பழனிசாமியின் அரசு அதிகாலை கைது போன்ற கீழ்த்தரமான அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது வெட்கக்கேடானது; கண்டனத்திற்குரியது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பாஜக மற்றும் அதிமுக அரசியல் விளையாட்டுக்காக வன்கொடுமை சட்டத்தை கருவியாக்குவதா? திருமாவளவன் கண்டனம்

0

பாஜக மற்றும் அதிமுக தங்களின் அரசியல் விளையாட்டில் எதிரிகளை பழி வாங்க வன்கொடுமை சட்டத்தை கருவியாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தி.மு.க.,வின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் அமைப்புச் செயலாளருமான திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்களைத் திடுமென தமிழகஅரசு கைது செய்திருக்கிறது.

தலித்மக்களின் மீது மிகுந்த கரிசனம் இருப்பதைப்போலவும், தலித்மக்களை யார் சீண்டினாலும் இழிவுபடுத்தினாலும் வேடிக்கைப் பார்க்கமாட்டோம்; கடுமையாக நடவடிக்கை எடுப்போமென சாதி- மதவெறியர்களையெல்லாம் எச்சரிப்பதைப் போலவும், இந்தியாவிலேயே சாதிய வன்கொடுமைகள் நடக்காத ஒரே மாநிலமாக தமிழகத்தைப் பாதுகாத்து வருவதைப்போலவும் ,அதீத பொறுப்புணர்வுடன் ஆர்.எஸ்.பாரதி அவர்களைக் கைது செய்து தனது சட்டபூர்வமான கடமையை ஆற்றியிருக்கிறது அ.தி.மு.க அரசு. எனவே, தலித்மக்களின் மீதான தமிழக அரசின் அக்கறையைப் பாராட்டாமலிருக்க இயலுமா?

அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித்மக்கள் மீதான அக்கறையா? அதிமுக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

கொரோனா காலத்திலும் தலித் மக்களுக்கெதிராக சாதிக்கொடுமைகள் நடந்துவிடக்கூடாதென கண்ணும்கருத்துமாய் செயல் படுவதால்தான், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் தமிழக அரசின் கடமையுணர்வை நினைவுகூர்வது நம் கடமையல்லவா?

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

பாஜக மற்றும் அதிமுக அரசியல் விளையாட்டுக்காக வன்கொடுமை சட்டத்தை கருவியாக்குவதா? திருமாவளவன் கண்டனம்

கொரோனா மற்றும் முழுஅடைப்பு நெருக்கடி உள்ள இந்தச்சூழலிலும் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்துள்ளன. ஆணவக் கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறி இருக்கிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலமைச்சர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய சீராய்வு கூட்டம்கூட கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

இவையெல்லாம் இந்த அரசு எந்த அளவுக்குத் தலித்மக்கள் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் அக்கறையோடு இருக்கிறது என்பதற்கான அடையாளங்களாகும். இந்நிலையில், அந்த சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித் மக்களின் மீதான அக்கறையா? அல்லது அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கு தலித்மக்களுக்கான ‘தேசிய ஆணையம்’ ஏதேனும் முனைப்பு காட்டியதுண்டா? குறிப்பாக, ஆணவக்கொலைகளைத் தடுக்க அந்த ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அதற்கென ஒரு சட்டம் வேண்டுமென கோருகிறோமே, அதனை பா.ஜ.க அரசு என்றைக்காவது பொருட்படுத்தியதுண்டா?

ஆனால், தி.மு.க கூட்டணியைச் சிதறடிக்கும் அரசியல் விளையாட்டில் தலித்மக்களை பகடைக் காயாகப் பயன்படுத்துவதா? தேசிய ஆணையத்தையும் இதற்காக பா.ஜ.க அரசு பயன்படுத்துவது நியாயமா?

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தி.மு.க.வையும், அ.தி.மு.கவையும் பலவீனப்படுத்தாமல் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பது பா.ஜ.கவுக்குத் தெரியும். இந்நிலையில், அ.தி.மு.கவை முழுமையாகத் தனது பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கும் பா.ஜ.க, தி.மு.கவைப் பலவீனப் படுத்துவதையே முதன்மையான செயல் திட்டமாக வரையறுத்துக் கொண்டு, அரசியல் உள்நோக்கத்தோடுதான் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசியல் பகைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தலித்மக்கள் மீதான அக்கறையா? அதிமுக அரசுக்கு திருமாவளவன் கண்டனம்

பா.ஜ.க வாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க வாக இருந்தாலும் சரி அவர்கள் தமது அரசியல் விளையாட்டுகளை நேரடியாக நடத்துவதே முறையாக இருக்கும். அதற்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைக் கருவியாக்குவதும், தலித்மக்களைப் பலிகடா ஆக்குவதும் ஏற்புடையதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆர்.எஸ்.பாரதி அவர்கள் அ.தி.மு.க அரசுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகளை நடத்திவருவதால் அவரைப் பழிவாங்க வேண்டுமென்கிற உணர்வு மேலோங்கியிருப்பதாலும், தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.கவின் சாதி அரசியல் விளையாட்டுக்கு இணங்கிப்போக வேண்டிய இயலாமைக்கு ஆளாகியிருப்பதாலும் தமிழக அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசின் இப்போக்கு மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

பா.ஜ.க-அ.தி.மு.க நடத்தும் சாதி அரசியலையும், சாதி- மதவெறி சக்திகளின் கூட்டுச்சதியையும் சனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

பொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க பிரதமருக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

0

பொருளாதார முடக்க நிலை பாதிப்புகளில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து இன்று அவர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய ஊடகங்களை மீட்பதற்காக அவற்றுக்கு வழங்கப்படும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை உயர்த்தி வழங்குதல், விளம்பர நிலுவைத் தொகையை வழங்குதல், பத்திரிகை காகிதம் மீதான வரியை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்:

அன்புள்ள பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களுக்கு,

வணக்கம்!

பொருள்: கொரோனா வைரஸ் நோய் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள அச்சு ஊடகங்களுக்கு புத்துயிரூட்டும் வகையில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோருதல்- தொடர்பாக

உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் சுகாதார அடிப்படையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது தடுக்கப்பட்டு விட்ட போதிலும், பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு துறையினரின் பாதிப்பை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும், அப்பாதிப்பை போக்க உதவி செய்யும்படி கோருவதற்காகவும் தான் இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சரி செய்வதற்காகவும் தாங்கள் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தின் அசைக்க முடியாத தூணாக திகழ்வது ஊடகங்கள் தான். நாட்டு நடப்புகளை அனைத்து மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்கும் பணியை ஊடகங்கள் தான் மேற்கொள்கின்றன. எந்த நாட்டில் ஊடகங்கள் மிகவும் வலிமையாக இருக்கின்றனவோ, அந்த நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் இந்திய ஊடகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அச்சு ஊடகங்களை நடத்துவது சவாலானதாக மாறியிருக்கிறது.

அச்சு ஊடகங்களின் முதன்மை வருவாய் செய்தித்தாள்களின் விற்பனையிலிருந்து கிடைப்பதல்ல… விளம்பரங்களின் மூலம் கிடைப்பது தான் என்பதை தாங்கள் அறிவீர்கள். செய்தித் தாள்களின் தயாரிப்பு செலவு அதன் விற்பனை விலையை விட பல மடங்கு அதிகம் எனும் நிலையில், அதிக அளவில் விளம்பரங்கள் வந்தால் மட்டும் தான் தயாரிப்பு செலவுக்கும் விற்பனை விலைக்கும் இடையிலான வித்தியாசத்தை சமன் செய்ய முடியும். எனவே, அச்சு ஊடகங்கள் தடையின்றி இயங்க வேண்டுமானால், அவற்றிற்கு தொடர்ந்து விளம்பரம் கிடைப்பது மிகவும் அவசியமாகும்.

பொருளாதார மந்தநிலை காரணமாகவும், பணப்புழக்கம் இல்லாததாலும் மக்களிடையே நுகர்வு என்பது அடியோடு குறைந்து விட்டது. இத்தகைய சூழலில் தனியார் விளம்பரங்கள் உடனடியாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. நிலைமை சீரடைந்து தனியார் விளம்பரங்கள் கிடைக்க இன்னும் ஓராண்டு வரை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு விளம்பரங்கள் தான் ஊடகங்களுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும். ஆனால், மத்திய, மாநில அரசுகளின் விளம்பர செலவுகள், சிக்கன நடவடிக்கையாக, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளன. இது ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடைப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.

மற்றொருபுறம், விளம்பரங்களை வெளியிட்ட வகையில் அச்சு ஊடகங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரூ.1500 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது. அச்சு ஊடகங்களின் விளம்பர வருவாய் திடீரென முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் நிலுவைத் தொகையை வழங்கினால் தான் அச்சு ஊடகங்களால் நிலைமை சமாளிக்க முடியும்.

இந்தியாவில் பொருளாதார நிலைமை மேம்படும் வரை ஊடகங்கள் செயல்பட வேண்டுமானால் கீழ்க்கண்ட உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

1. செய்தித்தாள்களை அச்சிடுவதற்கான நியூஸ் பிரிண்ட் காகிதம் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

2. அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

3. அச்சு ஊடகங்களுக்கான அரசு விளம்பரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை அச்சு ஊடகங்களின் அமைப்புகள் தங்களிடம் முன்வைத்திருப்பதாக அறிகிறேன். இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் நெருக்கடியில் இருக்கும் போது அவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் இருப்பதால், மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த இரண்டு தினங்களுக்கு இந்த 11 மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமாம்

கோடை வெயில் தமிழகத்தை வாட்டி எடுத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கூட வெப்பம் குறைவதில்லை.

இந்நிலையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு 11 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும் படி, சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும்.எனவே இதன் காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பதிவாகும்” என்று தெரிவித்துள்ளது.

தற்போது ஆர் எஸ் பாரதி கைது! அடுத்து தயாநிதிமாறன் கைதா? ஹச் ராஜா தகவல்

0

இன்று காலை திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை காவல் துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். இன்று அதிகாலையிலேயே சென்னை ஆலந்தூரில் வசித்து வரும் ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த  பிப்ரவரி 15 ஆம் தேதி திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில்  ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து  அவதூறாக பேசியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அந்த கூட்டத்தில் இவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.

இவ்வாறு இவர் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை கண்டித்து ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் சுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.  இந்த புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவு  உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.  இதனையடுத்து ஆர்,எஸ். பாரதி தற்போது இடைக்கால ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த பிரச்சனை அடங்கும் முன்பே தற்போது ஆர்.எஸ்.பாரதி கைது அடுத்து தயாநிதிமாறன் தான் என்று பாஜக தேசிய செயலாளர் சூசகமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது.

திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தலைமை செயலாளரை சந்திக்க சென்ற தயாநிதிமாறன் தாழ்தப்பட்ட மக்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதை கருத்தில் கொண்டு தான் ஹச் ராஜா அடுத்து தயாநிதிமாறன் கைதாக வாய்ப்புள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசை குற்றம் சாட்டிய முதல்வர் – ஆச்சரியத்தில் மக்கள்

முதலமைச்சராக பதவியேறத்திலிருந்து , தற்போது வரை மத்திய அரசிடம் இணக்கம் காட்டி வரும் முதல்வர் பழனிசாமி இது வரை மத்திய அரசை எதற்க்கும் விமர்சித்ததில்லை. அவர் கட்சியைச் சேர்ந்த வேறு யாராவது விமர்சித்தாலும் அவர்களை கட்டுப்படுத்தி வந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று முதன் முறையாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டியுள்ளார் முதவர் பழனிசாமி.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், குடிமராமத்து பணிகள் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் “அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார். தமிழகம் தேசிய அளவில் கொரோனா தடுப்பு பணியில் முதன்மை மாநிலமாக இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா தடுப்பு பணிக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ளதாகவும், இதனை ஈடுகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்”.

முதலமைச்சரின் வெளிப்படையாக மத்திய அரசை குற்றம்சாட்டிப் பேசியது அவரது கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்ட்ராய்ட் ஃபோன்

0

கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பள்ளிகள் தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

அனேகமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படலாம் என்று கருதப்படுவதால் தனியார் பள்ளிகள் ஏற்கனவே காணொளி காட்சி மூலம் வகுப்புகளை துவங்கி விட்டன. தமிழக அரசு ஏற்கனவே வீட்டிலிருந்த படியே மாணவர்கள் படிக்க ஏதுவாக சில ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்ட்ராய்டு அலைபேசி தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக 9ம் வகுப்பிலிருந்து 10ம் தேர்ச்சி பெற்றுள்ள சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 5000 பேருக்கு, ரெட்மி நோட் 5 அலைபேசியை வழங்கியுள்ளது. இதே போல் அடுத்து 11 மற்றும் 12ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்கும் அடுத்த வாரம் முதல் இந்த அலைபேசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாணவர்கள் வீடுகளில் அதிக நேரம் அலைபேசிகளை பயன்படுத்தி வருவதை ஆசிரியர்கள் கண்டித்து வரும் நிலையில் மாணவர்களுக்கு அலைபேசியை வழங்கியிருப்பது அவர்களை படிப்பிலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று ஆசிரியர்கள் தரப்பில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் பயிற்றுவிப்பதற்காகவே அலைபேசியை வழங்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கின்றனர்.