Home Blog Page 5631

மாவீரன் காடுவெட்டி ஜெ குரு குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

0

பாமக சார்பாக ஜெயம்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும்,வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று கடைபிடிக்கபடுகிறது.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கலைக்கோவன் அவரது முகநூல் பக்கத்தில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.

பத்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் ,
இருபது ஆண்டுகள் வன்னியர் சங்கத் தலைவராக இருந்தும் தன் ஆளுமையை தவறாக பயன்படுத்தாமல் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ சொத்து சேர்க்காமல் இறுதிவரை எளிய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார் மாவீரன் காடுவெட்டியார் ( நினைவு நாள்- மே 25)

Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1
Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1

அவர் இறக்கும் போது அவர் வங்கிக்கணக்கில் இருந்தது வெறும் 5000 ரூபாய் மட்டுமே !!! ஆனால் விட்டுச் சென்ற கடன் ஒரு கோடிக்கும் மேல்….
(அவருக்கு சிகிச்சை அளித்த நுரையீரல் மருத்துவர் என்ற முறையில் இந்த உண்மையை நான் அறிவேன்)

அவரை ஜாதி கட்சி தலைவராக மட்டுமே பார்க்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான் –

இரண்டு கோடி மக்களை உள்ளடக்கிய சங்கத்தின் தலைவராக இருந்தும் , அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர் …

அவர் பொறுப்பில் இருந்த வரை ஜாதிக் கலவரங்கள் வடதமிழகத்தில் நடைபெறவில்லை…

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கர் அவர்களுக்கு தமிழகம் முழுவதிலும் பாமக சார்பாக அதிக சிலைகளை நிறுவ முழு ஒத்துழைப்பு கொடுத்தவர்…

அரியலூர் மாவட்டத்தில் இரட்டை குவளை முறையை முற்றிலும் ஒழித்தவர் அவர்…

அவர் இறந்தபோது கூடிய கூட்டத்தில் ,அரியலூர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த எண்ணற்ற தலித் மக்கள் கலந்துகொண்டு அவருக்காக கண்ணீர் வடித்தனர் …

ஒருமுனையில் பசு மாட்டையும் மறுமுனையில் குதிரையையும் கொண்டு சவாரி செய்வது எப்படி சவாலானதோ அதைப்போல்,
இடதுசாரிக் கொள்கை உடைய பாமகவிற்கு அரணாகவும், வலதுசாரி ஜாதிய சங்கத்தின் தலைவராகவும் அவர் ஆற்றிய பணி நமது கற்பனைக்கு எட்டாதவை…

வரலாற்றில் இடம் பிடித்த அந்த போராளிக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசின் ஊழல் – திமுக கூட்டத்தில் தீர்மானம்

0

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட போது, அவருக்கு இடைக்கால பிணையம் கிடைக்க நீதிமன்றத்தில் வாதாடிய கட்சியின் சட்டத்துறையினருக்கும் வாழ்த்து கூறப்பட்டது.

அதிமுக அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

0

கடந்த டிசம்பர் மாதாம் சீனாவின் வுகான் மாகானத்தில் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடுக்க இந்தியா உட்பட பல நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில் சில நாடுகள் எலிகள் மீதான வெற்றிகரமான பரிசோதனைக்கு பின் மனிதர்கள் மீது மருந்து பரிசோதனையை மேற்கொண்டுள்ளது, சில நாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் நடைபெறும் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ இதழான ‘The Lancet’, சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்தை பரிசோதிக்க 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு மாறுபட்ட அளவுகளில் மருந்தை அவர்கள் உடலில் செலுத்தியுள்ளது.

Ad5-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டனர். அது வரை அவர்களது உடலில் எந்த தீவிரமான மாற்றங்களோ, பின் விளைவுகளோ கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.

இந்த தடுப்பு மருந்து சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் போரிடக் கூடியது என்றும் The Lancet இதழ் தனது கட்டுரையில் கூறியுள்ளது.

முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்ததையடுத்து 2வது கட்டமாக 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த அடுத்த கட்ட பரிசோதனையின் முடிவை பொருத்து உலகெங்கும் கொரோனா தொற்றுக்கு மருந்தை ஆராய்ந்து வரும் வல்லுனர்களுக்கு புதிய ஒளியை பாய்ச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடக்கம் – விமானங்கள் விவரம்

0

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த 17ம் தேதி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்தை துவக்க இந்திய அரசு முடிவு செய்தது.

ஏற்கனவே ரயில் போக்குவரத்து துவங்கிய நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ளதால் தமிழகத்திற்கு வரும் 31ம் தேதி ரயில், மற்றும் விமான போக்குவரத்து இயக்க வேண்டாம் என முதல்வர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டார். அதனால் வரும் ஜூன் 1லிருந்து இயக்கப்படும் 200 ரயில்களில் ஒரு ரயில் கூட தமிழகத்திற்குத் திட்டமிடப்படவில்லை

இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கையின் பெயரில் நேற்று இரவு தமிழக அரசு உள்நாட்டு விமான சேவை தொடங்குவதற்கான ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார ஏற்பாடுகளை விமான நிலைய சிறப்பு அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா, சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதா லட்சுமி, சைலேந்திர பாபு உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வை மேற்கொண்டனர்.

விமான நிலையத்தில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

மின்னிலக்க பலகைகளில் கொரோனா விழிப்புணர்வு குறித்த காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப் பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணிகள் இன்று அதிகாலை 2 மணியிலிருந்து விமான நிலையத்தில் குவியத் தொடங்கினர்.

காலை 06.35 மணிக்கு இண்டிகோ விமானம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அதனைத்தொடர்ந்து மற்ற விமானங்களும் புறப்பட்டன.

இன்று சென்னையிலிருந்து இயங்கப்படும் விமானங்கள்

  • டெல்லி – 6:35 – INDIGO
  • பெங்களூர் – 6:45 – INDIGO
  • மதுரை – 7:05 – INDIGO
  • பெங்களூர் – 7:15 – SPICEJET
  • போர்ட் பிளேர் – 8:35 – INDIGO
  • டெல்லி – 8:55 – AIR ASIA
  • கோயம்புத்தூர் – 9:15 – SPICEJET
  • கவுஹாத்தி – 9:25 – INDIGO

கீழ்கண்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

  • மதுரை – 5:40 INDIGO
  • மும்பை – 6 : 15 INDIGO
  • மும்பை – 6 :25 SPICEJET
  • பெங்களூர் -7: 20 SPICEJET
  • சேலம் 7: 25
  • கொல்கத்தா 7 :35 INDIGO
  • கெஹாத்தி 7 : 45 SPICEJET
  • கொச்சி 8 : 00
  • பெங்களூர் 8 : 15 AIR ASIA
  • ஹைதராபாத் 8: 30 INDIGO
  • புனே 9 : 00 INDIGO
  • மும்பை 9 : 00 INDIGO
  • ஹைதரபாத் 9 : 05 AIR ASIA
  • பெங்களூர் 9 :20 SPICEJET
  • ஹைதராபாத் 9 :30 INDIGO

இந்தியா – ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா தொற்று

0

கடந்த ஜனவரி மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று அறியப்பட்டத்து. அதனை தொடர்ந்து ஒவ்வொரு இந்தியா மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவி வந்தது.

ஒற்றை இலக்கம், இரட்டை இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது மூன்று இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. இதில் நேற்று ஒரே

இது வரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7097 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர் கொரோனா தொற்றா இறந்திருப்பதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் 3000 பேருக்கு மேல் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. அந்த மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1635 ஆக அதிகரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் ஈரானை முந்தியுள்ளது இந்தியா.

இந்தியா முழுவதும் இதுவரை 57, 605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது தற்போதைக்கு ஆறுதலாக கருதப்படுகிறது.

கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலிருந்து ரயில்கள்!

ஊரடங்கில் தளர்த்தல் ஏற்பட்டு கடந்த 12ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் முதற்கட்டமாக 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதில் டெல்லியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து டெல்லிக்கும் ஒரு ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னயில் கொரோனா தொற்று அதிமகாக இருப்பதால் மே 31 வரை தமிழகத்தில் ரயில்களை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக்கொண்டதால் சென்னைக்கு இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அட்டவணையை வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கு ரயில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்திற்குள் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் குளிர்சாதன வசதி இல்லாத ரயில்களை இயக்குமாறு ரயில்வேயை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னையிலுள்ள சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களை தவிர்த்து பிற ரயில் நிலையங்களிலிருந்து ரயில்களை இயக்கலாம் என்றும் ஆலோசனையை கூறியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 4 ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே அனுமதி கேட்டுள்ளது.

அதன்படி கோயமுத்தூர் – மயிலாடுதுறை இடையே ஜன சதாப்தி சிறப்பு ரயிலை இயக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மதுரை – எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை விரைவு ரயிலை விழுப்புரம் வரை மட்டும் இயக்கவும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. திருச்சியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி ரயிலை நாகர்கோயில் வரை இயக்கவும் ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் – சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி ரயிலை காட்பாடி வரை இயக்கவும் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதி விரைவில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வழிகாட்டுதல் விதிப்படி சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் கொரோனாவால் பலி – அதிர்ச்சியில் உறவினர்கள்

நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு கொரோனா நோய்க்கான சிகிச்சை முறைக்கான வழிகாட்டுதலை அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது. அப்படி சமீபத்தில் அரசு மாற்றியமைத்த விதிமுறை ஒருவர் உயிரை பறித்துள்ளது.

கடந்த 9ம் தேதி சென்னையைச் சேர்ந்த 54 வயது நபர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 54 வயது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதிய வழிகாட்டுதல் படி மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள் படாமலேயே அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டுக்கு சென்ற மூன்று நாட்களில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கடந்த 21ம் தேதி அவரது குடும்பத்தார் கொண்டு சென்றுள்ளனர். ஆனால அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இறந்த பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசின் புதிய வழிகாட்டுதல் விதி கேள்விக்குரியதாகியுள்ளது.

ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு

ஒரு வினாடிக்கு ஆயிரம் HD திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிவேக இன்டர்நெட் தொழில்நுட்ப வசதியை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சமீப காலங்களில் திரைத்துறையில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. அதே போல தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதை போல வீட்டிலிருந்து படம் பார்ப்பதையும் மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.மேலும் இணையதளத்தில் படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பார்க்க நிறைய இணையதளங்கள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது வாழ்க்கை முறையில் இன்டர்நெட் என்பது மக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்டர்நெட் இல்லாவிட்டால் உலகமே இருண்டது போல ஆகிவிடும் என்று நினைக்கும் அளவிற்கு இன்டர்நெட் மக்களுக்கு அத்தியாவசியமாகிவிட்டது.

அதே நேரத்தில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அதன் வேகம் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிவேக இன்டர்நெட் வசதியை ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் வேகமானது ஒரு விநாடிக்குள் 1000 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்யும் அளவிற்கு அதிவேகமானது என்று கூறப்படுகிறது. மேலும் இதற்காக ஒரு விநாடிக்கு 44.2 டெராபிட்டில் இந்த இன்டர்நெட் வேகம் உருவாக்கப்பட்டு இந்த தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒரு வினாடிக்கு 1000 HD படங்களை பதிவிறக்கம் செய்ய அதிவேக இன்டர்நெட் கண்டுபிடிப்பு

பொதுவாக கண்ணாடி சிப் ஒன்றில் வழக்கமாக 8 லேசர்கள் பயன்படுத்துவார்கள் என்றும் இவர்கள் கண்டுபிடித்த இந்த தொழில்நுட்பத்தில் அந்த லேசர்களுக்கு பதிலாக மைக்ரோ காம்ப் என்கிற புதிய சாதனத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதால் இந்த அதிவேக இன்டர்நெட் சாத்தியபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோனாஷ், ஸ்வின்பேர்ன் மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிவேக இன்டர்நெட் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பமானது மெல்போர்னில் உள்ள 18 லட்சம் குடும்பங்களின் அதிவேக இணைய இணைப்புகளை ஆதரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 பேர் பலி

0

ர‌ஷியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜெலெனோடோல்க் நகரில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த மருத்துவமனையில் உள்ள இதய நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

திடீரென்று ஏற்பட்ட இந்த தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்து கண் இமைக்கும் நேரத்தில் மருத்துவமனை முழுவதிலும் பரவியது.இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

மேலும் இந்த ஆஸ்பத்திரியில் பணி புரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நோயாளிகள் என அனைவரும் அலறியடித்தபடி ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினர். ஆனாலும் இந்த தீ விபத்தில் சிக்கி 3 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 2 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 13 ஆம் தேதி செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஒரு மருத்துவமனையில் இதேபோல ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 5 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

கேட்பாரற்று நடுரோட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை!

0

கேட்பாரற்று நடுரோட்டில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்

இன்று காலை திருப்பூர் பெரியார் காலனி பகுதியில் சாலை ஓரமாக யாரும் கேட்பாரற்ற நிலையில் பச்சிளம் பெண்குழந்தை ஒன்று அப்பகுதி பொதுமக்களால் கண்டறியப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களே ஆன தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் இருந்த அந்த பச்சிளம் பெண் குழந்தையை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் உடனடியாக அருகிலுள்ள காவல்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த குழந்தையை எடுத்துச் சென்றனர் .

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பின்னர் குழந்தைகள் நல துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து குழந்தைகள் நலத் துறையினர் அங்கு வந்தனர். பின்னர் அந்த குழந்தையை தனியார் மருத்துவமனையில் இருந்து மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பிறந்து சில நாட்களே ஆகும் பச்சிளம் குழந்தை சாலையில் கேட்பாரற்று கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.