Home Blog Page 5645

நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க

நீங்கள் மது பிரியரா? – அப்ப இந்த விதிகளை படிச்சுட்டு கடைக்கு போங்க

மதுக்கடைகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். இது அரசின் கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே உயர்நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டதன் காரணமாகவே டாஸ்மாகை மூட நேரிட்டது. இதனால் இனி எச்சரிக்கையாக இருக்க முடிவெடுத்துள்ள அரசாங்கம் சமூக இடவெளி உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதி செய்ய டாஸ்மாக் ஊழியர்களிடம் உத்தரவிட்டுள்ளதாம்.

நாளை டாஸ்மாக் மறுபடி திறக்கப்படும் நிலையில் ஒரு மணி நேரத்திற்கு 70 பேர் வீதம் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே ஒரு கடையில் மதுபானம் விற்க அரசு முடிவெடுத்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் விதமாக 7 நிறங்களில் டோக்கன் தயாரித்துள்ளது. ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிறத்தில் டோக்கன் நேரம் குறிப்பிடப்பட்டு தரப்படுமாம்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க மது குடிப்போர் ஆதார் கார்டு கொண்டுவர தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெவித்துள்ளது. அதேசமயம் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டை உச்சநீதிமன்றம் தளர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஒழுங்கு டிஜிபி திரிபாதி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றித் தெரிவித்துள்ளார்.

கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்

  • 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும். மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு மறு நாளுக்கு வரவழைக்க வேண்டும்.
  • உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமுக இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். அதற்கான உரிய நடவடிக்கையை சரியான முறையில் எடுக்க வேண்டும்.
  • டோக்கன் விநியோக முறை குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் அந்தந்தப் பகுதி அதிகாரிகள் பேசி நடைமுறையைச் செய்துகொள்ளவேண்டும். டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்க வேண்டும்.
  • டோக்கன் விநியோக கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுக்க அதிகமாக டோக்கன் விநியோக கவுன்ட்டர்கள் அதிகரிக்கச் செய்யவேண்டும். பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும். சமூக விலகலுடன் நிற்பதற்கு இடைவெளி விட்டு பெயிண்ட் மூலம் மார்க் செய்ய வேண்டும்.

விரைவில் அனைத்து மதுபானக்கடைகளில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த அரசுக்கு தான் மதுபிரியர்கள் மீது எவ்வளவு அக்கறை?

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! டாஸ்மாக் வழக்கில் அதிரடி காட்டிய தமிழக அரசு

0

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தொடர்ந்து போராடிய தமிழக அரசின் சட்ட போராட்டத்திற்கு இது முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து ஏறக்குறைய 40 நாட்களுக்கு மேல் மதுவிற்கு அடிமையானவர்கள் யாரும் மதுவை தொடாமல் அதிலிருந்து விலகியே இருந்தனர். இந்நிலையில் இந்த வாய்ப்பை வபயன்படுத்தி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சுதாரித்து கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் ஏற்பாடுகளை செய்தது. இதனையடுத்து பாமக தொடர்ந்த வழக்கில் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. மிக நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் முதல்நாள் வசூல் 170 கோடியை தாண்டியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் அனைத்தும் பெரும்பாலான இடங்களில் மீறப்பட்டன.

குறிப்பாக மதுபானங்களை வாங்க வந்தவர்கள் சரியாக சமூக இடைவெளி இல்லாமல், முகத்தில் மாஸ்க் கூட அணியாமல் வரிசையில் நின்றார்கள். மேலும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு கூட்டத்தில் மது வாங்கினார்கள். இதனால் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ள கொரோனா மீண்டும் டாஸ்மாக் காரணமாக பரவும் அச்சம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நிபந்தனைகளை மீறியதாக டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 17ம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாமக வழக்கறிஞர் பாலு,வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மைய்யம் வழக்கறிஞர் ஆகியோர் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்தது. இன்று நடந்த இந்த மனு மீதான விசாரணையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மாஸ்க்’ அணிந்து இதை செய்தால் உயிருக்கு ஆபத்து – மருத்துவர்கள் எச்சரிக்கை

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் முக கவசம் அணிந்ததே ஒரு இளைஞரை தற்போது உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது.

சீனாவை சேர்ந்த சாங் எனும் 36 வயது இளைஞர் கடந்த 9ம் தேதி முக கவசம் அணிந்து ஜாகிங் செய்ய சென்றுள்ளார். அவர் முக கவசம் அணிந்திருந்தால் ஓட துவங்கிய சில மணி துளிகளிலேயே மூச்சு விட சிரமப்பட்டுள்ளார். இருந்த அதை பொருட்படுத்தாமல் ஜாகிங்கை தொடர்ந்துள்ளார். எப்போதும் 4 கிலோமீட்டர் வரை ஓடுபவர் அன்று 6 கிலோ மீட்டர் ஓடியுள்ளார். அதன் பின்னர் வீட்டை சென்றடைந்தவர் நெஞ்சு வலி ஏறபட, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது நுரையீரல் கடும் பாதிப்படைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

'மாஸ்க்' அணிந்து இதை செய்தால் உயிருக்கு ஆபத்து - மருத்துவர்கள் எச்சரிக்கை

இது குறித்து மருத்துவர் சென் பாவ்ஜன், அவர் முககவசம் அணிந்து ஓட்டத்தை மேற்கொண்டதால், அவரது நுரையீரலுக்குள் சரியாக ஆக்சிஜன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் நுரையீரல் அவர் இதயத்தின் மீது பாரத்தைப் போட்டதால் அவர் பாதித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதித்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவித்துள்ள மருத்துவர் உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் போது முக கவசம் அணிவது உயிருக்கு ஆபத்தாக அமையும் என எச்சரித்துள்ளார்.

கூட்டணியில் கொடுத்த 2 எம்பி சீட்டுக்காக இப்படியுமா? திருமாவளவனை வச்சு செய்யும் சமூக ஆர்வலர்கள்

0

கொரோனவால் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ள மக்களுக்கு உதவ திமுகவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தி.மு.க. எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இவ்வாறு இந்த மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் இந்த சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் சண்முகம் நடந்து கொண்ட விதம் குறித்து அவர் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்தனர்.

மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமை செயலாளர் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்றும் அவர் உணர்ச்சிவசமாக விமர்சித்துள்ளார்.

சமூக நீதி மற்றும் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதாக திமுகவினர் பேசி வரும் இந்த நிலையில் தயாநிதி மாறனின் இந்த சாதி அடிப்படையிலான பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி,சாதிய பாகுபாடுகளை அவர்கள் இன்னும் மறக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. மேலும் சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்புபடுத்தி தயாநிதிமாறன் பேசிய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுகவின் கூட்டணி கட்சி தலைவரும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்பவருமான திருமாவளவன் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால்,அந்தவேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல். என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டணிக்காகவும் 2 எம்பி சீட்டுக்காகவும் இப்படியெல்லாம் முட்டு கொடுக்கலாமா என விசிக தலைவர் திருமாவளவன் அவர்களை சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

தயாநிதி மாறன் MP : என்ன கொஞ்சம் மரியாதையா நடத்துங்க இப்படி அசிங்கபடுத்த நான் ஒன்றும் தாழ்த்தபட்டவன் இல்லைங்கயா .. “இதுவே வேற கட்சிக்காரன் எவனாவது சொல்லிருக்கனும்?! இந்நேரம் உக்கிரமாகிருப்போம்” இப்படிக்கு – சமூகநீதி உபிஸ்

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி பதிவிட்டுள்ளது:

வேறு யாராவது மறைமுகமாக சொல்லி இருந்தா கூட உக்கிரமா தான் ஆகி இருப்பாங்க.. ஆனா இவங்க சொல்லலாம்.. எவிடன்ஸ் கதிர், திருமுருகன் காந்தி, சுபவீ இவங்க கூட mute mode க்கு போய்டுவாங்க.. ஏன்னா உருட்டு அப்படி..

https://twitter.com/AMRarmy_/status/1261138939567411200

ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் 3700 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்

0

ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் 3700 பேரை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம்

கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என்ற விரக்தியைக் கொடுத்து வருகிறது கொரோனா தொற்று.

இதனால் கடந்த ஏப்ரலில் இந்தியாவில் 12.5 கோடி பேர் வேலையிழந்ததாகப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக தங்கள் நிறுவனத்தில் வாடிக்கை சேவையில் பணி செய்து வந்த 3700 பேரை வேலையிலிருந்து நீக்கியுள்ளது உபர் (UBER) நிறுவனம். இந்த ஊழியர்கள் உபர் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 14 சதவீதத்தினர் ஆவர்.

ஜூம் (Zoom) வீடியோ கான்ஃபரின்சிங்க் மூலமாக UBER தலைமையகத்திலிருந்து இந்த பணியாளர்களைத் தொடர்பு கொண்டவர்கள் ” இன்று தான் உபருடன் உங்கள் கடைசி வேலை நாளாக இருக்கும்” என்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து உபர் தலைமையகத்தின் பீனிக்ஸ் மையத்தின் தலைவர் ராஃபின் சாவேலியோ வீடியோ காலில் பேசுகையில் , தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உபரின் சவாரி வணிகம் பாதிக்கு மேலாக குறைந்துவிட்டது. மேலும், கடினமான மற்றும் துரதிர்ஷ்ட்டவசமான உண்மை என்னவென்றால் எங்கள் ஊழியர்களுக்கு போதுமான வேலை இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எங்கள் நிறுவனத்தின் இ-பைக்குகள், இ-ஸ்கூட்டர்கள் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்

இது நடந்தால் கல்லூரிகளை உடனடியாக திறப்போம் – தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று தற்போது ஜூன் 1ம் தேதி முதல் தேர்வு நடைபெறவிருக்கிறது.

அதே போல் கல்லூரிகளுக்கும் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, நெறிமுறைகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியவரிடம் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்தவர் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.” என்றார்.

இது நடந்தால் கல்லூரிகள் திறப்போம் – தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று ஆலோசனை நடைபெற்று தற்போது ஜுன் 1ம் தேதி முதல் தேர்வு நடைபெறவிருக்கிறது.

அதே போல் கல்லூரிகளுக்கும் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து கல்லூரிகள் திறந்த பின் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தேர்வுகளை நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததாகத் தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து இந்தியா முழுவதும் கல்லூரிகளை நெறிமுறை படுத்தும் UGC எனப்படும் பல்லைக்கழக மானியக்குழு, நெறிமுறைகளை அறிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரியில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியவரிடம் கல்லூரிகள் திறப்பு குறித்தும், செமஸ்டர் தேர்வு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்தவர் “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெறும். கொரோனா தாக்கம் குறைந்த பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறும்.” என்றார்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ ‘ரோபோக்கள்’ அறிமுகம்!

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், செவிலியர்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்த அரசு, சாஸ்திரா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ரோபோக்களை பயன்படுத்த முடிவெடுத்தது.

இதனையடுத்து கொரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டு வரும் மதுரை அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ரூ.3 லட்சம் மதிப்பிலானது. 3.2 கிலோ எடையுடைய இந்த ரோபோக்கள் ஒவ்வொன்றும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ பணியாளர்கள் அருகில் சென்று பொருட்களை வழங்குவதற்கு பதிலாக இந்த ரோபோக்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்.

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவ 'ரோபோக்கள்' அறிமுகம்!

15 கிலோ அளவிற்கு உணவு பொருட்களை எடுத்து செல்லும் திறன்கொண்ட இந்த ரோபோக்களிலுள்ள கேமராக்கள் மூலம் நோயாளி மருத்துவ நிர்வாகத்தினருக்கு தகவல் அனுப்ப முடியும்.

இதே போல் மருத்துவர்களும் கூட நோயாளிகளுக்கு சொல்ல விரும்புகின்ற விஷயங்களை வாய்மொழியாக சொல்லி அந்த செய்தியினை நோயாளியிடம் கொண்டு சேர்க்க முடியும்.

வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?

0

வாங்கக் கடலில் உருவாகிறது ‘ஆம்பன்’ புயல் – தமிழகத்தின் நிலை என்ன?

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘ஆம்பன்’ என இந்த புயலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைத்திருக்கும் இது, இன்று மாலை தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது. 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும் அதன் பிறகு வடகிழக்கு திசையிலும் ‘ஆம்பன்’ புயல் நகர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் “வங்கக் கடலில் நாளை (சனிக்கிழமை) ‘ஆம்பன்’ புயல் உருவாக வாய்ப்புள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

இதை தொடர்ந்து, நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாற வாய்ப்புள்ளது. இது மே 17 ஆம் தேதி வரை வடமேற்கு திசையிலும், 18 ஆம் தேதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்வதால் 18, 19 ஆகிய தேதிகளில் மணிக்கு 75 -85 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சில நேரங்களில் மணிக்கு 95 கிமீ வேகம் வரை காற்று வீசும்.

எனவே, அந்த சமயங்களில் தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல், அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்றார்.

‘ஆம்பன்’ புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் கரையைக் கடக்காது என்று சொல்லப்படுகிறது. இது, வடக்கு மற்றும் வட கிழக்கு திசையை நோக்கி பயணிக்கவிருப்பதால் ஒடிசா அல்லது வங்கதேசத்தில் இது கரையைக் கடக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தைப் பொருத்த வரை இந்த புயலால் பெரிய அளவில் மழை இருக்காது என்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.

திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய தயாநிதிமாறன்! அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின்

0

திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்திய தயாநிதிமாறன்! அதிருப்தியில் திமுக தலைவர் ஸ்டாலின்

கொரோனா பாதிப்பினால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் வருமானம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்கி வருகிறது. அதே போல திமுக தலைமையில் ஒன்றிணைவோம் வா மூலமாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசுக்கு கோரிக்கை வைக்கும் திட்டத்தை தொடங்கினர்.

இவ்வாறு திமுகவினரால் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை தி.மு.க. எம்பிக்கள் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து வழங்கினர். இவ்வாறு இந்த மனுக்களை தலைமை செயலாளரிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்த திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் தலைமைச் செயலாளர் சண்முகம் மீது பல்வேறு குற்றசாட்டுக்களை வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், தலைமை செயலாளர் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு கோரிக்கை மனு அளிக்க வந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று குற்றம்சாற்றியுள்ளார்.மேலும் “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினர். நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?”, என்றும் அவர் உணர்ச்சிவசமாக விமர்சித்துள்ளார்.

Dayanidhi Maran Press Meet Issue-News4 Tamil Online Tamil News
Dayanidhi Maran Press Meet Issue-News4 Tamil Online Tamil News

சாதி ஒழிப்பு மற்றும் பெரியார் கொள்கைகளை கடைபிடிப்பதாக திமுகவினர் பேசி வரும் இந்த நிலையில் தயாநிதி மாறனின் இந்த சாதி அடிப்படையிலான பேச்சு, உயர்ந்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற ஜாதி வெறி,சாதிய பாகுபாடுகளை அவர்கள் இன்னும் மறக்கவில்லைஎன்பதையே உணர்த்துகிறது. மேலும் சம்பந்தமேயில்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்புபடுத்தி தயாநிதிமாறன் பேசிய இந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பம் முதலே கொரோனா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசின் மீது தொடர்ந்து குற்றசாட்டுக்களை கூறி வருவது மக்கள் மத்தியில் அரசியலாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறிவரும் நிலையில் திமுக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் மக்களை சந்திக்க ஆரம்பித்தது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

இந்நிலையில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக காட்டிக்கொள்ளும் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் வைத்து கொண்டே தயாநிதிமாறன் இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது திமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமை செயலாளரை சந்திக்க சென்ற நோக்கத்தை மறந்து சாதாரண பிரச்சனையை பெரிதாக்கி கட்சிக்கும் பின்னடைவு ஏற்படுத்தியதால் திமுக எம்பி தயாநிதிமாறன் மீது திமுக தலைவர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

10ம் வகுப்பு பொது தேர்வு – உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மத்திய அரசிடம் இது குறித்து கருத்து கேட்டார். 10ம் வகுப்பு பெரும்பாலான வேலைகளுக்கு அடிப்படைத் தகுதி என்பதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து ஜூன் 1ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்து அட்டவணையை வெளியிட்டார் செங்கோட்டையன். கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்திலிருக்கும் இந்த நிலையில் இந்த தேர்வை தற்போது நடத்துவது அவசியமா என அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அரசின் தேர்வு அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஸ்டாலின் ராஜா என்பவர், தொடர்ந்துள்ள வழக்கில் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை 61 பேர் இந்த நோய் பரவல் தாக்கி இறந்துள்ளனர். 8 ஆயிரத்து 718 பேர் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வருகிற ஜூன் 1- ந் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தாக்குதல் அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும், நோய் தொற்றை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். ஏற்கனவே தமிழகத்தில் 200 குழந்தைகள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு பொது தேர்வை நடத்தினால், கொரோனா வைரஸ் தொற்று மாணவர்களிடையே பரவி, மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை வருகிற ஜூன் 1ம் ந்தேதி நடத்த தடை விதிக்க வேண்டும். அமைச்சரின் உத்தரவை ரத்து செய்யவேண்டும். என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொது தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் இனி தமிழக அரசு மனது வைத்தால் மட்டுமே பொது தேர்வு தள்ளி போக வாய்ப்புள்ளது.