Home Blog Page 5679

கொரோனா தொற்று 16 லட்சத்தை கடந்து அச்சுறுத்தல் : பதற வைக்கும் பட்டியல்!

0

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 16 லட்சத்து 3 ஆயிரத்து 719 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 655 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது, உலக அளவில் இந்த நோயால் பலியானவர்களின் எண்ணிக்கையில் பாதியை தொடுகிறது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் முதல் 35 இடங்களில் உள்ள நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு.

கொரோனா தொற்று 16 லட்சத்தை கடந்து அச்சுறுத்தல் : பதற வைக்கும் பட்டியல்!

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 5,865 ஐ கடந்துள்ளது, அதில் பலியானார்களின் மொத்த எண்ணிக்கை 169 ஆக தெரிகிறது. இதுவரை சிகிச்சை பெற்று 477 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாநில அளவிலான விபரங்கள் பின்வருமாறு(நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்கள் / குணமடைந்தவர்கள் / இறந்தவர்கள்):

மகாராஷ்டிரா – 1364/125/97
தமிழ்நாடு – 834/27/08
டெல்லி – 720/26/12
தெலுங்கானா – 471/45/11
கேரளா – 357/92/02
ராஜஸ்தான் – 463/42/07
உத்தரபிரதேசம் – 410/31/04
ஆந்திர பிரதேசம் – 363/10/04
கர்நாடகா – 197/30/06
குஜராத் -198/26/17
மத்திய பிரதேசம் -259/0/16
ஜம்மு & காஷ்மீர் -184/06/04
மேற்கு வங்கம் – 101/16/05
பஞ்சாப் – 130/18/10
ஹரியானா – 156/18/02
பீகார் – 58/17/01
அசாம் – 29/0/0
சண்டிகர் -18/07/0
உத்தர்கண்ட் – 35/5/0
லடாக் – 15/11/0
அந்தமான் & நிக்கோபார் -11/0/0
சத்தீஸ்கர் – 18/09/0
கோவா – 7/01/0
இமாச்சல பிரதேசம் – 28/02/01
ஒடிசா – 44/02/01
பாண்டிச்சேரி – 6/1/0
மணிப்பூர் – 01/01/0
ஜார்க்கண்ட் – 13/0/0
மிசோரம் – 01/0/0
அருணாச்சலப் பிரதேசம் – 1/0/0
திரிபுரா – 01/0/0

தமிழகத்தில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது. அதில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆக தெரிகிறது, பூரண குணமடைந்து 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டட்ட அளவில் நோய் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை(புதிதாக தொற்று ஏற்பட்டோர்/ மொத்த எண்ணிக்கை);

சென்னை -07/163
கோயம்புத்தூர் -0/60
திண்டுக்கல் -0/46
நெல்லை -16/56
ஈரோடு – 26/58
திருச்சி -0/36
நாமக்கல் -8/41
ராணிப்பேட்டை -0/27
செங்கல்பட்டு -4/24
மதுரை -1/25
கரூர் -0/23
தேனி -1/40
தூத்துக்குடி -05/22
விழுப்புரம் -0/20
திருப்பூர் -04/26
கடலூர் – 0/13
சேலம் – 01/14
திருவள்ளூர் – 0/13
திருவாரூர் – 01/13
விருதுநகர் – 0/11
தஞ்சாவூர் – 0/11
நாகப்பட்டினம் – 01/12
திருப்பத்தூர் – 05/16
திருவண்ணாமலை – 0/09
கன்னியாகுமரி – 08/14
காஞ்சிபுரம் – 0/06
சிவகங்கை – 01/06
வேலூர் – 05/11
நீலகிரி – 0/04
தென்காசி – 01/03

இந்த தகவல்கள் வெவ்வேறு நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!

0

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரத்தை குறித்து எச்சரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்!

கொரோனா பாதிப்பை தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வீட்டுக்குள்ளே முடங்கி கிடப்போர் பட்டினி சாவால் இறந்து விட கூடாது எனவும், இதையும் முக்கிய பிரச்சனையாக கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா நோய்த்தொற்று அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவினைப் பின்பற்றி, தமது வாழ்க்கைக்கான அன்றாடத் தேடலைக் கைவிட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கிறார்கள். இது இன்றைய நெருக்கடியான காலத்தின் இன்றியமையாத்தேவை என்பதை அனைவருமே உணர்ந்து நடந்து வருகிறார்கள். நோய்த்தொற்றிலிருந்து காத்துக் கொள்வதுபோலவே, உணவுத் தட்டுப்பாடின்றி காக்கவேண்டியதும் அவசியம்.

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழக்கமாகக் கிடைக்கும் வருமானம் குறைந்துள்ள அல்லது இல்லாத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது; அச்சுறுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பாக, உணவுப் பொருட்களில் துவரம் பருப்பு போன்றவற்றின் விலை 30% உயர்ந்துள்ளது. பூண்டு, மிளகாய் போன்றவற்றின் விலை 100%க்கு மேல் அதிகரித்துள்ளது. புளி, மிளகு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

காய்கறிகளின் விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதாலும், இறைச்சி விலையும் அதிகரிப்பதாலும் மக்களின் அன்றாட உணவுத் தேவைக்குரிய அனைத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் இடைத்தரகர்களுக்கும் பதுக்கல்காரர்களுக்கும் கொள்ளை லாபம் அடிக்கவே வழிவகுக்கும். காரணம், நெல் உள்ளிட்ட தானியங்களையும் காய்கறிகளையும் விளைவிக்கும் விவசாயிகளிடம் பழைய விலையிலேயே கொள்முதல் செய்வதால் அவர்களும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலைமை தொடருகிறது.

சிறு வணிகர்கள் – காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வோர் உள்ளிட்ட பல தரப்பினரும் இந்த விலையேற்றத்தால் போதுமான அளவில் கொள்முதல் செய்ய முடியவில்லை. இந்த அசாதாரண சூழலைப் பயன்படுத்தி இலாப நோக்கத்துடன் செயல்படக்கூடியவர்களைத் தடுத்து நிறுத்தி, அத்தியாவசியப் பொருள்களின் தடையில்லாத போக்குவரத்தை உறுதி செய்து, விலையேற்றத்தையும் பதுக்கலையும் கட்டுப்படுத்தும் பொறுப்பு மத்திய – மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

அத்துடன், 15 நாட்களாக எவ்வித வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் அன்றாட உடலுழைப்புத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஏழை – நடுத்தர வர்க்கத்தினர், ஆகியோரின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி, வறுமை மெல்லப் புகுந்து வாட்டி வருவதையும் அரசாங்கம் உற்றுக் கவனித்து, அந்தப் பிரிவினரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்திட வேண்டும்.

ஏப்ரல் 1 வரையிலான 144 தடையுத்தரவைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைகளுக்கான நிவாரணம் ரூ.1000 என்பது, 21 நாட்கள் ஊரடங்கு காலத்திற்குப் போதுமானதாக இல்லை. தி.மு.க உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், தன்னார்வலர்களும் பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குத் தொடர்ந்து உதவி வருகிறபோதும், அதுவே முழுமையானதாக அமைந்து விடாது.

கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைகளைப் பெருவாரியான மக்களுக்கு விரைவாக நடத்தி, ஏழை எளிய நடுத்தர மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவு செய்வதவற்கான நிவாரணத் தொகை – உணவுப் பொருட்களை நியாயமான அளவுக்கு வழங்குவதே மத்திய – மாநில அரசுகளின் உடனடி செயல்பாடாக அமைந்திட வேண்டும்.

டெல்லியில் தனியார் ஆய்வகம் ஒன்று, நான்கு சக்கர வாகனத்திற்குள்ளேயே சம்பந்தப்பட்டோரை உட்கார வைத்து, 15 நிமிட நேரத்தில் பரிசோதனைகளை முடித்து முடிவுகளை அறிவிக்கும் வகையிலான விரைவு சோதனையை மேற்கொண்டு வருவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. விரைவுச் சோதனைகளை அதிகப்படுத்தும் வகையில் இத்தகைய நடைமுறைகள் பற்றி, அரசுகள் தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

நோய்த்தொற்று அபாயத்திலிருந்து மக்களைக் காப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கொரோனவைப் போலவே மற்றொரு கொடூரம்தான், பட்டினிச் சாவு!

கொரோனாவைத் தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். பட்டினிச் சாவைத் தடுப்பதில் அரசுகளின் பணி அதிமுக்கியம். கொரோனாவின் இறுதி விளைவாக, பட்டினிச் சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை அலட்சியம் செய்துவிடாமல், சரியாகத் திட்டமிட்டு இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

0

அத்துமீறி பறந்த இந்திய உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு

பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி பறந்ததாக இந்திய உளவு விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து பறந்து வந்த இந்திய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய உளவு விமானம் ஒன்று இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதி அமைந்துள்ள சங்க் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பறந்து வந்தது. இவ்வாறு உளவு பார்ப்பதற்காக, பாகிஸ்தான் எல்லை பகுதிக்குள் அத்துமீறி 600 மீட்டர் தூரம் வரை அந்த சிறியரக உளவு விமானம் நுழைந்தது.  இந்திய விமானத்தின் அந்த அத்துமீறிய செயலுக்கு பாகிஸ்தான் ராணுவம் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி தக்க பதிலடி கொடுத்தது.

இந்திய ராணுவத்தின் இதுபோன்ற அத்துமீறிய செயல்பாடுகள், இரு நாடுகளுக்கிடையே ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிமுறைகளையும்,மேலும் இருநாட்டு வான்வழி ஒப்பந்தத்தையும் மீறிய செயலாகும்.  மேலும், 2003-ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவம் அவமரியாதை செய்வதை தான் இந்த ஊடுருவல் உணர்த்துகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதைபோலவே கடந்த காலங்களிலும் இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், அதை இந்தியா தகுந்த ஆதாரங்களுடன் மறுத்து வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி செம்பாவின் தரை லோக்கல் குத்து : வைரலாகும் பழைய வீடியோ!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான ராஜா-ராணி சீரியலின் நாயகி தான் ஆலயா மானசா. இந்த சீரியலில் செம்பா என்ற பெயரில் அழைக்கப்படும் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த ஆலயாவுக்கு ஜோடியாகவும் கதையின் நாயகனாகவும் சஞ்சீவ் நடித்திருந்தார். ஆரம்பத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் காதல் என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக வலம் வந்தாலும் தங்களுக்குள் எந்த உறவும் இல்லை என்று மறுத்து வந்தனர். அதன்பிறகு சஞ்சீவும் ஆலயாவும் தங்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிய பிறகு தங்களுக்குள் இருந்த காதலை வெளிப்படையாக சொன்னார்கள்.

இதற்கிடையில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் முன்னிலையில் இருவருக்கும் வெகுவிமர்சையாக திருமணம் நடந்துமுடிந்தது. தற்போது இந்த இளம் தம்பதியர் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் நடிகை ஆலயா மானசா ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஆலயா தர லோக்கலாக குத்தாட்டம் போட்டு அதனை சுற்றி இருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யும் விதமாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை

0

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அடுத்து என்ன செய்ய வேண்டும்? மருத்துவர் ராமதாஸ் கூறிய அதிரடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இது போதுமானது அல்ல என்றும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட “கொரோனா ஆபத்து விலகவில்லை: சோதனைகளை அதிகரிப்பதே தீர்வு!” என்ற தலைப்பிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு ஆணை எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் கொரோனா தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த மூன்று மந்திரங்கள் ‘‘தனிமைப்படுத்துங்கள், சோதனை செய்யுங்கள், தொடர்புடையவர்களை கண்டுபிடியுங்கள்’’ என்பவை தான். இந்த மூன்று மந்திரங்களில் முதல் மந்திரத்தை செயல்படுத்துவதில் மட்டும் தான் பாதி கிணறு தாண்டியிருக்கிறோம். மக்களை ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தனிமைப்படுத்தி வைத்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக் கொண்டு கொரோனாவை ஒழித்து விட்டதாக நிம்மதியடைய முடியாது.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு என்பது பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடு தான். இது நோய்ப்பரவலை தடுத்திருக்கிறது என்றாலும் கூட கொரோனா வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 738 பேர் உட்பட இந்தியா முழுவதும் 5610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் நோய்ப்பரவல் பல மடங்கு குறைவாகும். இது தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கு நடந்த நன்மையாகும்.

மற்றபடி, கொரோனா பரவல் ஆபத்து அப்படியே தான் உள்ளது. காட்டாற்றை அணை போட்டு தடுத்து வைப்பதும், எரிமலையின் வாயை மூடி வைப்பதும் எப்படியோ, அது போன்றது தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் ஆகும். அணையை திறந்து விட்டால் எத்தகைய அழிவு ஏற்படுமோ, எரிமலை வாய் திறந்தால் எத்தகைய பேரழிவு ஏற்படுமோ, அதை விட மோசமான பேரழிவு கொரோனாவை ஒழிக்காமல் ஊரடங்கை விலக்கினால் ஏற்படும். கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டு, ஊரடங்கை விலக்கினால் மட்டும் தான் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அது தான் முழுமையான வெற்றியாக இருக்கும்.

கொரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தான் நாம் இதுவரை மேற்கொண்டிருக்கிறோமே தவிர, வைரசை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இன்று வரை நாம் தொடங்கவில்லை. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அரசால் கூறப்படும் எண்ணிக்கையை விட, அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே வராமல் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தான் கொரோனா வைரசை பரப்புபவர்கள். அத்தகைய தன்மை கொண்டவர்களை கண்டுபிடித்து, சோதனை செய்து குணப்படுத்துவதுடன், அவர்களிடமிருந்து நோயைப் பெற்றவர்களையும் அதே நடைமுறைகளுக்கு உள்ளாக்கும் போது தான் நோய் கட்டுப்படுத்தப்படும்.

அதற்காக உலக சுகாதார நிறுவனம் போதித்த கடைசி இரு மந்திரங்களான சோதனை செய்யுங்கள், தொடர்புடையோரை கண்டுபிடியுங்கள் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். அதிக எண்ணிக்கையில் கொரோனா ஆய்வுகளை மேற்கொள்ளும் போது தான் கொரோனா கிருமிகளுடன் இருப்போரை அடையாளம் கண்டு குணப்படுத்த முடியும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன. ஆனால், நேற்று வரை 6095 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 87 சோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசுத் தரப்பிலும், தனியார் தரப்பிலும் சேர்த்து 20 கொரோனா ஆய்வு மையங்கள் உள்ளன. அவற்றில் ஒரு மையத்திற்கு, ஒரு நாளைக்கு சராசரியாக 4.40 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. இது போதுமான எண்ணிக்கை அல்ல.

கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் மட்டும் தான் கிடைத்தன. ஆனால், இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு 10 லட்சம் பி.சி.ஆர் சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது. தமிழகத்திலுள்ள 20 சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு பணி வேளை மட்டும் பணியாற்றினால் 1300 மாதிரிகளையும், இரு பணி வேளைகள் பணியாற்றினால் 2,500 மாதிரிகளையும் ஆய்வு செய்ய முடியும். தமிழகத்திற்கு மட்டும் குறைந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் கிடைக்கக்கூடும் என்பதால் தொண்டைச்சளி ஆய்வுகளை அதிகரிக்கலாம்.

இவை தவிர இரத்த மாதிரி சோதனைக்கான ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. அவை நாளைக்குள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்ப்பரவல் அதிகமுள்ள பகுதிகள் எவை, எவை என்பதும் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில், தமிழகத்தில் கொரோனா ஆய்வுகளை இப்போது இருப்பதை விட குறைந்தது 10 மடங்காவது அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா அறிகுறி உள்ள அனைவரையும் சோதனைக்கு உள்ளாக்கி, தேவைப்படுபவர்களுக்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும்.

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றி விட முடியும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

0

தமிழகம் 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு! தமிழக நிலவரம் என்ன.?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்ட நிலையில் இருந்து வருகிறது. மேலும் இது 3 ஆம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்ட நபர்களை சோதனை செய்வதற்காக தமிழக அரசின் சார்பில் 12 பரிசோதனை ஆய்வகங்களும் தனியார் சார்பில் 7 பரிசோதனை ஆய்வகங்கள் உட்பட மொத்தம் 19 ஆய்வகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்த பரிசோதனை ஆய்வகங்களின் மூலம் இதுவரை 6,095 பேருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 738 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட 344 பேருக்கான மாதிரி முடிவுகள் வரவேண்டும். இதுவரை 21 பேர் இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை பாதுகாப்பு பொருட்களான N95 முகக்கவசம், பாதுகாப்பு உடைகள், ஆன்ட்டி பயாட்டிக் மருந்துகள் மற்றும் சானிடைசர்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மேலும் 2,500 வென்ட்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 4 லட்சம் ரேபிட் கிட்ஸ்களை வாங்குவதற்காப ஆர்டர் செய்து இருக்கிறோம். இன்று 50 ஆயிரம் கிட்ஸ்கள் வந்துவிடும். ஏற்கனவே தமிழகத்தில் 3,371 வென்ட்டிலேட்டர்கள் மற்றும் 32,371 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சென்றவர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் தேதி வரை மட்டுமே 2 ஆயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் அத்தியாவசிய தேவைகளுக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று வேளாண்மை மற்றும் உள்ளாட்சித்துறையின் மூலமாக 3,500 வாகனங்கள் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன. 111 குளிர்பதன கிடங்குகள் வைக்கப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மக்களுக்கு தேவையான கிடைக்காத அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அண்டை மாநிலத்தில் கொள்முதல் செய்யப்பட்டு மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். மேலும் 1.94 கோடி குடும்ப அட்டைகளுக்கான நிவாரண நிதி ரூ.1,000 வழங்கப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு மூன்று வேளை உணவு ஏற்பாடு செய்ததோடு, முதியோர் உதவித்தொகை வீட்டிற்கே சென்று வழங்கப்படுகிறது. அங்கன்வாடியில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் கட்ட நிலையில்தான் உள்ளது மேலும் அது 3 ஆம் கட்ட நிலைக்குச் செல்ல வாய்ப்புண்டு. நோயின் தீவிரத்தை அனுசரித்தே ஊரடங்கு நீட்டிப்பு குறித்த முடிவு எடுக்கப்படும். நாளுக்கு நாள் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இந்த நிலைமையை ஆய்வு செய்ய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

0

ஓரங்கட்டப்படும் ஓ.பி.எஸ். மகன்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்! நடந்தது என்ன?

பிரதமர் மோடி அறிவித்திருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக அக்கட்சியின் நவநீதகிருஷ்ணன் எம்பி கலந்து கொண்டது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் அனைத்தும் பங்கேற்கலாம் என அறிவிக்கபட்டிருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை கலந்து கொள்ள தயார் படுத்தி வந்தன.

இதில் திமுக் சார்பாக டி.ஆர். பாலு கலந்து கொள்வார் என அக்கட்சியின் தலைவரான மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.அந்த வகையில் அதிமுகவின் சார்பாக தேனி தொகுதி எம்.பியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் குமார் தான் பிரதமருடனான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலோனோர் எதிர்பார்த்தனர்.

ஆனால் அதிமுகவின் சார்பாக நவநீதகிருஷ்ணனை இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வைத்து யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறையும் கட்சியினரின் எதிர்பார்ப்புகளையும், கணிப்புகளையும் தவிடு பொடியாக்கிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பாக என்னவெல்லாம் பேச வேண்டும் என்பது பற்றிய குறிப்பை நவநீதகிருஷ்ணன் எம்பியிடம் எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாரித்து வழங்கியுள்ளது. இதனையடுத்து இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நவநீதகிருஷ்ணன் தமிழக முதல்வர் தரப்பில் வழங்கப்பட்ட தகவலின் படி பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் துணை முதல்வரான ஓ.பி.எஸ். தரப்பு ஆதரவாளர்கள் எதிர்பார்த்தபடி ரவீந்தரநாத் குமார் எம்பிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!

0

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!

தனது ஒருமாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த மக்கள் காவலர் மயில்வாகனன்.!! பொதுமக்கள் பாராட்டு..!!
மாவட்ட ஆட்சியரிடம் நிவாரணநிதி அளிக்கும் காவலர் மயில்வாகனன்

கொரோனா நிவாரண நிதியாக தனது ஒருமாத ஊதியமான ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 572 ரூபாயை (1,14,572 ரூபாய்) மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு கேட்டிருந்தார்.

இதனையடுத்து தனியார் நிறுவனங்கள், சினிமா திரைப்பட நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண நிதி அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் பணமாகவும், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருளாகவும் உதவி வருகின்றனர். மேலும் முகக்கவசம் உள்ளிட்ட அவசிய பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்து தீவிர பணியாற்றி வருகின்றனர்.

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை பிடித்து நல்வழியில் அறிவுரை கூறுவது, வாகன ஓட்டிகளை எச்சரிப்பது, எந்த வரையறையும் இல்லாமல் சட்டத்தை மீறி செயல்படுபவர்களுக்கு நூதன தண்டனை மற்றும் வழக்கு உள்ளிட்ட தீவிர கண்காணிப்பு பணியில் தமிழக போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் தனது காவல் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிவாரண நிதியாக தனது ஒருமாத சம்பளம் 1.14 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்களிடம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் முன்பு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களிடம் நட்பான முறையில் பேசி கலவரம், வன்முறை மற்றும் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியான வழியில் சிறப்பாக கொண்டு சென்றதும் இதே காவல் அதிகாரி மயில்வாகனன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்!

0

கொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்!

இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் கோரதாண்டவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சீனாவில் உருவான கொரோனா என்னும் வைரஸ் தொற்று கிருமி உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. உலகளவில் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 5 ஆயிரத்து 734 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 166 பேர் உயிரழந்துள்ள நிலையில், 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 72 பேர் இறந்துள்ளனர். 117 நபர்கள் கொரோனா வைரஸில் இருந்து குணமாகியுள்ளனர். அதிக நோயாளர்களுடன் மகாரஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2 வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் இந்தூர் நகர் பகுதியில் மட்டும் உயிரிழப்பு 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

0

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு! கொரோனா பாதிப்பால் முதல்வர் அதிரடி நடவடிக்கை!!

உலக நாடுகளில் உயிர் சேதங்களை அதிகம் ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை பல நாடுகள் கடைபிடித்து வருகின்றன. இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியது. இதுவரை 14 நாட்கள் ஊரடங்கு முடிந்தும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. மேலும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, தெலுங்கானா கர்நாடகா போன்ற மாநிலத்தில் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் 5 ஆயிரம் பேர் பாதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு 166 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தின் முதல்வர் நவீன் பட்நாயக் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு வருகின்ற ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஜூன் 17 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் மூடியே இருக்கும் என்று கூறியுள்ளார். இதுவரை ஒரிசாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு ஒடிசாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.