Home Blog Page 5699

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

0

நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! 36 வயதில் ஏற்பட்ட சோகமான சம்பவம்; சினிமா துறையினர் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர் சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு திடீரென இறந்த சம்பவம் சினிமா துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப் படத்தில் நடிகர் சந்தானத்துடன் தனது நடிப்பை காட்டியவர் சேதுராமன். இவர் தமிழ்திரையில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் மருத்துவராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

சினிமாவில் சக்கபோடு போடு ராஜா மற்றும் வாலிப ராஜா போன்ற படங்களில் நடித்த மருத்துவர் சேதுராமன், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் தனது மருத்துவர் தொழிலை சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தமிழ் சினிமாவின் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தனஞ்செயன் இளம் நடிகர் சேதுராமன் இறப்பு தனக்கு அதிர்ச்சி தருவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை அதுல்யா ரவி தனது டுவிட்டரில், அவரது இறப்பை நம்பவே முடியவில்லை இது பேரதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இறக்க வேண்டிய வயதா இது அடகடவுளே என்று மாரடைப்பால் சேதுராமன் இறந்த செய்தியை வெங்கட் பிரவு பதிவு செய்துள்ளார்.

இளம் வயதில் நடிகர் இறந்த சம்பவம் சினிமா துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

0

குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1,000 உங்கள் வீடு தேடி வரும்! கலெக்டர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பாதிப்பினால் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்ப அட்டைக்கான நிவாரண தொகை ரூ.1000 நியாயவிலை கடைகளின் மூலம் உங்கள் வீடு தேடி வரும் என்று திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அதிரடியாக அறிவிப்பு செய்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில், மக்களின் அன்றாட தேவைக்கான சூழலை அறிந்து ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்கும் 1000 ரூபாய் நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களான இலவச அரிசி, எண்ணெய், பருப்பு போன்றவை ஏப்ரல் மாதம் தருவதாக தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், குடும்ப அட்டைகளுக்கான
ரூ.1,000 நிவாரணத் தொகை உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் என்று கவலை வேண்டாம் என்றும் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக அவர் கூறியதாவது;

கொரோனா வைரஸை தடுக்க மாவட்டம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழக அரசு வழங்கும் நிவாரண தொகையை வாங்குவதற்கு பொதுமக்கள் ஒன்று கூடி விடுவார்கள். இந்த அசாதாரண சூழலில் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போகும். மேலும் கொரோனா பரவாமல் இருக்க அந்தந்த நியாயவிலை கடையின் மூலம் அவரவர் வீட்டுக்கே நிவாரண தொகை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறினார்.

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

0

மலேசிய அரண்மனை ஊழியர்களுக்கு கொரோனா! மன்னர் மற்றும் ராணியை தனிமையில் வைத்துள்ளனர்!

மலேசிய அரண்மனையில் ஊழியர்களாக பணிபுரியும் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலேசிய மன்னர் மற்றும் ராணியை தனிமைப்படுத்தி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைத்துள்ளனர்.

சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா தொற்றுக் கிருமி உலக நாடுகளில் பரவி இதுவரை 22,000 பேருக்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. உலகில் முன்னேறிய நாடுகளான சைனா, இத்தாலி, அமெரிக்கா, வடகொரியா போன்ற நாடுகளில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் மலேசியா நாடும் பாதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இதுவரை 2,031 பேர் கொரோனா தொற்றினால் பாதித்துள்ளனர். 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலேசிய மன்னரின் அரண்மனையில் பணிபுரியும் வேலையாட்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மலேசிய அரண்மனை அறிக்கை வெளியிட்டு, அதில் ஏழு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களுக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்று அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆபத்தான சூழலில் மலேசிய மன்னர்
“கிங் சுல்தான் அப்துல்லா’வுக்கும் மற்றும் மலேசிய ராணி “துங்கு அஸிசா அமினா மைமுனா’வுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. பின்னர் பாதுகாப்பு கருதி இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க 2 வாரத்திற்கு தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சைக்காக 350 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை பார்வையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் : தயார் நிலையில் இருப்பதாக வீடியோ வெளியிட்டார்!

0

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தின் சுகாதாரத்துறை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காக்க இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டு வருகிறது. இதற்கென தனது முழு நேரத்தையும் செலவிட்டு வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதார துறையினருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள கொரோனா வார்டை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டார். அதில் 350 படுக்கைகள் உட்பட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் என அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பு இல்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

0

ஊரடங்கை முழுமையாக செயல்படுத்தி 100 சதவீதம் பாதிப்பில்லாமல் காக்கும் ஊராட்சிக்கு ₹50000 பரிசு

திருத்தனி அருகே உள்ள திருவாலங்காடு ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜீவா விஜயராகவன் அவர்கள் தங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனோ வைரஸ் பாதிப்பு இப்போது இந்தியாவையை பாதிக்க தொடங்கி உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது‌. 21 நாட்கள் ஊரடங்கை பாரத பிரதமர் நரேபனந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். மக்தளை ஒத்துழைக்கச் செய்வது உள்ளாட்சி பிரதிநிதிகளின் கடமை ஆகும்.

நமது ஊராட்சியின் சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் கிருமி நாசினிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சிகளில் தூய்மைப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தியும் மக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியும் மக்களை தனித்து இருக்குமாறு அறிவுரை வழங்குதல் வேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளும், ஊராட்சி அலுவலர்களும், மருத்துவப் பணியாளர்களும் இணைந்து மக்களுக்கு வேண்டிய அனைத்து அடிப்படை தேவைகளையும் நிவர்த்தி செய்தல் வேண்டும். மேலும் எந்த ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு 100 சதவீதம் மக்களை காக்கிறீர்களோ அந்த ஊராட்சிக்கு எனது சொந்த செலவில் ₹50000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

0

இந்தியாவின் 21 நாள் ஊரடங்கை பாராட்டி ஐ.நா சபை அறிக்கை – கொரோனோவை கட்டுப்படுத்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்

இந்தியாவில் கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள் முழு ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார். இதனையடுத்து இந்திய மக்கள் தொகையில் சுமார்‌ 5 கோடி அதிதியாவசிய பணியாளர்களை தவிர்த்த மற்ற பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் தங்களை தனிமை படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை பாராட்டி ஐ.நா சபை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மிகப்பரந்த அளவிலான திடமான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சுமார் 125 கோடி மக்களுக்கும் மேல் வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர். இதுவே உலகல அளவில் மிகப்பெரிய ஊரடங்காக பார்க்கப்படுகிறது. இதுவரை 180 நாடுகளில் 4.20 இலட்சம் மக்களுக்கும் மேல் கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்டு அதில் 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் அதிகாரப்பூர்வ தகவலின்படி இதுவரை 656 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது‌. இந்தியாவில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை கண்டறிதல் அவர்களை தனிமைப்படுத்துதல் மேலும் அவர்கள் சார்ந்த நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்ற செயல்கள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்தியா மேற்கொள்ளும் மிகப்பரந்த அளவிலான நடவடிக்கைகளை பாராட்டுவதாகவும் இந்தியாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயார் எனவும் ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் குறிப்பிட்ட நேரத்தில் தான் கிடைக்கும் : வெளியான அதிரடி அறிவிப்பு!

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவது பலருக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் பொது இடங்களில் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு அரசு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் நேரங்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது;
காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 9 வரை செயல்படும்.
மளிகை கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும்.
உணவகங்கள் காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலால் கொரோனா பரவுவதை ஒரளவு கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பால் மற்றும் பெட்ரோல் பங்குகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செயல்படும் : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் இதுவரை 21 ஆயிரம் பேரின் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதில் முதல் கட்டமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு மக்களை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பால் விற்பனையை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படும் என்று பால் விற்பனையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் அதிகாலை 3 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே விற்பனை செய்யப்படும் இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்து மனு அளித்துள்ளது. அந்த மனுவில் பெட்ரோல் வினியோக நேரம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

மேலும் அரசு ஊழியர்களின் வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேரம் வழங்க முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை அமலுக்கு வந்தால் பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாடுவதை தவிர்க்கலாம் என்று பெட்ரோல் விற்பனை யாளர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?

0

ஊறுகாய் தயாரிப்பாளரான நடிகர்! அம்மாவும் மகனும் சேர்ந்து செய்த ஸ்பெஷல் சைடிஷ்! எந்த நடிகர் தெரியுமா.?

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் தயாரித்த நடிகரின் செயல்பாடு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் கொரோனா பரவாமல் இருக்க இந்திய மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டில் முடங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. அடுத்த இருபத்தோரு நாட்களுக்கும் ஊரடங்கு தொடரும் என்றி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சினிமா துறையினர் நடத்தி வந்த சீரியல் மற்றும் திரைப்பட ஷூட்டிங் வேலைப்பாடுகள் அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் பல நடிகைகள் ஷூட்டிங் இல்லாத காரணத்தால் முகநூல், இன்ஸ்டாகிராம் இணையத்தில் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

இவர்களின் வரிசையில் தெலுங்கு சினிமா படங்களில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் நாக சவுரியா. வீட்டில் சும்மா இருக்காமல் தனது அம்மாவுடன் சேர்ந்து வீட்டுக்கு தேவையான பிரபல சைடிஷான ஊறுகாயை தயாரித்துள்ளார். தான் தயாரித்த ஊறுகாயுடன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி நிவாரண நிதி வழங்கிய சினிமா நட்சத்திரம் : டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து பாராட்டும் பொது மக்கள்!

0

பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை இந்தியாவில் 650 க்கும் மேற்பட்ட நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 13 பேர் இறந்துள்ளனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 42 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தள்ளனர் மற்றவர்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் ராஜ்யசபா எம்பி மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 3 கோடி ரூபாய் தனது தொகுதி நிதியில் இருந்து வழங்கியிருந்தார். இதனை பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரம் பவன் கல்யாண் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு 2 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக கூறியுள்ளார். அதில் மத்திய அரசுக்கு 1 கோடி ரூபாயையும், தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு தலா 50 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பவன் கல்யாணின் இந்த செயலை பாராட்டி பொது மக்கள் #PawanKalyalforPeople என்று டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த ட்ரெண்டிங் 25 ஆயிரம் டுவிட்டுகளை கடந்து உலக அளவில் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.