Home Blog Page 5704

அமெரிக்கா கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கலாம்! ஈரான் அதிரடி குற்றச்சாட்டு!

0

அமெரிக்கா கொரோனா வைரஸை உருவாக்கியிருக்கலாம்! ஈரான் அதிரடி குற்றச்சாட்டு!

உலகையே ஆட்டி வரும் உயிர்கொல்லி வைரஸ் ஆன கொரோனா வைரஸ் , இதனால் உலகமே கதிகலங்கி வருகிறது.உலக அளவிற்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

192 நாடுகளுக்கு பரவிய இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,000 ஆயிரத்து தாண்டியுள்ளது . இந்தியாவில் கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400 ஐ நெருங்கப் போகிறது.

சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. தற்போது இத்தாலியில் போல ஈரானிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஈரானில் ஒரே நாளில் 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலி எண்ணிக்கை மொத்தம் 1685 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி அரசு தொலைக்காட்சியில் பேசினார் அப்போது அவர் கூறியதாவது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பலமுறை உதவுவதாக முன்வந்தது. அவர்கள்தான் இந்த வைரஸை உருவாக்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அது உண்மையா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. ஆனால் அமெரிக்கா எங்களுக்கு உதவ முன்வருவது விந்தையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

0

பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு பிறந்த நாள்: கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 3 ஆம் சீசனில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை தமிழ் பெண்ணாக செய்தி வாசிப்பாளராக கொஞ்சும் தமிழ் மொழியில் நம் அனைவரின் மனதையும் ஈர்த்தவர். சீசன் 1 ஓவியாவை போல சீசன் 3 இவர் மக்களிடம் வேகமாக பிரபலமாகி விட்டார்.

ஓவியாவை போல இவருக்கும் லாஸ்லியா ஆர்மி என ரசிகர்கள் கூட்டம் உருவானது. அந்த பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களும் இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் லாஸ்லியா தற்போது நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் .இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவிற்கு இன்று பிறந்தநாள் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் லாஸ்லியாவிற்கு வாழ்த்து மழை குவிந்து கொண்டு வருகிறது.

இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட்

0

இதைக் கொண்டாட கூடாது இது தான் தொடக்கம்! ஊரடங்கு உத்தரவு குறித்து மோடி டிவிட்

இன்று நாடு முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை அடுத்து இந்த ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.மக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். இதனையடுத்து இன்று நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை எல்லோரும் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் கோரிக்கையை அடுத்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருந்தனர். அதுமட்டுமில்லாமல் இன்று மாலை 5 மணி அளவில் தங்கள் வீட்டின் பால்கனி அருகே வந்து கைதட்டினார்கள். இது கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த செயலில் ஈடுபட்டார்கள்.

இந்த ஊரடங்கு உத்தரவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார். இந்த ஊரடங்கு இன்று இரவு 9 மணி அளவில் நிறைவு பெறுகிறது. ஆனால் இதை நாம் கொண்டாடக் கூடாது கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் இதனை வெற்றி என்று யாரும் கருதக்கூடாது நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

0

3 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்கள் வரும் 31 ஆம் தேதி வரை முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயதுடைய முதியவர் கொரோனா பாதிப்பிற்கு பலியாகி உள்ளார் என்ற தகவல் குஜராத் அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் மட்டும் இன்று ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்துள்ள 75 மாவட்டங்களில் செயல்பாடுகளை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

0

முப்பதாயிரம் பேர் பணியாற்றும் செய்யாறு சிப்காட் – அலட்சியம் காட்டுறதா கம்பனி நிர்வாகம்?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்பேட்டையானது செஸ் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தொழிற்சாலையில் சுமார் முப்பாயிரத்தகற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிற்சாலையின் இருப்பிடமானது செய்யாறில் இருந்து 15 கிலோமீட்டர் காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் என என மத்தியில் அமைந்துள்ளது.

இத்தொழிற்சாலையில் பணியாற்றும் கர்பினிப் பெண்கள் மற்றும் குழந்தையுடன் பணிக்கு வரும் பெண்களுக்கு மட்டும் தற்போது விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் செய்யாறு, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை என முக்கிய நகரங்களில் இருந்தும் தொழிலாளர்கள் பணிக்கு வருகின்றனர்.

இந்த தொழிற்பேட்டையில் பணியாற்றும் ஊழியர்களிடையே கொரோனோ வைரஸ் தொற்று குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்தள் வருவதால் யாருக்கேனும் கொரோனா தொற்று இருந்து அது நம்மையும் பாதிக்க கூடுமோ என்ற அச்சத்தில் தொழிலாளர்கள் உள்ளதாக தெரிகிறது.

விடுமுறை விடுமா நிர்வாகம் என்று வாட்சப் குழுவில் செய்தி பரப்பியவரை தொழிற்சாலை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதும் குறிப்படத்தக்க விடயமாக உள்ளது. பணியாளர்கள் உள்ளே செல்லும் போது அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று தெர்மாமீட்டர் சோதனை மட்டுமே செய்யப்படுவதாக தெரிகிறது.

இது மட்டுமே நிச்சயம் போதாது என்றும் வைரஸ் தொற்று நடவடிக்கையை தொழிற்சாலை நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் முடிந்தவரை தொழிற்சாலைக்கு விடுப்பு அளித்தால் ஊழியர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொண்டு மிகவும் பாதுகாப்பாகவும் அச்சமின்றியும் இருக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

0

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான விசு மரணம்! அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

தமிழ் சினிமாவில் 80 களில் நடிகர், இயக்குனர் ,கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு . தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக களமிறங்கி ரஜினிகாந்த் நடித்த “தில்லுமுல்லு” படத்திற்கு வசனகர்த்தா ஆனார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றினார். இவர் இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்” படம் மெகா ஹிட்டானது.

இதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கினார். நீண்டகாலமாக சினிமாவிலிருந்து ஓய்வில் இருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார். இன்று வயது மூப்பின் (74) காரணமாக மரணமடைந்தார். இவரது மரணம் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

0

ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சீனாவில் உருவான உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் தோற்று இன்று உலகையே முடக்கிப் போட்டு இருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது

இந்த வைரஸ் நோயை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருக்கும்படி ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு உத்தரவு நாளை காலை 5 மணி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பணிகள் தொடர எந்த தடையும் இல்லை என்றும் இந்த ஊரடங்குக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொது மக்களின் நலம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மூன்று மாவட்டங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு அதிரடி உத்தரவு!

0

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் சுய ஊரடங்கை கடைபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஊரடங்கால் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த மாவட்டங்களை முடக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

அதற்கென பட்டியல் இன்று வழங்கியுள்ளது, அந்த பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. வடமாநிலங்களில் மும்பை, கொல்கத்தா, டெல்லி, உள்ளிட்ட முக்கிய நகரங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட எந்த சேவையும் வழங்கப்படாது, அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வழங்க வழிவகை செய்யப்படும். இந்த மாவட்டங்களை முடக்க காரணம் மேற்கொண்டு நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

இதனை புரிந்து கொண்டு மக்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

0

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போது உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்திற்கு மேல் இந்த கொடிய வைரசால் இறந்துள்ளனர். 3 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 346 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது கத்தார் நாட்டில் இருந்து வீடு திரும்பிய 38 வயது உடைய வாலிபர் வைரஸ் பாதிப்பு காரணமாக பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று இருந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த நபர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இந்தியாவில் 6 ஆக உயர்ந்துள்ளது.

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

0

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.

தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் “கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவா நடித்து வெளிவந்த ஜிப்ஸி படத்தின் கதாநாயகி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது எனக்கு நடிகர் தனுஷை மிகவும் பிடிக்கும் எனவும் அவருடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருக்கிறது என்றும் தளபதி விஜய்யை திருமணம் செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.