Home Blog Page 5705

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

0

தல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கும் ரஜினி, கமல் ,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ,தனுஷ் இவர்கள் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் பிரபலமானவர்கள்.

இந்திய கிரிக்கெட் வீரரான தோனி ஐபிஎல் போட்டிக்காக சென்னையில் இருக்கும்போது அளித்த பேட்டியில். தற்போது கொரோனா காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள்தான் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் எனக்கு மிகவும் பிடித்த டாப் 3 நடிகர்களில் முதல் இடத்தை பிடித்து இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்றும் . அதன் பிறகு சிங்கம் படத்தில் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும் எனவும் தனக்கு பிடித்த நடிகர்களில் சூர்யாவும் ஒருவர் என குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்தால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் திருவிழா போல் கொண்டாடுவார்கள். இவர்களைப்பற்றி உலக அளவில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி பேசியிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் குஷியாகி உள்ளனர் .

ஊரடங்கை மீறி நடத்தப்பட்ட சிஏஏ போராட்டம் : கூட்டத்தில் குண்டு வீசப்பட்டதால் பரப்பு!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்வேறு நாடுகளில் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் அதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக இன்று ஒரு நாள் மட்டும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க பாரதப் பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் செய்யப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பல்வேறு இடங்களில் குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த நோய் பரவலை காரணம் காட்டி மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது என்று இஸ்லாமிய அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இதனால் மத்திய அரசின் சுய ஊரடங்கு அழைப்பை மீறி சிஏஏ-க்கு எதிராக போராட்டம் டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் குவிக்கப்பட்டு டெல்லி மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வீடில்லாமல் சாலை ஓரங்களில் தங்கியிருந்த மக்களை ஊரடங்கு சமயத்தில் பாதுகாக்க புதிய முயற்சி : அசத்தும் தமிழக அரசு!

0

பல்வேறு நாடுகளில் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுக்க பாரதப் பிரதமர் மோடி இன்று ஒருநாள்(22/03/2020) பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு இருக்க அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்று மாநில அரசுகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் பல ஊர்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த மக்கள் ஊரடங்கில் சாலை ஓரங்களில் வசித்துவரும் வீடில்லாத மக்கள் என்ன செய்கிறார்கள் என்ற அச்சம் அனைவர் மனதிலும் இருந்து வந்தது. இதனைப் போக்க சென்னை மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை ஒன்றை எடுத்து உள்ளது.

சாலை ஓரங்களில் வசித்து வரும் வீடில்லாத மக்களை தங்க வைக்க சமுதாய நலக்கூடங்கள் மற்றும் காப்பகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 51 காப்பகங்கள் அமைக்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சென்னை மாநகராட்சியின் இந்த செயலை பார்த்த சமூக நல ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

0

அண்ணியுடன் அடிக்கடி ஆட்டம்போட்ட கணவன்! படுக்கையை தடுக்க நினைத்த மனைவிக்கு நேர்ந்த கதி?

வெளிநாட்டில் இருந்து வந்து அண்ணியுடன் நெருக்கமாக இருந்த கணவரை தட்டக்கேட்ட மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் ஊரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு தனலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த முனீஸ்வரன் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மனைவி தனலட்சுமியிடம் வேலையின் காரணமாக நகைகளை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கோபத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாமாகவே காவல் நிலையத்தில் சரண்டர் ஆகியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்து வந்த முனீஸ்வரன் சம்பள பணத்தை அண்ணியிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது அண்ணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தனலட்சுமி வறுமையில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

குடும்ப வறுமையை போக்க மகளிர் சுயுஉதவி குழுவின் மூலம் உதவியை பெற்று தென்னை கீற்றுகளை பின்னி அதன் மூலம் வந்த வருமானத்தின் மூலம் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து வந்த முனீஸ்வரன் மனைவியை கவனிக்காமல் அண்ணியுடன் அதிகமான நெருக்கத்தை காட்டியதாகவும், இதன்மூலம் குடும்பத்தில் பிரச்சினைகள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

கள்ளத்தொடர்புக்கு மனைவி இடையூறாக இருந்த காரணத்தால் நகை கேட்பது போல் சண்டைபோட்டு மனைவியை கொன்றது கடைசியில் தெரியவந்தது. தவறான உறவிற்கு தடையாக இருந்த மனைவியை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ அதிரடியாக நீக்கி நடவடிக்கை : கொந்தளிப்பில் ரசிகர்கள்!

0

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க பல நாடுகள் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி இந்திய பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒரு நாள் ஊரடங்கு மேற்கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஞாயிற்றுக்கிழமை(22/03/2020) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கை கடைபிடிக்குமாறு அதில் கூறியுள்ளார்.

இதனையடுத்து சினிமா பிரபலங்கள் சிலர் இது அவசியமான ஒன்று மக்கள் இதனை உதாசீனப்படுத்த வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். நடிகர் ரஜினிகாந்தும் அவ்வாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த வீடியோவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை உறுதி செய்து ட்விட்டர் நிறுவனம் அந்த வீடியோவை ரஜினியின் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

0

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் தற்போது அங்கு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் மக்களுக்கு மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது. இதில் தற்போது அமெரிக்கா வெற்றி கண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசிட்ரோமைசின் , ஹைட்ராக்சி குளோரோகுயின் ஆகிய மருந்துகளை கொரோனா பாதிப்பிற்கு பயன்படுத்தலாம் என்றும் இரண்டு மருந்துகளையும் ஒன்றாக சாப்பிட்டால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என செய்தி வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்

0

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்

கொரோனோ பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் போதிய மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல்வேறு மாநிலத்தின் முதல்வர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளதாவது 14 வது நிதிக்குழுவின் அடிப்படையில் மாநில அரசுகளின் உள்ளாட்சி துறைகளுக்கு 2570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் நகரப்பகுதிகளுக்கு 1629 கோடி ரூபாயும் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 940 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊய்மையை நிலைநாட்டவும் கேட்டுக்கொர்டுள்ளார்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்

கொரோனோ வைரஸ் தடுப்பு நிதியாக தமிழகத்திற்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஆந்திராவிற்கு 870 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறிய நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 793 பேர் பலி! உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா!!

0

ஒரே நாளில் 793 பேர் பலி! உச்சகட்ட உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனா!!

உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்று கிருமியால் ஒரே நாளில் 793 பேர் பலியான கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதுவரை உலகளவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13,000 பேரை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து மேலும் அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் இதுவரை 4800 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஒரே நாளில் 793 பலியாகியுள்ளதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவம் உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்தும் வகையில் நடைபெற்றுள்ளது.

  • ஈரான் நாட்டில் இதுவரை 20,610 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    1,566 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ஸ்பெயின் நாட்டில் 25,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1375 பேர் தொற்று அதிகமாகி பலியாகியுள்ளனர்.
  • பிரான்ஸ் நாட்டில் இதுவரை 562 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • இங்கிலாந்தில் 178 பேரும், இந்தியாவில் 5 பேரும் இறந்துள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என்றாலும் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனாவை விரட்டும் விதமாக இன்று இந்தியா முழுக்க தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்ற அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஊடகம், பத்திரிகை மற்றும் சமூகவலைதளங்கள் உட்பட பல்வேறு தரப்பில் விழிப்புணர்வு உண்டாகி வருகிறது.

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

0

கொரோனோ நோயாளிகளுக்கு புதிய‌ ஆண்ட்ராய்டு செயலியை உருவாக்கியது தமிழ்நாடு அரசு இரவு பகல் பாரமல் உழைத்த தொழில்நுட்பக் குழு

உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள உள்ள பெயர் கொரோனோ என்று அழைக்கப்படும் கோவிட்-19 வைரஸ். கொரோனோ வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக்க கொண்டு உள்ள போது அவர்கள் நேரடியாக மாவட்ட நிர்வாகத்தையோ அரசு மருத்துவ மனையையோ தொடர்பு கொள்ளும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய செயலியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை.சத்யன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெற்றிருந்தனர். இது குறித்து கோவை.சத்யன் அவர்கள் கூறியதாவது :

இந்தியாவில் முதல் முறையாக கொரோனோ தொற்று இல்லாமல் வீட்டில் 14 நாட்கள் இருப்பவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மருத்துவரை காணும் ஆன்ட்ராய்டு செயலி இப்பொழுது தயார் நிலையில் உள்ளது. இதை வடிவமைக்க, செயல்பாட்டிற்கு கொண்டு வர 8 நாட்கள் உணவு உறக்கம் இல்லாமல் உழைத்தோம்.

கொரோனோ தொற்று வளர துவங்கியவுடன் வீட்டில் தனிமைப்படுத்தபட்டவர்கள் வெளியை வந்தால் மற்றவர்களுக்கு ஆபத்து. அவர்களை நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு பாதிப்பு அதிகம்.அமெரிக்காவின் FDA வீட்டில் இருப்பவர்களை வீட்டில் இருந்தபடியே முறையாக கண்காணிக்கும் அழைப்பு விடுத்தது இருந்தது.

நேற்று ஐம்மு கஷ்மீர் மாநிலத்தில் வாட்சப் வீடியோகால் பயன்படுத்தி உள்ளனர். அதன் நடைமுறை சிக்கல் ஏராளமாக உள்ளது அதில் தகவல்களை அலசுவது கடினம். இதனை கருத்தில் கொண்டு கடந்த 8 நாட்களாக இரவு பகல் பாராமல் IT கட்டமைப்பை உருவாக்கி வெற்றி கண்டிருக்கிறோம்.

இந்த வாய்ப்பினை நல்கிய மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும், மாண்புமிகு சுகாதார துறை அமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை

0

வடகொரியாவில் கொரோனோ பாதிப்பு இல்லையா? சந்தேகத்தை கிளப்பும் உளவுத்துறை

உலகம் முழுவதும் கொவிட்-19 என்ற வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கான சரியான மருத்துவம் தெரியாமல் உலகநாடுகள் விழி பிதுங்கி வருகிறது. சுமார் 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக தெரிகிறது. இதுவரை சமார் 12000 மக்கள் இறந்துள்ளதாக தெரிகிறது.

இவ்வாறான ஒரு மிகப்பெரிய பாதிப்பை உலகநாடுகள் சந்நித்து வரும் நிலையில் வடகொரியா மட்டுமே இந்த வைரசின் பாதிப்பு குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. அந்த நாட்டின் அனைத்து தனியார் ஊடகங்களையும் அரசு கட்டுப்படுத்தி அரசின் ஊடகங்கள் மட்டுமே இதுநாள் வரை செய்திகளை வெளி உலகத்திற்கு தெரிவித்து வருகிறது.

சீனா மற்றும் தென்கொரியாவிற்கு மிகவும் அருகிலே உளள நாடு வடகொரியா. அந்த நாட்டிற்கு எவ்வாறு கொரோனா வைரஸ் பரவாமல் உள்ளது என உலகநாடுகள் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து வடகொரியாவின் செய்தி ஊடகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் சீனாவில் பாதிப்பு தொடங்கியபோதே வடகொரியா மற்ற நாடுகளுடனான ஏற்றுமதி இறக்துமதியை நிறுத்தி நாட்டின் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டதாகவும் அனைத்து வெளிநாட்டவர்களையும் வெளிநாட்டு தூதரகங்களையும் தனிமைப் படுத்தியதாக தெரிவித்துள்ளது.

ஆனாலும் இவ்வாறான நடவடிக்கைகளால் ஒருவர் கூட பாதிக்காத நிலையில் ஒருநாடு இருக்க முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் கொரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது உளவுத்துறை.