Home Blog Page 5742

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

0

மார்ச் 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

வருகிற மார்ச் 7ம் தேதி ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக அயோதி செல்ல இருக்கிறார் மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே.

இதுகுறித்து சிவசேனாவின் சஞ்சய் ராவத் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 100 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது .

வருகிற மார்ச் 7ம்தேதி உத்தவ் தாக்கரே ராமர் கோவிலில் வழிபாடு செய்ய இருக்கிறார். அன்று மாலை சரயு நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி மாநிலத்தில் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து புதிய முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு முதல் முறையாக வரும் ஏழாம் தேதி அயோத்திக்கு பயணம் செய்கிறார்.

நேற்று முன்தினம் டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே பாஜக மூத்த தலைவரான அத்வானி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியையும் சந்தித்து உள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

0

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராக மறுத்த ரஜினியை சீமான் டிவிட்டரில் கேலி செய்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நட்ந்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவ கலவரம் குறித்து பேசிய ரஜினிகாந்த் இந்த ’துப்பாக்கிச் சூடு சம்பவம் சமூக விரோதிகளால் ஏற்பட்டது. கூட்டத்துக்குள் சமுக விரோதிகள் புகுந்துவிட்டதால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ எனக் கூறினார். ரஜினியின் இந்த பேச்சு சர்ச்சைகளை உருவாக்கியதை அடுத்து சமூக விரோதிகள் என்று யாரை ரஜினிகாந்த் குறிப்பிட்டார் என்பதை அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என சீமான் உள்ளிட்டோர் எழுப்பிய கோரிக்கைகளை அடுத்தே விசாரணை கமிஷன் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது  

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆஜர் சம்மன்: ரஜினியின் பதிலும் சீமானின் கேள்வியும்!

விசாரணையை மேற்கொண்டு வரும் அருணா ஜெகதீசன் ஆணையம் ரஜினியை அழைத்து விசாரணை செய்ய சம்மன் அனுப்பியது.இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தரப்பில் இருந்து மனு ஒன்று கமிஷனிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தன்னிடம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க தயார். நான் அங்கு வந்தால் ரசிகர்கள் கூட்டம் கூடி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

ரஜினியின் இந்த பதிலைக் கேலி செய்யும் பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டார்கள்’ என்று சொல்ல தூத்துக்குடி சென்றபோது கெடாத சட்டம் ஒழுங்கு, விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்போது மட்டும் கெட்டுவிடுகிறதா? ரசிகர்கள் கூடி சட்டம் ஒழுங்கு சீர்குலையுமென்றால், உங்கள் ரசிகர்கள் யார்?…. இது எப்டி இருக்கு?! ’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

0

படப்பிடிப்புக்குத் தயாரான வெற்றிமாறன்! முழுப்படமும் வெளிநாட்டில்?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் முழுப்படப்பிடிப்பும் கதார் நாட்டில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டு வருகின்றனர். ஆனால் அவர் தனது நண்பர் தனுஷோடு மட்டுமே கூட்டணி அமைத்து படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் அவர்கள் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதையடுத்து வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்க சூர்யா ஆர்வமாக இருக்கிறார். இந்த படத்தை தாணு தயாரிக்க, ஜி வி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படம் தமிழின் முக்கியமான நாவலான வாடிவாசலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக வெற்றிமாறன் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை விண்ணைத்தாண்டி வருவாயா, கோ ஆகிய படங்களை தயாரித்த ஆர் எஸ் இன்போடெயின்மெண்ட் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க இருக்கிறது. வெளிநாடுகளில் கஷ்டப்பட்டு உழைக்கும் தமிழர்களின் துயர வாழ்வை சொல்லும் படமாக உருவாக இருக்கிறது. வெற்றிமாறன் இந்த படத்தை அஜ்னபி என்ற நாவலை மையப்படுத்தி உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக தமிழர்கள் பிழைப்புக்காக அதிகமாக செல்லும் நாடான கத்தாரில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

இதற்கான விசா பெறும் பணிகளை இப்போது தயாரிப்பு நிறுவனம் செய்து வருகிறது. விசா கிடைத்தவுடன் படக்குழுவினர் கதார் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.

வன்முறையையும் அரசியல் கொலையையும் நிறுத்துங்கள் அரசுக்கு ஆளுநர் அறிவுரை

0

வன்முறையையும் அரசியல் கொலையையும் நிறுத்துங்கள் அரசுக்கு ஆளுநர் அறிவுரை

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும்,அம்மாநில ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.இதனிடையே சமீபத்தில் இருவருக்கும் இடையே மரியாதை நிமித்தமான சந்திப்பு நடந்தது.

இதனையடுத்து நேற்று ஆளுநர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில் மேற்கு வங்க மாநிலத்தை பொருத்த வரையில் கொலைகளும் கலவரங்களும் அரசியல் சார்புடையதாக தெரிகிறது.2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை மையப்படுத்தி கொலைகள் நடைபெருவதாக தோன்றுகிறது.

2021 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.வன்முறைகளையும் கொலைகளையும் தடுக்க வேண்டும்.

மேலும் வன்முறைக்கு காரணமானவர்கள் அதனை முடித்துக் கொள்ள முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். சமீபகாலமாக அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்திற்கும் இடையே நல்ல உறவு நிலவுகிறது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடனும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டும்.அரசு அதிகாரிகள் மாநிலத்தில் அமைதி நிலவவும் தேர்தல் நடத்த உகந்த சூழலை உருவாக்கவும் பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே சந்திப்பு ஏற்பட்ட பின்பு ஆளுநர் இவ்வாறான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருப்பது மேற்குவங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!!

0

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்மணி கையும் களவுமாக சிக்கினார்! போலீசார் அதிரடி கைது..!!

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்தினபுரி கண்ணப்பன் நகர் அருகே அருள்நகர் பகுதியில் வசிக்கும் முபீனா என்கிற இஸ்லாமிய பெண்மணி வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்த காரணத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவர் அன்வர் பாஷாவுடன் வசித்து வந்த முபீனா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரை பிரிந்த கணவர் அன்வர் பாஷா மற்றொரு திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. தனியாக வசித்து வந்த முபீனா, பெரியா கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து மொத்தமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து சிறு கஞ்சா வியாபாரிகளுக்கு ரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது கஞ்சா விற்பனை பற்றிய ரகசிய தகவல் ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணிக்கு கொடுக்கப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் முபீனாவின் வீட்டை போலீசார் சரியான நேரத்தில் சுற்றி வளைத்தனர். பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய முபீனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கஞ்சா விற்பனை செய்த விவகாரம் அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!

0

‘பாரத் மாதாகீ ஜெய்’ கோஷம் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் – மன்மோகன் சிங்!

இந்திய தேசத்திற்கு ஊக்கம் தரக்கூடிய பாரத் மாதாகீ ஜெய் கோஷத்தை தவறாக பயன்படுத்துவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இவரின் கருத்து பெரும் சர்ச்சையாக மாறி வருகிறது.

நாட்டின் பயங்கரவாதம் மற்றும் உணர்ச்சிகரமான கருத்துகளுக்கு உதவும் ரீதியாக சொல்லப்படுவதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் சிறப்பாக விளங்கிய ஜவஹர்லால் நேரு அவர்களின் கடந்த கால வரலாற்றை படிக்க விரும்பாதவர்கள் அவரது புகழையும், பெயரையும் சிதைத்து தவறாக கட்டமைப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய நாட்டிற்காக எழுப்பப்பட்ட வந்தே மாதரம், ஜெய்ஹிந்த், பாரத் மாதாகீ ஜெய் போன்ற கோஷங்கள் தற்போது ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்காவும், அரசியல் கட்சிக்காகவும் பயன்படுத்தப்பட்டு வரலாற்று கோஷங்கள் சுருக்கப்பட்டுள்ளதையும் மன்மோகன் சிங் வெளிப்படுத்தியுள்ளார் என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது. இந்த செய்தியை காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நியுசிலாந்து 183 ரன்கள் முன்னிலை! இஷாந்த் ஷர்மா கலக்கல் பந்துவீச்சு !

0

நியுசிலாந்து 183 ரன்கள் முன்னிலை! இஷாந்த் ஷர்மா கலக்கல் பந்துவீச்சு !

நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 348 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று முன் தினம் வெல்லிங்க்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்திய அணியில் ரஹானே (46), மயங்க்(34) மற்றும் ஷமி (21) ஆகியோரைத் தவிர மற்ற அனைவரும் சொதப்ப இந்தியா 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக வீசிய டிம் சவுத்தி மற்றும் ஜேமீஸன் ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர். இதையடுத்து நேற்ற்று தங்கள் இன்னிங்ஸை துவங்கிய நியுசிலாந்து அணி நிதானமாக விக்கெட்களைப் பறிகொடுக்காமல் விளையாடியது. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் அவுட் ஆகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மற்றொரு வீரரான ராஸ் டெய்லர் 44 ரன்கள் சேர்த்தார்.

நியுசிலாந்து 183 ரன்கள் முன்னிலை! இஷாந்த் ஷர்மா கலக்கல் பந்துவீச்சு !

இதையடுத்து இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் நியுசிலாந்து 216 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவை விட 51 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இன்று தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி மேலும் 132 ரன்கள் சேர்த்து 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களயும் இழந்து தங்கள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது. இதன் மூலம் நியுசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இந்தியாவின் இஷாந்த் சர்மா 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது அவரது 11 ஆவது 5 விக்கெட் இன்னிங்ஸாகும்.

183 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா சற்று முன் வரை 16 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு

0

பெட்ரொலியம் – ரசாயன மண்டலம் ரத்து! தமிழக அரசாணை வெளியீடு

காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலத்தை சட்டமாக அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும் கடலூர் மாவட்டத்தில் இருந்த பெட்ரோலிய மண்டலம் ரசாயன மண்டலம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் வேளாண் செழிப்பு பகுதிகளான காவிரி டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக சேலத்தின் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் நேரடியாக சென்று தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த 20 ஆம் தேதி அமைச்சரவை ஒப்புதலும் சட்டசபையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு சட்டமசோதாவையும் தாக்கல் செய்தார். இதற்கான பணிகளை கவனிக்க அதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டது.

பின்னர் இதற்கான ஆளுநர் ஒப்புதலும் கிடைத்துவிட்ட நிலையில் டெல்டா பகுதியில் புதிய திட்டங்கள் தொடங்க அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தொடங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் சட்டமசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வேளாண் மண்டல மசோதா குறித்த அரசாணையும், அதோடு சேர்த்து நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்க வழங்கிய அரசாணையை ரத்து செய்தும் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராம பகுதிகளில் பெட்ரோலிய ரசாயனம், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக தமிழ்நாடு நகர மற்றும் திட்ட சட்டத்தின் வழியாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரசாயன மண்டலம் உருவாக்க வழங்கப்பட்ட அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

0

மனைவிக்கு மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர்! அந்த பெண்ணால்தான் இப்படி செய்வதாக கண்ணீருடன் பரபரப்பு புகார்..!!

சென்னை அடையறை சேர்ந்த ரம்யா என்பவர், கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கணவரை பற்றி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது :
என்னுடைய கணவர் சாரதிகுமார் வேறொரு பெண்ணுடன் தவறான உறவில் ஈடுபடுவதாகவும், கேள்விகேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் புகார் கூறியுள்ளார்.

ரம்யாவின் கணவர் சாரதிகுமார் வாணியம்பாடி திமுக நகர செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவருக்கும் சாரதி குமாருக்கும் கடந்த 2016 ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சாரதிகுமார் திருமணம் செய்வதற்கு முன்பே கல்லூரியில் பணியாற்றியதாகவும், அங்கே இவரைவிட 15 வயது அதிகமான பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளுக்குநாள் அதிகமாகி இருவரும் தவறான உறவை வைத்திருந்தனர்.

ரம்யா குழந்தை பிறந்தவுடன் தாய்வீட்டிற்கு சென்றபோது, சத்ய பிரியாவை தனது வீட்டிற்கே அழைத்து வந்து தவறாக இருந்ததாக ரம்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து திமுக கட்சி முக்கிய தலையிடம் தெரிவித்தபோது, தன்னையும் தனது குடும்பத்தையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுகிறார். என்னுடைய நகைகளையும் அவரது ரகசிய உறவு பெண்ணிடம் கொடுத்துவிட்டார்.

மேலும், சாரதி குமாருக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். உயிர் பாதுகாப்பிற்காக தனது உறவினர் வீட்டில் தங்கியிருப்பதாக கூறியவர், தனது கழுத்தில் கத்தியை வைத்து தாலியை கழட்டி கொடுக்குமாறும் பயமுறுத்தியதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த புகாரின் அடிப்படையில் சாரதி குமாரிடம் கேட்டபோது, தனக்கும் ரம்யாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கோரியுள்ளோம், காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் அவ்வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் விரைவில் முடியும் என்றும், பணத்திற்காகவே இதுபோன்று குற்றச்சாட்டை கூறி வருவதாகவும் கூறினார்.

இந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! உ.பி.யில் தங்க மலைகள் கண்டுபிடிப்பு!! என்ன செய்ய போகிறது அரசு?

0

இந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்! உ.பி.யில் தங்க மலைகள் கண்டுபிடிப்பு!! என்ன செய்ய போகிறது அரசு?

உத்தரப்பிரதேச  மாநிலத்தின்  பெரிய  மாவட்டமான  சோன்பத்ராவில்  இரண்டு பெரிய  தங்கமலைகளை  இந்திய புவியியல் ஆய்வு மையம் 20 ஆண்டு கால ஆய்வுக்கு பின் கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

சோன்பத்ராவில் உள்ள  சோன் பஹாடி  மற்றும்  ஹார்டி  பகுதியில்  தங்க மலைகளை கண்டுபிடித்துள்ளதாக அந்த மாவட்டத்தின் சுங்க அதிகாரி கேகே ராய் கூறினார். மேலும்,இங்கு ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள  3350 டன் தங்கம் இருப்பதாகவும், இந்தியாவின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தை காட்டிலும் பல மடங்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்த சுரங்கத்தை இணைய வழி ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளதாகவும், அங்கு பல அரிய தாதுக்களும் இருப்பதாக  ராய் தெரிவித்தார்.  இந்த மதிப்பிடுகள் உண்மையாக இருக்கும் பட்டத்தில்  உலக நாடுகளின் கையில் உள்ள தங்க இருப்பு வைத்திருக்கும்  பட்டியலில் 2 அல்லது 3 வது இடத்திற்கு இந்தியா முன்னேறும்.

உலக பொருளாதார மந்த நிலையில் முதலீட்டாளர்கள்  தங்கத்தில்  முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையில் வரலாறு காணத வகையில் உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு  கிடைத்திற்கும் இந்த அரிய வாய்ப்பை அரசு எப்படி பயன்படுத்திக் கொள்ள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது .