Home Blog Page 5756

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

0

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளராக விளங்கி வரும் பூம்ராவின் சமீபத்தைய சொதப்பல்கள் குறித்து சக பந்து வீச்சாளர் ஷமி ஆதங்கமாகப் பேசியுள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது.

வெறும் 3 போட்டிகளை வைத்து பூம்ராவை எடை போடுவதா?சகவீரர் ஆதங்கம்!

சமீபத்தில்தான் காயத்தில் இருந்து மீண்ட பூம்ரா, நியுசிலாந்து தொடரில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார். மூன்றாவது டி 20 போட்டியில் களமிறங்கிய அவர் 5 ஆவது டி 20 போட்டியில் மட்டுமே 3 விக்கெட்களை கைப்பற்றி சிறப்பாக பந்து வீசினார். அதே போல ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை. இதனால் அவரது பவுலிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் வீரர் ஜாகீர்கான் கூட பூம்ரா களத்தில் தயக்கம் இல்லாமல் ரிஸ்க் எடுத்து பந்து வீச வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

இந்நிலையில் பூம்ராவின் சக வீரரான முகமது ஷமி, இது குறித்து வேறு கோணத்தில் பேசியுள்ளார். அவர் ‘வெறும் 3 அல்லது 4 போட்டிகளை வைத்து நீங்கள் பூம்ராவின் திறமையை சந்தேகப்பட கூடாது. கடந்த ஆண்டுகளில் நாம் அவரால் எத்தனை போட்டிகளை வென்றுள்ளோம் எனப் பார்க்க வேண்டும். நீங்கள் பும்ரா திறமை குறித்து நேர்மறையாகச் சிந்தித்தால், அது அவருக்கு நல்லவிதமாக அமைந்து, அவரின் நம்பிக்கையை மேலும் வளர்க்கும். ஒரு விளையாட்டு வீரர் காயம் படும் போது அவரின் நேர்மறையான விஷயங்களை நீங்கள் பார்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

0

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்து! உடல் கருகிய கொடூர சம்பவம்..!!

ஹைட்டி நாட்டில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் பதினைந்து குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்டி நாட்டின் தலைநகர் அருகே உள்ள பெர்மேட் என்னும் நகரில் “சர்ச் ஆப் பைபிள்” என்ற பெயரில் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் சமூக சேவையின் காரணமாக அமைந்துள்ளது. பெற்றோர் இல்லாமல் தனித்துவிடப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் அங்கு தங்கி இருந்தனர்.

இரவு நேரத்தில் ஜெனரேட்டர் மற்றும் இன்வெட்டரில் எதிர்பாராத விதமாக கோளாறு ஏற்பட்டு வெளிச்சம் இல்லாமல் போனது. இதன் காரணமாக இல்லத்தில் தங்கியிருந்த சிறுமியர் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர். இதனையடுத்து யாரும் எதிர்பாராத விதமாக கட்டடத்தில் தீ பற்ற ஆரம்பித்து அறை முழுக்க வேகமாக பரவியது.

தீப்பற்றிய சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக கூறப்படுகிறது. வேகமாக பரவிய தீயில் 15 சிறுமியர் உடல் கருகி பலியாகி இருந்தனர். பலியான குழந்தைகளின் உடல்களை தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிறுவர்கள் இறந்திருக்க கூடும் என்ற தகவல் சொல்லப்படுகிறது.

மேலும், தீ விபத்தில் இறந்தவர்கள் 2 லிருந்து 18 வயதிற்கு உள்ளானவர்கள் என்று தகவல் தெரிய வந்துள்ளது. கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பமாகி வெளிப்பகுதியில் கரும்புகை படிந்து காணப்படுகிறது. திடீரென ஏற்பட்ட இச்சம்பவத்தால் அப்பகுதியில் அதிர்ச்சியும் சோகமும் சூழ்ந்துள்ளது.

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

0

ஈழத் தமிழர்களை கொடுமைபடுத்திய இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை..!!

ஈழப்போர் நடந்த காலகட்டத்தில் இலங்கை ராணுவம் பல்வேறு வகையில் தமிழர்களின் மீது கொடுமை நடத்தினர். இலங்கை ராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த உள்நாட்டு போரில் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டதால், அவரை அமெரிக்காவில் நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் திடீர் உத்தரவை சற்றும் எதிர்பாராத இலங்கை அரசு கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை அழிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு எதிராக நடத்திய உச்சகட்ட போரில் இலங்கை ராணுவத்தினர் பல்வேறு பிரிவுக்கு தலைமை வகித்தனர். அதில் 58 வது இராணுவ பிரிவுக்கு தலைமை ஏற்று சவேந்திர சில்வா வழி நடத்தினார். இந்த போரின் கடைசி 30 நாட்களில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 பேர் கொல்லப்பட்டதாக ஐநா வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில், இலங்கையின் ராணுவ தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வா சமீபத்தில் அமெரிக்கா பயணம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஈழப் போரின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராகவும் பல்வேறு கொடுமைகளை நடத்தி மனித உரிமை மீறலில் சவேந்திர சில்வா ஈடுபட்ட ஆதாரங்கள் ஐநா மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அமெரிக்காவிற்குள் சவேந்திர சில்வா நுழைய கூடாது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் “மைக் பாம்பியோ” முக்கிய உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில்: இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ஈழப் போரில் பல்வேறு மனித உரிமை மீறல்களை செய்துள்ளார். இது மிகப்பெரும் குற்றம் என்பதால் அவரை அமெரிக்காவில் நுழையத் தடை விதிப்பதாக கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக இலங்கை வெளியுறவுத் துறையின் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் சவேந்திர சில்வாவை பற்றிய உண்மை செய்திகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், எங்கள் நாட்டு ராணுவ தளபதியை தீர்மானிக்கும் அதிபரின் சிறப்பு உரிமை மற்றும் அதிகாரத்தை அமெரிக்கா கேள்வி கேட்டது வருந்தத்தக்கது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

0

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

தெலங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் இறந்தது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு கடந்த 13 ஆம் தேதி வியாழக் கிழமை திருமணமும் அதற்கு முந்தைய நாள் வரவேற்பும் நடந்துள்ளது. திருமணம் நடக்கும் போதே மிகவும் சோகமாக இருந்த அவர் சனிக்கிழமை வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்க்க அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் மரணத்துக்குக் காரணம் மாரடைப்பு வந்ததுதான் என சொல்லியுள்ளனர்.

திருமணம் ஆன அடுத்த நாளே மாப்பிள்ளை மாரடைப்பால் மரணம்!காரணம் இதுதானா?

மருத்துவர்கள் கூறியதைக் கேட்ட கணேஷின் குடும்பத்தினர் மற்றும் புது மனைவி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். தங்களது மகனின் மரணம் தொடர்பாக பேசிய கணேஷின் பெற்றோர்,  வரவேற்பின் போது பாடல்கள் என்ற பெயரில் இரைச்சல் அதிகமாக இருக்கும் வண்ணம் பாடல்கள் ஒலிபரப்பப் பட்டன. அதைக் கேட்டதில் இருந்துதான் அவன் களைப்பாகவும் பதற்றமாகவும் காணப்பட்டான் எனக் கூறியுள்ளனர்.

உறுதியாக அதுதான் மாரடைப்பு வந்ததற்கு காரணம் என சொல்ல முடியாது என்றாலும், திருமண வீடுகளில் இதுபோல அளவுக்கு அதிகமாக பாடல்கள் ஒலிபரப்பப்படுவதால் குழந்தைகள் முதியவர்கள் என அனைவருமே பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

0

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

நேற்று அனிருத் இசையில் விஜய் பாடி வெளியான குட்டிக்கத பாடல் வேறொரு தமிழ் பாடலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

ஒரு குட்டிக் கத பாடல் இங்கிருந்து உருவப்பட்டதுதான்:இணையத்தில் அனிருத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!

வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக விமர்சனம் செய்தனர். ஆனாலும் பாடல் பரவலான கவனத்தை பெற்றுள்ள நிலையில் இப்போது வேறொரு பாடலில் இருந்து இந்த பாட்டு காப்பி அடிக்கப்பட்டதாக புது விமர்சனம் எழுந்துள்ளது.

ராமநாராயணன் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ராஜகாளியம்மன். இந்த படத்தில் இடம்பெறும் பாடலான சந்தன மாளிகையில் தூளி கட்டி போட்டேன் என்ற பாடலின் ராகத்தில் இருந்துதான் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை வடிவேலு ஸ்வர்ணலதாவுடன் இணைந்து பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இரு பாடலின் மெட்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும் குட்டி கத பாடலை காப்பி என சொல்ல முடியாது எனத் தரப்பும் வாதிட்டு வருகிறது.

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

0

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் மார்ச் 29 ஆம் தேதி ஐசிசியின் உயர்மட்ட குழுவின் கூட்டம் நடைபெற  இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருகின்றன. இதனால் மற்ற நாட்டு வீரர்கள் கூட ஐபிஎல் ல் விளையாடுவதிலேயே ஆர்வமாக உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் எந்த நாட்டு வாரியங்களும் எந்த தொடர்களையும் அமைத்துக் கொள்வதில்லை.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி நியமிக்கப்பட்ட பின் 2020 ஆம்  ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் முறையாக நடக்க இருக்கிறது. இதுவே அவரின் கடைசி தொடராகவும் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப் போகுதா ஐபிஎல்? பிசிசிஐ யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி !

ஆனால் ஐசிசி யின் யர்மட்ட கூட்டம் மார்ச் மாதம் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி நடக்கிறது. இதில் இந்தியாவின் சார்பில் பிசிசிஐ தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் கூட்டத்தின் தேதியை மாற்ற வேண்டும் என பிசிசிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை ஐசிசி மறுத்து விட்டது.

இதனால் கங்குலிக்கு இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐபிஎல் தேதிகள் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இல்லாவிட்டால் அவர் ஐபிஎல் தொடக்க விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போகும். ஒருவேளை ஐபிஎல் தொடக்க விழா மட்டும் முன்னதாகவே நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

0

காதலர் தினத்தை கறுப்பாக்கிய காவல்துறையை கண்டிக்கிறேன்! ஸ்டாலின் ஆவேசம்!!

சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இசுலாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை ஸ்டாலின் கண்டித்து பேசியுள்ளார். பிப்ரவரி 14 காதலர் தின இரவை கறுப்பாக்கிய போலீசாரை கண்டிக்கும் வகையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

CAA, NRC, NCR ஆகிய மூன்று சட்ட திருத்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இசுலாமியர்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். தமிழக உடனடியாக இதனை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். கூட்டம் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசாருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் லேசான தடியடியை நடத்தி, 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். பின்னர், போராடிய இஸ்லாமிய அமைப்பினருடன் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதாக கூறப்பட்டதை அடுத்து கூட்டம் கலைந்து சென்றது. இருப்பினும் சிலர் மீண்டும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். இவர்களிடம் காவல்துறையினர் மீண்டும் சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜனநாயக ரீதியாக போராடியவர்களை திட்டமிட்டு தடியடி நடத்தியதாகவும், அமைதியின் வழியில் போராடிய மக்கள் மீது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை தாக்கியுள்ளதாகவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

0

நடிகைக்கு பதிலடி தரும் வகையில் புதிய வீடியோவை வெளியிட்ட சீமான்..!!

நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தன்னை காதலித்து ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த சிக்கல் சில ஆண்டுகளை கடந்து வந்த நிலையில், சமீபத்தில் சீமானுடன் இருக்கும் மூன்று அந்தரங்க வீடியோவை நடிகை இணையத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சட்டை இல்லாமல் சினிமா டயலாக்கை டிக்டாக்கில் பேசுவதுபோல் சீமான் பேசியிருந்தார்.

இணையத்தில் வெளியான வீடியோ குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டபோது, சீமான் சிரித்து சமாளித்து மழுப்பினார். செய்தியாளர்களிடம் மழுப்பியதற்கு பதிலடி தரும் வகையில் சீமானை பற்றி மீண்டும் ஒரு வீடியோவை நடிகை வெளியிட்டார். அதில் தன்னைப்பற்றிய தவறான எண்ணம் பரவி இருப்பதாகவும் அது எல்லாமே பொய் என்று நிரூபிக்கவும் நான் தொடர்ந்து பேசுவேன் என்று சீமானை விமர்சனம் செய்துள்ளார்.

இணையத்தில் ஏற்படும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் சீமானும் அவருடைய தம்பிகளும் திணறி வருகின்றனர். விமர்சனங்களை தவிர்க்கும் விதமாக தனது முகநூல் பக்கத்தில் காதலை பற்றிய வீடியோ ஒன்றை சீமான் வெளியிட்டுள்ளார். அதில் காதலில் ஒன்றுமில்லை ஆனால், காதல் இல்லாமல் உலகத்தில் ஒன்றுமே இல்லை. காதலுக்காக யாரும் சாக கூடாது, அதேபோல் யாரும் காதலிக்காமல் சாக கூடாது என்றும் பேசியுள்ளார்.

தன் மீது எழுந்த அந்தரங்கை சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க சீமான் இதுபோல் பேசுகிறார் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சங்கள் வைக்கப்படுகின்றன. சீமானுக்கு ஆதரவாக இருந்த பலர் தற்போது அவரிடம் இருந்து சற்றே விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இயக்குனர் சேரன் சீமானால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. நடிகை விஜயலட்சுமியால் நாம்தமிழர் கட்சிக்கு வந்திருக்கும் சோதனை தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

0

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

மும்பையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் திருடப்போன நபர் அங்கேயே தூங்கியதால் போலீஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் நபர் ஒருவர் அதே ஃபிளாட்டில் உள்ள மற்றொரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். புதிய வீட்டிற்கு சில பொருட்களை மட்டுமே மாற்றிய அவர் தனது பழைய வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எழுந்த போது புது வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்ததால் சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கே ஒருவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனே போலிஸிடம் தகவல் சொல்ல அங்கு விரைந்துள்ளனர் போலீஸார். போலீஸார் வரும் வரையும் அவர் தூங்கிக் கொண்டே இருந்துள்ளார்.

திருடப் போனால் இப்படியா செய்வது? யாருக்கும் வேலை வாய்க்காமல் தானாக மாட்டிக்கொண்ட திருடன் !

போலிஸார் அவரைத் தட்டி எழுப்பியதும் அதிர்ச்சியுடன்  முழித்துள்ளார். அவரைக் கைது செய்த போலிஸார் விசாரணையை மேற்கொள்ள தனது கதையை சொல்லியுள்ளார். , மும்பை சென்ட்ரல் பகுதியை சேர்ந்த அவரது பெயர் சஞ்ஜீவ். திருடுவதற்காக அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். கைக்குக் கிடைத்த பொருட்களைத் திருடிய அவர் அங்கிருந்த வெளிநாட்டு உயர்ரக மதுவகைகளைப் பார்த்து சபலப்பட்டுள்ளார். அவைகளை குடித்த அவர் அப்படியே போதையாகி அங்கேயே தூங்கியுள்ளார்.

தென்னாப்ரிக்கா உடனான 2 வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

0

தென்னாப்ரிக்கா உடனான 2 வது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 20ஓவர் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. டர்பனில் நடைபெற்ற 2 ஆவது 20 ஓவர் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பீல்டிங் தேர்வு செய்தது இங்கிலாந்து அணியில் ராய் மற்றும் பட்லர் தொடக்க வீரராக களமிறங்கினர் பட்லர் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அதிரடியாக ஆடிய ராய் 40 ரன்களிலும் பேர்ஸ்டோ 35 ரன்னிலும் வெளியேறினர். மோர்கன் 27 ரன்னிலும் மொயீன் அலி 11 பந்துகளில் 39 ரன் விளாசினார்.

சிறப்பாக ஆடிய ஸ்டோக்ஸ் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் தென்னாபிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன் குவித்தது.

தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணியில் அந்த அணியின் கேப்டன் டிகாக் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 22 பந்தில் 65 ரன் குவித்தார். பவுமா, மில்லர் ஆகியோர் சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். வாண்டர் டெசன் ஆட்டமிழக்காமல் 43 ரன்களுடன் இருந்தார். 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டை இழந்து 202 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், ஜோர்டன், டாம்கரண் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இங்கிலாந்து வீரர் மொயீன் அலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.