Home Blog Page 5757

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

0

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷாலும் ஷம்மு சமூக வலைதளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியானப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. அதன் பின்னர் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். ஆனால சமூக வலைதளங்களில் அவருக்கு வேறு முகம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிரும் பழக்கம் கொண்டவர் ஷாலு.

காதலர் தினத்தை முன்னிட்டு கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்ட நடிகை:ஆபாச அர்ச்சனை செய்யும் ரசிகர்கள்!

அதில் ஆபாசமாகவும் கேலியாகவும் பேசும் ரசிகர்களுக்கு கடுமையான பதிலும் கொடுப்பார். இப்படியாக சமூகவலைதளத்தில் அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் அவர். இந்நிலையில் சாதா நாட்களிலேயே புகைப்படங்களாக போட்டுக் கொண்டு இருக்கும் அவர் காதலர் தினத்தன்று சும்மா இருப்பாரா? கவர்ச்சியான புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்தார். அதில் உடலில் ஆடைகள் இல்லாமல் ரோஜா மலர்களால் அந்தரங்க பகுதிகளை மட்டும் மறைத்தபடி உள்ளார் அவர். மேலும் அந்த புகைப்படத்தோடு ‘வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது… இருந்தாலும் நாம் காதலர் தினத்தைக் கொண்டாடாமல் இருக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல தங்கள் ஆபாச கமெண்ட்களால் அர்ச்சனை செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிலும் ஒருவர் மிகவும் ஆபாசமாக ‘அந்த ரோஜாக்களை அகற்றிவிட்டால் நாங்கள் இன்னும் சந்தோஷமாக பார்ப்போம்’ எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அதற்கு ஷாலுவின் தரப்பில் இருந்து பதில்வரவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக உள்ளது.

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

0

டெல்லியின் மாஸ்டர்: மூன்றாவது முறையாக முதல்வர் பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 60 க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. முதல்வர் பதவிக்கான பதவிப் பிரமாணத்தை ஏற்க குடியரசு தலைவர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நாளை மூன்றாவது முறையாக டெல்லியின் முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்கிறார். கடந்த கால அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தக்க வைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் பிறப்பித்த பதவியேற்பு ஆணையில் பல்வேறு அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சத்யேந்தர் ஜெய்ன், மணிஷ் சிசோடியா, கைலாஷ் கெஹ்லோட், கோபால் ராய், இம்ரான் ஹூசைன் மற்றும் ராஜேந்திர கெளதம் ஆகியோர் பதவியேற்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தனது முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசின் சோனியா காந்தி மற்றும் பல முக்கியமான அரசியல் தலைவர்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 70 இடங்களிலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. பாஜக குறிப்பிட்ட சில இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

0

கடைசி இரண்டு பந்துகளில் மாறிய ஆட்டம்:தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி !

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த இரண்டாவது டி 20 டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பட்லர் 2 ரன்களுக்கு அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அதன் பின் வந்த பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் ஆகிய இருவரும் அதிரடியில் புகுந்தனர். பேர்ஸ்டோ 35 ரன்களிலும் ராய் 40 ரன்களிலும் அவுட் ஆகினர். கேப்டன் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் நிதானமாக விளையாடிய ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில் கடைசியாக இறங்கிய மொயின் அலி 11 பந்துகளில் 39 ரன்களை சேர்த்ததால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 20 ஒவர் முடிவில் இங்கிலாந்து அணி 204 ரன்களை சேர்த்து 7 விக்கெட்களை இழந்திருந்தது.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் டி காக் அதிரடியான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 22 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். அவரது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் அடங்கும். அதன் பின் வந்த வீரர்கள் சீராக விளையாட வெற்றி தென் ஆப்பிரிக்கா கைவசம் இருந்தது.

ஆனால் இடையில் எதிர்பாராத விதமாக சில விக்கெட்கள் விழுந்ததால் கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழல் உருவானது. கடைசி ஓவரை டாம் கரன் வீச 4 பந்துகளில் அதிரடியாக 12 ரன்கள் சேர்க்கப்பட்டது. கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. அதனால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றி பெறும் என நினைத்த வேளையில் கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட்கள் விழுந்ததால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

0

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த கர்நாடக வீரர்..! மக்களை வியக்க வைத்த வேகம்!

கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர மாவட்டத்தில் இருக்கும் “கம்பளா” என்ற பெயரில் எருமை மாட்டு பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. இது கர்நாடக மக்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இத்திருவிழா “தட்சிணா கன்னட கம்பளா கமிட்டி” என்ற குழு தலைமையில் நடைபெறுகிறது.

தட்சிண கன்னட மாவட்டம் மூடாபித்ரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா (28) என்ற இளைஞர் எருமை மாட்டு பந்தயத்தில் மிக குறுகிய நேரத்தில் பந்தய நேரத்தை கடந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நூறு மீட்டருக்கும் சேறு கலந்த தண்ணீரில் எருமை மாட்டுடன் வேகமாக ஓட வேண்டும் என்பது விளையாட்டின் விதிமுறையாகும். இவர் 142.5 மீட்டர் தொலைவை 13.62 நொடியில் ஓடி சாதித்துள்ளார். இந்த தூரத்தை தரையில் ஓடுவது எளிது, தண்ணீர் கலந்த சேற்றில் எருமை மாட்டுடன் ஓடுவது மிக சவாலான விஷயமாகும்.

மேலும், பந்தயத்தில் 100 மீட்டர் ஓட வேண்டிய இலக்கை வெறும் 9.55 நொடிகளில் கடந்து சாதித்துள்ளார். இது உலக மின்னல் மனிதன் என்று சொல்லப்படும் ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்டின்” வேகத்தை விட அதிகம். உசைன் போல்ட் 100 மீட்டர் தொலைவை 9.58 நொடிகளில் கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. போல்ட்டின் உலக சாதனையை ஸ்ரீனிவாஸ் கவுடா முறியடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டு மாடுகளை ஏர் போல பூட்டி சகதி நிறைந்த தண்ணீரில் வேகமாக விரட்டி குறைந்த நொடிகளில் இலக்கை எட்டுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. கம்பளா என்னும் வேளாண்மை சமூகத்தை சேர்ந்த மக்கள் இந்த பந்தய போட்டியில் மிக கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மங்களூரை ஆண்ட அலுப்பா மன்னர்கள் காலத்தில் இருந்தே கம்பளா போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இது குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

0

நான் இருக்கும் போது அவகூட ஜல்சா பண்றியா..! காதலியுடன் சுற்றித் திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி!

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா இடங்கள், பீச், மால்கள், தியேட்டர்களில் காதலர்களின் கூட்டம் அலைமோதியது. ஒருவருக்கொருவர் காதல் பரிசுகளை வாங்கி அன்பை பரிமாறி கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பைலே சாலையில் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவரை விரட்டிச் சென்று மனைவி கையும் களவுமாக பிடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலிக்கும் மனைவிக்கும் இடையே மாட்டிக் கொண்டு எந்த பக்கம் தப்பிப்பது என தெரியாமல் அந்த இளைஞர் விழிபிதுங்கி நின்றார்.

கணவனின் துரோக செயலை பொறுக்க முடியாத மனைவி, சாலையிலேயே வெளுத்து வாங்கியுள்ளார். சண்டை அதிகரிக்கவே அங்கு லேசான கூட்டம் கூடியது. இச்சம்பவத்தை அறிந்த போக்குவரத்து போலீசார் பிரச்சினை நடக்கும் பகுதிக்கு உடனடியாக வந்து சிக்கலை சரிசெய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் அப்பெண் பேசியதாவது: எங்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம். பின்னர், தனது கணவர் மனம்மாறி தவறான பாதையில் போவதாக அப்பெண் குற்றம் சாட்டினார். இதனையடுத்து போலீசார் கணவனிடம் விசாரிக்கையில், கணவன் கூறியதாவது : இன்று காதலர் தினம் என்பதால் எனது காதலியை வெளியே கூட்டிச் சென்றேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் அவரின் மனைவியிடம் அதிக கோபம் வெளிப்பட்டது.

மேலும், பிரச்சினை எளிதில் தீர்க்க முடியாத காரணத்தால் கணவன், மனைவி, காதலி உட்பட மூன்று பேரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இருக்கும் போதே காதலியுடன் ஊர் சுற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

0

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

திருவண்ணாமலை அருகே தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் உடல்நலமில்லாமல் குழந்தை இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனரான சீரஞ்சீவி. இவரது மனைவி தமிழரசி. இத்தம்பதிகளுக்கு லித்தீஷ் என்ற அழகான 5 மாதக் குழந்தை உள்ளது. குழந்தையை புதுப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டதில் இருந்தே குழந்தை மிகவும் சோர்வாகவும் ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளாமலும் இருந்துள்ளது. இதைப் பார்த்த பெற்றோர் தடுப்பூசியின் வீரியம் காரணமாக இப்படி இருக்கலாம் என நினைத்துள்ளனர். மறுநாள் சரியாகாவிட்டால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என நினைத்து தூங்க வைத்துள்ளனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்த போது குழந்தை அசைவற்று உடல் ஜில்லிட்டுக் கிடந்துள்ளது.

தடுப்பூசி போட்ட குழந்தை நேர்ந்த சோகம்!மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்!

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சிரஞ்சீவியும் தமிழரசியும் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லியுள்ளனர். இதைக் கேட்ட அவர்களுக்கு தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்துள்ளது.

இந்த விஷயம் அறிந்த உறவினர்கள் தடுப்பூசி போட்டாததால்தான் குழந்தை இறந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி முறையான விசாரணை நடத்தப்படும் என சொல்லியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

0

இரு இளம் வீரர்களும் சொதப்பல்!தொடக்க ஆட்டக்காரர் யார்?இந்திய அணியில் குழப்பம்!

இந்திய அணி சார்பாக நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போவது யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இதையடுத்து பிருத்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரில் யார் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கப் போவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று தொடங்கிய பயிற்சி ஆட்டத்தில் இருவருமே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளனர். ஆனால் ஹனுமா விஹாரி சதம் அடித்துள்ளார். ஏற்கனவே அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கியுள்ளார் என்பதால் அவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது.

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

0

டுவிட்டரில் டிரெண்டிங் ஆன மூன்று விஷயங்கள்! அதிகம் பேசப்படும் புல்வாமா தாக்குதல்..!!

சம்பவம் 1 : 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதி நெடுஞ்சாலையில் மத்திய சேமக் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 40 பாதுகாப்பு இராணுவ வீரர்களுடன், தற்கொலை தீவிரவாதியும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்சு இ முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ஜம்முவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக இராணுவ வீரர்கள் சென்ற போது ஸ்கார்பியோ வகை வண்டி ஒன்று படையினரின் வாகனத்தின் மீது மோதி வெடித்தது. அந்த சிறிய வாகனத்தில் 350 கிலோ வெடிமருந்து இருந்ததாக கூறப்பட்டது.

சம்பவம் 2 : நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி என்பவருடன் இருந்த அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இன்று புதிய வீடியோவில் சீமானை விமர்சிக்கும் விதமாகவும், அவர் பேட்டியில் சிரித்துக் கொண்டு சமாளிப்பதாகவும் நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த சம்பவங்களின் விளைவாக டுவிட்டரில் பொம்பள பொறுக்கி சீமான் என்று டிரெண்டிங் ஆகியது.

வளர்ந்து வரும் கட்சிக்கு முட்டுக்கட்டை போடுவது போல் வீடியோ சோதனை பரவியுள்ளது. இப்படி ஒரு சோதனையா என்று சீமானின் தம்பிகள் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். செய்தியாளர்கள் வீடியோ பற்றி கேட்டபோது: என்னை எதிர்ப்பவர்கள் எதிரி கிடையாது, நான் யாரை எதிர்க்கிறேனோ அவர்தான் என் எதிரி என்று சிரித்தபடி சினிமா டயலாக் பேசினார்.

சம்பவம் 3 : பிப்ரவரி 14 இன்று காதலர்கள் தனது காதலன், காதலிகளுக்கு அன்பு நிறைந்த பரிசுகளை வாரி வழங்கிய நாளாக அமைந்துள்ளது. சமூக வலைதளங்களில் காதலர்களின் கவிதைகளும் வாழ்த்துகளும் மழையாக பொழிந்த வண்ணமாக உள்ளது. பலர் காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு காணொளிகளை வெளியிட்டு மகிழ்ந்தனர்.

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

0

எப்படி இருக்கிறது விஜய்யின் குட்டி கத பாடல் – கொலவெறி ரீமிக்ஸா ?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஒரு குட்டிக் கத பாடல் இணையதளத்தில் வெளியாகி பரவலானக் கவனத்தை ஈர்த்துள்ளது.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

வழக்கமாக விஜய் பாடும் பாடல்கள் வேகமான மெட்டு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பாடல் மிக மெதுவாக செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் பாடல் முழுவதுமே ஆங்கில வார்த்தைகளால் நிரம்பியுள்ளது. அதனால் சிலர் கேட்பதற்கு கொலவெறி பாடல் போல இருப்பதாக சொல்லி வருகின்றனர்.

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

0

தன் உயிரை துச்சமாக நினைத்து, பள்ளி மாணவிகளின் உயிரை காப்பாற்றிய ஆட்டோ டிரைவர்!

தூத்துக்குடி: பள்ளி மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ டிரைவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்த ராமலிங்கம் என்பவர், தினந்தோறும் காலையில் ஆட்டோவில் மாணவிகளை ஏற்றிச் சென்று பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலை நேரத்தில் மாணவிகளை ஏற்றிச்சென்று வீட்டின் அருகே இறக்கி விடுவார். ஆட்டோ ஓட்டுவதை பல வருடங்களாக ராமலிங்கம் செய்து வந்தார்.

இந்நிலையில் பள்ளி மாணவிகளை ஏற்றிக் கொண்டு வரும் போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இந்த கடுமையான சூழலில் மாணவிகளை வேறு வாகனத்தில் அனுப்பி வைக்க திட்டமிட்டார் ஆனால், எந்த வாகனமும் அந்த வழியாக வராத காரணத்தால் வலியை பொறுத்துக் கொண்டு ஆட்டோவை இயக்கினார். பின்னர், சிறிது தூரம் கடந்து வந்த போது நெஞ்சு வலி அதிகரித்ததால் ஆட்டோவை ஓரமா நிறுத்தினார்.

ஆட்டோவை நிறுத்தியதும் மாணவிகளுக்கு பயம் ஏற்பட்டு உதவிக்கு பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். அதற்குள் ஆட்டோ டிரைவர் ராமலிங்கம் மயங்கிய நிலைக்கு சென்றுவிட்டார். பிறகு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலை பரிசோதித்த மருத்துவர்கள் , அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியதால் பள்ளி மாணவிகள் அழ ஆரம்பித்தனர்.

தன் உயிரை துச்சமாக நினைத்து பள்ளி மாணவிகளை காப்பாற்றிய ஆட்டோ டிரைவரின் இறப்பு பள்ளி மாணவிகள் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.