Home Blog Page 5758

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

0

மது ஆலைகளை மூடுவதாக சொன்ன திமுகவின் வாக்குறுதி என்னாச்சி.? திமுகவை விளாசிய ராமதாஸ்..!!

தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த கோரி பாமக நெடுங்காலமாக பல்வேறு போரட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது என்றும், மது ஆலைகளை மூடுவதாக 2016 ஆம் ஆண்டு திமுக வாக்குறுதி அளித்திருந்தது, திமுக கொடுத்த வாக்குறுதி என்னாச்சி என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு திமுகவிடம் இருந்து பதில் வருமா என்று தெரியவில்லை.

மேலும், தமிழகத்தில் மூடப்பட்ட 400 மதுக்கடைகளை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது தான் தமிழக அரசின் கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர, மதுக்கடைகளை திறப்பது அல்ல என்றும் ராமதாஸ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஜப்பான் கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியரைமீட்க வேண்டும் என்ற ராமதாஸின் டுவிட்டர் கோரிக்கைக்கு, மத்திய வெளியுறவு இணையமைச்சர் முரளிதரன் நடவடிக்கை எடுப்பதாக கூறி தமிழில் டுவிட்டர் செய்திருந்தார். பதில் கொடுத்த வெளியுறவு அமைச்சருக்கு ராமதாஸ் நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், கப்பலில் சிக்கி தவிக்கும் தமிழக சொந்தங்கள் சொந்த ஊர் திரும்பும் நாளே மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

0

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி! கதறி அழுத குடும்பம்..!!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பனைமரத்தை அடிப்படையாக கொண்டு சில குடும்பங்கள் தொழில் செய்து வருகின்றனர். இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள வெள்ளையம்பதி கிராமத்தில் ராமர் என்பவரின் மகன்  செல்லபாண்டி என்பவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். படதாசம்பட்டி என்னும் பக்கத்து கிராமத்தில் பதநீர் இறக்க மரம் ஏறியபோது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இறந்துபோன செல்லப்பாண்டிக்கு அழகான குடும்பமே உள்ளது. சகுந்தலா என்ற மனைவியும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். யாரும் எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் வெள்ளையம்பதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் உயிரிழந்த தொழிலாளிக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வெள்ளையம்பதி கிராமம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் பனையேறும் தொழிலை பிரதான வேலையாக பல்வேறு குடும்பங்கள் செய்து வருகிறது. பனையில் இருந்து கிடைக்கும் நுங்கு மற்றும் வெல்லத்தை காய்ச்சி கருப்பட்டி செய்வது போன்றவற்றின் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டி வருகின்றனர். வட மாவட்டங்களை விட தென்மாவட்டங்களில் பனைத் சார்ந்த தொழில் அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

0

தமிழக பட்ஜெட் தாக்கல்: பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு..!!

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்கிறார்.

துறை ரீதியான நிதி ஒதுக்கீடுகள்:

*  தமிழ் வளர்ச்சித்துறைக்கு 74.08 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* வேளாண்மைத் துறைக்கு 15,894 கோடி ஒதுக்கீடு.
*  தொல்லியல்துறைக்கு 32.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  மருத்துவத்துறைக்கு 15,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கீழடி அகழ்வாராய்ச்சியில் வரலாற்று சான்றுகளை வெளிப்படுத்தும் பொருட்களைக் காட்சிப்படுத்த அகழ் வைப்பகம் கட்ட 12.21 கோடி ஒதுக்கீடு.
*  தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 64,208.55 கோடி ரூபாய் ஒதுக்கீடு, ஓய்வூதியத்திற்கு 33,009.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
*  விசைப்படகுகளில் நவீன தகவல் தொடர்பு டிரான்ஸ்ஃபான்டர் பொருத்த 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக 75.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* நகராட்சி நிர்வாக மேம்பாட்டிற்கு 18,540 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* சிறைச்சாலை துறைக்கு 392 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* கால்நடை துறைக்கு 199 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* பொது விநியோக திட்டத்தை மேம்படுத்த 400 கோடி மானியம், உணவு மானியத்திற்கு 6500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு.

தேசிய வளர்ச்சி விகிதத்தை விட தமிழக மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வில் தமிழகத்துக்கான நிதி 4.023% இலிருந்து 4.189 % ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வருவாயை உயா்த்தவும், கடன் அளவினை குறைத்து கட்டுக்குள் வைக்க திட்டம் வகுக்கப்படும் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் 15 வது சட்டப் பேரவையின் முழுமையான பட்ஜெட் தாக்கலாக இது இருக்கிறது. மேலும் தமிழக வளர்ச்சிக்கு உதவும் பல்வேறு சிறப்பம்சம்களை கொண்ட பட்ஜெட் வருமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

0

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதில் சட்ட சிக்கல் – தலைமை செயலாலர் தலைமையில் அவசர கூட்டம்

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் பாமக அதிமுக இடையே கூட்டணி ஏற்படும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ் அவர்களால் 10 அம்ச கோரிக்கை முன்வைக்கப்பட்டது அதில் பிரதானமான கோரிக்கை தஞ்சை டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது.இதனை நிறைவேற்றும் விதமாக தஞ்சை உட்பட 8 மாவட்டங்களை சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.அதாவது விவசாயம் சாராத எந்த துறைக்கும் அங்கு அனுமதி இல்லை என்பதே அதன் பொருள்.ஆனால் கடந்த திமுக ஆட்சியின் போது 2011 ல் எண்ணெய் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பட்டியலில் உள்ளதால் அதன் மீது மாநில அரசு சட்டம் இயற்றுவதில் சட்டசிக்கல் உள்ளது என மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்ததால் தலைமை செயளாலர் திரு.சண்முகம் தலைமையில் மூத்தவழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.எனினும் பிப்ரவரி 18 அன்று சட்டமன்றத்தில் இது தொடர்பான மசோதா தாக்கல்செய்வதில் அதிமுக அரசு முனைப்பு காட்டுவதாக தலைமைசெயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

0

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

இந்நிலையில் அரசியல்வாதிகளை சீண்டும் வகையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த் விஜய் ரசிகரான ஸ்டாலின் மாஸ்கோ என்பவர் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் ‘ரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். விஜய் எங்களுக்கு மாஸ்டர் ஆகவே இருக்க விரும்புகிறோம். தயவு செய்து உங்களுக்கு ஹெட் மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்… இப்படிக்கு மெய்வேலியாய் நிற்கும் ரசிகர்கள்’ என எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் புதுக்கோட்டை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

மாஸ்டரை ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள்!சர்ச்சையைக் கிளப்பிய விஜய்ரசிகரின் மற்றொரு போஸ்டர்!

ஏற்கனவே இதுபோன்ற போஸ்டர் ஒன்றை மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒட்டி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில் அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ எனக் கூறுவது போல அமைந்திருந்தது.

எப்படியோ தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார்கள்…. அது எங்கு போகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

0

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்ததற்கு பாஜகவினரின் பேச்சுகளேக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக அமித்ஷா பதவியெற்றுக்கொண்டார். மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பாஜக அனைத்து மாநிலத் தேர்தல்களிலும் தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தேர்தல் தோல்விக்கு பாஜக பிரச்சாரகர்கள்தான் காரணம்!அமித்ஷா அதிரடி!

இந்த தோல்வி பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தோல்விக்கான காரணம் குறித்து ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் ‘ எங்கள் தலைவர்கள் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சுட்டுத் தள்ள வேண்டும் எனப் பேசியது மக்களுக்குப் பிடிக்கவில்லை, மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை மக்களிடம் பயங்கரவாதி போல சித்தரித்ததையும் அவர்கள் விரும்பவில்லை.’ எனத் தெரிவித்துள்ளார்.

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

0

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் ராகுலைப் பற்றி சக வீரரான தவான் வானளாவப் புகழ்ந்துள்ளார்.

தோனிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்ததை அடுத்தும் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்தும் கே எல் ராகுல் பின் வரிசை ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இந்த எதிர்பாராத சூழ்நிலை நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான ராகுல் பின் வரிசையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

நியுசிலாந்துக்கு எதிரான டி 20 மற்றும் ஒருநாள் தொடரில் அவர் சேர்த்துள்ள மொத்த ரன்களே அதற்கு சாட்சி. 8 இன்னிங்ஸ்களில் அவர் 428 ரன்களை சேர்த்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கடைசி ஒருநாள் போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் இறங்கி சதமடித்து அசத்தினார். அதனால் இப்போது நம்பிக்கை அளிக்கும் பின் வரிசை வீரராக மாறிவரும் அவரை விமர்சகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சக வீரரான ஷிகார் தவான் ராகுலைப் பற்றி ‘அவர் 12 ஆவது இடத்தில் இறங்கினாலும் சதமடிக்கும் திறமை கொண்டவர்’ எனக் கூறியுள்ளார். காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்ட தவான் விரைவில் அணிக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

0

வேப்பமரத்தில் இருந்து வடிந்த பால்! தூத்துக்குடியில் நடந்த அதிசயம்!!

தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி அருகே வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்து ஓடியதால் மக்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கருப்பட்டி சொசைட்டி சாலையின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து இன்று காலையில் திடீரென பால் வடியத் தொடங்கியது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிசயமாகவும், அதிர்ச்சியாகவும் பார்த்து வருகின்றனர். சாலையில் சென்ற மக்கள் கூட்டம் கூட்டமாக மரத்தின் அருகே சென்று உற்று பார்க்கின்றனர். மரத்தில் இருந்து பால் எப்படி வரும் என்று யோசித்தபடியே இயற்கையிடம் லயித்து போயுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இதுபோன்று மரத்தில் பால் வடியும் செய்திகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்நிகழ்வை பலர் செல்போன் மூலம் போட்டோவும், வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இச்சம்பவம் பக்கத்து கிராம மக்களுக்கு பரவியதால் வேப்ப மரத்தின் அருகே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது. வழக்கமாக இதுபோன்று மரத்தில் பால்வடிந்தால் அந்த மரத்தில் சாமி இருப்பதாக கருதி வெட்டாமல் அங்கு பூஜை நடத்தி வழிபாடுகளும் நடைபெறுகிறது.

அந்த காலத்தில் இருந்தே மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காக மரத்தில் சாமி இருப்பதாக கூறி மரத்தையும், இயற்கையையும் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்தார்கள். மரங்கள்தான் பல்வேறு உயிரினங்களின் வாழிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

0

காதலர் தினம் தோன்றிய வரலாறு! இப்படித்தான் வாலண்டைன் தினம் உருவானதாம்..!!

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் வந்தாலே பலருக்கு அந்த நாள் முழுக்க குதூகலமாக அமைந்துவிடுகிறது. இந்த காதலர் தினம் எப்படி தோன்றியது என்பதை வரலாற்றில் தேடிப்பார்ப்போம்.

காதல் செய்யும்  இளைஞர்கள் காதலர் தினத்தன்று தனது காதலை வெளிப்படுத்த விரும்புவார்கள். காதலர் தினம் பற்றிய வரலாற்று சான்றுகள் ரோமானிய அரசனின் ஆட்சிக்காலத்தில் கிடைத்துள்ளதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. ரோமாபுரி நாட்டில் கிளாடியுஸ் மிமி ஆட்சி நடந்தபோதுதான் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. தன்னுடைய நாட்டில் யாரும் காதல் திருமணம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அந்த உத்தரவில், இனி யாரும் காதலித்து திருமணம் செய்து கொள்ளக்கூடாது எனவும், ஏற்கனவே நிச்சயிக்கபட்ட திருமணங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஒரு அதிரடி முடிவு வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசனின் உத்தரவை எதிர்த்து அந்நாட்டு பாதிரியார் வாலண்டைன் என்பவர் ரகசியமான காதல் திருமணங்களை நடத்தி வைத்தார். அரசனின் உத்தரவை மீறியதன் விளைவாக பாதிரியார் வாலண்டைன் சிறையில் அடைக்கப்பட்டார். அதோடு அவருக்கு மரண தண்டைனைக்கான நாளும் அரசனால் குறிக்கப்பட்டது.

சிறையில் இருந்த வாலண்டைனுக்கும் சிறைக்காவலரின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் இடையே காதல் உருவானது. இருவரும் சிறையில் இருந்தாலும் இவர்களின் காதல் சுதந்திர பறவையாகவே இருந்தது. இந்த காதல் விவகாரம் சிறைக்காவலருக்கு தெரியவர அஸ்டோரியசை வீட்டு காவலில் வைத்தார். இருவரும் பிரிந்த தூரமான நிலையில் இருவருக்குமான காதல் மிக நெருக்கமாகியது  தனது காதலியை பார்க்கமுடியாத வாலண்டைன் காதலி அஸ்டோரியசுக்கு தனது முதல் காதல் வாழ்த்தினை அட்டை மூலம் எழுதி அனுப்பினார்.

வாழ்த்து அனுப்பிய வாலண்டைனுக்கு அதே நாளே, கல்லால் அடித்தும் கொடுமையான சித்ரவதை செய்து அவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டார். வாலண்டைன் கொல்லப்பட்ட தினம் கி.பி.270 பிப்ரவரி 14ம் நாளாகும். இந்த நாளைதான் வாலண்டைன் தினம் அல்லது காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர்கள் இறந்தாலும் உண்மையான காதல் ஒருபோதும் சாகாது என்பதற்கு இவர்களின் அன்பே சாட்சியாகும்.

சூரரைபோற்று நாயகியின் சூடேற்றும் படங்கள்! இப்படியா போஸ் கொடுப்பது!!

0

சூரரைபோற்று நாயகியின் சூடேற்றும் படங்கள்! இப்படியா போஸ் கொடுப்பது!!

தமிழ் சினிமாவின் வெற்றிப்படமான இறுதிச் சுற்று படத்தின் இயக்குனர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கொழுக் மொழுக் நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தில் கருணாஸ், மோகன்பாபு உள்ளிட்ட பலர் திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பத்திரிகையின் அட்டைப் படத்திற்காக நாயகி அபர்ணா கொடுத்துள்ள அநாகரிகமான போஸ் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைப்பதாக இருக்கிறது. கேரளா புடவையில் இருப்பது அழகாக காட்டினாலும் மற்ற இரண்டு படங்கள் சற்று இறுக்கமாக இருப்பது போல் முன்னும் பின்னும் எடுக்கப்பட்டுள்ளது.

சினிமாவிற்கு கவர்ச்சி அவசியம்தான் என்றாலும் ஆரம்பத்திலேயே இப்படியா என சிலர் சிலாகிக்கின்றனர். மேலும் சூர்யாவின் படம் கோடை விடுமுறையில் கொண்டாட்டம் காண திரைக்கும் வரும் என்று கூறப்படுகிறது. விஜயின் மாஸ்டர் படத்திற்கும் சூர்யாவின் படத்திற்கும் போட்டி வந்தாலும் வரலாம். தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைக்கள் மின்னி மறைந்துள்ளனர். அந்த வகையில் அபர்ணா தனது நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவில் தனித்த இடம் பிடிப்பாரா அல்லது ஓரிரு படங்களில் ஓரம்கட்டப்படுவாரா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியவரும்.

கடந்த இருபது ஆண்டுகளில் இதுதான் என்னுடைய சிறந்த படம் என்று சூர்யா உறுக்கமாக கூறியது குறிப்பிடத்தக்கது.