Home Blog Page 5762

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

0

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்துக் கருத்துகளையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. ஆம் ஆத்மி 62 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வென்றன. தேசிய கட்சியானக் காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்ல. இதையடுத்து காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று தெரிவித்து தோல்வியை ஏற்றுக்கொண்டார்.

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

இந்நிலையில் தனது நண்பரும் ஆம் ஆத்மியின் வெற்றி வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுகு கமல் டிவிட்டரில் வாழ்த்துக் கூறினார். அப்போது ‘அரவிந்த கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள். டெல்லி மக்கள் வளர்ச்சி மற்றும் நேர்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆம் ஆத்மி கட்சியை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். இதைப்போல தமிழக மக்களும் வருகின்ற  தேர்தலில் முடிவெடுப்பர். நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்வோம்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த டிவிட்டுக்கு கமெண்ட் செய்த நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ‘நேர்மை மற்றும் வளர்ச்சிக்குப் பெயரே நீங்கள் தான் சார்’ எனக் கூறியுள்ளார். இது கமலுக்கு அளிக்கும் பாராட்டா அல்லது கேலியா எனப் புரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!

0

30 வருடத்துக்குப் பிறகு மோசமான சாதனை:இந்தியாவின் வொயிட்வாஷ் வரலாறு!

இந்திய அணி 22 ஆண்டுகளுக்கு பிறகு வொயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட் வாஷ் சாதனையை நிகழ்த்தியது. ஆனால் அந்த சந்தோஷத்தின் சுவடு மறைவதற்குள அடுத்த வாரத்திலேயே ஒருநாள் போட்டிகளில் நியுசிலாந்து இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வொயிட்வாஷ் செய்துள்ளது.

இந்திய அணியின் மோசமான பீல்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றால்தான் மாபெரும் தோல்வி கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழப்பது 30 ஆண்டுகளுக்குப் பின் இதுவே முதல் முறையாகும். கோலியின் தலைமையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்திய அணிக்கு இது மாபெரும் கரும்புள்ளியாக அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக இந்திய அடைந்த வொயிட்வாஷ் போட்டிகளின் விவரம் :-

1983-1984 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர். இதில் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

1988/89 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த தொடர். இதிலும் இந்தியா 0-5 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2006/07 ஆம் ஆண்டு தொடர். அப்போது முதல் போட்டி மழையால் கைவிடப்பட அடுத்து வந்த 4 போட்டிகளிலும் தோற்ற இந்திய 0-4 என்ற கணக்கில் தோற்றது.

அதையடுத்து நியுசிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்றுள்ளது.

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

0

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாமலும், வெற்றிக் கனியை பறிக்காமலும் முழுவதுமாக மண்ணை கவ்வியது டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது

இந்த தேர்தல் தோல்வி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டுவிட்டரில் வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இளைஞர் ஒருவர் குஷ்புவிற்கு அரசியல் பாடத்தையே கற்பித்து விட்டார். அப்பதிவில் இளைஞர் கூறியிருப்பதாவது:

உங்கள் கட்சிக்கு அரசியலில் வேகமோ, மூர்க்த்தனமோ கடுமையாக உழைத்து வெற்றியை பறிக்கும் வெறித்தனம் இல்லை, தெளிவு இல்லை என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இளைஞரின் ஒட்டுமொத்த அரசியல் பேச்சுக்கும் “நான் இதை ஒப்புக் கொள்கிறேன்” என்று அதிர்ச்சி தரும் விதமாக குஷ்பு பதில் அளித்திருந்தார். குஷ்புவின் பதிலை பலரும் எதிர்பாராத வியப்பில் ஆழ்ந்து போனார்கள்.

மேலும், டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் நாம் வருத்தம், வேதனையுமாய் இருப்பதை மாற்றி அமைக்கும் விதமாக இனி நமது செயல்பாடு இருக்க வேண்டும் என குஷ்பு பதிவிட்டிருந்தார். டெல்லியில் போட்டியிட்ட ஆளும் கட்சி பாஜகவும் பெரிய அளவில் வெற்றி வாகை சூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமாக ஒயிட்வாஷ் செய்தது போல் டெல்லியில் ஒரு இடத்தை கூட ஜெயிக்காத காங்கிரஸ் கட்சி, இனி வருங்கால அரசியலில் தலை தூக்குமா என்பது இந்த தேர்தலின் மூலம் கேள்வியாகி உள்ளது.

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

0

10 ரூபாய்க்கு பசியை போக்கும் ரஜினி ரசிகர்; சென்னை மக்களிடையே வரவேற்பு..!!

சென்னை: எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவையில் ஒன்றாக உணவு இருக்கிறது. நவீன காலத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றமும் உணவின் விலை ஏற்றத்தையும் நாம் அறிந்திருப்போம். சென்னையில் 10 ரூபாய்க்கு மதிய உணவை வழங்கி பலருக்கு நல்ல சேவையை ரஜினியின் ஒருவர் வழங்கி வருகிறார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த வீரபாகு என்கிற ரஜினி ரசிகர் மதிய வேளையில் தனது ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளருக்கு தரமான சைவ உணவுகளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ஏற்படும் பண இழப்பை காலை மற்றும் இரவு உணவு விற்பனை மூலம் சரிக்கட்டுவதாக வீரபாகு தெரிவித்துள்ளார்.

பரபரப்பான இடங்களில் சாலிகிராமம் பெயர் பெற்ற இடம் அதுமட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் நிறைந்த இடமும் கூட. 10 ரூபாய் உணவில் மோர், ரசம், பொரியல் கிடைப்பதால் இந்த ஓட்டலுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. தான் ஒரு ரஜினி ரசிகர் என்றும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர இருப்பதால், அவரின் பெயரில் மக்களுக்கு நான் சேவை செய்கிறேன் என்றும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

0

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

 விஜய்யை அரசியலுக்கு வர சொல்லி மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் அடித்துள்ள் போஸ்டர் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விஜய் ரசிகர்களுக்கும் பாஜக ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகிறது. இது மாஸ்டர் படப்பிடிப்புத் தளம் வரை சென்றுள்ளது. பாஜகவினர் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஆயிரக்கணக்கில் குவிந்தனர் விஜய் ரசிகர்கள். இந்த சர்ச்சைகள் இதோடு நில்லாமல் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு வரை சென்றுள்ளது.

ஆந்திராவக் காப்பாத்தியாச்சு;தமிழ்நாட்ட நீங்கதான் காப்பாத்தணும்!விஜய் ரசிகர்களின் குறும்பு!

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் சிலர் வித்தியாசமான முறையில் விஜய்க்கு அரசியல் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் அடித்துள்ள போஸ்டரில் ‘அதில் விஜய்யின் இருபுறமும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனும் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோரும் ‘ஆந்திராவை நாங்கள் காப்பாற்றி விட்டோம். லங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் . மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள்’ என வேண்டுகோள் விடுப்பது போல அச்சடித்து ஒட்டியுள்ளனர். இதனால் விஜய் ரசிகர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையேயான மோதல் இப்போது முடியாது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இது எங்க ஏரியா!வொயிட்வாஷ் செய்து பழிதீர்த்த நியுசிலாந்து!

0

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்ற ஏக்கம் ரசிகர்கள் மனதில் எழுந்தது.இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

இது எங்க ஏரியா!வொயிட்வாஷ் செய்து பழிதீர்த்த நியுசிலாந்து!

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரெயாஸ் ஐயர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மனிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானத் தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். கப்தில் 61 ரன்களும் நிக்கோல்ஸ் 80 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர். அதன் பின்னர் வந்த வில்லியம்ஸன் 21 ரன்களிலும் ராஸ் டெய்லர்(12), லாதம் (32) நீஷம் (32) ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினார். அதனால் வெற்றி வாய்ப்பு பாதிக்குப் பாதியாக இருந்தது. ஆனால் அந்த அணியின் காலின் டி கிராண்ட்ஹோம் இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சுக்கு நூறாக்கினார். அதிரடியாக விளையாடிய அவர் 28 பந்துகளில் 58 ரன்களை சேர்த்து 48 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்ட வைத்தார். இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி 20 தொடரில் தங்கள் சொந்த மண்ணில் வொயிட் வாஷ் ஆகி பட்ட அவமானத்தை ஒருநாள் தொடரின் மூலம் போக்கியுள்ளது நியுசிலாந்து அணி.

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

0

திமுக கையெழுத்து இயக்க போராட்டத்தில் இளைஞர் சரமாரி கேள்வி; பதில் தெரியாத உடன்பிறப்புகள் எஸ்கேப்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் 2 கோடிக்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கையெழுத்தை வாங்கி வித்தியாசமான போராட்டத்தை முன்வைத்தார். இந்த போராட்டம் சம்பந்தமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கையெழுத்து வாங்க திமுக மகளிர் பல இடங்களில் மக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

திமுக மகளிர் தொண்டர், ஒரு இளைஞரை அழைத்து கையெழுத்து போடும்படி கூறினார். அருகில் வந்த இளைஞர் எதற்காக கையெழுத்து வாங்குறிங்க..? என்ன காரணம்..? சரியான விளக்கம் தரமுடியுமா என்று சரமாரியாக கேள்விகளை தொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத திமுக பெண் தொண்டர்கள் விழிபிதுங்கி நின்றனர்.

பின்னர், மோடி அரசினால் ஏற்படுக்கு நஷ்டத்திற்கு எதிராக கையெழுத்து வாங்குவதாக சமாளித்தனர். அந்த இளைஞர் மீண்டும் விடாமல் கேள்விகேட்டதால், நீ கையெழுத்து போடவே வேண்டாம் போ” என்று கூறினர். நீங்கள்தானே கூப்பிட்டிங்க கேள்விகேட்டால் பதில் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் என்று இளைஞர் மீண்டும் கேள்வியெழுப்பவே… திமுகவின் மற்றொரு தொண்டரை விளக்கம் தர அழைத்தனர்.

அழைக்கப்பட்ட உடன்பிறப்புக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி தெரியவில்லை என்பதால் அவரும் பதில் சொல்ல முடியாமல் முழித்தார். இதைப்பார்த்த கேள்விகேட்ட இளைஞர் புண்முறுவலுடன் சிரிக்க ஆரம்பித்தார். கடைசியாக நாங்கள் டெல்லிக்கு சென்று பேசுவோம் என்று ஏதோ ஒரு வகையில் சமாளித்து கேள்வி கேட்ட இளைஞரிடம் இருந்து திமுக தொண்டர்கள் எஸ்கேப் ஆயினர். இதேபோல் திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் பொதுமக்களை வழிமறித்து கட்டாயமாக கையெழுத்து வாங்கியதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் பிரியாணி போட்டு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியதாக புகார் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

0

மதுபான கூடத்தை தனியாக பூட்டிய சிங்கப்பெண்; கதவை உடைத்து தலைதெறிக்க ஓடிய குடிமகன்கள்..!!

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மது விற்பனை செய்யக் கூடாது என்று தமிழக அரசு ஏற்கனவே விதிமுறையை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்ட விதிமுறைகளை மீறி சில இடங்களில் மது விற்பனை செய்ப்பட்டு வருகிறது.

சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தின் எதிரே இருந்த ஒரு மதுபானக் கூடத்தில், மதுக்கடைக்கான விற்பனை நேரத்தை கடைபிடிக்காமல் அதிக நேரம் மது விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதைக் கண்ட தேசிய பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக இருக்கும் கலைச்செல்வி என்பவர் அதிக நேரம் மது விற்பனை செய்த பட்டாபிராம் மதுக் கூடத்தினை தைரியமாக பூட்டை போட்டு பூட்டினார். பூட்டிய சாவியை மதுக்கடைக்கு எதிரே இருந்த பட்டாபிராம் காவல்நிலைய அதிகாரிகளிடம் சாவியை ஒப்படைத்தார்.

பின்னர், அரசு வழங்கிய குறிப்பிட்ட நேரத்தை விட, அதிக நேரம் மது விற்பனை செய்வதாக புகார் ஒன்றையும் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பூட்டப்பட்ட மதுக் கூடத்தின் கதவை உடைத்துக் கொண்டு குடிமகன்கள் வெளியேறினர்.
இதுபோன்று பல்வேறு மதுக் கடைகளில் விதிகளை மீறி விற்பனை செய்யும் நேரத்தில் தனது செல்போன் மூலம் நேரடியாக கலைச்செல்வி வீடியோவில் பேசியுள்ளார்.

மதுக்கடைகள் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் எப்போதுமே மது விற்பனை செய்வதாகவும் இதான் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் மதுவிற்கு அடிமையாகி தமது எதிர்கால வாழ்க்கையை இழக்கிறார்கள் என்றும், அரசு இதுபோன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலைச்செல்வி கூறினார்.

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

0

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

டெல்லித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இருக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே நடந்தது போன்ற முடிவை கொடுத்து வருகின்றன.

டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆதரவளிக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக வாக்கு எண்ணிக்கையில் ஆரம்ம முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்து வந்தது. சற்று முன்பு வரை ஆம் ஆத்மி 58 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. பாஜக 12 இடங்களில் முன்னிலைப் பெற்று வருகிறது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதன் மூலம் டெல்லி மக்கள் காங்கிரஸை முழுமையாக தங்கள் மனதில் இருந்து தூக்கி வீசிவிட்டார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆட்டத்திலேயே இல்லாத காங்கிரஸ்:டெல்லி தேர்தல் நிலவரம்!ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி!

இதுதொடர்பாக காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஷர்ம்ஸ்தா முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “ டெல்லி சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி மீண்டும் அழிக்கப்பட்டுவிட்டதை ஒப்புக் கொள்கிறேன். இதில் நானும் எனது பங்கை ஏற்றுக்கொள்கிறேன் ”என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ‘பாஜக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம்.  27 இடங்களில், ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையில் 1,000 வாக்குகள் மட்டுமே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது’ எனக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் எனும் கட்சியை டெல்லி மக்கள் மொத்தமாகப் புறக்கணித்துள்ளனர் என்பது இந்த தேர்தலின் மூலம் தெளிவாகியுள்ளது.

ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

0

ராகுலின் மாஸ்டர் இன்னிங்ஸ்: இந்தியா 296 ரன்கள் சேர்ப்பு! வெற்றி பவுலர்கள் கையில்!

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஆனால் அதன் பின் தொடங்கிய ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இல்லை. நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது. இன்று பே ஓவல் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது வெற்றி பெற்று இந்திய அணி கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று காலை தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த கேப்டன் கோலி 9 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி இக்கட்டான சூழலில் உள்ளது.

அதன் பின்னர் ஸ்ரேயாஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியை தூக்கி நிறுத்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரெயாஸ் ஐயர் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த ராகுல் சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. மனிஷ் பாண்டே 42 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 296 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடி வருகின்றனர். 21 ஓவர்கள் முடிந்துள்ள நிலையொல் 124 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட்டை இழந்துள்ளனர். விக்கெட்களை விழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் திணறி வருகின்றனர்.