Home Blog Page 5797

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

0

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

இந்திய குடிமகன் ஒருவருக்கு மிக உயரிய விருதாக வழங்கப்படும் விருது என்றால் அது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் பாரத ரத்னா விருது பற்றி மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

பாரத ரத்னா விருது இன்னும் நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு வழங்க படவில்லை. எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை உத்தரவிட வேண்டும் என அனில் தத்தா ஷர்மா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘காந்தியின் மீது மக்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால் காந்திக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. அதுமட்டுமில்லாமல் மகாத்மா முன்னால் பாரத ரத்னா விருது என்ன பெரிதா ?’ எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து மனுதாரர் ‘மகாத்மா காந்தி,  பாரத் ரத்னாவை விட சிறந்தவர் என்று மரியாதை செய்ய உத்தரவிட வேண்டும்’ என எதிர்வாதம் செய்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் ‘அதுபற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

ஆனால் மனுதாரர் மத்திய அரசிடம் தனது விருப்பத்தை  முறையிடலாம் என அறிவுறுத்தியது.

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

0

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது.

கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை.

பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் எம்.ஜ்.ஆர். ஆனால் அதுவும் கைகூடவில்லை. இதனையடுத்து இப்போது மணிரத்னம் அந்த முயற்சியில் வெற்றி கண்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார். மிகப்பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக சனீஷ்வர் அனிமேஷன்ஸ் என்ற அனிமேஷன் நிறுவனம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தோற்றத்தை அனிமேஷனில் வரைந்து வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1 என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளன்று படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. பெரியார் குத்து’ பாடல் புகழ் ரமேஷ் தமிழ்மணி இசையமைக்க மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார். இந்த பாடல் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் என ஆரம்பிக்கும் அந்த பாடல் பழைய எம்.ஜி.ஆர் ஓபனிங் பாடலான நான ஆணையிட்டால் பாடலை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் !

0

75 வயதில் இரண்டாவது திருமணம் ; மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் !

75 வயதில் திருமணம் செய்துகொண்ட பெங்காலி நடிகர் திபாங்கர் டே மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பிரபல பெங்காலி நடிகரான திபாங்கர் டே பல வருடங்களாக டோலான் ராய் எனும் 49 வயது நடிகையும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர் தனது முதல் மனைவியை ஏற்கனவே விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தகக்து. ஆனாலும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த திருமணம் பெங்காலி திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் திருமணம் முடிந்த அடுத்த மறுநாள் திபாங்கர் டே மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

0

தலையில் மூன்று குண்டுகளோடு 7 கி.மீ. கார் ஓட்டிய பெண்மணி ! மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை !!

பஞ்சாப்பில் குடும்பத் தகராறில் சுடப்பட்ட பெண் 3 குண்டுகளோடு 7 கி மீ தூரம் காரை ஓட்டிச்சென்ற சம்பவம் அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது பெண்மணி சுமித் கவுர் என்ற பெண் தனது வயது முதிர்ந்த தாயாரோடு வசித்து வந்துள்ளார். இவரது பெயரில் சுமார் 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. இது அவரது தந்தை இறக்கும் போது சுமித்துக்கு கொடுத்த நிலமாகும்.  சுமித்துக்கு ஒரு சகோதரர் உள்ளார். அவருக்கு சுமித்தைப் போலவே நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சுமித்தின் நிலத்தை அபகரிக்க அவர் முயன்றுள்ளார். இது சம்மந்தமாக சுமித்துக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

நிலத்தைக் கொடு்க்காததால் சுமித் மேல் அவரது சகோதரர் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் சுமித்தை மிரட்ட துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் சகோதரர். அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு பெரிதாகியுள்ளது.

அப்போது  சுமித்தின் சகோதரரும் அவரது 10 ஆவது படிக்கும் மகனும் சுமித்தையும் அவரது தாயாரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சுமித்தின் தலையிலும் முகத்திலும் 3 குண்டுகள் பாய்ந்துள்ளன. அவரது தாயாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிய சுமித் குண்டுகள் தலையில் இருந்த படியே 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று இது சம்மந்தமாக புகார் அளித்துள்ளார். பின்னர் அங்கிருந்து போலிஸார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரது தலையில் இருந்த குண்டுகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த சம்பவமானது பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலிஸார் சுமித்தின் புகாரை அடுத்து அவரது சகோதரரையும் அவரது மகனையும் கைது செய்துள்ளனர்.

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா ?

0

மீண்டு(ம்) வருகிறார் டிவில்லியர்ஸ்; மீட்சிப் பெறுமா தென் ஆப்பிரிக்கா !

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக தென் ஆப்பிரிக்கா சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ஏ பி டிவில்லியர்ஸ் மீண்டும் அந்நாட்டுக்காக விளையாடவுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணியின் சாம்பியன் பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் இரு ஆண்டுகளுக்கு முன் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு முழுக்குப்போட்டார். அந்நாட்டு வாரியத்துக்கும் அவருக்கும் இடையே எழுந்த பிரச்சனைகளே இதற்குக் காரணம். ஆனால் அதன் பின் இந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியில் விளையாட அவர் ஆர்வம் காட்டினார். ஆனால் வாரியம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தென் ஆப்பிரிக்க அணியும் மிக மோசமாக விளையாடி லீக் போட்டியிலேயே வெளியேறியது.

இந்நிலையில் இந்த ஆண்டு தொடங்க இருக்கும் டி 20 உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளசீஸ் இது குறித்து டிவில்லியர்ஸோடு பேச்சுவார்த்தை நடத்தினார். தென் ஆப்பிரிக்க அணியும் ஆம்லா போன்ற வீரர்களின் ஓய்வால் மிகவும் பலவீனமடைந்துள்ளது.  இந்நிலையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள கிரீம் ஸ்மித் மற்றும் மார்க் பவுச்சர் ஆகியோர் இப்போது டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்த ஆண்டு நடக்கும் டி 20 உலகக்கோப்பை போட்டியில் டிவில்லியர்ஸ் விளையாடுவார் என தெரிகிறது. அதறகான பணிகளை இப்போது அவர் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் டி 20 மட்டுமில்லாமல் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் மீண்டும் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

டிவில்லியர்ஸின் மீள்வரவு அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் உலகக் கிரிகெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

0

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

பாஜக கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள தமிழக பாஜகவின் மாநில தலைவர் பதவியும் இன்று நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

இதற்கு முன்பு, தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக 2014 ஆண்டு முதல் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வந்தார். கடந்த ஆண்டு செம்டம்பர் மாதம் தெலுங்கானாவின் மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டதால், தமிழக பாஜக மாநில தலைவர் பதவி காலியானது.

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

இதையடுத்து, கட்சியில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்காக உள்கட்சி தேர்தலை நடத்த பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டதால் மாவட்ட தலைவர்களும், சில மாநில தலைவர்களும் அறிவிக்கப்பட்டனர். தென் மாநிலமான தமிழகம், தெலுங்கானா மாநிலங்களுக்கான தலைவர் அறிவிப்பு மட்டும் வந்தபாடில்லை.

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

பல நாட்கள் இழுபறியாக இருந்த, தமிழக மாநில தலைவர் பதவிக்கான அறிவிப்பு இன்று வெளியாவதாக தகவல் வந்துள்ளது.
தலைவர் பதவிக்கு அரசியல் அனுபவமுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர்களும், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய இவர்களில் யாரேனும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாஜகவின் புதிய தலைவராக வானதி சீனிவாசன்? எப்பதான் அறிவிப்பு வருமோ..!!

தமிழ்நாட்டு மக்கள் பெண் தலைமைகளை பெரிதும் ஆதரிப்பார்கள் என்கிற கணக்கில், தமிழிசையை போலவே தமிழக பாஜக மாநில தலைவராக வானதி சீனிவாசனை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக நுட்பமான கணிப்பு பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தலைவர் பதவிக்கான அறிவிப்பு எப்பதான் வரும்..?

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

0

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற பெயரே, எம்.ஜி.ஆர் என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. (17.01.1917 – 24.12.1987) தனது ஆரம்ப காலத்தில் நாடக மேடைகளில் நடித்தார். தேச தந்தை மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து அரசியல் வாழ்க்கை தொடர்ந்தார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

1936 ஆம் வருடம் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகன் ஆனார். 1950 ஆம் ஆண்டிற்கு பிறகு எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை ஏறு முகமாகவே இருந்தது. பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதிக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து விலக்கப்பட்டார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

இதன்பிறகு, 1972 ல் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனியே கட்சி தொடங்கினார். முதன் முதலாக தேர்தலிம் போட்டியிட்ட போது திண்டுக்கல்லில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. 1977 ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சரானார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. (1984)

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

இவரது ஆட்சியில்: சத்துணவு திட்டம், தாலிக்கு தங்கம் வழங்குதல், விதவை பெண்களுக்கு திருமண உதவி, தாய் சேய் நல இல்லங்கள், மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குதல், இலவச பாடநூல் வழங்கும் திட்டம் என மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இலங்கையில் உள்ள விடுதலை புலிகளின் அமைப்பிற்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்தவர். எம்.ஜி.ஆர் இலங்கை கண்டியில் பிறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழீழ போராளி பிரபாகரனுக்கு ஆயுதம் வாங்க பணம் கொடுத்து உதவி செய்தவர் தமிழகத்தில் புலிகள் வந்து செல்லும் போது எந்த சட்ட சிக்கலும் வராமல் பார்த்துக் கொண்டவர்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

திரைத்துறையில் மக்கள் திலகம், புரட்சி தலைவன், இதயக்கனி போன்ற பல்வேறு பட்டங்களை பெற்றதோடு மட்டுமல்லாமல் இந்திய அரசின் விருதான “பாரத ரத்னா” அண்ணா விருது, பத்மஸ்ரீ விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்று மக்கள் மனதில் நிலைத்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் ஏழை மக்களுக்கு எத்தனையோ நல்திட்டங்களை வகுத்தவர். ஒரு மனிதன் எத்தனை காலம் வாழ்ந்தான் என்பதை விட, எப்படி வாழ்ந்தான் என்பதை நிஜத்தில் வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்! தமிழ்நாட்டின் சிறந்த நாள்!!

இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் தமிழகம் முழுக்க சிறப்பான முறையில் கொண்டாடப்படுகிறது. மக்கள் திலகத்தை மக்கள் ஒரு போதும் மறக்கமாட்டார்கள்.

இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !!

0

இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !!

பிசிசிஐ ஆண்டுதோறும் அணி வீரர்களுடம் போடும் ஒப்பந்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். ஆனால் இந்த ஆண்டு அவர் எந்த பிரிவிலும் இடம்பெறவில்லை. இதன் மூலம் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டதட்ட முடிவுக்கு வந்துள்ளது.

தோனி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி இனிமேல் தொடர்ந்து விளையாடுவாரா என்பதை இரு தரப்புமே சொல்லாமல் தவிர்த்து வந்தது.

இந்த ஆண்டுக்கான  வீரர்களின் ஒப்பந்த பட்டியல்

+ பிரிவு (ரூ.7 கோடி): –

கோலி, பும்ரா, ரோஹித் சர்மா

பிரிவு (ரூ.5 கோடி) : –

அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர், புஜாரா, ரஹானே, தவண், ஷமி, இஷாந்த்சர்மா, குல்தீப், ரிஷப் பந்த், ராகுல்

பிபிரிவு: (ரூ.3 கோடி): –

உமேஷ், சாஹல், பாண்டியா, சஹா, மயங்க் அகர்வால்

சிபிரிவு (ரூ.1 கோடி): –

கேதார் ஜாதவ், பாண்டே, ஹனுமா விஹாரி, சைனி, தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், அய்யர், வாசிங்டன் சுந்தர்.

பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்

0

பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இது இந்துக்கள் பண்டிகை என்று பார்க்காமல் பல்வேறு மதத்தினரும் வேறுபாடு மறந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கல் அன்று அந்தந்த பகுதிகளில் கடைபிடிக்கும் வழக்கதின் படி விளையாட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு, எருதாட்டம் என பல்வேறு வகையான நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் காணும் பொங்கல் அன்று சென்னை உள்ளிட்ட பல இடங்களில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்தினருடன் அருகில் உள்ள கடற்கரை அல்லது ஆற்றங்கரை போன்ற சுற்றுலா தள பகுதிகளுக்கு சென்று கொண்டாடுவது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு பெருந்திரளாக கூட்டம் கூடுவதால் அது போன்ற இடங்களில் சிறுவர்கள்,முதியோர்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போவதும்,காணாமல் போன குழந்தைகளை கண்டு பிடிக்க காவல் துறையினர் கஷ்டபடுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் Helo ஆப்

அந்த வகையில் இந்த வருடம் இது போன்ற இடங்களில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டறிய பிரபல சமூக வலைதளமான Helo செயலியும்,தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து தேடும் பொங்கல் என்ற பெயரில் ஒரு புதிய முயற்சியை தொடங்கியுள்ளனர்.

இதில் நாளை சென்னை மெரினா கடற்கரையில் கொண்டாட உள்ள காணும் பொங்கல் பண்டிகையின் போது உங்கள் அன்புக்குரிய சொந்தங்கள் யாராவது காணாமல் போனால் Helo கேர் அறிவித்துள்ள இந்த கேஷ் டேக்கை பயன்படுத்தி அவர்களின் படத்தை பகிர்ந்தால் அதை வைத்து சுலபமாக அவர்களை கண்டறிய முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு சென்னை காவல்துறை மற்றும் Sixth Sense Foundation என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் Helo கேர் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்

[#தேடும் பொங்கல் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் கடைசி தினமான காணும் பொங்கல் திருநாளன்று அனைவரும் குடும்பத்துடன் கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது குழந்தைகள், முதியவர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கி தொலைந்து போகின்றனர். இது போல தொலைந்து போகும் உங்கள் அன்புக்கு உரியவர்களை கண்டுபிடிக்க @Helo கேர் எடுத்துள்ள முன்னெடுப்பு தான் #தேடும் பொங்கல். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தொலைந்து போகின்றவர்களை @Sixth Sense Foundation மற்றும் சென்னை காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்க @Helo கேர் உதவு உள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கிறது Helo. கூட்ட நெரிசலில், உங்கள் அன்புக்கு உரியவர்கள் தொலைந்து போனால் அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை #தேடும் பொங்கல் , #Helo கேர் என்னும் hashtag பயன்படுத்தி பதிவிடுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!

தேடுவோம்! கண்டடைவோம்! கொண்டாடுவோம்!] http://m.helo-app.com/al/xscfpYdeT

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

0

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் மிக முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினை ஏற்ற தமிழர்களும் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

இந்நிலையில், பொங்கல் விழா என்பது இந்துக்களின் பண்டிகையாகும் எனவே, இந்த பண்டிகையை மலேசியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் யாரும் கொண்டாட கூடாது என்று “மலேசிய இஸ்லாமிய வளர்ச்சி அமைச்சகம்” வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, மலேசியாவின் கல்வி நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் பொங்கல் பண்டிகையை இஸ்லாமியர்கள் தவிர்க்க வேண்டும் எனவும், கல்வி மற்றும் பள்ளிகளில் பொங்கல் பண்டிகை நடைபெற்றால் அதில் இஸ்லாமியர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டது.

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

இந்த அறிக்கையானது மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு கழகத்தின் தலைவர், காசிம் என்பவரால் அனுப்பிய அறிக்கையாகும். இது சம்பந்தமாக காசிம் கூறியதாவது: மலேசிய அரசு பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் பிற இந்து மாணவர்களுடன் பொங்கல் கொண்டாடுவது மாணவர்களின் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லை என்றும்,

அதுமட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகை இந்து மதம் சார்ந்த பண்டிகை என்பதால் இந்த அறிக்கை வெளியிட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மலேசிய பள்ளிகளில் இனி பொங்கல் கொண்டாடுவது குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது. இந்த அறிக்கை மலேசிய தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட கூடாது! அறிக்கையால் தமிழர்கள் அதிர்ச்சி?

தமிழ்நாட்டில் இந்து, கிறித்தவம், இஸ்லாம் என தனித்தனி மதமாக இருந்தாலும் வருடந்தோறும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒவ்வொரு தைப் பொங்கலுக்கும் தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லியது குறிப்பிடத்தக்கது.