Home Blog Page 5798

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !

0

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்; காங்கிரஸ் & பாஜக ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்த மாயாவதி !

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் 64 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. லக்னோவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரது பேச்சில் ‘பா.ஜ.க  அமைத்துள்ள மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியைப் போலவே செயல்படுகிறது. இரு கட்சிகளும் மக்கள் நலனையும் தேசிய நலனையும் ஒதுக்கி வைத்துள்ளன. அவை தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை அரசியல் ஆதாயங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகின்றன.

வறுமை, வேலை வாய்ப்பின்மை, வன்முறைகள் ஆகியவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது அதிகமாகிவிட்டன. அரசின் கொள்கைகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. பாஜக தனது கட்சியில் உள்ள குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ஆனால் நான் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

குடியுரிமைத் திருத்த சட்டம் நாட்டின் ஒரு பிரிவினரை அந்நியப்படுத்துகிறது. அதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாங்கள் எதிர்க்கவில்லை என காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. பகுஜன் சமாஜ்தான் முதன்முதலில் குடியுரிமை திருத்த  சட்டத்தை எதிர்த்தது. நாங்கள் அமைதியான முறையில் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். எங்கள் கட்சி பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் பார்க்கிறது’ எனக் கூறியுள்ளார்.

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

0

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.  ( குறள் : 1031 )

உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்
ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

“உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். நம் முன்னோர் காலத்தில் இருந்து இன்றுவரை  உழவுக்கு உறுதுணையாக இருக்கும்  காளைகளுக்கும், பசுவிற்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

மதுரை பாலமேட்டில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் 700 க்கும் மேற்பட்ட காளைகளும், 935 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் அவிழ்த்து விடப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 75 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதியுண்டு.

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

இவ்விழாவின் அவசர மருத்துவ சேவைக்காக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் போட்டியில் களம் இறக்கப்படும். மதுரை, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகளும், அனுமதி சீட்டு பெற்ற மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

போட்டியில் கலந்து கொள்ளும் காளை மற்றும் மாடுபிடி வீரர்களும்  மருத்துவ உடல்தகுதி பரிசோதனைக்கு பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதி உண்டு. போட்டியின் விதிமுறைகளை மீறினால் தகுதி நீக்கம் செய்யப்படும் என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் பாதுகாப்பிற்காக 1500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

0

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்த அமெரிக்க நடிகை மோலி பிட்ஸ் தனது தாயாரைக் கொலை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் அமெரிக்கா, தி பஸ்ட் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மோலி மேக்ஸீன் பிட்ஸ்ஜெரால்டு . நடிப்பது மட்டுமில்லாமல் படங்கள் தயாரிப்பது மற்றும் இயக்குவது போன்ற பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இவர் தனது தாயோடு வசித்து வந்தார்.

தாயைக் கொன்ற இளம் நடிகை ; அதிர்ச்சியில் திரையுலகம் !

கடந்த மாதம் மோலியின் தாய் பெட்ரிஷியா பிட்ஸ் ஜெரால்டு (68) மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்துக்கு அருகில் மோலி படுகாயமடைந்து சுய நினைவின்றி கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போலிஸார் மோலிதான் தனது தாயைக் கொலை செய்திருப்பார் என சந்தேகித்தனர்.

ஆனால் மோலியோ தனது தாயார் தன்னைக் கத்தியால் குத்த முனைந்ததாகவும் தான் தற்காப்பிற்காகவுமே அவரை கத்தியால் குத்தியதாகவும் கூறியிருந்தார். ஆனால் போலீஸ் விசரணையில் மோலியின் தாயார் கத்தி எதையும் உபயோகப்படுத்தவில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து மோலியை அவரது தாய்க் கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். இந்த சம்பவமானது ஹாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து மோலியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி நேரலையில் கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் !

0

ஹோட்டலில் பிணமாகக் கிடந்த பெண் ! தொலைக்காட்சி வந்து கொலை செய்ததை ஒத்துக்கொண்ட கொடூரன் !

சண்டிகாரில் கடந்த மாதம் நடந்த கொலை ஒன்றின் குற்றவாளி தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்து தான் செய்த கொலையை ஒத்துக்கொண்டுள்ளார்.

சண்டிகார் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பெயர் சப்ரஜித் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்துப் போலிஸார் கொலையாளியைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் சண்டிகார் நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு அரங்கத்துக்கு வந்த மனேந்தர் சிங் என்பவர் சப்ரஜித்தைக் கொலை செய்ததை நேரலையில் ஒத்துக்கொண்டுள்ளார். இதையடுத்துப் போலீஸார் அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட சப்ரஜித் மனிந்தரோடு சம்மந்தப்பட்ட ஹோட்டலில் டிசம்பர் 30 ஆம் தேதி செக் இன் செய்துள்ளார்.

அதன் பின்னர் அடுத்த நாள் ஹோட்டல் ஊழியர்கள் பல முறைக் கதவைத் தட்டியும் திறக்காததால் வேறொரு சாவியை போட்டுத் திறந்துள்ளனர். அப்போது அந்த பெண் மட்டுமே கழுத்தறுக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

சப்ரஜித் மற்றும் மனிந்தருக்கு இடையிலான காதல் விவகாரத்தில் இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளில் மனிந்தர் 2010 ஆம் ஆண்டு இதே போல ஒரு கொலை வழக்கில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு ! பதறும் விலங்குகள் ஆர்வலர்கள் !

0

5000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு ! பதறும் விலங்குகள் ஆர்வலர்கள் !

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர் பஞ்சம் மற்றும் காட்டுத்தீ ஆகியவற்றால் 5000 ஒட்டகங்களை சுட்டுத்தள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடுமையானத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் உருவானக் காட்டு தீயை அணைக்க ஏராளமான தண்ணீர் செலவிடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டு சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த கொடூர காட்டுதீயால் பல விலங்குகள், பறவைகள் அழிந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்படுவது வழக்கம் தான் எனினும் இம்முறை அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இப்போது இந்த சூழ்நிலை மேலும் ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது. அந்நாட்டில் உள்ள ஃபேரல் எனும் வகை ஒட்டகங்கள் ஏராளமான தண்ணீரை குடிக்கும் வழக்கம் உடையவை.  தண்ணீர் பற்றாக்குறை உள்ள இந்நேரத்தில் மேலும் அதிகரிக்காமல் இருக்க அந்த வகை ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 5 நாட்களில் 5000 ஒட்டகங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5000 ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல அரசு உத்தரவு ! பதறும் விலங்குகள் ஆர்வலர்கள் !

ஆஸ்திரேலிய அரசின் இந்த கொடூர முடிவுக்கு விலங்குகள் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலரோ அந்த ஓட்டகங்களை சோமாலியா போன்ற உணவுப்பஞ்சத்தில் இருக்கும் நாடுகளுக்கு அனுப்பியிருந்தால் அவர்களாவது பயன்பட்டு இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசமானக் காட்டுத் தீக்கு வேகமாக மாறி வரும் தட்ப வெப்ப நிலை மாற்றமே காரணம் என சொல்லப்படுகிறது. அதை சரிசெய்யாமல் இப்படி விலங்குகளைக் கொல்வது எந்தவகையில் நியாயம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

0

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

ஓரினச்சேர்க்கை அங்கிகரிக்கப்பட்டுள்ள நெதர்லாந்து நாட்டில் அதுபற்றிய புள்ளிவிவரம் ஒன்று வெளியாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் மீதான அவமதிப்புகள் குறைந்து அவர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பழக்கம் அதிகமாகியுள்ளது. ஆனால் சில பத்தாண்டுகளுக்கு முன்னதாக மேற்கு நாடுகளில் அவர்களுக்கு திருமண செய்து கொள்ளும் உரிமை வரைக் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நெதர்லாந்து நாட்டில் 2001 ஆம் ஆண்டு முதல் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன. இதை அறுவித்த முதல் சில வருடங்களில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகளவில்  திருமணங்கள் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அதன் பின் பெண் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் அதிகமானது. 20 வருடங்களில் லெஸ்பியன் எனப்படும் பெண் ஓரினச்சேர்க்கை தம்பதிகள் அதிகளவில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஓரினச்சேர்க்கை திருமணம் மற்றும் விவாகரத்து ! லெஸ்பியன்களே முன்னிலை !

திருமணங்கள் போலவே விவாகரத்துகளும் நடைபெற்று வருகின்றன. விவாகரத்திலும் பெண் ஓரினச்சேர்க்கைத் திருமணங்கள் ஆண்களை விட அதிகளவில் விவாகரத்தில் முடிகின்றன.

100 ஓரினச்சேர்க்கைத் செய்தால் அதில்  18 திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்த விவாகரத்துகளில் முதன்மைக் காரணமாக அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்துகொள்ளுதே முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் 20 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளும் 40 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் அதிகளவில் விவாகரத்து செய்துகொள்கின்றனர்.

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

0

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் “அம்மா இளைஞர் விளையாட்டு” திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாணவ, மாணவியர்களிடம் எம்.ஜி.ஆர் யாரென்று தெரியுமா என்று கேட்டபோது, மாணவர்கள் தெரியும் என்று பதில் அளித்தனர். எப்படி தெரியும் என மீண்டும் கேட்டதற்கு, சினிமாவில் பார்த்துள்ளோம் என்று மாணவர்கள் கூறினர்.

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

இதையடுத்து பேசிய அமைச்சர், எம்.ஜி.ஆர் உங்களுக்கு தாத்தா மாதிரி என்றும், ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி மாதிரி என்றும் மாணவரிடம் கூறினார். இதைக் கேட்டதும் மாணவர்களும், மற்றவர்களும் வயிறு குலுங்க சிரித்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு “நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” என்ற பாடலை பாடி அசத்தினார். இதைக்கேட்டு அனைவரும் மீண்டும் சிரித்தனர்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கடந்தகால அரசியல் காமெடிகள் :

சம்பவம் 1 : ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவ மனையில் இருந்தபோது, 5 நாட்களுக்கு ஒருமுறை நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம் என்று அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் கூட்டதில் பேசியிருந்தார். (திண்டுக்கல் மணிகூண்டு அருகே கூட்டம் நடைபெற்றது) ஜெயலலிதா இறந்த பிறகு, நாங்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டால் என்று நாங்கள் சொன்னது எல்லாமே பொய் என அந்தர் பல்டி அடித்தார். இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

எம்.ஜி.ஆர் தாத்தாவும், ஜெயலலிதா பாட்டியும்; தொடரும் திண்டுக்கல் சீனிவாசனின் மரண காமெடிகள்!!

சம்பவம் 2 : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு சார்பில் (2017 – 2018) கொண்டாட அறிவிப்பு செய்யப்பட்டது. மதுரையில் விழாவுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில், வெளி மாநில தலைவர்களைஅழைக்கும் திட்டம் உள்ளதா..? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எம்.ஜி.ஆரை தமிழகத்தை தவிர்த்து யாருக்கு தெரியும்..? அதனால் யாரையும் அழைக்கும் திட்டமில்லை என்று ஒரு குண்டை போட்டார்.

இந்த சர்ச்சை பேச்சு குறித்து பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு, எம்.ஜி.ஆரை பற்றி அறிந்தவர்களையும், அவரோடு இருந்த நபர்களையும் அழைப்போம். அவரை பற்றி அறியாதவர்களை அழைக்க வேண்டுமா என்று மழுப்பலாக விளக்கம் தெரிவித்து அனைத்து விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

சம்பவம் 3 : தமிழ்நாட்டில் நடக்கும் கொள்ளைக்கும், கொலைக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம் என்று காமெடியாக பேசினார். மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது, மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்காமல் ஆப்பிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பேசியதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பொறுப்பற்ற பேச்சுகளை நிறுத்த வேண்டும் என்றால், அவரது வாயில் பெரிய திண்டுக்கல் பூட்டை போட்டுதான் பூட்ட வேண்டும் என்று சொந்தகட்சியினரே முன்பு கூறினர்.

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

0

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

ஜனவரி 3 ஆம் தேதி வெளியிட்ட திரெளபதி படத்தின் டிரெய்லர் தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு யாரும் எதிர்பாராத அளவிற்கு பொது மக்களின் வரவேற்பு கிடைத்தது. திரெளபதி டிரெய்லர் தற்போது 40 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

தனக்கு பிடித்த அரசியல் தலைவர், சமுதாய தலைவர், சினிமா நடிகர்களை பேனரில் அச்சிடுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் திரெளபதி படத்தின் போஸ்டரை திமுக கட்சியை சேர்ந்த ஒருவர் தனது காரின் முன்பக்கத்தில் முழுவதுமாக ஒட்டியுள்ளார். வாகனத்தின் முன்பு திமுக கட்சி கொடியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

மேலும், சிலர் தனது இரு சக்கர வாகனங்களில் முன்பக்கத்தில் திரெளபதி படத்தின் பெயரை ஸ்டிக்கர் ஒட்டி தெறிக்க விடுகிறார்கள். பொங்கல் நிகழ்வாக திரெளபதி பெயரையும் மஞ்சள், சிவப்பு நிறத்தில் கோலமாக போட்டு வருகிறார்கள்.

இப்படி திரெளபதி படத்தின் ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் டிரெய்லரில் வரும் வசனங்களையும் படத்தின் இயக்குனரையும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

படத்திற்கு எதிராக பல்வேறு கேள்விகளும், விமர்சனமும் வந்த நிலையில், தனது பேட்டி மூலமாக அனைத்து கேள்விகளுக்கும் படத்தின் இயக்குனர் மோகன்.ஜி அசராமல் பதிலளித்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட திரெளபதி பட முன்னோட்டம் சிறப்பான வரவேற்பு பெற்றதை அடுத்து, படம் எப்போது வெளிவரும் என்பது பொதுமக்களின் ஆவலாக உள்ளது.

திரெளபதியை கொண்டாடும் திமுகவினர்! வாகனங்களில் தெறிக்கவிடும் திரெளபதி வசனங்கள்!!

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

0

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

திமுகவின் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்கு கவலையில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் வெளிப்படையாக பேட்டியளித்துள்ளார்.

தனது சொந்த ஊரான வேலூர் காட்பாடியில் பொங்கல் நிகழ்வு முடிந்த பிறகு செய்தியாளர்களுக்கு துரைமுருகன் பேட்டியளித்தார். அப்போது, எங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி போனாலும் கவலையில்லை, அதனால் எங்களுக்கு எந்த நட்டமும் இல்லை என தெரிவித்தார்.

கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என டி.ஆர். பாலுவின் பதிலையே தானும் தெரிவிப்பதாக கூறினார்.

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

கடந்த 14 ஆம் தேதி டெல்லியில் எதிர்கட்சிகள் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் கூடியது. பாஜகவின் எதிர் நிலைப்பாடு கொண்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்திற்கு மம்தா, மாயாவதி போன்ற அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. காங்கிரசின் நீண்டகால தோழமை கட்சியான திமுகவும் கலந்து கொள்ளாதது காங்கிரஸ் தலைவர்கள் இடையே தேவையற்ற வெறுப்பை உண்டாக்கியது.

இது சம்பந்தமாக, கூட்டணி தர்மத்தை மீறியதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியும், அவரது கட்சியினரும் முன்பு குற்றச்சாட்டு வைத்திருந்தனர்.

இந்த குற்றச்சாட்டின் காரணமாகவே காங்கிரஸ் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கூட்டணி குறித்த கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்று டி.ஆர்.பாலு அண்மையில் செய்தியாளர்களிடம் பதில் அளித்திருந்தார்.

திமுக கூட்டணி: காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை; துரைமுருகன் ஓபன் டாக்!!

கூட்டணி தர்மத்திற்கு எதிராக குற்றச்சாட்டு அறிக்கை வெளியிட்ட கே.எஸ்.அழகிரி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரியின் அறிக்கையின்படி காங்கிரஸில் இருந்து திமுக வெளியேற்றிவிட்டது என்றே கூறலாம்.

இந்த சம்பவங்களின் காரணமாக திமுக, காங்கிரசு கட்சியினரிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து நிரந்தரமாக இருகட்சிகளும் கூட்டணியை விட்டு வெளியேறும் என்ற நிலையும் உருவாகியுள்ளது.

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

0

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

தமிழக மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் தமிழில் பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்கழியின் கடைசி நாளான நேற்றிலிருந்து பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பல வண்ணங்களில் கோலமிட்டு வீடுகளை புதுப்பித்தும் அலங்கரித்து, பச்சரிசி பொங்கலிட்டு சூரிய பகவானுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகை சாதி, மதம் கடந்து அனைத்து தமிழர்களும் கொண்டாடி வரும் மிக சிறப்பான பண்டிகையாகும். இந்து, இசுலாம், கிறித்தவம் போன்ற அனைத்து மதத்தினரும் இயற்கையை வணங்கி கொண்டாடி வருகின்றனர்.

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி! துடிப்பு மிகு தமிழ்ச்சமூகம் என பாராட்டு!!

இந்நிலையில், தமிழ் மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் உலகெங்கும் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறது.

அவர்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்து. இந்த பொங்கல் திருநாள் எல்லையற்ற வளங்களால் நிரம்பிடட்டும், அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என கூறியுள்ளார்.

மேலும் சங்கராந்தி, மாக் பிகு போன்ற பண்டிகைகளுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.