Home Blog Page 5832

மத்திய அரசு நிர்பந்திக்கவில்லை – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

0

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டைச் சோ்ந்த மதச் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் டில்லியில் செய்தியர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி “இந்தியர்களை எந்த வகையிலும் இந்த சட்டம் பாதிக்காது என் பார்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சட்டம் ஒழுங்கு கெடாத வகையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜனநாயக நாட்டில் அமைதியான முறையில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு உரிமையுள்ளது.

இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அதிமுக அரசின் கொள்கை. இதை 2016’ல் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். நானும் இதே கோரிக்கையை மோடியிடம் தெரிவித்துள்ளேன். மத்திய அரசிடம் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்துவோம்.” என்று கூறினார்.

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

0

திமுகவை கதறவைக்க அமித்ஷாவின் ஆட்டம் ஆரம்பம்! டெல்லியில் ஆப்ரேஷன் தயாராகிறது

இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக வேண்டுமென்றே சில கட்சிகள் இஸ்லாமிய சமுதாயத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உண்மைத்தன்மையை மக்களிடம் எடுத்து சொல்லாமல், சிந்திக்க கூட விடாமல் அப்பாவி மாணவர்களையும் இளைஞர்களையும் போராட்ட களத்தில் இறக்கி விட்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.

திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டத்தை நீக்கத்திற்கு எதிராக மிகப்பெரிய அளவில் குரல் கொடுத்து வந்தன. திமுகவின் எதிர்ப்பு குரல் என்பது தமிழகத்திற்கு சிறப்பு சட்டப்பிரிவை நீக்கயது போல் கொந்தளித்து தன்னை பாகிஸ்தான் ஊடகங்களே பாராட்டும் அளவிற்கு விளம்பரப்படுத்தி கொண்டது, அதேபோல் ஈழத்தமிழர்களை தேசிய குடியுரிமை சட்ட பிரச்சனையில் சிக்க வைத்து விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறது திமுக,. இதற்கு அதிமுக, பாமக, பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் பலத்த பதிலடியை கொடுத்து வருகின்றனர்,.

தற்போது நாடாளுமன்றத்தில் அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருப்பதால் திமுக தன்னை விளம்பரத்துக்காகவே அடையாளப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது என்று தேசிய அளவில் உள்ள அரசியல் நோக்கர்கள் விமர்சித்து வருகின்றனர்,.

இந்த சூழ்நிலையில் பாஜக, கோபத்தின் உச்சத்திற்கே திமுகவின் செயல்பாடுகளால் சென்றுவிட்டது, இதன் விளைவாகவே இந்திய தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அவர்கள் போராடிக் கொண்டிருக்கும் போதே முரசொலி பஞ்சமி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலினை டெல்லிக்கு அழைத்து கதற வைக்க அறிவிக்கை அனுப்பி விட்டது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்.

முரசொலி பஞ்சமி நில விவரத்தில் ஆவணங்களை காட்டாமல் வழக்கறிஞர்களை வைத்து வாதாடி சென்ற திமுக,. முரசொலி அறங்காவலரான மு.க.ஸ்டாலினை ஜனவரி மாதம் ஏழாம் தேதி டெல்லியில் பஞ்சமி நிலம் விவகாரம் தொடர்பான ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என்று தேசிய எஸ்சி எஸ்டி ஆணைய துணைத் தலைவர் L.முருகன் அறிவிக்கையில் தெரிவித்துள்ளார்,.

தனது கட்சி எம்.பி களை வைத்து போராடி கொண்டிருக்கும் திமுகவை கதற வைக்க அதன் தலைவரை டெல்லியில் வைத்து முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று பாஜக எண்ணுகிறது,. மேலும் 2ஜி வழக்கு விசாரணையில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் தான் கனிமொழியும் ஆ.ராசாவையும் வழக்கிலிருந்து விடுவித்தது,. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விரைவில் சூடு பிடிக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,.

உள்துறை அமைச்சர் அமித்ஷா மு.க.ஸ்டாலின் செயல்பாடுகள் பற்றி நேற்று தன்னை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொந்தளித்து பேசியுள்ளதாகவும், மு.க.ஸ்டாலினை பல்வேறு விஷயங்களில் சிக்க வைக்கவும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,.

தேசிய தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள விளம்பரம் செய்து கொண்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் கூடிய விரைவில் தேசிய அளவில் அவமானபடுத்த படுவார் என்று பாஜக ஆங்காங்கே திமுகவினரை வெறுப்பேற்றி வருகின்றனர்.

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

0

அன்புமணி ராமதாஸிடம் விவாதிக்கும் முன் என்னிடம் விவாதிக்க தயாரா? திமுக எம்பிக்கு சவால் விடும் பாமக நிர்வாகி

பாஜக தலைமையிலான மத்திய அரசு தற்போது கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதாவானது தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவாக வாக்களிதுள்ளது.

அதாவது குறிப்பாக மக்களவையில் அதிமுகவின் ஒரு எம்பியும், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக உள்ளிட்ட கட்சிகளின் 11 எம்பிக்களும் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் என தொடர்ந்து எழுந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் எதிர்க் கட்சிகள் போராட்டங்களும் நடத்தி வருகின்றன.

அந்த வகையில் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் “அதிமுக மற்றும் பாமக உறுப்பினர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்களுக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பாமக நிறுவனர் ” ஈழத் தமிழர்கள் குறித்து திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம்” என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். மேலும் இது குறித்து பொது வெளியில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எந்த பதிலும் கூறாமல் வழக்கம் போல திமுக கழக நிர்வாகி ஒருவரான ஜே.அன்பழகன் எம்.எல்.ஏ வை விட்டு பதிலளிக்க வைத்தார்.

இதே போல நேற்று பாமக இளைஞர் அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் ஈழத் தமிழர்களுக்கு எதிராக திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு இது குறித்து ஸ்டாலின் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருந்தார். தற்போது இதற்கும் அவர் பதிலளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

ஆனால் வழக்கம் போல இதற்கு தருமபுரி எம்பி. செந்தில்குமார் அன்புமணியுடன் விவாதிக்க நான் தயார் என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்க அரசியல்களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இவ்வாறு பாமக சவால் விடுவது ஒருவருக்கும் அதற்கு திமுக சார்பாக முட்டு கொடுப்பது ஒருவரும் என இழுத்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் தான் திடீர் திருப்பமாக தருமபுரி தொகுதியின் திமுக எம்பி செந்தில்குமாருடன் விவாதிக்க நான் தயார் என பாமக நிர்வாகி ஒருவர் சவால் விட்டிருக்கிறார். கோயம்பத்தூர் பகுதியை சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் தான் திமுக எம்பிக்கு சவால் விட்டிருக்கிறார். இவர் தற்போது பாமகவின் இளைஞர் அணி துணைச்செயலாளர் பதவி வகித்து வருகிறார்.

மேலும் அவர் தான் வசிக்கும் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கட்சி நிர்வாகியாகவும் மற்றும் ஒரு சமூக ஆர்வலர் என்ற முறையிலும் தொடர்ந்து போராடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் திமுக எம்பியுடன் தான் விவாதம் செய்ய தயார் என்று சவால் விட்டிருக்கிறார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது.

ஒவ்வொரு முறையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக முட்டு கொடுத்து கொண்டிருந்த கழக நிர்வாகிகளுக்கு பாமக நிர்வாகி ஒருவர் சவால் விட்டிருப்பது தர்ம சங்கடத்தை உண்டாக்கியுள்ளது.பாமக நிர்வாகியின் சவாலை திமுக எம்பி. செந்தில்குமார் ஏற்று விவாதத்தில் கலந்து கொள்வாரா? இல்லை இதற்கு முட்டு கொடுக்க வேறு ஒரு கழக நிர்வாகி கிளம்பி வருவரா? என்று மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிக்க : ஈழத்தமிழர்களுக்கு திமுக செய்த துரோகம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸ் கேட்ட 22 கேள்விகள்

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன?

0

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன?

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் போராட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன?

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் குடியுரிமை சட்ட மசோதா சம்மந்தமாக ட்வீட் ஒன்றை செய்து உள்ளார் அதில் எந்த ஒரு பிரச்சனைக்கும் வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகி விடக்கூடாது என்றும். தேச பாதுகாப்பு மற்றும் நாட்டின் நலனுக்காக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இப்போது நடந்து கொண்டு இருக்கும் வன்முறை எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. என அந்த ட்வீட் இல் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு நீதிமன்றம் அளித்த கொடூர தீர்ப்பு

0

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்க்கு நீதிமன்றம் அளித்த கொடூர தீர்ப்பு

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்,கடந்த 2007ம் ஆண்டு நவம்பரில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பான வழக்கில் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் முஷரப் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாக கூறி அவருக்கு மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது.

அவர் வெளிநாட்டில் உள்ள மருத்துவமனையில் இருந்து வாக்குமூலம் அளித்து இருந்தாலும் அவருக்கு மரணதண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம்.

மேலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் உடல் தூக்கிலிடப்பட்ட பின் சாலையில் இழுத்து வந்து பொதுமக்கள் பார்வையில் தொங்கவிட வேண்டுமென அந்த நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த தீர்ப்பில் உள்ள 167பக்க அறிக்கையில் அவரை தூக்கிலிடப்பட்ட பின் அவரது உடலை இஸ்லாமாபாத்தின் சாலைகளில் இழுத்து வரப்பட்டு பொதுமக்கள் பார்வையில் மூன்று நாட்களுக்கு தொங்கவிடப்பட வேண்டுமென கூறப்பட்டுள்ளது இது பாகிஸ்தான் சட்டத்தில் புதுவிதமான தீர்ப்பாக கருதப்படுகிறது.

மேலும் அவர் தண்டனைக்கு முன் இறந்தால் , இக்கொடூர தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப்பிரிவு செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கஃபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முஷாரப் 40 வருடத்திற்கும் மேல் நாட்டிற்காக சேவையாற்றியுள்ளார் என்றும், அவர் ஒருபோதும் நாட்டிற்கு துரோகம் இழைத்திருக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.

மேலும் நீதிமன்ற தீர்ப்பு வேதனையளிப்பதாகவும், பாகிஸ்தான் குடியரசு சட்டவிதிகள் படி நீதி வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன?

0

உதயநிதி ஸ்டாலின் கைதா? பக்காவா திட்டம் போட்ட மத்திய அரசு! காரணம் என்ன?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் வாரிசும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்ய மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் குறித்து விசாரிக்கையில், திமுக இளைஞரணி சார்பில் கடந்த 13 ஆம் தேதியன்று, பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழத்தின் பல மாவட்டங்களிலும் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறே குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்தார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்களும் கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக இளைஞரணியினர் மொத்தமாக 644 பேரைக் கைது செய்த தமிழக காவல் துறை அன்று மாலையே அவர்களை விடுவித்துவிட்டது. உதயநிதி ஸ்டாலின் சட்ட மசோதாவை கிழித்தது அதற்காக தமிழக காவல் துறை கைது செய்தது என்ற இந்தத் தகவலானது மத்திய உளவுத்துறை மூலம் உள்துறை அமைச்சகத்துக்குப் சென்றுள்ளது. 

இதனையடுத்து உடனே தமிழக அரசைத் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சகம், மத்திய அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவை எரித்தவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை? என்று இது குறித்து விளக்கம் கேட்டுள்ளது. இதனையடுத்து தான் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து  காவல்துறை, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்களுக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி ஸ்டாலின் செல்லும் போது அல்லது அதற்கு முன்பாகவே அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஏற்கனவே மிசா போராட்டத்தில் கைது செய்யப்பட்டதாக திமுக தலைவர் பிரச்சாரம் செய்து கொள்வது போல தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கும் இந்த கைது சம்பவம் சாதகமாக அமைந்து விட கூடாது என்பதிலும் ஆளும் தரப்பு கவனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது.

செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!

0

செல்பி மோகத்தால் காயமடைந்த பிக்பாஸ் நடிகை!

கேமரா செல்போன் அறிமுகமானதில் இருந்து செல்பி என்ற கொடிய நோய் பலரை பிடித்து ஆட்டி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறைகள் செல்ஃபியால் ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரு சில நேரம் செல்பியால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் செல்பி காரணமாக காயமடைந்து உள்ளார் என்பதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படுத்துக்கொண்டே செல்பி எடுக்கும்போது செல்போன் அவரது வாய் மீது விழுந்ததாகவும், அதனால் உதட்டில் காயம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ள ரைசா, அந்த காயத்தையும் ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் போட்டியாளர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ’பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் நடித்த ரைசா வில்சன் தற்போது அலைஸ், எப்.ஐ.ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலா இயக்கத்தில் இவர் நடித்த ‘வர்மா’ என்ற திரைப்படம் வெளியாகவில்லை என்பதும் இருப்பினும் இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘ஆதித்ய வர்மா’ படத்தில் ப்ரியா ஆனந்த் நடித்த கேரக்டரில் தான் ‘வர்மா’ படத்தில் ரைசா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/B6Kl52PHDvs/

வருமானம் இல்லை, கவனிக்க ஆளும் இல்லை: முதியவர் செய்த திடுக்கிடும் காரியம்

0

வருமானம் இல்லை, கவனிக்க ஆளும் இல்லை: முதியவர் செய்த திடுக்கிடும் காரியம்

வேலை இல்லை, தன்னை கவனிக்க ஆள் யாரும் இல்லை என்பதால் ஜெர்மனியிலுள்ள 62 வயது முதியவர் ஒருவர் செய்த காரியத்தால் நீதிமன்றமே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனை சேர்ந்த எபிஹார்டன் என்ற 62 வயது முதியவர் கணினி அறிவியல் அறிஞராக வேலை பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் கிடைத்த பணத்தை ஐரோப்பிய நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து செலவு செய்துவிட்டார். அதன் பின்னர் இவருக்கு வருமானமும் இல்லை, அவரை கவனிக்க ஆளும் இல்லை.

எனவே ஏதாவது குற்றம் செய்துவிட்டு சிறைக்கு செல்லலாம் என்று முடிவு எடுத்தார். சிறைக்கு சென்றால் அங்கு உணவு தங்குவதற்கு வீடு, உடை ஆகியவை கிடைக்கும் என்பதால் இவர் ஏதாவது ஒரு குற்றத்தை செய்ய முடிவு செய்து தன்னுடைய காரில் மிக வேகமாக சென்று சைக்கிளில் வந்தவர் மீது மோதினார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிபதிகள் ஆயுள் தண்டனை விதித்தனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் நீதிபதியிடம் அவர் கூறியபோது ’எனக்கு சொந்த வீடு வருமானம் உறவுக்காரர்கள் யாருமில்லை என்பதால் இந்த குற்றத்தை செய்ததாகவும் இனி தன்னை சிறை அதிகாரிகள் கவனித்து கொள்வார்கள் என்றும் கூறியதை அடுத்து நீதிபதி உட்பட நீதிமன்றத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி

0

நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கையை நிறைவேற்றாத மத்திய அரசு: மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி

வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பரிசீலிக்கக்கூட முன்வராதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

ஜி.எஸ்.டி எனப்படும் பொருட்கள் மற்றும் சேவை வரி ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்படும் என அனைத்துத் தரப்பினரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி விகிதம் இப்போதுள்ள அளவிலேயே நீடிக்கும்; அதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ஜி.எஸ்.டி குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது அனைவருக்கும் மன நிறைவளிக்கும் முடிவு ஆகும்.

ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருவதாலும், மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அதை சமாளிக்க ஜி.எஸ்.டி வரி விகிதங்களை இப்போதுள்ள 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்குகளுக்கு மாற்றாக 8%, 18%, 28% என்ற மூன்று அடுக்குகளாக குறைக்கவும், அதற்கேற்ற வகையில் வரி விகிதங்களை உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அவ்வாறு செய்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும், அதனால் ஜி.எஸ்.டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் கடந்த 8-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்படாது என்று ஜி.எஸ்.டி குழு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்.

அதேநேரத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். வருமானவரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்தக் கோரிக்கையை கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசு பரிசீலிக்கக்கூட முன்வராதது மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்துள்ளது.

2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் நரேந்திரமோடி அரசு பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது மாத வருவாய் பிரிவினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது வருமானவரி விலக்குக்கான வருவாய் உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்று வருமானவரி செலுத்தும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு இதுவரை நிறைவேறவில்லை.

வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்பது மிகவும் நியாயமான எதிர்பார்ப்பு ஆகும். ஏனெனில், 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.5 லட்சத்திற்கு இருந்த மதிப்பும், இப்போதுள்ள மதிப்பும் ஒன்றல்ல. 5 ஆண்டுகளில் பணவீக்கம் சுமார் 50 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்கிறது. அரசு பணிகளிலும், அமைப்பு சார்ந்த தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றுவோருக்கு கிட்டத்தட்ட அதே அளவுக்கு ஊதியமும் அதிகரிக்கிறது. ஊதிய உயர்வுக்கு இணையாக குடும்ப செலவுகளும் அதிகரிக்கின்றன. ஆனால், வருமானவரி விலக்கு வரம்பு உச்சவரம்பு மட்டும் உயர்த்தப்படாமல் இருந்தால் அது ஊதியதாரர்களுக்கு பாதிப்பையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

வருமானவரி விலக்கு வருவாய் உச்சவரம்பு உயர்வு குறித்த எதிர்பார்ப்புகள் கடந்த 5 ஆண்டுகளாக ஏமாற்றங்களாக முடிந்து விட்ட நிலையில், வரும் ஆண்டிலாவது அந்த எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். வருமானவரி விலக்கு உச்சவரம்பு இப்போது ரூ.2.50 லட்சமாக இருக்கும் நிலையில், அது குறைந்தது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், வருமானவரி விகிதமும் அடுத்தத்தடுத்த நிலைகளுக்கு உயர்த்தப்பட வேண்டும். உதாரணமாக இப்போது 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை 5% வரி வசூலிக்கப்படுகிறது. ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப் பட்டால், அதன்பின் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரியை இப்போதுள்ள 20 விழுக்காட்டிலிருந்து 10% ஆக குறைக்க அரசு முன்வர வேண்டும். அதன்பிறகு ரூ.20 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% ஆகவும், ரூ.2 கோடி வரையிலான வருமானத்திற்கு 30% ஆகவும், அதற்கு மேல் 35 விழுக்காடாகவும் நிர்ணயிப்பதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.

வருமானவரி தவிர, கல்வி, சுகாதாரம், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப் பட்டு 5 ஆண்டுகளும், அடிக்கல் நாட்டப்பட்டு ஓராண்டும் ஆகும் நிலையில், இனியும் காலம் தாழ்த்தாமல், அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நித்தியானந் தா மீது மேலும் ஒரு ஆள் கடத்தல் புகார்?

0

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து வருவதாக அடிக்கடி புகார்கள் வந்த நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனிடையே பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தன் சர்மா என்பவர் தனது மகளை மீட்டுத் தரக்கோரி குஜராத் போலீசில் புகார் அளித்தார்.

மேலும் அகமதாபாத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார் இந்த மனு மீதான விசாரணை நடத்திய அகமதாபாத் நீதிமன்றம் சிறுமிகளின் நிலை என்ன என்பதை கண்டறிந்து தகவல் கொடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே நித்யானந்தா கைலாசா என்ற ஒரு நாட்டை உருவாக்க இருக்கிறார் என்ற பேச்சும் அடிபட்டது.

அதற்கு ஏற்றார் போல தனி பாஸ்போர்ட், தனி சின்னங்கள், அமைச்சரவை என தனி நாடு அமைக்கப்போவதாக செய்தி வெளியானது. இது குறித்து அவர் தனிப்பட்ட kailaasa.org என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அதில் தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

இந்நிலையில் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் குவிந்து வருகிறது.

நித்தியானந் தா மீது மேலும் ஒரு ஆள் கடத்தல் புகார்?

இதனிடையே ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புதிய புகார் தகவல் வந்துள்ளது

ஈரோட்டை சேர்ந்தவர் அங்குலட்சுமி என்பவர் சென்னை கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார் அதில்.

எனது மகன் பிரானாசாமி பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திடீரென நித்யானந்தா சீடராக மாறிய அவர் கடந்த 15 வருடங்களாக பெங்களூர் அருகே உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் இருந்து வந்தார்.

எனது மகனை பார்க்கவோ, பேசவோ ஆசிரம நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை என்று குறிப்பிட்டு உள்ளார். நித்யானந்தாவின் சட்ட விரோத காவலில் இருந்து எனது மகனை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.