Home Blog Page 5874

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

0

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

தென்காசி மாவட்டம் பணவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் தவசிக்கண்ணு. இவரது மகன் அய்யப்பன்(34) இவருடைய மனைவி செல்வி (30).

தென்காசியில் பயங்கரம்… !பைக் மீது கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

கேரளாவில் இரும்புக்கடை நடத்தி வரும் அய்யப்பன் சொந்த ஊரில் வீடுகட்டிவருகிறார். நாளை மறுநாள் புதியதாக கட்டிய வீட்டின் கிரக பிரவேசம் வைத்து இருந்தார்.

அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக கவனித்து வந்தார். கிரகப்பிரவேசதிற்கு பத்திரிகை அடித்து உறவினர்களுக்கு அழைப்பு விடுத்துகொண்டுஇருந்தார்.

நேற்று தனது தங்கை ஜோதி (32)மற்றும் மனைவியுடன் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு மூவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

பனவடலி சத்திரம் என்ற பகுதியில் சென்றுகொண்டு இருந்த போது வேகமாக வந்த கார் அவர்களின் மேல் மோதிவிட்டு வேகமாக சென்று விட்டது தூக்கி வீசப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

இதனால் போக்குவரத்து தடைபட்டது விரைவாக வந்த காவலர்கள் போராட்ட காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கார் ஓட்டுநர் முத்துகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். தன்னுடைய கார் விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வேறொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றதாக அவர் காவலர்களிடம். இதனால் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

0

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் சிவசேனா அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று நேற்றுவரை கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் இணைந்து 15 சிவசேனா கட்சியை சேர்ந்தவர்களும், 13 தேசியவாத கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அக்கட்சியை சேர்ந்த 13 பேர்கள் நாளை அமைச்சர்களாக பதவியேற்க இருப்பதாகவும் அது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து நாளை முதல்வர், துணை முதல்வர் மற்றும் சுமார் 40 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் இந்த பதவியேற்பு விழாவிற்கு இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வருகை தர இருப்பதாகவும் கூறப்படுகிறது

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.

0

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.

சென்னை :

கிண்டி ஐ ஐ டி யில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை வழக்கை முதலில் பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாணவியின் செல்போனில் பதிவு செய்யபட்டு இருந்த தற்கொலை கடிதம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

இதனால் தனது மகளின் மரணம் தற்கொலை அல்ல, பேராசியர்களின் நெருக்கடியால் தான் தனது மகள் இறந்துள்ளார் என பாத்திமாவின் தந்தை லத்தீப் தமிழக அரசிடம் புகார் அளித்தார்.

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.

அதன் பிறகு இந்த வழக்கானது மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான குழு பேராசியர்கள் ஹேமச்சந்திரன், சுதர்சன் பத்பநாபன், மிலிந்த் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

அதே சமயம் மாணவியின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடை பெற்று வருகிறது. இதனிடையே மாணவியின் செல்போனை ஆய்வு செய்ய சென்னையில் உள்ள தடவியல் துறைக்கு அனுப்ப பட்டு உள்ளது. இந்த விசாரணை தங்கள் முன்பு மேற்கொள்ளவேண்டும் என பாத்திமாவின் தந்தை லத்தீப் டிஜிபி யிடம் மனு அளித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் விசாரணையின் முன்பு ஆஜர் ஆக வேண்டும் என லத்தீப் அவரது மகள் அஹிஷா விற்கும் உயர்நிதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனால் இருவரும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜர் ஆகினர்.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

0

‘எனை நோக்கி பாயும் தோட்டா’விற்கு டைம் குறித்த சென்சார்

தனுஷ் நடித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படம் 156 நிமிடங்கள் கொண்டதாக சென்சார் செய்யப்பட்டுள்ளது, அதாவது இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 26 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் தள்ளிப்போய் கொண்டிருந்த நிலையில் தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் இந்த படத்தின் உரிமையை பெற்று ரிலீஸ் செய்கிறார். இதனால் நாளை மறுநாள் இந்த படம் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த படத்திற்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் விறுவிறுப்பாக இந்த படத்தின் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படம் அவருக்கு திருப்பத்தை தரும் படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி

0

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அல்பேனியாவின் தலைநகர் திரினாவில் நேற்று அதிகாலை ஏற்பட்ட நில நடுக்கத்தில் இது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரிக்ட்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது.
சில வினாடிக்கு மேல் நீடித்த இந்த நில நடுக்கம் திரானா மற்றும் அதனை சுற்றியுள்ள சிறிய நகரங்களை கடுமையாக உலுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின் அலறி அடித்து கொண்டு வீடுகளை வீட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

அல்பேனியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 18 பலி

முதலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்து அடுத்து பல முறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அல்பேனியாவின் பல நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின.

திரானா பகுதியில் மூதாட்டி ஒருவரும், அவரது பேரனும் இருந்த வீடு, நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்தது. அதில் மூதாட்டி இறந்தார். இந்த நிலநடுக்கத்தால் 18 பேர் வரை பலியாகினர்கள். 300 மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.

நிலநடுக்கத்தால் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அந்த நாட்டின் அதிபர், ஈடுபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்க தீயணைப்பு துறையினரும் ராணுவத்தினரும் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி

0

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க பயற்சி வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.


பள்ளிக்கல்வி இயக்குனர்
ச. கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்கும், ஆங்கில பேச்சுத்திறன் விருப்பத்திற்க்காகவும் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் விரும்பு கின்றனர்.

அதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

அதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கில் ஆங்கில பேச்சுத்திறன் வளர்ப்பு பயற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதற்காக கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும், மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயற்சி அளிக்கவும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் திட்ட பட்டியலை தயாரித்து இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி


தொடக்க நிலை வகுப்புகளுக்கு 2-ம் பருவத்துக்கு 12 பாட வேலைகளும், 6 முதல் 9-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 30 பாட வேலைகளும் ஆங்கில பேச்சுத்திறன் கற்பிக்கப்படவுள்ளது.
1முதல் 5-ம் வகுப்பு வரை வாரத்துக்கு 90 நிமிடத்துக்கான படவேலையிலும், 6முதல் 9-ம் வகுப்புவரை வாரத்துக்கு 45 நிமிடத்துக்கான பாட வேளையிலும் ஆங்கில பயற்சி அளிக்கும் வகையில் அட்டவணை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

0

யதார்த்தமாக பேசிய பாக்யராஜை பதார்த்தமாக தூக்கி செல்ல காத்திருக்கும் போலீஸ்

திரைப்பட விழா ஒன்றில் யதார்த்தமாக பேசிய இயக்குநர் கே பாக்யராஜ் மீது ஆந்திர மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் எந்நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் ’பெண்கள் தான் அனைத்து பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என்றும், பெண்கள் கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்துடன் இருந்தால் எந்த பாலியல் குற்றமும் நடக்காது என்றும் பொள்ளாச்சி விவகாரத்தில் கூட குற்றவாளிகள் ஆண்களாக இருந்தாலும் அந்த குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றும் பேசினார்.

மேலும் ஆண்கள் சின்ன வீடு வைத்துக்கொள்வதால் பெரிய பிரச்சனை ஏற்படாது என்றும் ஆனால் பெண்கள் கள்ளக் காதல் வைத்துக்கொண்டால் அந்த குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை வரும் என்றும் பேசினார்.

பாக்யராஜ் பேசிய இந்த யதார்த்த உண்மைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில பெண்கள் அமைப்பு ஒன்று கொடுத்த புகாரின் அடிப்படையில் பாக்யராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் பாக்கியராஜ் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

0

இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து  கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவின், சிகாகாவில் உள்ள, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ருத்ஜார்ஜ் 19 வயதான இவரது பெற்றோர் தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத்தை சேர்ந்தவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் குடியேறினர். இந்நிலையில், இலினாய்ஸ் பல்கலைக்கழக  விடுதியில் ரூத் ஜார்ஜ் தங்கி, படித்து வந்தார். கடந்த வெள்ளிகிழமை முதல், ரூத் ஜார்ஜ்ஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என, பல்கலைக்கழக  போலீசாரிடம், அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜின் மொபைல் போன் பல்கலைகழக கார் நிறுத்தும் இடத்தை காட்டியது. அங்கு சென்று பார்த்தபோது ரூத் ஜார்ஜ் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுத்து நெரித்து கொள்ளப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு காமெராவை ஆராய்ந்தனர்.

அப்போது ரூத் கார் நிறுத்துமிடத் திற்கு வந்ததும், அவரை பின்தொடர்ந்து ஒரு இளைஞர் சென்றதும், தெரியவந்தது. அந்த இளைஞரை பழைய இடங்களில் தேடி வந்தனர், இறுதியாக அந்த இளைஞரை சிகாகோ மெட்ரோ, ரயில் நிலையத்தில், கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அவரது பெயர் டொனால்ட் துர்மன், என்றும், பல்கலைக்கழகத்திற்கும் அவருக்கும், எந்த வித தொடர்பும் இல்லை என்றும், போலீசார் தெரிவித்தனர்.

இந்திய வம்சாவளி மாணவி, பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா? பாஜக பிரமுகர் அளித்த அதிரடி பதில்

0

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா? பாஜக பிரமுகர் அளித்த அதிரடி பதில்

முன்னாள் தமிழக முதல்வர்களாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கமல், ரஜினி உள்பட ஒருசிலரும், வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக அதிமுக, திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் ‘வெற்றிடம்’ குறித்த கருத்துக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியபோது, ‘ரஜினியின் அரசியல் வருகை வெற்றிடத்தை நிரப்பும் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. வெற்றிடத்தை நிரப்ப வெளியில் இருந்து எந்த ஸ்பெஷலிஸ்டையும் பாஜக எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

ரஜினியை பற்றி ஏதாவது கூறினால்தான் தங்களுடைய பெயர் ஊடகங்களில் வரும் என்ற நிலையில் அரசியல்வாதிகள் தங்களுடைய பேட்டிகளில் ரஜினி குறித்த கருத்தை வலுக்கட்டாயமாக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

0

ஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் நடிக்கும் படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது . அந்த வகையில் அவர் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, பிகே வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் ரெபா மோனிகா ஜான், டிகங்கனா சூர்யவன்சி போன்றோர் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் யோகி பாபு, முனீஷ்காந்த், டேனி உள்ளிட்ட  பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே படக்குழுவினர் அனைவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  அவர்களை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின் போது  நடிகர் ரஜினிகாந்திற்கு இந்த படத்தின் டீஸர் காண்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அந்த டீஸர் பிடித்திருப்பதாகவும் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்றும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நன்றாக நடித்திருப்பதாகவும் இந்த டீஸர் மிகவும் கமர்ஷியலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.