Home Blog Page 5875

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் ஷாக் ட்ரீட்மெண்ட்

0

பொம்மை டிராபிக் போலீஸ்: வாகன ஓட்டிகளை குழப்பிய காவல்துறை

சாலையின் நடுவில் ட்ராபிக் போலீஸ் போல் பொம்மைகளை நிறுத்திவைத்து பெங்களூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை குழப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பெங்களூரில் உள்ள ஒரு சில முக்கிய சாலைகளில் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் போலவே பொம்மைகளை பெங்களூர் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பொம்மைகளை பார்த்து உண்மையான காவல்துறை அதிகாரிகள் என நினைது விதிகளை மீறி சொல்வோர் பயப்படுவதாகவும், காரில் செல்பவர்கள் கூட இந்த பொம்மைகளை பார்த்து சீட் பெல்ட்டை மாட்டிக் கொள்வதும் செல்போன் பேசியதை துண்டிக்கவும் செய்வதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இருப்பினும் ஒரு சில நாட்களில் இது பொம்மை என்று வாகன ஓட்டிகள் அறிந்து கொள்வார்கள் என்றும் எனவே அடுத்த கட்டமாக பொம்மைகளில் கேமரா வைக்கவும், விதிகளை மீறி செல்வோர் குறித்த வீடியோ பதிவை வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டம் உள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்

மேலும் வாரம் ஒருநாள் பொம்மை நிற்கும் இடத்தில் உண்மையான காவல்துறை அதிகாரியை நிறுத்திவைக்க திட்டமிட்டுள்ளதாகவும், பொம்மை என நினைத்து சாலை விதிகளை மீறுபவர்களை மடக்க இந்த திட்டம் என்றும் காவல்துறையினர் கூறி வருகின்றனர்

இதனால் சாலையில் இருப்பது பொம்மையா? அல்லது உண்மையான போலீஸ்காரரா?என்ற குழப்பம் வாகன ஓட்டிகளுக்கு தொடரும் என்பதால் விதிகளை மீற பயப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

0

ஹரிகோட்டா, நவம்பர். 27-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது.

விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

இன்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைகோள் புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தபட்டது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும்.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது. 5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என isro தெரிவித்துள்ளது.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனisroதெரிவித்துள்ளது.

கட்ரோசாட் செயற்கை கோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறியவகை செயற்கை கோள்ககளும் நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது . இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் அடுத்த மாதம்,6 செயற்கைகோளுடன் மேலும் ஒரு செயற்கைகோள் ஏவப்படும் என்றார்.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

0

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் வகையில் பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக அமைக்கபட்ட அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை மற்றும் மக்கள் படை என்ற அமைப்புகளை மாவட்ட வாரியாக சந்தித்து கலந்தாலோசித்து வருகிறார்.

இந்த அமைப்புகள் மூலம் வட தமிழகத்தில் பாமக பலமாக உள்ள தொகுதிகளை கண்டறிந்து அதில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அடுத்த கட்ட நிகழ்வாக தான் மாவட்ட வாரியாக மக்களை சந்திக்க அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் திமுக தலைவர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மேற்கொண்ட “நமக்கு நாமே” நடைபயணத்தின் காப்பி என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கழக உடன்பிறப்புகள் பரப்பி வருகின்றனர்.மேலும் அவர்கள் இதை பிரபல தனியார் செய்தி சேனல்களில் செய்தியாளர்கள் பெயரில் ஊடுருவியுள்ள திமுக உடன்பிறப்புகள் மூலம் செய்தியாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் உண்மை என்னவென்று கடந்த கால அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு புரியும். கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் மாற்றம் முன்னேற்றம் என்ற கோஷத்தை வைத்து வண்டலூரில் மிக பிரமாண்டமான ஹை டெக் பிரச்சாரத்தை நடத்தி தமிழக அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இத்துடன் நிற்காமல் தொடர்ந்து காவிரி உபரி நீர் திட்டம்,வைகையை காப்போம், பாலாறை காப்போம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க என தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பிரச்சினை குறித்து அப்பகுதி மக்களை சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். மேலும் தமிழக அரசியல் தலைவர்கள் மக்கள் மத்தியில் நீர் மேலாண்மை பற்றி பேச ஆரம்ப புள்ளியை வைத்தவர் அன்புமணி ராமதாஸ் தான்.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

காலம் காலமாக மேடை போட்டு மைக் பிடித்து பேசி கொண்டிருந்த ஸ்டாலின் போன்ற அரசியல் தலைவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அவர்களின் இந்த புதிய அரசியல் செயல்பாடு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் வேறு வழியில்லாமல் நிலைமையை சமாளிக்க நானும் மக்களை சந்திக்கிறேன் என்ற பெயரில் தான் திமுக சார்பாக ஸ்டாலின் மேற்கொண்ட “நமக்கு நாமே” நாடகம் அரங்கேற்றப்பட்டது.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

மக்களை சந்திக்கிறேன் என்ற பெயரில் “நமக்கு நாமே” நடைபயணத்தில் திமுக தலைவர் செய்த காமெடிகள் இன்னும் தமிழக மக்கள் மனதில் நினைவில் உள்ளன. குறிப்பாக கரும்பு தோட்டத்தில் தலைவர் நடக்க சிமெண்ட் சாலையை அமைத்துத் கொடுத்தது எல்லாம் திமுக உடன்பிறப்புகள் செய்த உச்ச கட்ட காமெடியாக தான் பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிகழ்வை அன்புமணி ராமதாஸ் காப்பி அடிப்பதாக வதந்தியை கிளப்பி விடுவதெல்லம் வெற லெவல்.

அன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி

மத்திய அமைச்சராக அன்புமணி ராமதாஸ் செயல்படுத்திய 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை திமுகவின் சாதனையாக சட்டமன்றத்தில் புளுகிய தலைவர் ஸ்டாலினின் தொண்டர்களும் அவ்வழியே என்பதை நிரூபித்து விட்டார்கள். எது எப்படியோ இந்த முறை அன்புமணி ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை விரைவில் ஸ்டாலின் நல்ல முறையில் காப்பி அடிப்பார் என்று நம்புவோம்.

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

0

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், துருவ் விக்ரம் முதலில் நடித்த ’வர்மா’ படத்தையும் வெளியிட விக்ரம் முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது

அர்ஜுன்ரெட்டி ரீமேக் படத்தை முதலில் இயக்க இயக்குனர் பாலாதான் ஒப்பந்தம் ஆனார். அவர் அந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் உருவாக்கி தந்த நிலையில் இந்த படம் விக்ரமுக்கு பிடித்திருந்தாலும் கமர்ஷியலாக இந்த படம் ஹிட்டாக வாய்ப்பு இல்லை என அவரை சேர்ந்தவர்கள் கூறியதால் இந்த படத்தை ரிலீஸ் செய்யாமல் முடங்கியது. இதனை அடுத்து கிரிசய்யா இயக்கத்தில் ’ஆதித்ய வர்மா’ உருவாகி தற்போது வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது

இந்த நிலையில் தனக்கு பிடித்த ‘வர்மா’ படத்தை ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமிட்டுள்ளதாகவும் வர்மாவை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் எந்த படம் நல்ல படம் என்பதை முடிவு செய்வார்கள் என்றும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் படமான ’வர்மா’ படம் ரிலீஸ் ஆகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

0

குணசித்திர நடிகர் பாலாசிங் காலமானார்

மேடை நாடக நடிகராக இருந்து அதன் பின்னர் நடிகர் நாசர் நடித்து இயக்கிய `அவதாரம்’ படத்தில் வில்லனாக அறிமுகமாக நடிகர் பாலாசிங் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 67.

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல படங்களில் நடித்த பாலாசிங், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். குறிப்பாக அவரது நடிப்பு புதுப்பேட்டை',விருமாண்டி’ இந்தியன், ராசி, மறுமலர்ச்சி, தீனா, போன்ற படங்களில் பாராட்டும் வகையில் இருந்தது. சமீபத்தில் வெளியான என்.ஜி.கே’ படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்த பாலாசிங்கை சூர்யாவே பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலாசிங் சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலை 1 மணி காலமானார். இதனை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலாசிங் உடல் அவரது சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பல திரையுலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம்

0

வன்னியர்களுக்கு தனி உள்இடஒதுக்கீடு எடப்பாடி சூசகமாக அறிவிப்பு! ஸ்டாலினை‌ மண்ணை கவ்வச்செய்ய அதிரடி வியூகம்

கடலூர் மஞ்சக்குப்பத்தில் நேற்று நடைபெற்ற தமிழக முன்னாள் அமைச்சரும் வன்னியர் சமுதாயத்தில் முக்கிய தலைவருமான மறைந்த திரு. இராமசாமி படையாச்சி அவர்களுக்கு முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று திறந்துவைத்தார்.

இதனை தொடர்ந்து விழா கூட்டத்தில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், என்னை சந்திக்கும் போதெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி இராமதாஸ், சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் ஆகியோர்கள் ஒரு வேண்டுகோளை வைத்துக்கொண்டே இருப்பார்கள், அந்த வேண்டுகோள் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது என்று அதிரடியாக தெரிவித்தார். என்ன கோரிக்கை என்பது பற்றி முதலமைச்சர் தெரிவிக்கவில்லை.

இதனை அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டியது ஒன்றுதான்!

இடஒதுக்கீட்டிற்கு அடித்தளமிட்டு 21 வன்னியர்களை பலிகொடுத்து வாங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வைத்து வரும் நீண்ட நாள் கோரிக்கையாகும். அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கு கோப்புகளை தயார் செய்து வைத்தார் எனவும், அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கருணாநிதி அவர்கள் இதனை மறைத்து தன் சமுதாயத்தையும் சேர்த்து 107 சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இணைத்து விட்டார் என்பது பாமக வின் குற்றச்சாட்டு.

தமிழகத்தின் மிகப்பெரும்பான்மை வன்னிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தனி இடஒதுக்கீடு தங்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான். இதனையே பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் நீண்டகாலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இராமசாமி படையாச்சி விழாவில் பேசியது, வன்னியர்களுக்கு விரைவில் தனி உள் ஒதுக்கீடு வழங்க அரசின் ‌பரிசீலினையில் உள்ளது பற்றி தான் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர், ஏனெனில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்னியர்கள் பலமிக்க தொகுதி என்பதாலும், அதேபோல் வரும் 2021ல் நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களின் பெரும்பான்மையான வாக்குகளை கொண்ட பாமகவிடம் இருந்து பிரித்து திமுகவிற்கு கொண்டு ‌வரவே, திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்கள், வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகங்களை பட்டியலிட்டு வெளியிடவே வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரம் வன்னியர்கள் மத்தியில் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு பற்றியும் சேர்ப்பார் என தெரிகிறது, அதிமுகவின் கூட்டணி பலமான பாமகவின் பலத்தை விழ்த்த மு.க.ஸ்டாலின் வகுத்திருக்கும வியூகமாகும்.

ஆனால் தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இதனை தெளிவாக புரிந்து வைத்துள்ளார், அதாவது வடமாவட்டங்களில் பாமக செல்வாக்குடன் அதிமுக போட்டியிட்டால் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றலாம் என்று அவரின் எண்ணம்,. திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற அஸ்திரத்தை ஆட்சி முடியும் தருவாயில் சட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டால் வன்னியர்களின் வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவிற்கு விழுந்துவிடும் என்பது முதல்வர் எடப்பாடியின் வியூகம். ஏனெனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய இடமே வன்னியர்கள் பலமிக்க தொகுதியான சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி ஆகும்,.

மூன்று ஆண்டுகாலம் எடப்பாடி அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் மீண்டும் தவிர்க்க முடியாத சக்தியாக தமிழக அரசியலில் வலம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் பல அதிரடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாமக தங்கள் பலத்தை காட்டும் நோக்கில் அதிக தொகுதிகளில் போட்டியிட அதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்க அதிக வாய்ப்புள்ளது,.
இத்தகைய சூழ்நிலையில் வன்னியர்களுக்கு தனி உள்ஒதுக்கீடு அறிவிப்பை அறிவித்துவிட்டால் பாமகவை எளிதாக சமாளித்து விடலாம் என்று முதலமைச்சர் எடப்பாடியின் கணக்கு.

எப்படி இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடுத்த கவர்ச்சி வாக்குறுதிகளை மக்களிடம் எடுபடாமல் வைக்க அதிமுகவும் கவர்ச்சி வாக்குகளை அள்ளி வீசும் என்பது தெளிவாக தெரிகிறது,. அதிலும் முக்கியமாக வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது அச்சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்,. அதனை நிறைவேற்றி விட்டால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு வன்னியர்கள் மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பார்கள் மேலும் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுகவிற்கு பலம் சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது.

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

0

தர்பார் சிங்கள் ட்ராக் வெளியீடு

பேட்ட படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் A. R. முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார், ஒளிப்பதிவாளராக சந்தோஷ்சிவனும், இசை அமைப்பாளராக அனிருத்தும் பணியாற்றுகின்றனர்.

Lyca production மிக பிரமாண்டமாக தயாரிக்கின்றனர். பொங்கல் விருந்தாக வரவிருக்கிறது. ஏற்கனவே மோஷன் போஸ்டர் வெளிவந்து இணையத்தில் சக்கை போடு போட்டது, இதனிடையே தயாரிப்பு நிறுவனமான லைக்கா, தனது ட்விட்டர் பக்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு சிங்கள் ட்ராக் வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளது, ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அனிருத் இசையில் பேட்டை பட பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் சக்கை போடு போட்டது, மேலும் இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி இருப்பதாகவும் S. P. பாலசுப்ரமணியம் பாடி இருப்பதாகவும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

0

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே இன்று மாலை தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்பார் என்று சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையவிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

மேலும் உத்தவ் தாக்கரே முதல்வராகவும் ஆதித்ய தாக்கரே கல்வி அமைச்சராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 5 பேர் முக்கிய அமைச்சர்களாக பொறுப்பை ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கொள்ளாமல் வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன

புதிதாக பதவி ஏற்க இருக்கும் சிவசேனா கட்சி அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை தந்தால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே அடுத்த தேர்தலில் தனிப்பெரும் மெஜாரிட்டியை பெற்றுவிடும் என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே வரும் 5 ஆண்டுகளில் தங்கள் கட்சி செய்ய உள்ள முக்கிய கடமை என்றும் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்

எனவே மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத கட்சிகள் சிவசேனாவை வளர்த்து விட ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதாகவும் சிவசேனா அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு தேசியக் கட்சிகளும் இனி அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

0

ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர். 26-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (புதன் கிழமை ) காலை 9.28 மணிக்கு கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது. இந்தியாவின் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த கட்ரோசாட் செயற்கைகோள் பயன் படுத்தப்படும்.
கார்டோசாட் செயற்கைகோள் 1,625 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும்.

எல்லையில் உள்ள ஒவ்வொரு நகர்வையும் இந்த செயற்கைகோள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இரவு நேரத்திலும் இந்த செயற்கைகோளால் இந்திய எல்லைகளை மிக துல்லியமாக படம் எடுத்து அனுப்ப முடியும்.

கட்ரோசாட் செயற்கைகோள் மூலம் இந்தியாவின் அனைத்து நீர் நிலைகளையும் கண்காணிக்கமுடியும். அதுபோல் பேரிடர் காலங்களில் இந்த செயற்கைக்கோளை சிறப்பாக பயன்படுத்தமுடியும். புயல் பாதிப்பு, பேரிடர் அபாய பகுதிகள் ஆகியவற்றை கணித்து முன்கூட்டிய எச்சரிக்கை விடுக்க முடியும்.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது. 5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என isro தெரிவித்துள்ளது.

கட்ரோசாட் செயற்கைகோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறிய வகை செயற்கைகோள்களையும் isro விண்ணில் செலுத்துகிறது.

இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான்

0

இனிமேல் டெலிவரி பாய் கிடையாது, டெலிவரி ரோபோ தான்

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து டெலிவரி செய்ய டெலிவரி பாய்ஸ் என்ற பணியாளர்களை நியமித்துள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் வருங்காலத்தில் டெலிவரி செய்ய பணியாளர்களுக்கு பதில் ரோபோக்களை பழக்கப்படுத்த ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதன் முதல் படியாக ரஷ்யாவில் உள்ள யாண்டெக்ஸ் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ரோவர் என்ற ரோபோவை தயாரித்துள்ளது.

சூட்கேஸ் அளவில் இருக்கும் இந்த ரோபோ மிகச்சரியாக சாலைகளில் பயணித்து வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு சென்று பொருட்களை வைத்துவிட்டு மீண்டும் அதே வழியில் திரும்பி வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூகுளின் ஆட்டோமேட்டிக் காரில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்தான் இந்த ரொவர் ரோபோட்டில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் இதனால் இந்த ரோபோ வாடிக்கையாளர் இருக்கும் தூரத்தை சரியாக கணக்கிடவும், இருட்டில் பயணம் செய்யவும் பயணம் செய்யும் வகையிலும் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரோபோவின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததை அடுத்து மிக விரைவில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்ய இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷ்ய நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் பிளிப்கார்ட் அமேசான் உள்பட ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களும் இதே முறையை வெகுவிரைவில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.