Home Blog Page 5880

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

0

கேப்டனாக விராத் கோஹ்லி செய்த சாதனை: குவியும் பாராட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராத் கோஹ்லி கடந்த 2014ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிலையில் இந்த ஐந்து ஆண்டுகளில் கேப்டனாக மட்டும் 5000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 5000 ரன்களுக்கும் மேல் எடுத்த கேப்டன்களில் 6வது இடத்தில் விராத் கோஹ்லி உள்ளார்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை கேப்டனாக மட்டும் 53 டெஸ்ட் போட்டிகளில் 86 இன்னிங்ஸ் விளையாடிய விராத் கோஹ்லி, 5027 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 19 சதங்கள், 13 அரைசதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன்னர் 5000 ரன்கள் கடந்த வீரர்களின் பட்டியல்

தென்னாப்பிரிக்காவின் ஸ்மித்: 8659 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர்: 6623 ரன்கள்
ஆஸ்திரேலியாவின் பாய்ண்டிங்: 6542 ரன்கள்
மேற்கிந்திய தீவுகளின் லாயிடு: 5233
நியூசிலாந்தின் பிளம்மிங்: 5156

புதிய சாதனை செய்த இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேற்கண்ட ஐந்து வீரர்களும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டதால் இன்னும் 1000 ரன்கள் எடுத்தாலே விராத் கோஹ்லி இரண்டாவது இடத்தை பிடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

0

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள தகவல் தொடர்பு சேவையை வழங்கும் தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு வழங்க வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டு கட்டணங்களை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுவரை இந்த நிறுவனங்கள் செலுத்தாமல் இழுத்தடித்து வந்த தொகையை உடனடியாக செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன.

தகவல் தொடர்பு சேவையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை அறிமுகமான பின்னர் இந்திய தகவல் தொலைத் தொடர்பு துறையில் கடுமையான போட்டி உருவானது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவைக்கான கட்டணங்களை போல மற்ற நிறுவனங்களும் தொடர்ந்து சேவைக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபட்டன.

இதனால் ஏற்கனவே சேவையை வழங்கி வந்த வோடபோன், ஐடியா, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளன என்று கூறப்படுகிறது. இதனால் இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கான நிலுவைத் தொகைகளை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளன.

இந்நிலையில் இந்த தொகையானது தற்போது பெரிய அளவில் வளர்ந்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படும் அலைக்கற்றை உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை உடனடியாகச் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை சற்றும் எதிர்பார்க்காத வோடபோன், ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டன என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக கடந்த காலாண்டில் அந்த நிறுவனங்களின் நிதிநிலை மிக மோசமான அளவை எட்டியது என்று கூறப்படுகிறது.

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் மத்திய அரசை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்களால் வர்த்தகத்தைத் தொடர முடியாது என்றும், மேலும் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. ஆனால் இந்த தொகை செலுத்தக் கூடிய அளவில் இருந்தும் அதனை நிறுவனங்கள் செலுத்தவில்லை என்று அரசு தரப்பு கூறுகிறது.

கடந்த 2018-19– நிதியாண்டில் வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.37,000 கோடி. இதில் அரசு கேட்கும் தொகைக்காக தனியாக ரூ.18,470 கோடியையும் இந்த நிறுவனம் ஒதுக்கியிருந்துள்ளது. எனவே அரசுக்குச் சேர வேண்டிய தொகையை செலுத்தக் கூடிய நிலையில் இருந்தும் அதை செலுத்தாமல் இழுத்தடித்து வருகிறது.

இதை போலவே பார்தி ஏர்டெல் நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.6,164 கோடி, ஆனால் அதை முறையாக சரியான நேரத்தில் செலுத்தாததினால் வந்த வட்டி, அபாரதம், அபராத வட்டி என்று ரூ.22, 286 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனம் செலுத்த வேண்டிய இறுதித் தொகை தற்போது ரூ.28,450 கோடியாக உள்ளது. ஆனால் பார்தி ஏர்டெல்லின்  கடந்த 2018-19 ஆம் ஆண்டிற்கான மொத்த ஆண்டு வருவாய் சுமார் ரூ.50,000 கோடியாக இருந்தும் இந்த நிறுவனமும் இழுத்தடித்து வருகிறது. இந்த நிறுவனங்களை போல ஜியோ நிறுவனம் செலுத்த வேண்டிய தொகை 6,670 கோடி ரூபாயாகும். மொத்த தொகை சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாயாகும்.

இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் எதிர்பார்த்தது போலவே இந்த தொகையை செலுத்த மத்திய அரசு அந்த நிறுவனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள வோடபோன், ஏர்டெல் நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன.

இந்நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகளை செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் மனுத்தாக்கல் செய்துள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களிடம் கொள்ளை கட்டணம் வசூல் செய்த டெலிகாம் நிறுவனங்கள் இவ்வாறு மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இழுத்தடித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

0

முதல் பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா அசத்தல்: 106 ரன்களில் சுருண்ட வங்கதேசம்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களின் அதிரடி பந்துவீச்சால் அந்த அணி 106 ரன்களில் ஆட்டமிழந்தது

தொடக்க ஆட்டக்காரர் இஸ்லாம் ஓரளவு நிலைத்து நின்று ஆடி 29 ரன்களை எடுத்திருந்தபோதிலும் அதன்பின் களமிறங்கிய ஐந்து பேட்ஸ்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர் என்பதும் இவர்களில் மூவர் டக் அவுட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் லிட்டன் தாஸ் மற்றும் நயீம் ஹசன் ஓரளவு நிலைத்து ஆடி தலா 24 மற்றும் 19 ரன்களை எடுத்ததால் வங்கதேச அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. இஷாந்த் ஷர்மா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும் ஷமி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி சற்றுமுன் வரை 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 33 ரன்கள் எடுத்துள்ளது. மயாங்க் அகர்வால் 14 ரன்களில் அவுட் ஆனார். தற்போது ரோஹித் சர்மா மற்றும் புஜாரே பேட்டிங் செய்து வருகின்றனர்.

திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?

0

திமுகவை கடுமையாக விமர்சித்த விசிக! விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேற்றம்?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனைபடை பாதுகாப்பை‌ சில நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு திரும்ப பெற்றது. இதற்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, விடுதலை புலிகளால் சோனியாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக் காட்டினார். இந்த சூழ்நிலையில் பாதுகாப்பை விலக்கி கொள்வது கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்தார். இது தமிழ் ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் திமுக, விடுதலை புலிகளை சுட்டிக்காட்டி பேசியது கடும் அதிர்வலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடும் கண்டனத்தை தெரிவித்தார், இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக போன்ற கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்காமல் இருந்தன.

இந்த சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் வன்னியரசு திமுகவையும் காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் தேசத்தின் காவலர்கள்.சிங்கள பவுத்த பயங்கரவாதத்துக்கு எதிராக தம் மக்களை காப்பாற்றிய மக்கள் இயக்கமே விடுதலைப்புலிகள். அப்படிப்பட்ட புலிகளை அழித்து விட்டதாக அறிவித்த பிறகும், விடுதலைப்புலிகளை வைத்து பாதுகாப்பு கேட்பது நாகரீகமா? என்று திமுகவிற்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திருமாவளவன் திமுகவிற்கு எரிச்சல் ஊட்டினார், வன்னியரசுவின் இந்த டிவிட்டர் பதிவு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெளிவாக தெரிகிறது.

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

0

ஓட்டலில் உணவு சாப்பிட சம்பளம் வழங்கும் நிறுவனம்!

தற்போதைய விலைவாசி ஏற்றத்தில் ஓட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில்லை பார்த்தால் பகிரென இருக்கும். அந்த அளவுக்கு ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை ஏறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு உணவகம் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருகிறது என்ற ஆச்சரியமான செய்தி வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டபோடில் என்ற உணவகம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சுவைமிகுந்த உணவை வழங்க வேண்டும் என்பதற்காக உணவை சுவை பார்த்து அதில் உள்ள குற்றம் குறைகளை கண்டுபிடித்து சொல்வதற்காகவே சில ஊழியர்களை நியமிக்க உள்ளது. இந்த ஊழியர்களுக்கு 129 அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் ஒன்பது ஆயிரம் சம்பளம் வழங்கவும் முடிவு செய்துள்ளது.

இந்த பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களை ஓட்டலில் தயாராகும் டீ, காபி, நொறுக்குத்தீனிகள் உள்பட ஒவ்வொரு உணவையும் சுவைத்து அதன் நிறை குறைகளை அறிந்து, அதன் பின் அந்த உணவின் தரத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த ஊழியர்களுக்கு ஒன்பது ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டுமின்றி தங்குமிடமும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தங்களது உணவகங்களில் தயாராகும் உணவகங்கள் தயாராகும் உணவுகள் அனைத்தும் எந்தவித குறையும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் செல்லும் என்பதும் இங்கிலாந்து நாட்டிலேயே சிறந்த உணவகம் என்ற பெயரை எடுக்க இந்த ஊழியர்கள் உதவுவார்கள் என்றும் இந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஓட்டலில் உணவை சாப்பிடுவதற்கு சம்பளம் தருவது மட்டுமின்றி தங்கும் இடமும் இலவசமாக கொடுக்கும் இந்நிறுவனத்தில் வேலையில் சேர பலர் போட்டி போட்டு வருகின்றனர் என்பதும் இந்த ஓட்டலில் வேலைக்கு சேர்பவர்கள் குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஓட்டலின் நிர்வாகம் அறிவிக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

0

சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டிருப்பதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர் “ஐ.ஐ.டி.க்களில் இட ஒதுக்கீடு: பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்” என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி), இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும் போது இனி கண்டிப்பாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதீயைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், மத்திய மனிதவளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அண்மையில் தில்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிலைக்குழுவின் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் சமூகநீதித் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியநாராயண் ஜாட்டியா, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்தே இடஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம்.களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணையிட்டிருக்கிறது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள்தொகை அடிப்படையிலான இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 49.50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டிகளில் வெறும் 12% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட நுழைவுநிலை பணிகளான உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐ.ஐ.டி.யில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு சேர்த்து மொத்தமாக 12.40 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐ.ஐ.டியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள், அதாவது 88% இடங்கள் உயர்சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள்(9.64%), பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள்(2.33%), பழங்குடியினருக்கு 3 இடங்கள் (0.43%) மட்டுமே கிடைத்துள்ளன. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால் அவை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்படுவது தான் கொடுமையாகும். 2018&ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 682 பேரில் 16 பேரும், 2019-ஆம் ஆண்டில் 271 பேரில் 5 பேரும் மட்டும் தான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் என்பதிலிருந்தே ஐ.ஐ.டிகளில் சமூகநீதி எந்த அளவுக்கு படுகொலை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஐ.ஐ.எம்.களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 18 ஐ.ஐ.எம்கள் உள்ளன. அவற்றில் 16 நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டு விவரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 16 ஐ.ஐ.எம்.களில் 90% ஆசிரியர் பணிகள் உயர்சாதியினருக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த 16 ஐ.ஐ.எம்.களிலும் பழங்குடியினர் ஒருவர் கூட ஆசிரியராக இல்லை. 12 நிறுவனங்களில் பட்டியலின ஆசிரியர்களே இல்லை. 7 நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஐ.ஐ.எம்.களில் இடஒதுக்கீடு இன்னும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அந்த அளவுக்கு அங்கு சமூகநீதி முளையிலேயே கருக்கப்படுகிறது.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 49.50% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் கூட, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு மூல காரணம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-களில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை பிறப்பித்த ஆணை தான். அந்த ஆணையில் தொழில்நுட்ப பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி, ஐ.ஐ.டிகளும், ஐ.ஐ.எம்.களும் 40 ஆண்டுகளாக சமூகநீதியை மறுத்து வருகின்றன. ஆனால், இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றும், இப்போதுள்ளவாறு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் ஐ.ஐ.டிகளிலும், ஐ.ஐ.எம்.களிலும் இனி சமூகநீதி படுகொலை செய்யப்படாதே தவிர, இதுவரை படுகொலை செய்யப்பட்டது, செய்யப்பட்டது தான். இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம். எனவே, கடந்த காலங்களில் சமூகநீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்காக ஐ.ஐ.டிகள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் எத்தனை பணியிடங்களை பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால் அவர்களுக்கு முறையே 27%, 15%, 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். அவை அனைத்தையும் பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை முழுக்க முழுக்க இடஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அது தான் சமூகநீதியை தழைக்கச் செய்ய ஒரே வழியாகும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

0

கோவில் இடங்களில் பட்டா கிடையாது! தமிழக அரசாணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்ய கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கோவிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோவிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணை மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்பது ஒரு மதத்திற்கான வழிபாட்டு தளங்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? மற்ற மத வழிப்பாட்டு தளங்களுக்கு கிடையாதா?
இதன் மூலம் கோவில் நிலங்களை விற்க இந்து அறநிலையத்துறையை தமிழக அரசு வற்புறுத்துகிறதா? இந்த அரசாணை எப்படி கோவில்களுக்கு பலனளிக்கும்? என சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் அரசுக்கு ஊதுகுழலாகவும், ரிமோர்ட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் பொம்மைகளாகவும் தான் இருக்கிறார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வேதனை தெரிவித்தனர்.

மீண்டும் இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் எவ்வளவு, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

0

’அதிசயம் நிகழும்’ ஆனால்… கே.எஸ்.அழகிரியின் கிண்டலான பதில்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தமிழக அரசியலில் இதுவரை இல்லாத வகையில் ஒரு புதுவிதமான தேர்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அதிமுக, திமுக என இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமைந்து ஒரு திராவிட கட்சி ஆளும் கட்சியாகவும் இன்னொரு கட்சி எதிர்க்கட்சியாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இணைந்து இரண்டு திராவிட கட்சிகளின் கூட்டணியை ஒரே நேரத்தில் சந்திக்கும் கூட்டணி ஒன்றை அமைக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்று கூட்டணி தேவை என எதிர்பார்க்கும் மக்களுக்கு இந்த கூட்டணி ஒரு மாற்றாக இருக்குமா? என்பது தேர்தல் முடிவுக்கு பின்னரே தெரியவரும்

இந்த நிலையில் ரஜினி கமல் கூட்டணியை அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதில் இருந்தே மக்களின் ஆதரவு இந்த கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி கமல் கூட்டணி குறித்து முதலமைச்சர் முதல் அனைத்து அரசியல் கட்சிகளும் கிட்டத்தட்ட விமர்சனம் செய்துவிட்ட நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அவர்களும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்

ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவது தவறான ஒன்று என்பது எனது கருத்து என்றும் 2021 ஆம் ஆண்டில் ’அதிசயம் நிகழும்’ என்ற சினிமா வேண்டுமானால் வரும், ஆனால் எந்த அதிசயமும் நிகழாது என்றும் கூறியுள்ளார்

கே.எஸ்.அழகிரியின் இந்த கருத்து கமல் ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி கூறியவாறு உண்மையில் அதிசயம் நிகழுமா? அல்லது கே.எஸ்.அழகிரி கூறியவாறு அந்த பெயரில் ஒரு திரைப்படம்தான் வருமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்

0

21 வயதில் நீதிபதி! வாழ்த்து மழையில் ராஜஸ்தான் மாணவன்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங், வயது 21,. ராஜஸ்தான் சட்ட பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்தவுடன் ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, கூடிய விரைவில் அவருக்கு நீதிபதி பணி ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இது குறித்து இளம் நீதிபதியாக பதவி ஏற்கவுள்ள மயங்க் பிரதாப் சிங் கூறிய போது, “நீதிபதிகளுக்கு சமூகத்தில் இருக்கும் மரியாதை மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கண்டு நீதித்துறை சேவை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதனால் தான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தேன் என்று தெரிவித்தார்.

நீதித்துறை சேவைகளுக்கான தேர்வை எழுதுவதற்கான குறைந்தபட்ச வயது முன்பு 23 ஆக நிர்ணயித்தது. இதனை ராஜஸ்தான் அரசு இந்த ஆண்டு முதல் 21 வயதாக குறைத்தது. இதன் மூலம் துடிப்பான மாணவர்கள் இளம்‌ வயதில் உயர்ந்த கவுரவத்தை பெற வழி வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி

0

விரைவில் குடும்ப பெண்ணாக மாற போகும் நிக்கி கல்ராணி! யார் அந்த அதிர்ஷ்டசாலி

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகள் பட்டியலில் ஒருவர் தான் நிக்கிகல்ராணி. அவர் அடிப்படையில் பெங்களூரை சேர்ந்தவர். முதலில் மலையாள படத்தில் அறிமுகமான இவர் பின்னர் தமிழில் ஜி.வி பிரகாஷீடன் டார்லிங் என்னும் படத்தின் மூலம் அழகிய பேயாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர்,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2 போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ்ப் திரையுலகில் பிரபலமானர். தற்போது கன்னட,மலையாள படங்களிலும் அவர் நடித்து கொண்டிருக்கிறார்.அனைவர் மனதையும் கவர்ந்த நிக்கிகல்ராணி அவர் மனதை கவர்ந்த ஒருவரை காதலிப்பதாகவும் தற்போது கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இன்னும் 3 வருடத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.அவர் காதலர் யார் என்ற கேள்விக்கு “நான் சென்னையை சேர்ந்த ஒருவரை தான் காதலிக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை பற்றிய முழு விவரமும் தெரிவிக்காமால் ரகசியமாக வைத்துள்ளார் நிக்கி கல்ராணி.

இதனை அறிந்த அவருடைய ரசிகர்கள் இனிமேல் அவர் நடிப்பாரா மாட்டாரா? என்ற மன வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால் நஸ்ரியா,சமந்தா போல இவரும் திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு குட் பை சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நிக்கி கல்ராணி தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் படி 2 மலையாள படங்களிலும் 1தமிழ் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.