Home Blog Page 5881

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

0

தமிழருக்கு ஆளுனர் பதவி கொடுக்கும் கோத்தயப: எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள்

இலங்கையின் புதிய அதிபராக சமீபத்தில் பதவி ஏற்றுக்கொண்ட கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரர் மகிந்தவுக்கு பிரதமர் பதவியைக் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொண்டதை அடுத்து அண்ணன் பிரதமராகவும் தம்பி அதிபராகவும் பதவியேற்று இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்

இந்த நிலையில் தமிழர்கள் பெரும்பாலும் வாழும் வட கிழக்கு மாகாணப் பகுதியில் ஆளுநராக ஒரு தமிழரை நியமனம் செய்ய கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த முடிவுக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தமிழர் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2009-ம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது இனப்படுகொலை நடைபெறவில்லை என்று அறிவித்தவர் முத்தையா முரளிதரன் என்பதால் அவர் தமிழராக இருந்தாலும் அவருக்கு தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தங்கள் பகுதியில் ஆளுநராக அவரை நியமனம் செய்யக்கூடாது என்று தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது

இருப்பினும் வட கிழக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரனை நேயமிக்க கோத்தபயா ராஜபக்சே முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுவதால் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே கோத்தபயா ராஜபக்சே அதிபராகி உள்ளது தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் முத்தையா முரளிதரன் ஆளுநராக இருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

0

மீண்டும் ரஜினி-கமல் கலந்து கொள்ளும் விழா: தமிழக அரசியல்வாதிகள் அதிர்ச்சி!

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியல்ரீதியாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் சமீபத்தில் நடந்த ‘கமல்ஹாசன் 60’ விழாவில் இருவரும் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது

இதனையடுத்து இருவரும் அடிக்கடி பொதுவிழாவில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொள்ள போவதாகவும், இந்த மேடையிலும் அரசியல் பேச்சுக்கள் அனல் பறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமல், ரஜினி சேரக்கூடாது என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தற்போது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இந்த விழாவில் கலந்து கொள்ளும் முன் அவர் குணமாகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் டிசம்பர் 7ஆம் தேதி ‘தர்பார்’ இசை விழாவை நடத்த முடிவு செய்திருப்பினும் அதற்கு முன்னரே இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடலை ரிலீஸ் செய்ய படகுழுவினர் முடிவு செய்துள்ளனர் என்பதும், அனிருத் இசையமைத்த இந்த பாடல்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி

0

மக்கள் தீர்ப்புக்கு எதிராக கூட்டணி: சிவசேனா பாஜகவுக்கு எதிராக இந்து அமைப்புகள் அதிரடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க இழுபறி நீடித்து வரும் நிலையில் மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் சிவசேனா மற்றும் பாரதீய ஜனதாவுக்கு இந்து அமைப்புகள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளன.

இது குறித்து புனேயை சேர்ந்த சமஸ்தா இந்து அகாடி அமைப்பின் தலைவரான மிலிந்த் ஏக்போதே செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு 161 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவும், சிவசேனாவும் விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்துக்காக இரு கட்சிகளும் இப்படி சண்டையிட்டுக் கொள்வது மக்கள் அவர்கள் கூட்டணிக்காக அளித்த தீர்ப்பை அவமதிப்பதாகும்.

சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சிகள் கொள்கை ரீதியாக வேறுபட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகளை எதிர்ப்பதற்காக இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளன.

மாநிலத்தில் பா.ஜனதா, சிவசேனா ஆட்சிக்கு வந்தால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். நாங்களும் விவசாயிகள் மீது அக்கறை வைத்துள்ளோம்.

இந்த கட்சிகளில் ஏதேனும் ஒன்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை உருவாக்கினால், நாங்கள் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். மேலும் அவர்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவோம்.

சமஸ்தா இந்து அகாடி தவிர இதற்காக மேலும் 6 இந்து அமைப்புகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளன. இந்து அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடேவும் எங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளார் என்றும் அவர் அப்போது கூறினார்.

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

0

ராமர் கோவில் கட்ட அம்பானி ரூ.500 கோடி?

அயோத்தியால் இந்துக்கள் ராமர் கோவில் கட்டலாம் என சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில் அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சந்தித்ததாகவும், இந்த சந்திப்பின்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.500 கோடி நிதியுதவி வழங்குவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் இந்த சந்திப்பை இரு தரப்பினர்களும் உறுதி செய்யவில்லை. மேலும் சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டு பகிரப்படும் புகைப்படமும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்தது என்றும் எனவே இந்த செய்தி சமூகவலைத்தள பயனாளிகளால் பரப்பப்படும் வதந்தி என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளால் பல்வேறு விளைவுகள் ஏற்படுவதால் இதுபோன்று போலி செய்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்

0

பயணிகள் விமானம் அருகே தாக்கிய பயங்கர மின்னல்: அதிர்ச்சி புகைப்படம்

நியூசிலாந்து நாட்டில் பயணிகள் விமானம் ஒன்றின் அருகே தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் என்ற சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் எமிரேட்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானத்தின் மிக அருகிலும் சுற்றிலும் தொடர்ச்சியாக மின்னல்கள் தாக்கியது.

அதிர்ஷ்டவசமாக இந்த மின்னல்களால் விமானத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதால் பயணிகள் நூலிழையில் தப்பித்தனர். இந்த மின்னல்களை விமான நிலைய ஊழியர் ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

தொடர்ந்து மின்னல்கள் மற்றும் இடி இடித்து கொண்டிருந்ததால் இந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அதில் பயணம் செய்ய வேண்டிய பயணிகள் தங்க விமான நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் நிலைமை சீரானவுடன் பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக எமிரேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

0

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே,ரிஷப் பண்ட், டூபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், முகமது ஷமி, மற்றும் புவனேஸ்வஷ்குமார்
ஆகியோர் உள்ளனர்.

டி20 போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், டூபே,வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சஹார், ஷமி மற்றும் புவனேஸ்வஷ்குமார்
ஆகியோர் உள்ளனர்.

இந்த இரண்டு தொடர்களிலும் தல தோனியின் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தோனி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

0

145 இந்தியர்களின் கைகால்களை கட்டிய அமெரிக்க அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 3 பெண்கள் உள்பட 145 இந்தியர்களை அமெரிக்க அரசு கை கால்களை கட்டி டெல்லிக்கு திருப்பி அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சரியான ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிவந்த 145 இந்தியர்கள் கண்டுபிடித்த அமெரிக்க அரசு அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் கை கால்கள் கட்டப்பட்டு புலம்பெயர் மையத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலேயே விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் பெரும்பாலும் 20 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதும் இவர்களில் மூவர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கை கால்கள் கட்டப்பட்டு வெளியேற்றியுள்ளதற்கு இந்திய அரசு கடுமையாக கண்டித்துள்ளது

இந்தியர்கள் மட்டுமின்றி இலங்கை வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இதே போல் கை கால்கள் கட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாகத்தான் பெரும்பாலானோர் ஊடுருவுவதாகவும், இதற்கு மெக்சிகோ அரசு சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குச் இருமடங்கு வரி விதிக்கப்படும் என அமெரிக்க அரசு எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் ‘அற்புதம்’ பேட்டிக்கு முதல்வர் மற்றும் சீமான் பதிலடி

0

ரஜினியின் ‘அற்புதம்’ பேட்டிக்கு முதல்வர் மற்றும் சீமான் பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் என்ன சொன்னாலும் ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தி வருவது மட்டுமின்றி அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வருவதால் ரஜினி ஒரு பேட்டி அளித்தால் அது ஒரு வாரத்திற்கு டிரெண்டிங்கில் உள்ளது

அதேபோல் இன்று சென்னை விமான நிலையத்தில் 2021ஆம் ஆண்டு நிகழும் அற்புதம், அதிசயம் குறித்து ரஜினிகாந்த் அளித்த பேட்டிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.

ரஜினியின் ‘அற்புதம்’ பேட்டிக்கு முதல்வர் மற்றும் சீமான் பதிலடி

இதுகுறித்து முதல்வர் கூறியபோது, ‘எந்த அடிப்படையில் 2021ஆம் ஆண்டில் அதிசயம் நிகழும் என ரஜினி கூறுகிறார் என்று தெரியவில்லை என்றும், ரஜினி கட்சி தொடங்கிய பிறகே அவரை பற்றியும், அவரது கருத்தை பற்றியும் விரிவாக கூற முடியும் என்றும், வரும் 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் என்றும், 2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார்’ என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து சீமான் கூறியபோது, ‘ஆம் அதிசயம் நிகழும்: தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும் என்கிற நினைப்பிலும், மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடக வெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் என்னும் வெற்றுப்பிம்பம் இனமான தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021ல் நடக்கும், நடந்தே தீரும்’ என்று கூறினார்.

முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி

0

முதல்வர் வேட்பாளர் யார்? ரஜினிகாந்த் பேட்டி

கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டாலும் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை. இருதரப்பினரும் தேவைப்பட்டால் தமிழக மக்களின் நலனுக்காக இணைவோம் என்றுதான் கூறி இருக்கின்றார்களே தவிர, இருவரும் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று உறுதியாக இருவருமே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கமல், ரஜினி ஆகிய இருவரும் இணைவார்களா? என்ற சந்தேகத்திற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், இணைந்தால் இருவரில் யார் முதல்வர் வேட்பாளர் எந்த என்ற சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது. நேற்று நடிகை ஸ்ரீப்ரியா, கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர் என கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கோவாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்று விட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் சந்தித்தபோது முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு நான் அரசியல் கட்சியை ஆரம்பித்த உடன் அது குறித்து எனது கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வேன் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து இப்போது எந்த கருத்தையும் சொல்ல தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்

மேலும் 2021ஆம் ஆண்டு தமிழக மக்கள், தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் தனக்கு கிடைத்த இந்த விருது தமிழக மக்கள்தான் காரணம் என்றும் இந்த விருதை அவர்களுக்கு நான் சமர்ப்பிக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

0

17 வயது சிறுமியுடன் பாலியல் உறவு என குற்றச்சாட்டு: இங்கிலாந்து இளவரசரின் அதிரடி முடிவு

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன் ஆண்ட்ரூ. 59 வயதான இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இளவரசர் ஆண்ட்ரூ சாரா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டார்.

இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ மீது ஜெப்ரி எப்ஸ்டீன் என்ற பெண் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை கூறியது இங்கிலாந்தை மட்டுமின்றி உலகையே அதிர வைத்தது. தான் 17 வயதாக இருக்கும்போதே ஆண்ட்ருவுடன் உறவு வைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அதன்பின்னர் இரண்டு முறை அவர் தன்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்திருந்ததாகவும் குற்றஞ்சாட்டி இருவரும் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் ஜெப்ரி எப்ஸ்டீனை தான் பார்த்ததே இல்லை என்று கூறிய இளவரசர் ஆண்ட்ரு பின்னர் அவருடன் பழகியது உண்மைதான் என்றும் ஆனால் அவருடன் உறவு எதுவும் வைக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் இங்கிலாந்தில் பெரும் பரபரப்பை அடைந்ததோடு ஊடகங்களும் இதுகுறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்தது.

இந்த நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ராணியின் ஒப்புதலுடன் பொதுவாழ்க்கையில் இருந்து விலகுவதாகவும் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தனது தொடர்பு அரச குடும்பத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் இளவரசர் ஆண்ட்ரூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.