Home Blog Page 5909

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

0

விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம்! மகிழ்ச்சி தரும் சிறப்பு செய்தி

விவசாய நாடு என்றபோதிலும் நம் நாடு முழுவதும், போதிய வருமானம், விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனை திரும்பும் கட்ட அளவுக்கு வருமானம் ஈட்ட முடியாததால் பல விவசாய குடும்பங்கள் கடனில் மூழ்கி உள்ளனர் என்னதான் பல திட்டங்கள் விவசாயத்திற்காக இருந்தாலும் விவசாயின் நிலைமை மாறாமல் தான் இன்றளவும் இருந்து வருகிறது இதற்காக மத்திய அரசும் பல மாநிலங்களும் விவசாயத்திற்காக நலத்திட்டங்களை செயல்பட்டுக் கொண்டிருக்கும்

விவசாயத்தை நம்பி வாங்கிய கடனும் வருமானம் இல்லாததால், கட்டத் தவறி குடும்பமே சிக்கலில் தவிக்கிறது.
இதனால் விவசாயிகளின் வருமானத்தை பெருக்க பல மாநில அரசுகளும் முயன்று வருகின்றன. இதனிடையே தமிழக அரசு நாட்டிலே முதன்முறையாக தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டத்தின் விதிமுறைகள்

கொள்முதல் செய்வோர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை நிர்ணயம் செய்ய முடியும்.

ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்டப் பாதுகாப்பு.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்கான சட்டம்.

வேளாண் பொருள் கொள்முதல் செய்வோர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்

0

இடைத்தேர்தல் தோல்வியால் கலங்கி நிற்கும் மு.க.ஸ்டாலின்! விழிப்பிதுங்கி நிற்கும் உடன்பிறப்புகள்.

விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததை மு.க.ஸ்டாலின் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாங்குநேரி தோல்வியை அவர் கண்டுகொள்ளவில்லை அங்கு காங்கிரஸ் தான் போட்டியிட்டது, ஆனால் விக்ரவாண்டி பொருத்தவரை திமுகவிடம் இருந்து அதிமுகவுக்கு சென்றது மிகுந்த பலத்த அடியாகவே கருதுகிறார் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இடைத்தேர்தல் தோல்வி பல பாடங்களை ஸ்டாலினுக்கு கற்றுக் கொடுத்ததாக தெரிகிறது, நாடாளுமன்றத் தேர்தலில் திமுக,காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் பிரதானமாக இருந்தது, அது அனைவராலும் அறியப்பட்டு ஒன்றுதான்,. கடந்த கால தேர்தல் அறிக்கையில் சொன்னப்படி கடன் தள்ளுபடியை திமுகவும் காங்கிரசும் செய்தன,. இதனால் தமிழக மக்கள் நம்பி வாக்களித்தனர், தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பிஜேபியும் அதன் கூட்டணி கட்சிகளும் அசுர வெற்றியை பெற்றன,. தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்ட வெற்றி போல் தமிழக மக்களையே சிந்திக்கும் வகையில் இருந்தது,.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள முடியாமல் போனதால் திமுக கடும் கலக்கத்திலேயே இருந்தது, அடுத்த தேர்தலில் என்ன சொல்லி சமாளிக்க போகிறோம் என்று தெரியாமல் விழிப்பிதுங்கியது,.

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் திமுக தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்து பேசினார், குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி கடத்துவது போல் இந்த தேர்தலில் வெற்றியை திமுக பெற்றனர் என்று தமிழக மக்களை யோசிக்க வைக்கும் அளவில் பேசி திமுகவை கலங்க வைத்தார், இதன் தொடர்ச்சியாக வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, அப்போதைய காலகட்டத்தில் காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியது, முத்தலாக் தடைச்சட்டம் விளைவாக முஸ்லிம் சமுதாய வாக்குகள் பாஜக கூட்டணியில் இருந்ததால் அதிமுகவிற்கு வாக்களிக்கவில்லை, இதனால் முஸ்லிம் சமுதாய வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு விழுந்ததால் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார், இதில் 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவும் 3 சட்டமன்ற தொகுதிகளில் திமுகவும் முன்னிலை பெற்றன, இந்த முடிவுகள் ஸ்டாலினை திகைத்து போய் வைத்தன.

தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பதவியை இத்தகைய சூழ்நிலையில் கொடுத்தது திமுகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது,. அனைவரும் குடும்ப வாரிசு கட்சி என்று திமுக மீது கடுமையான விமர்சனங்களை வைத்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில்,. எதிர்கட்சிகள் இதனை வைத்து அரசியல் செய்ய வழிவகுத்த விட்டார் என திமுக உடன்பிறப்புகள் புலம்பி வருகின்றனர்,.

வன்னியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 20 சதவீத ஒதுக்கீட்டில் 15 சதவீதம் உள்ஒதுக்கீடு தரப்படும் என்ற மு.க.ஸ்டாலின் கூற்றை விக்கிரவாண்டியில் உள்ள வன்னியர்கள் நம்பவில்லை,. காரணம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்டச் செயலாளர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதுதான்,. திமுக வன்னியர் பிரமுகர்களை வைத்து பலமான பிரச்சாரம் செய்தும் பயனில்லாமல் போனது,.

திருமாவளவனை கூட்டணியில் வைத்துக்கொண்டு செயல்படுவதால் வாக்குகள் விழாது என்று திமுக வன்னியர்களே தலைமையிடம் சொல்லியதாகவும் இதனை பொன்முடி கண்டுகொள்ளாமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஸ்டாலினுக்கு நம்பிக்கையூட்டி ஏமாற்றியதால் அவர் மீது கடுமையான எரிச்சலில் ஸ்டாலின் உள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்!

0

தோலுக்கு மினு மினுப்பு மற்றும் பொலிவை தரும் சைவ உணவுகள்!

அசைவ உணவுகள் தான் உடலுக்கு நல்லது என்று நினைப்பவர்கள் மத்தியில் சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து கை தேர்ந்த மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் உங்களுக்காக.

நச்சுக்களை அகற்றுபவை:

நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் போன்றவை சைவ உணவ வகைகளில் மிகவும் முக்கியமானவை. இதில் குறிப்பாக உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உள்ளது. அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரதச்சத்து இருக்கும் அளவுக்கு நார்ச்சத்து இருப்பதில்லை.

எலும்புகளை வலுவாக்குபவை:

நாம் உண்ணும் இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை அதிகரிக்க வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கும் அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. ஆனால் நாம் உண்ணும் சைவ உணவில் இந்த மாதிரியான பிரச்சினை இல்லை.

கார்போஹைட்ரேட் பற்றாக்குறை:

அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலைக்கு தள்ளப்படும்.

எளிதில் ஜீரணம்:

நாம் உண்ணும் சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாகி உடலுக்கு தேவையான குளுகோஸ் சத்தை முறையான மட்டும் சீராக அளிக்கும். அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் சில சிமயங்களில் சிலருக்கு அதுவே சிரமமாக கூட ஆகிவிடும்.

ஆரோக்கியமான மேனி:

பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, நமது தோலுக்கு நல்ல மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் உடல் மேனிக்கு மினுமினுப்பை மேலும் கூட்டும்.

போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின்

0

போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேச வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக்களத்திற்கு தள்ளி விட்டிருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள்நோயாளிகளுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சரோ, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

“அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்கக்கூடிய அரசாணை எண்: 354ல் திருத்தம் செய்ய வேண்டும்” “இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆலோசனைப்படி மருத்துவர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது” “கிராமப்புறங்களில் மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவபடிப்பிலும், சிறப்பு மருத்துவமனையிலும் பணியாற்றவும், படிக்கவும் வாய்ப்பு வழங்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” “மருத்துவ படிப்பை முடித்தவர்களுக்கு நேரடியாக கலந்தாய்வு மூலம் பணி நியமனம் வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட நான்கு முக்கியக் கோரிக்கைகளை அரசு மருத்துவர்கள் முன் வைத்து போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்

இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத்தனமான அரசாக அ.தி.மு.க. அரசு விளங்குகிறது.

“டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்போம்” என்று மருத்துவர்கள் கூறியிருப்பது ஒரு வகை ஆறுதல் என்றாலும், டெங்கு, பருவமழை தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் இது போன்றதொரு போராட்டத்திற்கு அரசே வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.

“பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முதல்வர் ஆலோசனை” என்று பத்திரிகைளில் செய்தி வந்தாலும், அந்த ஆலோசனையில் கூட இந்த மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதித்து முதல்-அமைச்சர் ஏன் பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை? “மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என்று முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் அமைதி காப்பது தான் அ.தி.மு.க. அரசின் நிர்வாக லட்சணமா?

அரசு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்கும், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கும் உயிர்நாடி மருத்துவர்கள் என்பதை முதல்-அமைச்சர் உணர்ந்து, போராடும் அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் இது போன்று “வேலை செய்ய மாட்டோம்” என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதல்-அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்

0

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்

நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தங்களிடமிருந்து இந்த இரண்டு தொகுதிகளையும் இழந்து படு தோல்வியை தழுவியது.இந்த இடைத் தேர்தல் அதிமுக Vs திமுக என்பதை விட பாமக vs திமுக என்று தான் இருந்தது.அந்த அளவிற்கு திமுகவும் பாமகவும் மாறி மாறி விமர்சித்து கொண்டன.

அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக படு தோல்வியை அடைந்த நிலையிலும் விட்டு விடாமல் விரட்டி அடிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை விமர்சனம் செய்துள்ளார்.

விக்கிரவாண்டி மக்கள் புகட்டிய பாடமும்,
ஸ்டாலின் கற்க மறுக்கும் படிப்பினையும்! என்்

என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தோல்விகள் கொடுக்கும் படிப்பினைகளும், அனுபவங்களும் மகத்தானவை. அவை தான் அகங்காரம் கொண்டு தவறான பாதையில் செல்லும் மனிதர்களுக்கு, எதார்த்தத்தை புரிய வைத்து சரியான திசையில் பயணிக்க வழிகாட்டும். ஆனால், விக்கிரவாண்டி தேர்தல் படுதோல்வி குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ள கருத்துகள், அவர் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சில கட்சிகள் திட்டமிட்டு கிளப்பிய சாதி உணர்வு தான் திமுகவின் தோல்விக்கு காரணம் என்றும், அதையும் தாண்டி திமுக அணிக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வாக்களித்திருப்பதாக கூறியுள்ளார். புளுகு மூட்டைகளின் மொத்த வணிகரிடமிருந்து வெளியாகியுள்ள புதிய பொய், புதிய பழி என்பதைத் தவிர, இதில் வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் சூழலையும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களத்தையும் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வரும் அனைவருக்கும், சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? என்பது மிகவும் நன்றாகத் தெரியும்.

2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு, சுமார் 42,000 வாக்குகளை பாட்டாளி மக்கள் கட்சி வென்றது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கூட்டணி தர்மத்தை மதித்து, அதிமுகவுக்கு ஆதரவு அளித்த பா.ம.க. அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டது. அதிமுக மற்றும் பா.ம.க.வின் கடந்த கால சாதனைகளை விளக்கியும், இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அத்தொகுதிக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பது தான் பா.ம.க. பரப்புரையின் அடிப்படையாக இருந்தது.

ஆனால், விக்கிரவண்டியில் திமுகவுக்கு எதிராக வெறுப்பு அலை வீசுவதையும், அதனால் இடைத்தேர்தலில் தோல்வி உறுதி என்பதையும் உணர்ந்து கொண்ட மு.க.ஸ்டாலின், வழக்கம் போலவே புத்திசாலித்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு, கடந்த 7-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்படும்- ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தொடங்கிய அந்த அறிக்கையில், தகுதியின் அடிப்படையில் பல்வேறு உயர்பதவிகளுக்கு வந்த வன்னியர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களுக்கெல்லாம் திமுக தான் பதவி வழங்கியதாகக் கூறி அவர்களைக் கொச்சைப்படுத்தியிருந்தார். கலப்படமில்லாத பொய்களைக் கூறி வன்னிய மக்களை ஏமாற்ற முயன்றதுடன், வன்னிய சமுதாயமே தி.மு.க.விடம் மண்டியிட்டு யாசகம் பெற்றது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்த ஸ்டாலின் முயன்றதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், அவரது அரைவேக்காட்டு அறிக்கைக்கு ஆதாரத்துடன் பதில் அளித்தேன்.

தி.மு.க.வின் அரசியல் வளர்ச்சி என்பது வன்னிய மக்கள் போட்ட பிச்சை. 1957 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் 14 இடங்களும், 1962-ஆம் ஆண்டு திமுக வென்ற 48 இடங்களில் 39 இடங்களும் வன்னியர்கள் பூமியான வட தமிழ்நாட்டிலிருந்து கிடைத்தவை. அதன் பிறகும் கூட பல தேர்தல்களில் திமுகவை தூக்கிப் பிடித்தவை வன்னியர் பூமி தான். இதற்கெல்லாம் கைமாறாக திமுக வன்னியர்களுக்கு செய்தது துரோகம்… துரோகம்… துரோகம் தான். இவ்வளவுக்குப் பிறகும் வன்னிய மக்களின் கண்ணியத்தை குலைக்கும் வகையில், மு.க.ஸ்டாலின் செயல்படும் போது, அதை தட்டிக் கேட்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? அந்த வகையில் கடமையைத் தான் நான் செய்தேன்.

அதற்குப் பிறகும் மு.க. ஸ்டாலின் செய்தவை அப்பட்டமான சாதி அரசியல் ஆகும். இலங்கையில் வன்னி பகுதியை ஆட்சி செய்த பண்டார வன்னியன் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தான். அவன் நாட்டின் மீது வெள்ளையர் பல முறை படையெடுத்தும் தோல்வியே பரிசாக கிடைத்தது. வீழ்த்த முடியாத பண்டார வன்னியனை, காக்கை வன்னியன் என்பவன் காட்டிக் கொடுத்ததால் ஆங்கிலேயர்கள் வீழ்த்தினர். இலங்கையில் பண்டார வன்னியனுக்கு எதிராக எப்படி காக்கை வன்னியன் பயன்படுத்தப்பட்டானோ, அதேபோல், விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும் வீழ்த்துவதற்காக இங்குள்ள சில வன்னியர்களை மு.க. ஸ்டாலின் களமிறக்கினார்.

அவர்களும் முதலாளி விசுவாசத்தில் தெருவுக்குத் தெரு மேடைகளை அமைத்து ஸ்டாலின் கொடுத்த பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டினார்கள். கொள்கை பேசப்பட்டிருக்க வேண்டிய களத்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தான் அவர்கள் நடத்தினார்கள். விழுப்புரம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தினர் திமுகவில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது என்று தமது துதிபாடிகள் மூலம் அடக்கி வைத்திருக்கும் மு.க. ஸ்டாலின், திடீரென வன்னியக் காவலன் வேடமிட்டு வந்தால் அதை ரசிப்பதற்கு இது நாடகம் அல்ல… அரசியல். இவ்வாறாக ஒவ்வொரு கட்டத்திலும் வன்னியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக ஸ்டாலின் செய்தவை சாதி அரசியலா… அதை முறியடிக்க பா.ம.க. செய்தது சாதி அரசியலா? என்பதை அரசியல் வல்லுனர்கள் அறிவார்கள்.

சாதி உணர்வை திட்டமிட்டு கிளப்பிய சந்தர்ப்பவாதிகள் யார்? திமுக தோற்றாலும் விடாமல் விரட்டியடிக்கும் ராமதாஸ்

போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். விக்கிரவாண்டியில் சாதி அரசியல் என்றால், நாங்குநேரியில் சாதியுடன் மத அரசியலையும் சேர்த்து செய்து மக்களிடம் பிளவை ஏற்படுத்தி வெற்றி பெற ஸ்டாலின் முயன்றார். ஆனால், அந்தத் தொகுதி மக்களும் மு.க. ஸ்டாலினின் தீய நோக்கத்தை உணர்ந்து தோல்வியை பரிசாக அளித்திருக்கின்றனர்.

தேர்தலில் வெற்றி என்பது மிகவும் அவசியம் ஆகும். அதை போராடித் தான் பெற வேண்டுமே தவிர, பொய்யுரைத்து, ஏமாற்றி பெறக் கூடாது. ஆனால், வெற்றிக்காக திமுக தலைவர் ஸ்டாலின் கையிலெடுப்பது எப்போதுமே இரண்டாவது அஸ்திரத்தை தான். சாதாரண நேரத்தில் எட்டு வழிச்சாலை வளர்ச்சிக்கான திட்டம் என்று கூறி விட்டு, தேர்தல் வந்தால் அத்திட்டத்தை எதிர்ப்பது போல நாடகமாடுவது, தேர்தலின் போது மதுவிலக்கு முழக்கமிட்டு விட்டு, தேர்தல் முடிந்ததும் திமுகவினர் நடத்தும் ஆலைகளில் மது உற்பத்தியை அதிகரிப்பது, நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்து ஏழைகளை கடனாளி ஆக்குவது என திமுகவின் தேர்தல் திருவிளையாடல்கள் அனைத்துமே இரண்டாவது வகையைச் சேர்ந்தவை தான். ஆனால், இதற்கெல்லாம் இனி ஏமாறாத அளவுக்கு மக்கள் விழித்துக் கொண்டுள்ளனர்.

திமுகவில் உள்ள வெள்ளை மனம் படைத்த வன்னியர்களும் மொத்தமாக சுரண்டப்படுவதற்கு முன்பாக விழித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய வேண்டும். இதற்கெல்லாம் மேலாக இனியாவது ஏமாற்றும் அரசியலை கைவிட்டு, அறம் சார்ந்த அரசியல் செய்ய மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

0

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - சுகாதாரத்துறை செயலர் பேச்சுவார்த்தை

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு மட்டங்களில்,வெவ்வேறு பதவிகளில் அரசு மருத்துவ மனைகளிலும்,மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு அதன் மூலமாக அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதனையடுத்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்புடன் அமைச்சர் மற்றும் செயலாளர் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர்.இதனால் மருத்துவர்கள அவர்களுடைய போரட்டத்தை விலக்கி கொண்டனர்.

ஆனால் 2 மாத காலம் ஆகியும் இந்த கோரிக்கைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன. இதனையடுத்து இன்று 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதுவரை அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவோ எந்தவித உத்தரவாதமும் தராததால் திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதில் 4 அரசு மருத்துவர்கள் சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனைகளில் வழங்கபடும் சிகிச்சைகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் அவசர அறுவை சிகிச்சை மற்றும் டெங்கு காய்ச்சல் வார்டு பணி ஆகியவற்றை மட்டும் செய்வதாகவும் ஏனைய அனைத்து சிகிச்சைகளையும் புறக்கணிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதுமான சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். மருத்துவர்களின் இந்த வேலைநிறுத்தத்தால் புற நோயாளிகள் பிரிவு, அனைத்து சிறப்பு பிரிவு நோயாளிகள் என அனைவரும் அவதிப்பட்டனர்.

ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்து, மாத்திரை மற்றும் சிகிச்சை கிடைப்பதால் அதனை நம்பி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று மருத்துவ செலவு செய்ய வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி தான் உயிர் வாழ்கின்றனர்.

அரசு மருத்துவமனைகளில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் புற நோயாளிகளாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வேலை நிறுத்தத்தால் புறநோயாளிகள் சேவை முற்றிலும் முடங்கியதால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து மிகுந்த ஏமாற்றத்துடன் சென்றனர். தேர்வு செய்யப்பட்ட சிறிய பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. அதனை வேறு தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதயம், நரம்பு, கல்லீரல், எலும்பு முறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளும் டாக்டர்கள் இல்லாததால் பாதிக்கப்பட்டன.

பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை பட்ட படிப்பு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவர்கள் மற்றும் நர்சுகளை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வந்து முழுமையான சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களும் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அங்கு 1000 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்று பணிக்கு வரவில்லை. பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். அனைத்து வார்டுகளிலும் புறநோயாளிகள் பிரிவிலும் அவர்கள் மூலமாகவே மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டன.

இந்த வேலை நிறுத்தத்தை சமாளிக்கும் வகையில் சுமார் 3000 மருத்துவ மாணவர்கள் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இன்று நடைபெற வேண்டிய அறுவை சிகிச்சை எதுவும் இதனால் நடைபெறவில்லை. அவசர சிகிச்சை தவிர மற்ற ஆபரே‌ஷன்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வார்டுகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.

அரசு பொது மருத்துவமனையில் காத்திருந்த பொதுமக்கள்

இதேபோல ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயப்பேட்டை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு, குழந்தைகள் நல மருத்துவமனைகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் இங்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

காய்ச்சல் பிரிவு அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் அரசு டாக்டர்கள் பணியில் ஈடுபட்டனர். ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் சாந்திமலர், உள்தங்கும் மருத்துவ அதிகாரி ரமேஷ் ஆகியோர் புறநோயாளிகள் பிரிவில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதித்தனர்.

அங்கு 500 அரசு டாக்டர்கள் பணியாற்றிய நிலையில் வேலை நிறுத்தத்தால் இன்று பெரும்பாலானவர்கள் பணிக்கு வரவில்லை. பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்தனர்.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், ‘டாக்டர்கள் ஸ்டிரைக்கால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் சிகிச்சை அளிக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் மூலம் புறநோயாளிகள் பிரிவு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது’ என்றார்.

இதற்கிடையே போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகள் 4 பேருடன் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

0

திங்கட்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருவதால் வருகிற 28 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பெய்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்தது.

இதன் காரணமாக தமிழகத்தின் ஈரப்பதத்தை காற்று ஈர்த்து செல்வதால் தமிழகத்தில் பெய்து வரும் மழை குறைந்து விட்டது. இதனால் நேற்றும், இன்றும் வெயில் அடிக்கிறது.

இதே போல் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியும் ஒடிசா நோக்கி சென்றதால் வட தமிழகத்திலும் வறண்ட வானிலை காணப்படுகிறது.

மேலும் இது பற்றி வானிலை மைய அதிகாரி கூறியதாவது.

மழை

அரபிக்கடல், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி நகர்ந்து சென்று விட்டதால் தமிழகத்தில் மழை குறைந்து விட்டது. 2 நாட்களுக்கு பெரிய அளவில் மழை இருக்காது.

வெப்பச்சலனம் காரணமாக சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய வடமேற்கு மாவட்டங்களில் மட்டும் மழையை எதிர்பார்க்கலாம்.

வங்கக்கடலில் தற்போது மேலடுக்கு சுழற்சி உருவாகி வருகிறது. இது வருகிற 28-ந் தேதி திங்கட்கிழமை முதல் தமிழகத்திற்கு மீண்டும் மழையை தரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.வருகின்ற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுகவில் ஐக்கியமாக தயாராகும் அமமுக முக்கிய நிர்வாகி

0

அதிமுகவில் ஐக்கியமாக தயாராகும் அமமுக முக்கிய நிர்வாகி

சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக கட்சியின் அதிருப்தியாளராக உள்ள புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆரம்பித்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் தான் புகழேந்தி. கடந்த காலங்களில் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டி.டி.வி. தினகரனுக்கும் புகழேந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனையாடுத்து அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசிய வீடியோ வெளியானதால் அவர்களுக்குள் மேலும் மோதல் வெடித்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் புகழேந்தி திடீர் சந்திப்பு

இதனையடுத்து புகழேந்தி அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் தனியாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூட்டமும் நடத்தினார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று பகல் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இதனால் அமமுகவில் அதிருப்தியில் உள்ள புகழேந்தி அதிமுகவில் சேருவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.

தினகரனுடன் இணைந்து இருக்கும் போது புகழேந்தி அதிமுக பற்றி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் கர்நாடக மாநில அதிமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அவர் இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவிக்கும் சூழ்நிலையில் பழைய கருத்து வேறுபாடுகள் மறந்து அதிமுகவினர் இவரை ஏற்று கொள்வார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுக! மரணஅடியை கொடுத்த வன்னியர்கள்

0

காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுக! மரணஅடியை கொடுத்த வன்னியர்கள்

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுகவில் உள்ள முக்கிய வன்னிய பிரமுகர்கள் தங்கள் பிரச்சாரம் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பலன் அளிக்கவில்லை என்று கலக்கத்தில் உள்ளனர்!

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வன்னியர் சங்க தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு அச்சமுதாய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்ந்தார் காடுவெட்டி குரு எனப்படும் ஜெ.குருநாதன்.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு நிகராக செல்வாக்குப் பெற்றிருந்தார் அவருடைய கம்பீரமான பேச்சு ஆளும் வர்க்கத்தையும் எதிர்வர்கத்தையும் கதிகலங்க வைக்கும் அளவில் இருக்கும், இதன் காரணமாகவே கலைஞர் ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார், அதன்பிறகு ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது வன்னியர் சங்கக் கலவரத்திற்கு ஜெ.குரு தான் காரணம் என்று அவர் மீது ஐந்து முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடுத்தடுத்து கைது செய்தது, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மேல்மட்ட செல்வாக்கின் காரணமாக வழக்கிலிருந்து காடுவெட்டி குருவை காப்பாற்றினார்கள்,

பாமகவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளார் காடுவெட்டி குரு, விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்த பிறகு வன்னிய இளைஞர்கள் பெருமளவில் சேர்ந்தனர், ஒரு கட்டத்தில் பாமகவை நிலைகுலையச் செய்தது, இதனை தனது கம்பீரமான பேச்சுக்கள் மற்றும் சாதி உணர்வுகளை தூண்டி மீண்டும் பாமகவிடம் சேர வைத்ததில் பெரும் பங்கு வகித்தார்,

காடுவெட்டி குரு ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக செயல்பட்டார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பூட்டிய வரலாறும் அவருக்கு உண்டு, குருவை கொலை செய்ய பல முயற்சிகள் நடந்தவண்ணம் இருந்தன, இதிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குருவின் தளபதி என்று சொல்லப்படும் வைத்தி அவர்களும் காப்பாற்றி வந்தனர்,

காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து அரசியல் செய்த திமுக! மரணஅடியை கொடுத்த வன்னியர்கள்

தனது மரணம் தான் ஐயாவிடம் இருந்து என்னை பிரிக்கும் என்று ஒவ்வொரு மேடையிலும் உணர்ச்சிமிக்க பேசுவார், இப்படிப்பட்ட சூழ்நிலையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார், இவர் மரணத்திற்குப் பிறகு காடுவெட்டி குரு அவரின் மகன் கனலரசனை வைத்து அரசியல் செய்ய முயன்றனர், இது வன்னிய இளைஞர்களை கடும் கோபத்தில் உள்ளாக்கியது அவர் தவறான பாதையில் செல்வதாக குருவின் உறவினர்களே இராமதாசிடம் புகார் அளித்தனர், காலப்போக்கில் மருத்துவர் ராமதாசிடம் தஞ்சமடைந்தார் குருவின் மகன் கனலரசன்,

குருவின் தங்கை ராமதாஸுக்கு எதிராக கடுமையாக பேச வைத்து அழகு பார்த்தனர், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை துவங்கி வன்னியர் சங்கத்திற்கு எதிராக செயல்படத் துவங்கினர் அவருடைய நெருங்கிய உறவினரான வி.ஜி.கே மணி, இதற்கு பின்னால் நின்று செயல்படுவது திமுகதான் என்று பாமகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்,

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் முழுக்க முழுக்க வன்னியர்களின் பலமிக்க தொகுதி என்பதால் காடுவெட்டி குருவின் மரணத்தை வைத்து திமுகவில் உள்ள வன்னிய பிரமுகர்கள் பிரச்சாரம் செய்தனர், ஜெகத்ரட்சகன் காடுவெட்டி குரு இறந்தபோது அவரது உடலை எடுத்துச் செல்ல 3 லட்சம் கொடுத்து உதவியதாக தெரிவித்தார், ஆனால் அவர் காடுவெட்டி குருவின் இறுதி சடங்குக்கு கூட கலந்து கொள்ளவில்லை. துரைமுருகன்,எம்ஆர்கே பன்னீர்செல்வம் போன்றவர்கள் காடுவெட்டி குருவின் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும் அவர்கள் குடும்பத்தை ராமதாஸ் கைவிட்டுவிட்டார் என்று தெரிவித்த வண்ணம் இருந்தனர்,

இதற்கு ஒருபடி மேல் தான் இருந்தவரை வேல்முருகனை கதற வைத்தவர் காடுவெட்டி குரு, அவர் இறந்த பிறகு அவர் புகழ் பாடி வன்னியர் சமுதாய இளைஞர்களை தன் பக்கம் இழுக்க முயன்று வருகிறார், இன்றளவும் பலனளிக்கவில்லை, பாமக நிறுவனர் ராமதாஸ் தான் வன்னியர் சமுதாயத்திற்கு தலைவர் என்பது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி மூலம் தெளிவாக தெரிகிறது, நானும் வன்னியர் தான் என்று சொல்லிக்கொள்ளும் வன்னிய தலைவர்கள் திருமாவளவனுடன் கைகோர்த்து செயல்படுவதை வன்னியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை,

வன்னியர் சமுதாய பெண்களை குறிவைக்கும் ஒரு கும்பலுக்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள் என்று பாமகவினர் புரியவைத்தனர், தான் உயிரோடு இருக்கும் வரை திருமாவளவனை கடுமையாக எதிர்த்து வந்தவர் மாவீரன் காடுவெட்டி குரு,

ஆனால் அவரை வைத்துக்கொண்டே காடுவெட்டி குருவின் குடும்பத்தைப் பற்றியும் அவருடைய மரணத்தைப் பற்றியும் பேசி அரசியல் செய்த வன்னியர் பிரமுகர்களுக்கு இடைத்தேர்தல் முடிவுகள் இவர்களுக்கு மரண பயத்தை உண்டாக்கி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை!

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

0

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது.

வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் அதை விட திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய தொகுதி என்ற பெருமையும் இந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு உண்டு.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த காலங்களில் திமுக தலைமை இந்த தொகுதியில் குறிப்பிட்ட இந்த வன்னியர் சமுதாய நிர்வாகிகளை புறக்கணித்து விட்டு பொன்முடி சார்ந்துள்ள உடையார் சமுதாய நிர்வாகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது என்பதையும் அனைவரும் அறிவர். இந்த இடைத்தேர்தலில் திமுக வின் இந்த வன்னியர் புறக்கணிப்பு ஆளும் அதிமுகவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்த நிலையில் அதை முறியடிக்க இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தருவதாக திமுக தரப்பு வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் வன்னியர் மக்களை கவர திமுக தரப்பு அறிவித்த வாக்குறுதியை அவர்களுக்கு சோதனையாக அமைந்துள்ளது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கருத்து உறுதி படுத்துகிறது. வன்னிய மக்களின் வாக்குகளை கவர திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த இந்த வாக்குறுதியை வன்னியர் சங்க மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்த்தாலும் கூட பரவாயில்லை.ஆனால் தங்களுடன் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் எதிர்த்து விமர்சனம் செய்துள்ளது அவர்களின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விசிக நிர்வாகி வன்னியரசு வன்னியர்களுக்கு திமுக வழங்கிய உள் இட ஒதுக்கீடு வாக்குறுதியை மற்ற சமுதாய மக்கள் ஏற்று கொள்ள வில்லை என்று பதிவிட்டுள்ளார்.இவருடைய மனநிலை இப்படி இருக்கும் நிலையில் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் அவர்களின் வாக்குகளை முழுமையாக பெற்று கொடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு மனதோடு செயல்பட்டதாக இல்லை ஏதாவது உள்ளடி வேலையில் ஈடுபட்டதாக என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.