Home Blog Page 5931

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

0

தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் யாருக்கான முதலீட்டுக்காக? திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப் பயணம் செல்வது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகம் வெளிநாட்டு முதலீடுகளை கவர அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி சுற்றுப் பயணம் செல்லும் முதல்வர், செப்டம்பர் 7 ஆம் தேதி சுற்றுபயனத்தை முடித்து கொண்டு தமிழகம் திரும்புகிறார். இந்த சுற்று பயணத்தின் போது வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழகத்தை சேர்ந்த  தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளார். இந்த நிலையில் முதல்வரின் இந்த சுற்றுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் நேற்று (ஆகஸ்ட் 23) நடந்த திருமண நிகழ்வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் திமுக கடந்த 8 வருடங்களாகவே ஆட்சியில் இல்லை. அதிமுக தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது இல்லையா என்பது வேறு விஷயம். அதிமுக ஆட்சி நடப்பதற்கு காரணமே திமுக தான். நாம் தாம் ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் பேசி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றக் கூடிய கட்சியாக திமுக உள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “இந்த லட்சணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளிநாடு செல்கிறாராம். பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாக சென்று வந்து கொண்டிருக்கிறார். அதேபோல எடப்பாடி பழனிசாமியும் தற்போது ஆரம்பித்துவிட்டார். வெளிநாடு செல்வதை நான் குறைசொல்லவில்லை. முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாடு செல்கிறாராம். முதலீடுகள் நாட்டுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ராகுல் காந்தி நாளை காஷ்மீர் பயணம் பதற்றம்!

0

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் தற்போது இருக்கும் நிலைமையை ஆராய வரும்படி காஷ்மீர் ஆளுனர் சத்ய பால் மாலிக் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார்!

இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் அடங்கிய சிறப்பு குழு நாளை காஷ்மீர் செல்கிறது,.அங்கு வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது. பிறகு காஷ்மீரில் உள்ள மக்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்யவும் உள்ளது.

இக்குழுவில் காங்கிரஸ் முன்னால் தலைவர் திரு.ராகுல்காந்தி, திமுக சார்பில் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் எச்.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சீத்தாராமன் யெச்சூரி போன்ற தலைவர்கள் குழுவாக செல்ல உள்ளனர்.

இதனை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பாதுகாப்பு உயர்த்தப்பட்டுள்ளது!

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

0

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெரியாரிய கொள்கை உடையோர் பார்ப்பனியத்தை எதிர்க்கும் விதமாக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதில் ஒரு பகுதியாக பிராமணர்கள் பூணூல் அணியும் நாளான ஆவணி அவிட்டத்தன்று தி.க.வினர் வயதான பிராமணர் ஒருவரை வழிமறித்து அவரின் பூணூலை அறுத்தெறிந்த நிகழ்வுகளும் கடந்த காலங்களில் நடந்தேறியுள்ளது.

ஆனால் இந்த முறை பிராமணர்கள் ஒன்று கூடி தி.க.வினரைப் பார்த்து அறைகூவல் விடுத்துள்ளனர், அதன் காரணமாவது என்னவென்றால்! இத்தனை வருடங்களாக பூணூல் என்பது பிராமணர்கள் அணியும் ஒரு விடயம் என்றே நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பூணூல் என்பது பிராமணர்களுக்கானது மட்டுமல்ல, சத்ரியர்களுடைய பாரம்பரிய வழக்கம் என்று கூறி தமிழ்நாட்டின் சத்ரியர்களான வன்னிய குல சத்ரியர்களும் தற்போது அணிந்து வருகின்றனர்.

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

ஆம், வியப்பான விடயம் தான். இதுபற்றி வன்னியகுல சத்ரிய அமைப்புகளிடம் கேட்ட போது அவர்கள் கூறிய விசயமானது, பூணூல் என்பது ஒவ்வொரு சத்ரியனும் குருகுலக் கல்விக்கு செல்லும் போது தனது குருவால் அணிவிக்கப்பெறும் நூல் தான் பூணூல். இது ஒவ்வொரு சத்ரியனும் தனக்கான கடமைகளை நினைவுபடுத்திக்கொள்ள அடையாளமாக அணிவிக்கப்படுகிறது.

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

தமிழகத்தின் சத்ரியர்களான நாங்கள் மன்னராட்சி காலம் தொட்டு, ஆங்கிலேயர் ஆட்சிகாலம் வரை பூணூல் அணிந்திருந்தோம், ஆனால் சுதந்திரத்திற்குப் பின் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின் நிலங்களை இழந்து உழுகுடிகளாக மாறிப்போனதால் இந்த பூணூல் அணியும் பாரம்பரியத்தை கைவிட்டுவிட்டோம். ஆகையால் இழந்துவிட்ட எங்கள் பாரம்பரியத்தை மீட்கும் விதமாக மீண்டும் பூணூல் அணியும் பழக்கத்தை கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து விழாவாக நடத்தி வருகிறோம்.

கடந்த இரண்டு வருடங்களாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த பூணூல் விழா இந்த வருடம் சிதம்பரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தொண்டி, மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஆறு இடங்களில் நடந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15 அன்று ஆவணி அவிட்டத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வன்னிய குல ஷத்ரியர்கள்! அதிர்ச்சியில் தி.க.வினர்

இதனாலேயே பிராமணர்கள், தங்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் தி.க.வினரிடமிருந்து தங்களைக் காக்க சத்ரியர்களான வன்னியகுல சத்ரியர்கள் வருவார்கள், முடிந்தால் அவர்களின் பூணூலை அறுத்துப்பாருங்கள் என்று அறைகூவல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அதற்கு ஏற்ப இதையெல்லாம் உறுதி செய்யும் வகையில் இந்த வருடம் திராவிடர் கழகம் போன்ற பெரியாரிய இயக்கங்கள் பூணூல் அறுக்கும் நிகழ்வுகளில் எதுவும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னிய குல ஷத்ரியர்கள் பூணூல் அணியும் விழா,வன்னியர்கள் பூணூல் அணியும் விழா,

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

0

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் இன்று டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஆர்.பாலு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்களோ,பொது மக்களோ என யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரிக்கவும் அதன் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்யவும் கடந்த இரண்டு வாரம் முன் பாஜக தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்தியில் இரண்டு அவைகளிலும் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இந்திய அரசியல் வரலாற்றில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த இந்த தைரியமான முடிவை பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் ஆரம்பத்திலிருந்தே இதை சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் இதுவரை காஷ்மீர் விவகாரத்தில் எந்த கட்சியும் துணிந்து போராட்டத்தில் இறங்கவில்லை. ஆனால் அதை முடியடிக்கும் வகையில் திமுக இந்த போராட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

தொடக்கத்தில் இருந்தே இந்த மசோதாவை இரண்டு அவையிலும் திமுகவும்,அதன் தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளும் மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தன. தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக போன்ற கட்சிகளும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்தது.

இந்த விவகாரத்தில் தொடர்ந்து திமுகவும்,அதன் கூட்டணி கட்சிகளும் மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் இன்று டெல்லியில் திமுக எம்பிக்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் என எல்லோரும் சேர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் களமிறங்கும் திமுக

இன்று நடைபெறும் இந்த போராட்டத்தில் ஜம்மு-காஷ்மீரில் வீட்டு சிறையில் இருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், அங்கு உடனே ஒடுக்குமுறை சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அங்கு இணைய இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்த உள்ளன.

டெல்லியில் நடைபெறவுள்ள இந்த போராட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட் , பகுஜன் சமாஜ் ஆகிய கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்தவுள்ள இந்த போராட்டம் காரணமாக டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் அங்கு இன்று போராட்டம் செய்யும் இவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

0

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை தயார்படுத்தி வருகிறது.

கடந்த கால தமிழக அரசியலில் பாமக தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியது என்பது அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். அதிமுக,திமுக என எந்த கட்சியாக இருந்தாலும் பாமகவுடன் கூட்டணி வைக்க போட்டி போட்டு முயற்சி செய்வார்கள். தமிழகத்தில் அந்த அளவிற்கு பாமகவும் செல்வாக்குடன் இருந்தது. போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு பாமகவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது.

பாமகவுடன் கூட்டணி அமைக்க முடியாத விரக்தியில் எதிர்கட்சியாக இருப்பவர்கள் பாமகவை மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள் என்று விமர்சனம் செய்தது மக்கள் மத்தியில் நன்றாக பதிந்து விட்டது. இது மட்டுமல்லாமல் தொகுதி மறு சீரமைப்பில் பாமக வெற்றி பெரும் வாய்ப்புள்ள பல்வேறு தொகுதிகளில் அவர்களின் வாக்குகள் பிரிந்து விட்டதும் முக்கிய காரணமாக பார்க்கபடுகிறது. அதன் பிறகு பாமக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அக்கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை எதிர்கொண்டது. மாற்றம் முன்னேற்றம் என அவர்கள் நடத்திய ஹைடெக் பிரச்சாரம் படித்தவர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.அன்புமணி ராமதாஸ் மீது படித்தவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகியது. இது அப்போதைய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. பிரச்சாரத்தில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை பாமக தான் தீர்மானித்தது. 

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்களுக்குக் குறைவாகவே உள்ள நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலுள்ள பாமக 2021 இல் நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அதிரடி வியூகத்துடன் களமிறங்க ஆரம்பித்து விட்டது பாமக. தற்போதுள்ள அதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல் வரை தொடரும் என ஏற்கனவே அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ள நிலையில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆகவே வேண்டும் என தீர்மானித்து வியூகம் வகுத்துள்ளதாக தெரிகிறது.

அதாவது இதற்காக வகுத்துள்ள இந்த வியூகத்தின் படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் பாமகவின் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் வகையில் பாமகவினருக்கு புதிய உத்தரவு சென்றிருக்கிறது.  இந்த அமைப்பிற்கு அன்புமணியின் முப்படைகள் செயல் திட்டம் எனப் பெயரிட்டிருக்கிறார்கள். செயல்திட்டத்தின் முக்கிய நோக்கம் வட மாவட்டங்களில் உள்ள 80 சட்டமன்றத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு மருத்துவர் ராமதாஸ் கூறும் செயல் திட்டத்தை நிறைவேற்றுவது, அதில் குறைந்தது  60 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இந்த வியூகத்தின் நோக்கம் என்கிறார்கள். 

இது தொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த அறிக்கையில், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, அன்புமணி மக்கள் படை என்ற மூன்று பிரிவுகளை உருவாக்க வேண்டும். ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2,000 பேர் கொண்ட அன்புமணி தம்பிகளின் படையையும், 1,000 பேர் கொண்ட அன்புமணி தங்கைகளின் படையையும் உருவாக்க வேண்டும். இவர்கள் மூலம் 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படையை உருவாக்க வேண்டும்.

ஒரு சட்டமன்றத் தொகுதியில் ஏறத்தாழ 200 கிராமங்கள் இருக்கும். ஒரு கிராமத்தில் 10 அன்புமணி தம்பிகளையும் 5 அன்புமணி தங்கைகளையும் தேர்வு செய்ய வேண்டும். அப்படித் தேர்வு செய்தால் ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2000 அன்புமணி தம்பிகளும், 1000 அன்புமணி தங்கைகளும் கிடைப்பார்கள். இதில் ஒவ்வொரு அன்புமணி தம்பியும் தங்களது தெருவில் 50 வாக்காளர்களை அன்புமணி மக்கள் படையில் சேர்க்க வேண்டும். 2,000 பேரும் தலா 50 பேரைச் சேர்ந்தால் நமக்கு 1 லட்சம் பேர் கொண்ட அன்புமணி மக்கள் படை கிடைக்கும். அவர்கள் நமது வாக்கு வங்கியாக விளங்குவார்கள்.

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்

இவர்களுக்கு வயது 17-35க்குள் இருக்க வேண்டும் எனவும், குறைந்தபட்சம் 10ஆவது படித்திருக்க வேண்டும் எனவும், அன்புமணி தம்பியாக முக்கிய தகுதியாகக் கட்சியின் வெறிகொண்ட செயல் வீரராக இருக்க வேண்டும் என்றும், 50 வாக்காளர்களைக் கட்சியில் சேர்க்கும் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

பாமக செயல்படும் வேகத்தை பார்க்கும் பொது குறைந்தது கடந்த காலங்களில் பெற்ற அளவிற்காவது வரும் தேர்தலில் தொகுதிகளை பிடித்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

0

ப,சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கையில் நடந்த முறைகேடுகள் குறித்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவரும்,திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் தற்போதைய பெரம்பலூர் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதற்கு பிறகு இந்த மருத்துவ கல்லூரி தொடர்பாக எந்த ஒரு சிக்கலோ, பிரச்சனையோ இல்லாமல் வந்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தருக்கு தற்போது மாணவ மாணவியர் தற்கொலை என்ற ரூபத்தில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த ஆறு மாத காலமாகவே சென்னையை அடுத்துள்ள மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ள பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் கல்லூரி கட்டிடங்களில் இருந்து மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  

ஆரம்பத்தில் இது மாணவர்களின் சொந்த பிரச்சனை என்று நினைத்தவர்களுக்கு தொடர்ந்து நடந்த தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கல்வி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஒரே கல்லூரி நிர்வாகத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து எப்படி மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளதாக இறந்த மாணவர்களின் உறவினர்களும்,பெற்றோர்களும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். 

ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

இந்த நிலையில் தான் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்களின் இது போன்ற தற்கொலை மர்ம மரணம் விவகாரம் தொடர்பாக தமிழக சிபிசிஐடி சார்பாக எஸ்.பி. மல்லிகா தலைமையில் எஸ்.ஆர்.எம். குழும கல்லூரிகள் மற்றும் அதன் விடுதிகளில்களில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்துறை தலைவர் அதாவது DGP அலுவலகத்திலிருந்து பத்திரிக்கை செய்தியும்  ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி அனுப்பிரியா 21 வயதேயான இவர் கடந்த மே மாதம் 26-ம் தேதி கல்லூரியின் 10-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

அதேபோன்று 27-ம் தேதி அன்று ஜார்கண்டை சேர்ந்த மாணவன் அணித் சவுத்ரி என்பவரும் கல்லூரியின் பின்புறம் இறந்து கிடந்தார். 15-ம் தேதி ஜூலை மாதம் கன்னியாகுமரியைச் சேர்ந்த தர்ஷன் என்ற மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் தான் தமிழக சிபிசிஐடி காவல் துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர். 

இந்த விசாரணைக்கான உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி பிறப்பித்துள்ளார். திமுக கூட்டணி கட்சி தலைவரும்,எஸ்.ஆர்.எம். கல்வி குழுமங்களின் தலைவராகவும் உள்ள பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை சம்பந்தமான பிரச்சனையிலிருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்த நிலையில் இந்த கல்லுரி மாணவர்களின் தொடர் தற்கொலை விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி சோதனை அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவருக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளது.

ப.சிதம்பரத்தை தொடர்ந்து சிபிசிஐடியிடம் சிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவர்?

தற்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழக தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில்,அடுத்து திமுகவின் கூட்டணி கட்சியின் எம்.பியாக உள்ள பாரிவேந்தர் மாணவர்களின் தற்கொலை வழக்கில் சிக்குவாரோ? என்று பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் தமிழக காவல் துறை அதிகாரிகள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

0

காஷ்மீரை போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிக்க வேண்டுமா! சீமானின் கருத்து என்ன?

காஷ்மீரை பிரித்தது போல் தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் இது ஒரு தைரியமான முடிவு என்று பெரும்பாலான மக்கள் இந்த முடிவை வரவேற்கிறார்கள், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த மாநில பிரிவினைக்கு தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதற்காக டெல்லியில் கண்டன போராட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாண்டது மிகவும் துணிச்சலானது என்றும் பாராட்டியுள்ளனர். அது போல் நடிகர் கமலஹாசன் இந்த காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் கண்டன கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தை இந்த மோடி அரசு சேர, சோழ, பாண்டிய நாடு என 3-ஆக பிரித்தாலும் அதை அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கும் என்று அதிமுக அரசை விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கூறுகையில் காஷ்மீரை போல் தமிழகத்தையும் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் வடதமிழகம் தென் தமிழகம் என இரண்டாக பிரித்துவிடுவார்கள். புதுவை போல் சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது என்றும் சீமான் கூறியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

0

காஷ்மீர் பிரச்சனையில் மோடியைக் கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்த திமுக அறிவிப்பு

காஷ்மீர் பிரச்சனையை எதிர்த்து டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் 22ம் தேதி திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் ஆர்பாட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீரில் தலைவர்களை கைது செய்து, அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தியுள்ளதாகவும், தலைவர்களை கைது செய்து அவர்களின் அடிப்படை உரிமையை பறித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது.

“அமைதி திரும்புகிறது” என்று, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்தி பரப்பிக் கொண்டே, கடந்த 5.8.2019 முதல் காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரையும் கைது செய்து – தொலைத் தொடர்புகளைத் துண்டித்து – காஷ்மீரில் “அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமையை” செயல்படுத்திக் கொண்டிருக்கும் பாஜக அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

காஷ்மீர் அரசியல் கட்சித் தலைவர்களை 14 நாட்களுக்கு மேலாக கைது செய்து – வீட்டுக் காவலில் வைத்து – அவர்களின் பேச்சுரிமை, அடிப்படை உரிமை ஆகிய அனைத்தையும் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாத சூழலில், காஷ்மீர் மாநில ஆளுநரின் பரிந்துரையை ஏற்று சிறப்பு அந்தஸ்த்தை இரத்து செய்துள்ளதோடு, அடக்குமுறை, ஊரடங்கு உத்தரவு என காஷ்மீரை, இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்திவிட்டு, ‘காஷ்மீரில் சாதித்துவிட்டோம்’ என கூறிவருவது ஒருவகை அரசியலே!

ஒரு தனிப்பட்ட கட்சியின் கொள்கையை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றத் துடித்து – இப்போது காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது பாஜக அரசு என்பதைப் பார்க்கும் போது – இவர்களுக்கு ஜனநாயகத்திலும் நம்பிக்கையில்லை. இந்தியாவைக் கட்டிக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திலும் நம்பிக்கையில்லை என்பது தெளிவாகிறது.

தேசத் தந்தை மகாத்மாக காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்ற அரும்பெரும் தலைவர்கள் பிரிட்டிஷாரிடம் போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் சர்வாதிகார நடவடிக்கைகளை மூலம் பிடுங்கிக் கொள்ள மத்தியில் உள்ள பாஜக அரசு முயற்சி செய்வதை தடுத்தே தீர வேண்டியது ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel1
DMK Leader MK Stalin Announced Protest in Delhi-News4 Tamil Online Tamil News Channel1

எனவே கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீரத்துத் தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரி வருகின்ற 22.8.2019 அன்று காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனநாயகத்தின் நம்பிக்கை கொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்

0

கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக பணம் கேட்டு வியாபாரியை தாக்கிய இந்து அமைப்பினர்! தேசிய அளவில் #BJPரவுடிசம் டிரெண்டிங்

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தராத வியாபாரியை தாக்கிய விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் மீது காவல் துறையினர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதனை கொண்டாடும் விதமாக இப்போதே விழா ஏற்பாடுகளில் பொதுமக்களும் இந்து அமைப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் சிவா என்பவர் மின்னணு சாதனங்கள் விற்பனை கடை வைத்துள்ளார்.

இவரது கடைக்கு சென்ற விஷ்வ ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள், கிருஷ்ணர் சிலை வைத்து கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாடுவதற்காக பணம் கேட்டுள்ளனர். கடை உரிமையாளர் சிவா 300 ரூபாய் கொடுத்த நிலையில், அதனை ஏற்க மறுத்த அந்த அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்டோர் அந்த கடையின் உரிமையாளர் சிவாவை தாக்கியுள்ளனர்.

மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் 5 பேர்களின் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து அமைப்பினரின் இந்த அராஜக செயலை கண்டித்து #BJPரவுடிசம் என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி ட்விட்டரில் பதிவிட்ட பதிவுகள் தேசிய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

0

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

தற்போது தமிழக மக்களிடம் அதிக விவாத பொருளாக இருப்பது பால் கொள்முதல் விலை மற்றும் ஆவின் பால் உயர்வு, பால் விலை உயர்வு நடைமுறைக்கு வந்து விட்டதால், தேனீர், ஐஸ்கிரீம் மற்றும் பால் சம்மந்தப்பட்ட அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயர‌ அதிகம் வாய்ப்பு உள்ளது!

இந்நிலையில் இந்த பால் விலை உயர்வை கண்டித்து பெரும்பாலான தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர், அதிலும் முக்கியமாக திமுக தலைவரும் தமிழக எதிர்கட்சி தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் பால் விலை உயர்வை கண்டித்து டிவிட்டரில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்!

மேலும் அவருடைய தங்கையான தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழியும் இந்த பால் விலையேற்றத்தை கண்டித்து தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்தார், இதற்கு பதிலளித்த முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பால் விலை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் ஆனால் இதை எதிர்த்து திமுக போராட்டம் நடத்தாமல் இருக்குமா என்று சட்டமன்றத்திலேயே அதுவும் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலேயே கலாய்த்தார்.

குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் மு.க.ஸ்டாலின்! ஓட்டுக்காக இப்படியுமா?

இது அவை குறிப்பிலும் இடம்பெற்றுள்ளது! திமுகவின் நிலைப்பாடும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தான் ஆனால் மு.க.ஸ்டாலின் கண்டித்து அறிக்கை விட்டது தமிழக மக்களை முட்டாள்கள் என்று நினைத்து கொண்டு விட்டு அறிக்கை விட்டாரா என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்த வண்ணம் இருக்கின்றனர்! இது தான் முன்னோர்கள் சொன்ன பழமொழியான ” குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதா” என்பதற்கான அர்த்தமோ?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்