BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்!

Photo of author

By Divya

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்!

Divya

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்!

அதிக டென்ஷன் ஆனால் இரத்த கொதிப்பு ஏற்படும். இதனால் உடலில் பல வித பாதிப்புகள் உண்டாகும். எனவே இரத்த கொதிப்பு நீங்க கீழே கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்யவும்.

தேவையான பொருட்கள்:-

1)செம்பருத்தி பூ
2)கொத்தமல்லி விதை
3)எலுமிச்சை சாறு
4)தேன்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டுக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

தண்ணீர் நிறம் மாறி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி கொள்ளவும். பிறகு அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்தால் இரத்த கொதிப்பு முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை
2)சீரகம்
3)மஞ்சள்
4)பூண்டு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரை, 1 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி ;குடித்தால் இரத்த கொதிப்பு முழுமையாக குணமாகும்.