தேமுதிக பாமக கூட்டணியை அடித்து தூக்கும் விஜய்.. இதில் நீல அணியுடன் மறைமுக டீலிங் வேற!! கதிகலங்கும் ஸ்டாலின்!!

Vijay beat the DMDK PMK alliance. Excited Stalin!!

TVK: 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் எந்த கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. அதிலும் திமுக மட்டும் தான் தனது பழைய கூட்டணியை அப்படியே வைத்துள்ளது. மேற்கொண்டு பாஜக பாமக அதிமுக என மாற்றுக் காட்சியினர் தற்போது வரை கூட்டணி குறித்து குழப்பத்தில் தான் உள்ளனர். இதில் அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் அது சட்டமன்ற தேர்தல் வரை தொடருமா என்று தெரியவில்லை. பாஜக கூட்டணி ஆட்சி … Read more

மருமகளுக்கு எதிராக மகள்.. முக்கிய பதவியில் அமரப்போகும் காந்திமதி!! அன்புமணிக்கு ராமதாஸ் வைக்கும் செக்!!

Daughter-in-law against daughter-in-law.. Gandhimati will sit in the important post!! Ramdas's check for Anbumani!!

PMK: பாமக கட்சியைக்குள் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் இருந்து வருகிறது. இதில் தலைமை பொறுப்பில் தற்போது ராமதாஸ் இருந்தாலும் அதனை அன்புமணி இருக்கவில்லை. மேற்கொண்டு ராமதாஸ் அன்புமணி இருவரும் தனி தனி நிர்வாகிகளை அமர்த்தியும் அதனை மற்றொருவர் நீக்கியும் வருகின்றனர். இதனால் கட்சியில் உள்ள பொறுப்புகளுக்கு யார் தான் நிர்வாகி என்ற குழப்பம் எழுந்துள்ளது. அதாவது ராமதாஸ் நிர்வகிக்கும் நிர்வாகி செயல்படுவாரா அல்லது அன்புமணி நியமனம் செய்யும் நிர்வாகி செயல்படுவாரா என்ற குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் … Read more

பிரகாஷ் ராஜ் விஜய் தேவரகொண்டா ராணா டக்குபதி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு!!

ED case against 29 celebrities including Prakash Raj Vijay Devarakonda Rana Daggupathi!!

ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு, சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விஜய் தேவராகொண்டா, ராணா டக்குபதி, பிரகாஷ் ராஜ், மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், ஸ்ரீமுகி உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை (ED) வழக்குப் பதிவு செய்துள்ளது. ஹைதராபாத் போலீசாரின் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியாக தெலங்கானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதன்மை குற்றப் பதிவேடு (FIR) அமைந்துள்ளது. சைபராபாத் காவல்துறை சார்பில் இது … Read more

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்! விஜய்யின் ராஜதந்திரம் 

Vijay ADMK DMK

அ.தி.மு.க.-வின் வாக்குகளை கவரவும் அதே நேரத்தில் தி.மு.க.-வின் எதிர்ப்பு வாக்குகளை அப்படியே முழுமையாக அள்ளிக் கொள்வது தான் விஜய்யின் ராஜதந்திரம் என்று அரசியல் விமர்சகர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியலில் சரியான ஆட்டத்தை ஆடி வருகிறார் என்றே பலரும் கணிக்கின்றனர். விஜய்க்கு கூட்டம்: சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறியதாவது: “ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூட்டம் ஈர்க்கக்கூடிய தலைவர் என்றால், அது விஜய் தான். … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் … Read more

ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

rain

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு விசாரணை நோட்டீஸ்!

Cuddalore train accident: Investigation notice issued to 13 people including gatekeeper and van driver!

செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பேரழிவான விபத்து தொடர்பாக 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை, திருச்சி ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. விபத்துக்குப் பின்னணி: செம்மங்குப்பம் பகுதியில், லெவல் கிராசிங் வழியாக பள்ளி வேன் கடந்து சென்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் நேரடியாக மோதி, மூன்று மாணவர்கள் – ஒரு மாணவியர் உட்பட – … Read more