சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு!! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி!!

சூடானில் இருந்து 247 பேர் மீட்பு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி! சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள சூழலில் அங்கு சிக்கி உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது. சூடானில் இருந்து மீட்கப்படும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் செலவில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அயலக தமிழர் நலவாழ்வுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். மும்பை, டெல்லியில் இருந்து … Read more

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த பொங்களுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை சக பயணிகள் அடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடும் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் அந்த வாலிபரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஜனா ஷ்விங்க் (20). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த … Read more

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, கொரோனா விதிகளை மீறி, மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேட்டை கண்டித்தும், மின் கட்டணம் மற்றும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும் போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் தற்போதைய அமைச்சர்  சிவசங்கருக்கு எதிராக அரியலூரில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி அமைச்சர் சிவசங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த … Read more

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி!! இருவர் கைது!

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர்கள் இருவர் கைது. மேலும் ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு சங்கமம் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. ஒன்பது பேரால் தொடங்கப்பட்ட இந்த நிதி நிறுவனம் திருச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இதில் நூற்றுக்கணக்கானோர் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இந்நிலையில் பணத்தை முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! 

ODI கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த பாபர் அசாம்!! பாகிஸ்தான் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரரான பாபர் அசம் ஓ.டி.ஐ கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். அதுவும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை இவர் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இன்று … Read more

மாணவிகளுக்கு பாலில் தொல்லை அளித்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனு வாபஸ்!!

மாணவிகளுக்கு பாலில் தொல்லை அளித்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஜாமீன் மனு வாபஸ்!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அடையாறு அனைத்து மகளிர் போலீசார், கல்லூரியின் நடன துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனை ஏப்ரல் 3ம் … Read more

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் வாகனம் திருட்டு!

சென்னை அசோக் நகர் 53வது தெரு பகுதியில் சூரியவம்சம், புதுவசந்தம், பூவே உனக்காக உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் விக்ரமன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வீட்டிற்கு வருகை தந்த அவர் மனைவியின் அக்கா மகள் அவர் வீட்டுக்கு வெளியே இருசக்கர ((Honda Activa – brown colour – TN09CD0252)) வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது அந்த வாகனம் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக சிசிடிவி … Read more

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு!!

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு!!

கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சினையில் திருவிழாக்களுக்கு 145 தடை உத்தரவு பிறப்பித்த RDO! தடையை மீறி சித்ரா பௌர்ணமி அன்னதானம் வழங்கிய பொதுமக்களையும், சாமி தரிசனம் செய்ய வந்த இந்து முன்னணியினரையும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் பரபரப்பான சூழல் நிலவியது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள காஞ்சனகிரி மலை கோவில் நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு பிரச்சனை எழுந்ததை தொடர்ந்து, திருவிழாக்களுக்கு தடை விதித்து 145 தடை உத்தரவு பிறப்பித்த … Read more

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!!

பசங்க திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் 2 கோடி ரூபாய் மோசடி!! பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது!! வணிக வளர்ச்சிக்காக பாண்டியராஜிடமிருந்து கடனாக பெற்று அவர் திருப்பித் தரவில்லை என்று புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இயக்குனர் பாண்டியராஜ் புகார் அளித்ததன் பேரில் காவல்துறை நடவடிக்கை. புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார். இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை … Read more