வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!

வாக்குறுதியை நிறைவேற்றால் விட்டால் பதவி எதற்கு கமல்ஹாசன் அதிரடி!

மக்கள் நீதி மையத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால், அவர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று கமல்ஹாசன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மதுரை போன்ற தென்மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். அதன்பிறகு இல்லத்தரசிகளுக்கு ஊதியம், ஒவ்வொரு வீட்டிற்கும் இன்டர்நெட், ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர்த்துவது, போன்ற பல … Read more

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

மீண்டும் கைது செய்யப்பட்ட ஹேமந்த்! காரணம் என்ன தெரியுமா?

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்றைய தினம் கைது செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக தெரிவித்து முன்னரே ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற மோசடி புகாரில் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஷா மனோகரன் சென்ற 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி காவல்துறையில் … Read more

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

சூறாவளியாய் சுழன்று அடிக்கும் எடப்பாடி அலை! எதிர்நீச்சல் போட்டு பார்க்கும் திமுக!

வரும் ஏப்ரல் ,அல்லது மே, மாதங்களில் தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று சொல்லப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மூழ்கி இருக்கின்றன. அந்த வகையிலே, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும், தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. அதிமுக சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிசம்பர் மாதம் 19ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து … Read more

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர்

Dr Ramadoss with Edappadi Palanisamy

வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரக் கூடாது! முட்டுக்கட்டை போடும் அதிமுகவின் முக்கிய நபர் தற்போது வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வேண்டும் என்று பல்வேறு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி கொண்டு வரும் பாமகவுக்கு இடஒதுக்கீடு தர கூடாது என்று அதிமுக நிர்வாகிகள் குழுவில் ஓ.பி.எஸ் பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது. 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீத தனி‌ இடஒதுக்கீடு தர வேண்டும் என்றும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும் மற்றும் வன்னியர்களும் தொடர்ந்து போராடி … Read more

உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!

உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி உள்ளதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி இரண்டு கட்சியினர் இடையே மட்டுமின்றி அனைத்து கட்சியினர் இடையே அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கும் ஒரு செய்தியாக மாறிப்போனது. இந்த நிலையிலே, அதிமுகவின் மூத்த தலைவரும் பெரிய அதிகாரம் படைத்த முன்னாள் சட்டசபையின் தலைவருமான பி .ஹெச் . பாண்டியனின் சிலை திறப்பு விழாவானது ஜனவரி மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தேறியது. அன்றைய தினம் காலை சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை … Read more

பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

பணப்பயிர் செய்யும் விவசாயி! முதல்வரை விமர்சித்த கே. என். நேரு!

அமித்ஷாவே வந்தாலும் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த கட்சியின் முதன்மைச் செயலாளர் கே என் நேரு தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டத்தில் எடமலைப்பட்டி புதூர் பகுதியில், அதிமுகவில் நிராகரிக்கின்றோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திமுகவின் முதன்மைச் செயலாளர் கே. என். நேரு தலைமையில் நடந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய அவர் அமைச்சர்களுக்கு எதிராக ஆதாரப்பூர்வமாக ஊழல் புகார்களை நாங்கள் தெரிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களோ ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் விமர்சனம் … Read more

அனைத்தையும் வியாபாரமாகவே பார்க்காதீர்கள்! கமலஹாசனுடன் மல்லுக்கட்டும் கங்கனா ரணாவத்!

அனைத்தையும் வியாபாரமாகவே பார்க்காதீர்கள்! கமலஹாசனுடன் மல்லுக்கட்டும் கங்கனா ரணாவத்!

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்ற கமல்ஹாசனின் வாக்குறுதிக்கு நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், சட்டசபைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். பிரச்சாரத்தின் போது அவர் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களுக்கு இடையே இல்லத்தரசிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம், வீடு தேடி வரும் அரசு சேவை, வீடுகளை மின்னணு வீடுகளாக மாற்றும் திட்டம் போன்ற ஏழு அம்ச திட்டங்களை … Read more

கடங்கார அதிமுக! தமிழக அரசை விமர்சித்த திமுக எம் .எல். ஏ! எதற்காக தெரியுமா?

கடங்கார அதிமுக! தமிழக அரசை விமர்சித்த திமுக எம் .எல். ஏ! எதற்காக தெரியுமா?

தமிழக அரசு கடன் வாங்கி பொங்கல் பரிசு விநியோகம் செய்வதாக எதிர்க்கட்சியான திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டி இருக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சேலத்தில் ஆரம்பித்த முதல் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்த நிலையிலே, அரசு கருவூலம் காலியாக இருக்கிறது எனவும், அதிமுக அரசு கடன் வாங்கி … Read more

இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

இவங்க சொல்றதை கேட்க மாட்டேங்கிறாங்க! கதறும் திமுக!

நீதிமன்ற உத்தரவை மீறி நியாயவிலை கடைகள் முன்பாக, அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக திமுக சார்பாக முறையிடப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.06 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசு தொகை தமிழக அரசு வழங்கி வருகின்றது. இதற்கிடையே பொங்கல் பரிசாக வழங்கப்படும் டோக்கன்களில் அதிமுகவின் தலைவர்களுடைய புகைப்படம் இடம்பெற்றிருப்பதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொங்கல் பரிசு தொகை டோக்கன்களில் … Read more

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

அவர்களை ஏன் காக்க வைக்கிறீர்கள்? டிடிவி தினகரன் முதல்வருக்கு வைத்த கோரிக்கை !

போக்குவரத்து துறையிலே, சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில், பணி ஓய்வு பெற்றவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திடவேண்டும் என முதல்வருக்கு டி.டி .வி.தினகரன் கோரிக்கை விடுத்திருக்கிறார் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தன்னுடைய வலைபதிவில் போக்குவரத்து துறையில் சென்ற 2020ஆம் வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பணிஓய்வு அடைந்தவர்களுக்கான பலன்களை அளிப்பதற்கு உரிய உத்தரவை தமிழக அரசு … Read more