மூச்சு பிடிப்பு மற்றும் முதுகு குத்தல்.. சில நிமிடங்களில் சரியாக இவ்வாறு செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு அசந்துடுவீங்க!!

0
142
#image_title

மூச்சு பிடிப்பு மற்றும் முதுகு குத்தல்.. சில நிமிடங்களில் சரியாக இவ்வாறு செய்யுங்கள்!! கிடைக்கும் பலனைக் கண்டு அசந்துடுவீங்க!!

மூச்சு பிடிப்பு என்பது சாதாரண பாதிப்பு அல்ல.ஒருவருக்கு மூச்சு பிடிப்பு ஏற்பட்டு விட்டால் அவரால் எளிதில் மூச்சு விட முடியாது.மூச்சு விடும் பொழுது எல்லாம் ஒரு வித வலி ஏற்படும்.முதுகை அழுத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணம் அதிகப்டியான எடை தூக்குதல்,மார்பு எலும்புகளின் மேல் உள்ள தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் இந்த மூச்சு பிடிப்பு பாதிப்பு ஏற்படும்.

அதேபோல் முதுகு வலி பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி முதுகு குத்துவது போன்ற உணர்வு ஏற்படும்.இதனை ஆரம்ப நிலையில் கண்டறிவது அவசியம்.அதுவும் இயற்கை வழியில் தீர்வு காண முயற்சித்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பெரு நெல்லி – 1

*நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1 பெரு நெல்லி எடுத்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் அதை ஒரு காய்கறி துருவல் கொண்டு நன்கு துருவிக் கொள்ளவும்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் துருவி வைத்துள்ள பெரு நெல்லிக்காயை சேர்த்து 2 முதல் 3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.அதன் பின் அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அதில் 1 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்த்து பருகவும்.மூச்சு பிடிப்பு,முதுகு குத்தல்,வாயு பிடிப்பு இருப்பவர்கள் இதை உடனடியாக செய்து பருகினால் அந்த பாதிப்பு அனைத்தும் அரை மணி நேரத்தில் சரியாகிவிடும்.

மற்றொரு அருப்புத முறை(தீர்வு 2):-

தேவையான பொருட்கள்:-

*1 ரூபாய் நாணயம் – 1

*வெள்ளை காட்டன் துணி -1

*தீப எண்ணெய் – சிறிதளவு

*கண்ணடி டம்ளர் – 1

செய்முறை விளக்கம்:-

முதலில் வெள்ளை ஒரு காட்டன் துணி எடுத்து அதை சிறு பீஸாக கட் செய்து கொள்ளவும்.

அடுத்து அதில் 1 ரூபாய் நாணயத்தை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.சுருட்டிய இடத்தில் ஒரு காட்டன் நூல் கொண்டு கட்டிக் கொள்ளவும்.இவ்வாறு செய்யும் பொழுது காட்டன் விளக்கு திரி போல் வரும்.

அடுத்து அதன் மேல் தீப எண்ணெய் தேவையான அளவு தடவிக் கொள்ளவும்.பிறகு மூச்சு பிடிப்பு இருக்கும் நபரை குப்புற படுக்க வைக்கவும்.அடுத்து அவரின் முதுகில் வலி இருக்கும் இடத்தில் தாயார் செய்து வைத்துள்ள காட்டன் விளக்கு திரியை வைக்கவும்.

அதன் பின் அந்த திரியை பற்றவைத்து 1 நிமிடம் வரை ஏறிய விடவும்.அதாவது முதுகு சூடு பொறுக்கும் வரை ஏறிய விட்டு ஒரு கண்ணாடி டம்ளர் கொண்டு அந்த விளக்கை மூடவும்.

இவ்வாறு செய்யும் பொழுது முதுகில் உள்ள சதையை கண்ணாடி டம்ளர் இழுக்கத் தொடங்கும்.இவ்வாறு செய்யும் பொழுது மூச்சு பிடிப்பு,முதுகு குத்துதல் போன்றவை உடனடியாக சரியாகத் தொடங்கும்.பின்னர் 10 அல்லது 15 நிமிடம் கழித்து அந்த டம்ளரை முதுகில் இருந்து எடுத்து விடவும்.இவை மூச்சு பிடிப்புக்கு 100 சதவீதம் தீர்வாக இருக்கிறது.