அந்தமான் நிக்கோபரையும் மிரட்டும் கொரோனா

0
135
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது. இந்த நிலையில்  அந்தமான் நிக்கோபார் தீவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அந்தமானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 223 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை அங்கு 2 ஆயிரத்து 823 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
Previous articleகுறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?
Next articleஜப்பானில் புயலால் மாயமான சரக்கு கப்பல்