ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

ஆம் ஆத்மியிலிருந்து விலகினால் முதல்வர் பதவி! ஆசை காட்டும் பாஜக மசியாத மனிஷ் சிசோடியா!

டெல்லியில் மதுபான கொள்கையை வெளியிட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கிறது. இது குறித்து மாநில துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் மூத்த தலைவருமான மனீஷ்சிசோடியாவிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர். சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறினால் முதலமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் இல்லாவிட்டால் இது போன்ற வழக்குகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்ததாக … Read more

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு!

The car flew on the road! AIADMK officials killed!

சாலையில் பறந்த கார்! அதிமுக பிரமுகர்கள் உயிரிழப்பு! சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் பாபு மற்றும் சுரேஷ் பாபு.இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் உள்ளது.அந்த வாகனங்கள் பழுதானது.அதனால் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து வந்தனர்.அதன் பிறகு வாகனத்தை சரி செய்யப்பட்டது.அதனையடுத்து அவரை அழைத்து சென்று ஊரில் விட்டுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர … Read more

முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!

முன்னேறிய மாநிலம் என்று சொல்லப்படும் தமிழகத்தில் இன்னும் தீண்டாமை இருப்பது வெட்கக்கேடானது! ஆளுநர் ஆர்.என். ரவி ஆவேசம்!

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 ஆம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி சேத்து பட்டில் இருக்கின்ற எஸ் ஆர் எஸ் சர்வோதயா பள்ளி மகளிர் விடுதி வளாகத்தில் நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியை கொண்டு வருவதிலேயே காந்தி கூடுதல் கவனம் செலுத்தினார். மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட ஹரிஜன சங்கத்தின் விழாவில் நாம் பங்கேற்றுள்ளோம். … Read more

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது? அமலியில் ஈடுபடுமா பாஜக?

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது? அமலியில் ஈடுபடுமா பாஜக?

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளில் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது ஆகவே இன்றும் நாளையும் சட்டசபையை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை 10 மணி அளவில் அவை தொடங்கியவுடன் வினா, விடை நேரம் நடைபெறுகிறது. இதனை எடுத்து இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்து பேச இருக்கிறார் இது குறித்து அனைத்து கட்சி … Read more

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்று நடைபெறும் இன்டர் போல் பொதுச் சபை கூட்டம்! பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இன்று நடைபெறும் இன்டர் போல் பொதுச் சபை கூட்டம்! பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கிறார்!

இன்டர் போல் எனப்படும் சர்வேச காவல் அமைப்பின் பொதுச் சபை கூட்டம் இன்று புது டெல்லியில் ஆரம்பமாகிறது அதனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார். சர்வதேச அளவில் காவல்துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டது இன்டர்போல் அமைப்பு ஐரோப்பிய நாடான பிரான்சின் லியோன் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் 195 நாடுகள் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைப்பின் பொதுச் சபை கூட்டம் டெல்லியில் இன்று ஆரம்பமாகி 21ஆம் தேதி … Read more

குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

குடியரசு தலைவர் மாளிகையின் நடைமுறைகளை மீறும் ஆளுநர்கள்!

ஒரு மாநில ஆளுநராக இருப்பவர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு முன்னர் குடியரசுத் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் சிறப்பு பிரிவு செயல்படுவதாகவும் சொல்லப்படுகிறது. நடைமுறைகளின் படி ஒரு மாநில ஆளுநர் தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செல்ல முடியும். ஆனால் பெரும்பாலான ஆளுநர்கள் இதனை பின்பற்றுவது இல்லை என்று சொல்லப்படுகிறது. சில ஆளுநர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அனுமதி கூட … Read more

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை பெற்றோர்கள் கோரிக்கை! பரிசீலனை செய்யுமா தமிழக அரசு?

இந்துக்களின் முக்கிய பணிகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தீபாவளி பண்டிகை விரைவில் வரவிருப்பதால் இதற்காக வெளியூரில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுவதற்கு தங்களை தயார் படுத்தி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட இருப்பதால் அன்று தினம் மட்டும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை வேலை நாளாக இருப்பதால் அந்த நாளில் பள்ளி … Read more

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

அண்ணாமலையின் புகாரால் தூக்கி அடிக்கப்பட்ட சிஎம்டிஏ மூத்த அதிகாரிகள்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட புகார் பட்டியலில் குறிப்பிடப்பட்ட மூத்த திட்ட அதிகாரி உள்ளிட்ட 8 அதிகாரிகளை இடமாற்றம் செய்து சிஎம்டிஏ அறிவித்துள்ளது. இது தொடர்பாக குறிப்பிடப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சாதகமாக சென்னை பெருநகர வளர்ச்சி குடும்பமான சிஎம்டிஏ செயல்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூன் மாதத்தில் புகார் வழங்கியிருந்தார். அதில் சிஎம்டிஏ வில் மூத்த திட்ட அதிகாரியாக இருக்கின்ற ருத்ரமூர்த்தி உள்ளிட்ட சிலரின் பெயரை அண்ணாமலை குறிப்பிட்டு சொல்லியிருந்தார். … Read more

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 

ADMK D. Jayakumar

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சூசகமாக கூறியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். அது வேற விசயம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026 ஆம் ஆண்டு … Read more

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!

Cell phone thieves trapped in the hand! The police gave the Dharma blow!

வசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்! காஞ்சிபுரம் மாவட்டம்  அடுத்த பாலுசெட்டிசத்திரம் புதுார் கிராமத்தில் வசித்து வருபவர் தினேஷ்பாபு இவர் சுங்குவார் சத்திரம் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த 13ம் தேதி மாலை ஆறு  மணியளவில் வேலைக்கு செல்வதற்காக கம்பெனி பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார். அப்போது சென்னை நோக்கி ஒரு இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. மேலும் அவர் தனியாக இருப்பதை கண்ட … Read more