தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

தம்பி என்ன மன்னிச்சிடுடா! ஐடி ஊழியரின் தற்கொலை! திடுக்கிடும் பின்னணி!

சென்னை முகப்பேரை சேர்ந்த ரோஷன் நாராயணன் என்ற ஏற்றி ஊழியர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்பத்தூரில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த ரோஷன் நாராயணன், நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருப்பதி சென்றிருந்ததால், ரோஷன் மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை அனைவரும் வீடு திரும்பியபோது, ரோஷன் தூக்கில் தொங்கிய … Read more

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

போடு பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள முதல் 5 தொகுதி வெளியானது…. டாப் லிஸ்ட் எது தெரியுமா….!

தமிழகம் முழுவதும் அதிமுக–பாஜக கூட்டணி தீவிரமாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், தற்போது பாஜக–அதிமுக கூட்டணியில் குறைந்தது 56 இடங்கள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் மத்திய உளவுத்துறை தீவிரமாக பாஜகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கணித்து இருக்கிறதாம். இதில் முதல் 5 இடங்கள் எவை என்றும், வேட்பாளர் யார் என்ற தகவல் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இதில் முதல் இடத்தில் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வேளச்சேரி பகுதி இடம்பிடித்துள்ளது. இந்த தொகுதி … Read more

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

மீண்டும் நீரில் மூழ்கிய சென்னை — திமுக அரசின் “மழைக்கு தயாரான நகரம்” வாக்குறுதி என்னாச்சு 

தென்மேற்கு பருவமழை தொடங்கியவுடன், சென்னை நகரத்தின் அரசு அமைப்புகளின் செயல்பாடு மீண்டும் சரிந்துவிட்டன என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளது. “மழைக்கு முழுமையாக தயாரானது” என்று தமிழ்நாடு அரசு பலமுறை அறிவித்திருந்தாலும், நகர் முழுவதும் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சேதமான சாலைகள், நின்று போன போக்குவரத்து, மற்றும் கடும் அவலத்தில் இருக்கும் பொதுமக்கள் — ₹4,000 கோடி செலவிட்டதாக கூறப்படும் புயல் நீர் வடிகால் திட்டங்கள் எவ்வளவு பலனளித்தன என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சமீபத்தில் “97% … Read more

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம்

Vibration in the DMK alliance.. Small parties looking for a new party!! Stalin in fear!!

கரூர் நெரிசல் விபத்து — திமுக ஆட்சியில் நிர்வாகத் தோல்விக்கான ஆதாரம் கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட பரிதாபகரமான நெரிசல் விபத்து, சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மிகக் கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது. சரியான திட்டமிடலுடன் நடைபெற வேண்டிய பொதுக் கூட்டம் அமைப்புச் சீர்கேடு மற்றும் நிர்வாக அலட்சியம் காரணமாக பெரும் துயரமாக மாறியது.இந்த நிகழ்வு மக்கள் உயிரைப் பறித்ததுடன், மாநில அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் கடுமையாகக் குலைத்துள்ளது. மரணமடைந்தோரின் குடும்பத்தினர் இன்னும் … Read more

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் தொடரும் மரணங்கள் – வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய திமுக

மனிதக் கழிவுகள் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மரணிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் இவ்வாறு நடக்கும் மரணங்களை தடுக்கும் வகையில் எந்திரங்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அக்கட்சிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளது. திமுக அரசின் வாக்குறுதிகள் கேள்விக்குறியாகின்றன தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, சமூகநீதியின் பெயரில் “மனிதக் … Read more

தூய்மை மிஷன்: ‘கொட்டுனா வலிக்குமா?’ பிரச்சாரம் – தமிழ்நாட்டில் 750 டன் கழிவு பிரிப்பு

thooimai mission 2025

தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் தொடங்கிய “தூய்மை மிஷன்”, மாநில அளவில் கழிவு மேலாண்மையை மாற்றியமைக்கும் ஒரு பெரிய முயற்சியாகும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் — மூலத்தில் கழிவு பிரிப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் நிலத்தின் மீது சார்பை குறைப்பது. இதன் மூலம் சுத்தமான மற்றும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்வாக அமைப்பு மாநில அளவிலான செயலாக்கக்குழுவை முதன்மைச் செயலாளர் தலைமையேற்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட … Read more

செங்கோட்டையனின் அடுத்த வியூகம் என்ன? ஒருங்கிணைப்பு பணியா? புதிய கட்சியா?

What announcement is Sengottaiyan going to make this time? Questions in the political circle!

எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை அ.தி.மு.க வில் பிரபலமானவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கிய செங்கோட்டையன், தற்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது; கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும், அந்த எண்ணத்தில் தான் அவ்வாறு கூறினேன், ஆனால் அதற்காக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவேன் என்பதை எதிர்பார்க்கவில்லை. முறைப்படி என்னுடைய கருத்துக்கு மாற்று கருத்து இருந்தால், அவர்கள் என்னிடம் … Read more

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை – திமுக இரட்டை முகம் குற்றச்சாட்டு

Police action against sanitation workers in Tamil Nadu – DMK double-faced accusation

தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் மற்றும் நிரந்தர பணிக்கான உரிமைக்காக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் மீது போலீசார் திடீர் நடவடிக்கை மேற்கொண்டது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசின் திடீர் நடவடிக்கை நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த எச்சரிக்கையும் இன்றி போலீசார் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களை கைது செய்தனர். பெண்கள், வயதானவர்கள், நீண்ட காலமாக தினக்கூலியாக பணியாற்றியவர்கள் என அனைவரும் பலவந்தமாக அங்கிருந்து அகற்றப்பட்டனர். சோர்வால் விழுந்து போன பணியாளர்கள், போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் … Read more

குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர் கைது

Northern State youth arrested for smuggling drugs including gutka

ஓமலூர் அருகே சொகுசு காரில் 330 கிலோ பான் குட்கா போன்ற போதை பொருட்களை கடத்திய வடமாநில இளைஞரை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்துவதாக சேலம் மாவட்ட எஸ்பிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சங்ககிரி காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போலீஸ் குழுவினர் ஆர்சி செட்டிப்பட்டி மற்றும் புளியம்பட்டி உள்ளிட்ட … Read more

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

Protest against sale of shares of Tamil Nadu rural banks

தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் அலுவலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். சேலம் தமிழ்நாடு கிராம வங்கிகளின் பங்குகளை ஒன்றிய அரசு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அதிகாரிகள் சங்கம் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கிராம வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கிராம வங்கிகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது … Read more