ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்!

You can get products from the ration shop through WhatsApp! Crazy scheme of the seller!

ரேஷன் கடையில் வாட்ஸ் அப் மூலம் பொருட்கள் பெற்று கொள்ளலாம்! விற்பனையாளரின் அசத்தல் திட்டம்! திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வார விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தரப்பட்டது.மேலும் 6 ஆயிரத்து 500 பேருக்கு கூட்டுறவுத்துறையில் வேலை உருவாக்கப்பட்டது. மேலும் இந்தியாவிலேயே  இரண்டாவதாக  கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டிடம் கட்டித்தரப்படும்.அதுமட்டுமின்றி புதிய ரேஷன் … Read more

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை

Controversial RSS meeting in private school! School Education Department Investigation

சர்ச்சைக்குரிய வகையில் தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கூட்டம்! பள்ளிக்கல்வித் துறை விசாரணை சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடைபெற இருப்பதாகக் கடந்த வாரத்தில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்கையில் அத்தகைய கூட்டம் எதுவும் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சார்பில் அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் சம்பந்தப்பட்ட பள்ளியில் திட்டமிட்டபடி ஆர்எஸ்எஸ் … Read more

வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

வருகின்ற சனி இந்த மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும்.. பள்ளிகல்விதுறை அறிவிப்பு..!

மழை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதனால், பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் கனமழை பொழிந்தது. இதனால், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைநாளாக இயங்கும் என தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், வருகின்ற சனிக்கிழமை (03.12.2022) அன்று பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்படுள்ளது. … Read more

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்.. உறவினர்கள் சாலைமறியல்.. காவல்துறையினர் விசாரணை..!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், கத்தாரி கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ். இவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும் ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. ராஜேஷின் தாயாருக்கும் ஸ்வேதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் ஸ்வேதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்வேதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த ஸ்வேதாவின் உறவினர்கள் அதிர்ச்சி … Read more

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்!

2 lakh fine to bank for stopping pension!! Consumer Grievances Commission warned!

ஓய்வூதியத்தை நிறுத்தியதால் வங்கிக்கு 2 லட்சம் அபராதம்!! எச்சரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்! பல வங்கிகளும் ஓய்வூதியதாரர்கள் வாங்கிய கடன் தீர்க்க அல்லது இதர காரணங்களுக்காக ஓய்வூதியத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர். இதுகுறித்து திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நான் என் நண்பர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டேன்.என் நண்பர் தற்பொழுது … Read more

மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! 

Attention students! Only in this district will school function as normal on December 3rd!

மாணவர்கள் கவனத்திற்கு! இந்த மாவட்டத்தில் மட்டும் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி வழக்கம் போல் செயல்படும்! கடந்த இரண்டு   ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் அனைத்தும் நடைபெற்றது.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மாணவர் அனைவரும் நேரடி வகுப்பிற்கு செல்கின்றனர். இதனை தொடர்ந்து கடந்த வாரம் முதல் கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது  அதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர் … Read more

அண்ணாமலையார் கோவிலில் சாமி சிலையின் நெற்றியில் பொருத்திய சிசிடி! திருவண்ணாமலையில் அரங்கேறிய விபரீதம்!

CCD installed on forehead of Sami idol in Annamalaiyar temple! Tragedy in Tiruvannamalai!

அண்ணாமலையார் கோவிலில் சாமி சிலையின் நெற்றியில் பொருத்திய சிசிடி! திருவண்ணாமலையில் அரங்கேறிய விபரீதம்! திருவண்ணாமலையில் தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து தீப திருவிழாவானது வரும் ஆறாம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலைக்கு அனைத்து ஊர்களிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவர். இதற்காக தமிழக அரசு ஆயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்கியுள்ளது. மேலும் மக்களின் பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கண்காணிப்புக்காக சிசிடிவி கேமரா அண்ணாமலையார் கோவிலில் … Read more

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை!  

In Mangalore, three people, mother, daughter and granddaughter, committed suicide by falling into a well!

மங்களூரில்  தாய் மகள் பேத்தி அடுத்தடுத்து மூன்று பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை! கடலூர் மாவட்டம் மங்களூர் அருகே மலையனூர் கிராமத்தை சேர்ந்த சிவகுருநாதன் இரண்டாவது மனைவி மிஸ்பா சாந்தி  (35) மற்றும் இவரது மகள் கெலன்கிரேஸ் (8) மற்றும் இவரது மாமியார் டெபரோல் கல்யாணி  (60) மூன்று பேரும் பெருமாள் கோயில் அருகே உள்ள வேல்முருகன் என்பவரது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலை சிறுபாக்கம் போலீசார் வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் … Read more

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி 

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு

மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் சுற்றுலா பயணிகளை கவர தொல்லியல் துறை புதிய முயற்சி மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு வளாகத்தில் உள்ள தேக்குமர தடுப்புகள் வண்ணம் தீட்டப்பட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை ஆரம்பிக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட ஏராளமான குடைவரை சிற்பங்கள் உள்ளன. இதில் பகீரத தபசு எனப் பொதுவாக அழைக்கப்படும் அர்ச்சுனன் தபசு பெரிய பாறை சிற்பம் மாமல்லபுரத்தில் தலசயனப் பெருமாள் … Read more

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்!

உற்பத்தியை பெருக்க தொழிலாளர்களை நசுக்குவதா? அசோக் லேலண்ட் ஊழியர்கள் போராட்டம்! ஓசூரில் இயங்கி வரும் பிரபல கனரக வாகன தொழிற்சாலையான அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர்கள் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொழிற்சாலை வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் அசோக் லேலண்ட் நிர்வாகம் உற்பத்தியை பெருக்கும் வகையில் கடந்த 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களுக்கு வேலை நாளாக அறிவித்தது. இதற்கு மாற்றாக டிசம்பர் 01 ஆம் தேதியான இன்று விடுமுறை தினமாக அறிவித்தது. இதற்கு … Read more