திமுக கூட்டணியில் இருந்து விலக துடிக்கும் காங்கிரஸ்? தவெகவுடன் கூட்டணியா?

Congress is trying to break away from the DMK alliance? Will it be an alliance with TVK

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்து மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக கட்சியையும் தமிழ் நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் பேசி வருகிறார் விஜய். கொள்கை எதிரி பாஜகவுடனும் மற்றும் அரசியல் எதிரி திமுகவுடனும் எப்போதும் கூட்டணி இல்லை என்ற தன்னுடைய இறுதி நிலைப்பாட்டை அண்மையில் சில நாட்களுக்கு … Read more

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

விசாரணை வட்டத்துக்குள் வராத நிகிதா! கூலாக அளித்த பேட்டி

  தற்போது வரை அஜித் குமார் மரணத்தில் சம்பந்தபட்ட நிகிதா விசாரணை வட்டத்திற்குள் வராத காரணத்தால் அவர் மீது மக்கள் மத்தியில் சந்தேகம் வலுத்துள்ளது. கடமைக்காவது கைது பண்ணி விசாரிச்சுட்டு அனுப்பி இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர். இந்நிலையில் அவர் கூலாக பேட்டி கொடுக்கும் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமார் என்பவர் நிகிதா என்கிற கல்லூரி பேராசிரியையின் … Read more

காவல்துறை அதிகாரியை ஒருமையில் தரக்குறைவாக பேசிய திமுக நிர்வாகி!! கோவையில் பதற்றம்!!

The DMK executive spoke poorly of the police officer!! Tension in Coimbatore!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். முதல் கட்டமாக கோவை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பிரச்சாரம் செய்துவருகிறார். பழனிசாமி பயணம் செய்யும் இடங்களில் எல்லாம் மக்களும் அவருக்கு ஆதரவு தந்து வரவேற்கின்றனர். கோவை வடக்கு டவுன்ஹால் அருகில் எடப்பாடி வருகையை ஒட்டி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகிலேயே ஏற்கனவே திமுக பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட திமுக நிர்வாகிகள் அதிமுக பேனரை … Read more

“அரசியல் டைம்பாஸ் செய்யாதீங்க; முழுமையாக இறங்குங்கள்!” – விஜய்யை தாக்கும்  நடிகை ரோஜா 

Actress Roja

திரையுலகத்தில் வெற்றி பெற்ற நடிகர்கள் அரசியலுக்கு வரும் போதும், அதை முழுமையான பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டுமென்றும், மக்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், தற்போதைய நடிகர்கள் போல் “டைம்பாஸ்” அரசியல் செய்யக்கூடாது என்றும் நடிகையும் ஆந்திரா அமைச்சருமான ரோஜா, நடிகர் விஜய்க்கு நேரடியாக அறிவுரை கூறியுள்ளார். இந்த கருத்துக்கள், நடிகர் விஜய் தனது புதிய அரசியல் கட்சியான “தமிழக வெற்றிக்கழகம்” எனும் பெயரில் அரசியலுக்கு களமிறங்கியிருக்கும் நேரத்தில் அவரை நேரிடையாக தாக்கும் வகையில் வெளியாகி, அரசியல் … Read more

4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகள் செல்ல தடை: உயர் நீதிமன்ற உத்தரவால் பயணிகள் அச்சம்!

Government buses banned from pass at 4 toll plazas: Passengers fear due to High Court order!

சென்னை: தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் செல்ல தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் தடை செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, கடந்த காலத்தில் செலுத்தப்பட வேண்டிய சுங்கக் கட்டணங்கள் நிலுவையில் இருந்ததை காரணமாகக் கொண்டு வந்தது. பெரிய அளவில் நிலுவைத் தொகை – பாதிக்கப்பட்ட சாலைகள் தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுமார் 70-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில், மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் வழக்கம்போல் கட்டணங்கள் … Read more

ராமதாஸ் Vs அன்புமணி –  மருமகளா? மகளா? ராமதாஸின் அடுத்த ஆட்டம்?

Ramadoss Vs Anbumani – Daughter-in-law? Daughter? Ramadoss' next Plan?

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) இப்போது நடந்து வரும் அதிகார மோதல் முடிவே இல்லாமல் தொடர்கதையாக மாறி பரபரப்பாகக் கிளம்பியுள்ளது. கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு, தற்போது செயல்பாடுகளாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. இரு தரப்பிலும் இதுவரை நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தற்போது வெடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. பாமக கட்சியை கட்டுப்படுத்த விரும்பும் அதிகார மையமாக, ஒருவர் … Read more

ஜெயலலிதா என்னை தம்பி என்று அழைத்தார் – திருமாவளவன் அதிமுகவுக்கு எச்சரிக்கை

You can listen to your father rather than what someone else says - Thirumavalavan's advice to Anbumani

சென்னை: “அம்மா எனக்கு தம்பி என்று வாழ்த்து தெரிவித்தவர். அதை அ.தி.மு.க. தலைவர்கள் தெரிந்திருப்பார்கள்; இப்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் அதை மறந்தது ஏன் என்று புரியவில்லை,” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீப நாட்களில் நடந்த அரசியல் விவகாரங்களைப் பற்றி விளக்கம் அளித்தார். “அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஜெயலலிதா எனக்கு ‘தம்பி வாழ்க’ என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். எனவே, எனது அரசியல் பயணம், … Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை

rain

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வானிலை மாறுபாடுகள் தொடரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை அல்லது மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, திருநெல்வேலி … Read more

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், வேன் ஓட்டுநர் உள்ளிட்ட 13 பேருக்கு விசாரணை நோட்டீஸ்!

Cuddalore train accident: Investigation notice issued to 13 people including gatekeeper and van driver!

செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த பேரழிவான விபத்து தொடர்பாக 13 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விசாரணை, திருச்சி ரயில்வே கோட்டத்தின் பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. விபத்துக்குப் பின்னணி: செம்மங்குப்பம் பகுதியில், லெவல் கிராசிங் வழியாக பள்ளி வேன் கடந்து சென்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் நேரடியாக மோதி, மூன்று மாணவர்கள் – ஒரு மாணவியர் உட்பட – … Read more

கண்துடைப்புக்காக கொடுப்பதை போல கொடுத்து ஏமாற்றிய அரசாங்கம்!  கொதித்தெழுந்த அஜித்குமாரின் சகோதரர்!

Sivaganga youth Ajith Kumar's death: Govt job, DMK govt gives 5 lakh compensation to brother

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்ற கோவில் காவலாளி 10 பவுன் நகை காணாமல் போன வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு காவல் துறையினரால் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆளும்கட்சியான் திமுகவையும், காவல்துறையினரையும் மக்களும், எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் கழுவி ஊற்ற ஆரம்பித்தனர். அஜித்குமார் குடும்பத்தை சேர்ந்தவர்களும் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் … Read more