ஆளும் கட்சியின் அழுத்தத்தால் ரிதன்யா வழக்கில் தாமதம்! பெற்றோர் கொந்தளிப்பு!

Due to the pressure of the ruling party, Rithanya's case is delayed! Parent turmoil!

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது சாவிற்கு தனது கணவர் கவின் குமார், மாமனார் மாமியார் தான் காரணம் என்று தன்னுடைய தந்தைக்கு வாட்சப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு விட்டு தற்கொலை செய்துகொண்டார். கல்யாண நேரத்தில் 500 பவுன் தங்கம் போடுவதாக சொல்லிவிட்டு 300 பவுன் தான் பெண் வீட்டார் போட்டுள்ளதால் அனுதினமும் கவின்குமாரின் குடும்பம் … Read more

மதுரை முருக பக்தர்கள் மாநாடு: 5 லட்சத்திற்கும் அதிகமாக திரண்ட பக்தர்கள்! தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரிக்க வாய்ப்பு

Madurai Muruga Devotees Conference: More than 5 Lakh Devotees! Chances of increasing support for BJP in Tamil Nadu

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கமாக செயல்படும் இந்துமுன்னனி மதுரையில் நடத்திய முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 5 லட்சம்க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்துகொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஆன்மிகக் கூட்டங்களிலொன்றாகும். மேலும், சட்டமன்றத் தேர்தல்கள் இன்னும் ஒரு ஆண்டுக்குள் நடக்க இருப்பதால், இந்த நிகழ்வின் பரபரப்பும் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன. பாஜக தலைவர்கள் பங்கேற்பு தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், முன்னாள் … Read more

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் – அண்ணாமலை காரணம்?

கட்சியில் முக்கியத்துவம் இல்லை! புலம்பிய நயினார் - அண்ணாமலை காரணம்?

தமிழகத்தின் பாஜக மாநில தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் பதவியில் உள்ளார். ஆனால் அதிமுகவின் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கிவிட்டு இவரை அமர்த்தியுள்ளனர். இதனால் பெரும்பான்மையான நிர்வாகிகளுக்கு இதில் திருப்தி இல்லை. நயினாருக்கு போஸ்டிங் கொடுக்கும்போதே பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தது. அதனை நாம் சமூக வலைத்தளம் வரை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் நயினாருக்கு கட்சிக்குள் மரியாதை கிடைப்பது சற்று சிரமம் தான். இது ரீதியான பேச்சுக்கள் கட்சிக்குள்ளேயே இருந்த நிலையில் தற்போது இதை அவரே வெளிப்படுத்தி … Read more

கணவர் விந்தணுவில் விஷம் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்!! பெண்ணிடம் அவதூறாக நடந்த போதகர்!!

கணவர் விந்தணுவில் விஷம் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்!! பெண்ணிடம் அவதூறாக நடந்த போதகர்!!

கன்னியாகுமரி காவல்துறையினர், திருமணமான ஒரு இளம் பெண்ணை தனது நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் பெந்தேகோஸ்தே தேவாலயப் போதகரை கைது செய்துள்ளனர். “உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் உங்கள் கணவருடனான உறவிலிருந்து உருவாகின்றன. என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியுடன் நீங்கள் தூங்கினால் நீங்கள் குணமடைவீர்கள்” என்று பாதிரியார் அவளிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், தக்கலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணைப் பற்றியது. சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். குணமடையும் … Read more

கொலையை நியாயப்படுத்துகிறாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சி தலைவர் சரமாரி கேள்வி!

CPM கட்சி மாநில தலைவர் சண்முகம்

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். 10 பவுன் தங்கநகைகளை கோவிலுக்கு வந்தபோது என்னுடைய காரில் இருந்து அஜித் திருடிவிட்டார் என்று பெண்மணி கொடுத்த புகாரின் அடிப்படையில் FIR கூட பதிவு செய்யாமல் அஜித்குமாரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் அவரை அடித்து உதைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல திமுக கூட்டணியில் உள்ள தொல்.திருமாவளவன், … Read more

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

போராடிய மக்களை மிரட்டிய எஸ்.பி! மக்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எடப்பாடியார்!

தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் … Read more

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ஹேப்பி நியூஸ்

Tamil Nadu Govt's Exciting Announcement for Entrepreneurs!! Don't miss it!!

அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு என தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் திருமண முன்பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த நிதி அறிக்கையில் இதை அறிவித்திருந்தார். அதன்படி, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தற்போது ரூ.5 லட்சம் வரை வட்டியுடன் திருமண கடனாக பெற வாய்ப்பு உள்ளது. முக்கிய அம்சங்கள்: இதுவரை பெண்களுக்கு ரூ.10,000, ஆண்களுக்கு … Read more

அஜித்குமார் வழக்கில் அதிரடி திருப்பம்? சிறுநீரிலிருந்து வெளிவந்த ரத்தம்! சம்பவத்தை நேரில் பார்த்தவர் பேட்டி

A dramatic turn in Ajithkumar's case? Blood from the urine! An eyewitness interview

தமிழ்நாட்டில் இப்போ திமுக ஆட்சிதான் நடக்குதா என்பது சந்தேகமாக உள்ளது. காரணம் கடந்த நான்கு வருடங்களாக திமுக ஆட்சியில் எத்தனையோ அவலங்களும், அட்டூழியங்களும் நடந்தபோதும் எந்த ஒரு ஊடகத்திலும், தொலைக்காட்சியிலும் அந்த விஷத்தை பற்றி பெரிதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் இன்று சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் சம்பவத்தில் அரசு மற்றும் காவல்துறை செய்த எல்லா தவறுகளையும் ஊடகங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டன. இந்த அஜித்குமார் வழக்கில் சம்மந்தப்பட்ட 5 காவல் துறை அதிகாரிகள் … Read more

பாமக எம்எல்ஏ அருள் கட்சியிலிருந்து நீக்கம் – அன்புமணியின் கடும் நடவடிக்கை! ராமதாஸ் பதிலடி என்ன?

MLA Arul removed from the party - Anbumani tough action! What was Ramdoss response?

பாமக கட்சியிலிருந்து சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் இன்று அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை பொறுப்பிலிருந்து நீக்குவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரை அருளின் நடவடிக்கைகள் கட்சி கட்டுப்பாட்டுக்கு எதிராக இருப்பதாக கூறி, பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததையடுத்து, அருளை அனைத்து கட்சிப் பொறுப்புகளிலும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து கூட நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் – அன்புமணி மோதல் தீவிரம் இது … Read more

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி கைது – தமிழக காவல்துறையின் பெரும் வெற்றி!

Terrorists Abubakar Siddiqui and Mohammed Ali arrested for 30 years - Tamil Nadu Police's big win!

1995 முதல் வெடிகுண்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் அபூபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி, ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு தொடர்புடையவர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறையின் உள் தகவல்களுடன் இணைந்து, அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளியான முகமது அலியை பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். … Read more