இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி!

now-this-is-the-punishment-shock-waiting-for-vao

இனி இதுதான் தண்டனை! விஏஓக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் வேமாண்டம்பாளையத்தை அடுத்த லாகம்பாளையம் அருகே உள்ள துலுக்கன் தோட்டம் செம்மம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் அரை ஏக்கர் நிலம் வைத்துள்ளார். அந்த நிலத்திற்கு  பட்டா மாறுதல் செய்ய லாகம்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரி அருண் பிரசாத் பட்டா மாறுதல் செய்ய ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என … Read more

சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்!

Citizens who protested by lying on the road! The price of alcohol should be reduced!

சாலையில் படுத்து போராட்டம் செய்த குடிமகள்! மதுபாட்டில்  விலையை குறைக்க வேண்டும்! ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே அந்தியூர் அத்தாணி செல்லும் பிரதான சாலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையின் நடுவே படுத்து கூச்சலிட்டு கொண்டிருந்தார்.அப்போது அந்த பகுதியில் உள்ளவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஏதேனும் வாகனம் இடித்துவிட்டு நிற்காமல் சென்று விட்டார்களா என்ற சந்தேகத்தில் அருகில் சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண் … Read more

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! 

Class 10 student rape! Talivasal private school teacher arrested!

பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! தலைவாசல் தனியார் பள்ளி ஆசிரியர் கைது! சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அந்த மாணவி வீடு திரும்பவில்லை.மாயமான அவரை அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதனையடுத்து மாணவி காணாமல் போனதாக தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் … Read more

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி!

waiting-strike-of-sanitation-workers-people-suffer

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்! மக்கள் அவதி! சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியில் நிரந்தரமாக 60 பேரும் ஒப்பந்த அடிப்படையில் 99 பேர் என தூய்மை பணியாளராக பணி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை கண்டித்து தூய்மை பணியாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக பணிக்கு செல்லாமல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக சின்னப்பார்க் முன்பு பணியை புறக்கணித்து காத்திருப்பு … Read more

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி!

A van and a truck collide head-on on a mountain road! The vehicle was smashed like a pancake!

மலைப் பாதையில் வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து! வாகனம் அப்பளம் போல் நொறுங்கிய காட்சி! ஈரோடு மாவட்டம் தாளவடியில் இருந்து சத்தியமங்கலம் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு காலை எட்டு மணியளவில் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த லாரியானது திம்பம் மலைப்பாதையில் 20 வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் அதே வளைவில் ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் வேன் … Read more

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார்

Veerappan Death Anniversary

மறைந்த வீரப்பனின் 18 ஆம் ஆண்டு நினைவு மேட்டூரில் அவரது மனைவி முத்துலட்சுமி அஞ்சலி செலுத்தினார் சேலம் மாவட்டம் மேட்டூரில் மறைந்த வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரது மனைவி முத்துலட்சுமி இன்று அஞ்சலி செலுத்தினார். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தமிழக அதிரடிப்படையினரால் கடந்த 2004 ஆம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து வீரப்பனின் உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆண்டு தோறும் வீரப்பன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் … Read more

மக்களே உஷார்! பேருந்து நிலையத்தில் திருடர்கள் அட்டகாசம்!

People beware! Atakasham thieves at the bus station!

மக்களே உஷார்! பேருந்து நிலையத்தில் திருடர்கள் அட்டகாசம்! சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு சேலம், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் செல்லும் 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினந்தோறும் வந்து செல்கின்றது.இந்நிலையில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள வசிஷ்ட நதி ஆற்றை கடந்து தான் அந்த பகுதி மக்கள் செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக கோட்டை, வடக்கு காடு, முல்லைவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான பாலம் நீரில் … Read more

ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி!

Sensation in Erode! Car and two-wheeler collide head-on, woman dies!

ஈரோட்டில் பரபரப்பு! கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து பெண் பலி! ஈரோடு மாவட்டம் பவானி பி.மேட்டுபாளையம் ,திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி.இவருடைய மனைவி ஈஸ்வரி.இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பெருந்துறையில் உள்ள அவருடைய உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தார்.அதன் பிறகு அவர் வீடு திரும்பி கொண்டிருந்தார்.இவர் பெத்தாம்பாளையம் ரோடு பிரிவு பைபாஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் அதிவேகத்தில் கார் ஓன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரானது … Read more

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!

Body recovery of drowned youth near Salem! Flooding in Sarabanga River!

சேலம் அருகே நீரில் மூழ்கிய இளைஞர்களின் உடல் மீட்பு! சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு! கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகின்றது.அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றது அதே போல் சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைபகுதியில் உருவாகி ஓமலூர் ,தாரமங்கலம் வழியாக எடப்பாடி பகுதியில் சரபங்கா நதி பாய்ந்து வருகின்றது.மேலும் அண்மையில் பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பகுதியில் பாய்ந்து வரும் சரபங்கா நதிக்கரைக்கு தினந்தோறும் பொதுமக்கள் மீன் பிடிக்கவும் ,குளிக்கவும் … Read more

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

a-new-twist-in-the-case-of-smt-madras-high-court-order

ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்! சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு! கள்ளக்குறிச்சி கனியாமூரில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் விடுதியில் தங்கி படித்த பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.மேலும் அவருடைய பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி போலீசார்ரிடம் புகார் தெரிவித்தனர்.அந்த புகாரின் பேரில் அந்த மாணவி பயின்று வந்த பள்ளியின் தாளாளர் ,செயலாளர் மற்றும் அங்கு பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியைகள் … Read more