உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

0
115
#image_title

உங்களுக்கு தெரியுமா? கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பது வழக்கமாக இருக்கிறது.அதுவும் தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உண்டாகும்.தேங்காய் எண்ணெய் குளிர்ச்சி நிறைந்த பொருள்.இதை உடலுக்கு உபயோகித்து வந்தால் மருத்துவரிடம் செல்லும் நிலை ஒருபோதும் ஏற்படாது.

எண்ணெய் மசாஜால் உடல் வலிமை பெறுகிறது.அதேபோல் கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்களுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

இரவு தூங்குவதற்கு முன்னர் கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்து விட்டு படுத்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.

கண் வறட்சி நீங்கி கண் பார்வை தெளிவாகும்.கண்களை சுற்றி எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கருவளையம் நீங்கும்.

கண் நரம்பு பாதிப்பு இருந்தால் அவை சரியாகும்.கண்ணிற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும்.கண்களை சுற்றி தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து விட்டு படுத்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.கண் புருவத்தின் மீது தேங்காய் எண்ணெய் அப்ளை செய்தால் தலைபாரம் குறையும்.