இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

Photo of author

By Divya

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

Divya

இது தெரியுமா? “கற்றாழை + பூண்டு”.. இப்படி பயன்படுத்தினால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!

நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் பானம் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய உலகில் ஆரோக்கியம் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கின்றது. பெரும்பாலானோர் சுவைக்காக மட்டுமே உண்கின்றனர். உடல் ஆரோக்கியத்தை பற்றி துளி அளவும் கவலை கொள்வதில்லை. இதனால் முதுமை காலத்தில் நாம் சந்திக்கும் நோய் பாதிப்புகள் ஏராளம்.

இந்த நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க.. சுலபமான முறையில் செய்யக் கூடிய கற்றாழை பானத்தை அருந்துவது நல்லது.

பானம் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்:-

1)கற்றாழை
2)பூண்டு

ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த ஜெல்லை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும். அடுத்து இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களை தோல் நீக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காலை, இரவு என இரு நேரத்திலும் பருகி வந்தால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

உடல் பருமனை குறைக்க இந்த கற்றாழை பானம் உதவுகிறது. மூக்கடைப்பு, சுவாச பிரச்சனையை போக்க உதவுகிறது.

கண் தொடர்பான பாதிப்பை எளிதில் குணப்படுத்த உதவுகிறது. உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது.

உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க உதவுகிறது. கற்றாழை பானம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.