இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

0
31
#image_title

இது தெரியுமா? “அவுரி இலை” இளநரை முதல் பாம்புக்கடி வரை அனைத்திற்கும் அருமருந்து!!

1)கல்லீரலில் உள்ள நசுக் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள அவுரி இலை சாறு பருக வேண்டும்.

2)அவுரி இலையை சுத்தம் செய்து அரைத்து அதனுடன் ஆட்டுப்பால் சேர்த்து பருகினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.

3)செரிமானக் கோளாறால் அவதிப்படும் நபர்கள் நீரில் சிறிதளவு அவுரி இலை மற்றும் இடித்த மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும். அதேபோல் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளை சரி செய்ய சிறந்த தீர்வாக இருக்கிறது.

4)வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்பு, ஆபத்து நிறைந்த பாக்டீரியாக்களை வெளியேற்ற அவுரி இலை சாறு பருகுவது நல்லது.

5)பாம்பு விஷத்தை முறிக்கும் சக்தி இந்த அவுரி இலைக்கு இருப்தால் பாம்பு கடித்த நபருக்கு அவுரி இலையை அரைத்து அரைத்து விழுதாக்கி சாப்பிட கொடுப்பதன் மூலம் உயிர் பிழைக்க வைக்க முடியும்.

6)உடலில் ஏற்படும் கட்டிகள், வீக்கங்களை குணம்படுத்த அவுரி இலை விழுதை வைத்து துணி கொண்டு கட்டி விடலாம்.

7)தோல் தொடர்பான பாதிப்புகளை சரி செய்வதில் அவுரி இலை முக்கிய பங்கு வகிக்கிறது.

8)உடலில் உள்ள தீக்காயங்களை விரைவில் குணப்படுத்த அவுரி இலை விழுதை தீக்காயங்கள் மீது வைத்து கட்டி விடலாம்.

9)நரை, இளநரை உள்ளிட்டவைகளை சரி செய்வதில் அவுரி முக்கிய பங்கு வகிக்கிறது. அவுரிப் பொடி + மருதாணி பொடியை பேஸ்டாக்கி தலைக்கு பயன்படுத்தி வருவதன் மூலம் முடி நரை உள்ளிட்ட முடி தொடர்பான அனைத்து வித பாதிப்புகளும் சரியாகும்.

10)ஒழுங்கற்ற மாதவிடாயை சரி செய்ய அவுரி இலை சாறு அருந்தலாம்.