அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

0
193
#image_title

அடிக்கடி மூட்டு வலிக்கிறதா? அப்போ இந்த இலையை அரைத்து பற்று போட்டால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

தற்பொழுது மூட்டு வலி என்பது முதியவர்களுக்கு மட்டும் அல்ல இளம் தலைமுறையினரையும் பாதிக்கும் ஒன்றாக உருவெடுத்து விட்டது.இதை எந்த ஒரு செலவும் இன்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழி முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)நொச்சி இலை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை மிக்ஸி ஜாரில் போட்டுசிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.அம்மியில் அரைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இந்த விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது மஞ்சள் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்.இதை மூட்டு பகுதியில் தடவி ஒரு துணியை கொண்டு கட்டு கட்டவும்.

இதை இரவு நேரத்தில் தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் மூட்டு வலியில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கைப்பிடி பிரண்டையை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் தண்ணீரில் போட்டு அலசி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.இந்த பேஸ்ட்டை மூட்டு பகுதியில் தடவி வந்தால் மூட்டு வலி,வீக்கம்,தேய்மானம் ஆகியவை சரியாகும்.